Friday, July 30, 2010

பெருநாள் தொழுகையில் தக்பீர்கள்??

? பெருநாளுக்கு ஆறு தக்பீர்கள் கூடுதலாக சொல்ல வேண்டும் என்று கூறுகிறார்களே இது சரியா?


! பெருநாள் தொழுகையில் கிராத் ஓதுவதற்கு முன்னர் மூன்று தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்களில் கிராத் ஓதியதற்கு பின்னர் மூன்று தக்பீர்களும் சிலர் கூறுகின்றனர். அதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாக கூறுகின்றனர்.

நான் அபூமூஸா அல் அஷ் அரீ (ரலி), ஹுதைஃபா (ரலி) ஆகியோ ரிடம் நபி (ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளில் எத் தனை தக்பீர்கள் கூறினார்கள்? என வினவினேன். அதற்கு அபூ மூஸா (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகையில் நான்கு தக்பீர்கள் கூறுவதைப் போன்ற நான்கு தக்பீர்கள் கூறினார்கள் என பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஹுதைஃபா (ரலி) அவர்கள் அபூமூஸா உண்மைக் கூறினார் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி), நூல் : அபூதாவூத் (973)

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), அவர்கள் அமர்ந்திருந்தார்கள் அவர்களுக்கு அருகில் ஹுதைஃபா (ரலி) அவர்களும் அபூமூஸா (ரலி) அவர்களும் அமாந்திருந்தார்கள். அப்போது ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் இவர்களிடம் பெருநாள் தொழுகையின் தக்பீர்களைப் பற்றி கேட்டார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள் இதை அபூமூஸா (ரலி) அவர் களிடம் கேளுங்கள் என்றார்கள். அதற்கு அபூமூஸா (ரலி) அவர்கள் இதைப் பற்றி அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம் கேளுங்கள். ஏனெனில் அவர்கள் நம்மைவிட முந்தியவர் மேலும் நம்மில் மிகவும் அறிந் தவர் என்று கூறினார்கள். எனவே ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி) அப்துல் லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அப்துல் லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நான்கு தக்பீர்கள் கூறுவார். பின்னர் கிராத் ஓதுவார். பின்னர் ருகூவு செய்வார். பிறகு இரண்டாவது ரக்அத்திற்கு எழுந்து நின்று கிராஅத் ஓதுவார். கிராஅத்திற்கு பின்னர் நான்கு தக்பீர்கள் கூறுவார் என்று பதிலளித்தார்கள்.
நூல் : அப்துர் ரஸ்ஸாக், பாகம் : 3, பக்கம் : 293

முதலாவதாக இடம் பெற்றிருக்கும் ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ ஆயிஷா என்பவர் யாரென அறியப்படாதவர். இவரின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாததால் இந்த செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. மேலும் இந்த செய்தியின் அறிவிப்பாளரில் இன்னொரு வரான அப்துர்ரஹ்மான் பின் ஸவ்பான் என்பவரை சிலர் நம்பகமானவர் என்றும் சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். மேலும் இவர் கடைசி கால கட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் விமர்சனம் செய்யப் பட்டுள்ளது. அவரின் மனநிலை நல்ல நிலையில் அறிவித்தவை எவை? மனநிலை தடுமாறியபோது அறிவித்தவை எவை என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. எனவே இந்த செய்தி மேலும் பலவீனமடைகிறது. மேலும் இந்த செய்தியை பதிவு செய்த மற்றொரு இமாமான பைஹகீ அவர்கள் இச்செய்தியின் இறுதியில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் சில நேரங்களில் நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவும் சில நேரங்களில் அப்துல் லாஹ் பின் மஸ்வூத்(ரலி) அவர்களின் கூற்றாகவும் (குழப்பமாக) கூறுகிறார். இந்த சம்பவத்தில் பிரபலியமான கூற்று : இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாக சொல்வதாகும். இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் இதன்படி பத்வா வழங்கியுள்ளார்கள். ஆனால் அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன்
இக்கருத்தை இணைக்கவில்லை. (ஆதாரம் : பைஹகீ, பாகம் : 3, பக்கம் : 289)

இரண்டாவதாக வரும் செய்தியில் நான்கு தக்பீர் கூறுவார் என்று வரும் செய்தியில் நான்கு தக்பீர் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள் என்று கூறப் படவில்லை. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம் கேட்ட கேள் விக்கு அவர்கள், நான்கு தக்பீர் கூறுவார் என்று பதிலளித்தார்களேத் தவிர நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவார்கள் என்று கூறவில்லை. எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ளமுடியாது.

மேலும் முதலாவது, இரண்டாவது ஆதாரத்தின்படி நன்கு+நான்கு தக்பீர் கள் கூடுதலாக சொல்வதற்குத்தான் ஆதாரமாக உள்ளதே தவிர மூன்று + மூன்று தக்பீர்கள் கூடுதலாக சொல்வதற்கு ஆதாரமில்லை என்பதையும் விளங்க வேண்டும்.

--> Q/A Dheengula Penmani Sep 2008

No comments:

Post a Comment