Friday, July 30, 2010

சுப்ஹுத் தொழுகைக்குப் பிறகு 111 தடவை ஓதித் தண்ணீரில் ஊதி வீட்டில் நான்கு மூலையிலும் ??

? எனக்கு தலாக் சொல்லப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகிய நிலையில் வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டது. இதையறிந்து எனது உறவினர் ஒருவர் அஜ்ரத்திடம் சென்று பார்த்து வந்தால் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று கூறினார். அந்த அஜ்ரத்திடம் சென்று பார்த்த போது 65 அத்தியாயத்தின் 2ஆவது வசனத்தை சுப்ஹுத் தொழுகைக்கு பிறகு 111 தடவை தண்ணீரில் ஓதி ஊதி வீட்டின் நான்கு மூலையிலும் தெளிக்க வேண்டும் என்றும் திருக்குர்ஆனின் 28ஆவது அத்தியாயத்தில் 6ஆவது வசனம் மற்றும் தலாக் அத்தியாயம் தினமும் காலை சுப்ஹுத் தொழுகைக்குப் பிறகு 111 தடவை ஓதித் தண்ணீரில் ஊதி வீட்டில் நான்கு மூலையிலும் தெளிக்கவும். இவ்வாறு செய்தால் வீட்டில் பிரச்சனைகள் தீரும். நல்ல கணவர் கிடைப்பார் என்று கூறினார். இது சரியா?


திருக்குர்ஆனின் வசனங்களை மற்ற எவரை விடவும் மிகவும் நன்கு அறிந்து புரிந்து நடந்தவர்களில் முதலிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்குத் தான்! ஆனால் நபிகளார் அவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு இந்த அத்தியாயத்தை ஓதி வீட்டின் மூலைகளில் தெளிக்கச் சொல்லவில்லை. கஷ்டங்கள் ஏற்படும் போது படைத்தவனிடம் முறையிடச் சொல்லியுள்ளார்கள். பொறுமையை மேற்கொள்ளச் சொல்லியுள்ளார்கள். தவறுகளை களையச் சொல்லியுள்ளார்கள். நோய்களுக்கு மருத்துவம் செய்யச் சொல்லியுள்ளார்கள்.

அவர்கள் காட்டிய வசனமும் இறையச்சதுடன் நடந்து கொள்ளுமாறு தான் வழிகாட்டுகிறதே தவிர திருக்குர்ஆனை ஓதி தண்ணீர் தெளிக்கச் சொல்லவில்லை. தலாக் அத்தியாயத்தில் தலாக்கின் வழிகாட்டுதல் இருக்கிறதே தவிர இதை ஓதி வந்தால் நல்ல மாப்பிள்ளை கிடைப்பார் என்பது கூறப்படவில்லை. திருக்குர்ஆன் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பயன்படுத்தி மார்க்கம் அங்கீகரிக்காத செயல்களை உருவாக்கி, பணம் பார்க்கும் இவர்களைப் போன்றவர்களிடம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

--> Q/A Dheengula Penmani Apr 2008

No comments:

Post a Comment