Thursday, October 21, 2010

தனி இட ஒதுக்கீட்டால் பாதிப்பா

தனி இட ஒதுக்கீட்டால் பாதிப்பா???


கிறித்தவர்கள் விழித்துக் கொண்டு இட ஒதுக்கீட்டை மறுத்து விட்டனர். முஸ்லிம்கள் ஏமாந்து விழிக்கின்றனர் என்று சிலர் இட ஒதுக்கீட்டைக் கிண்டல் அடிக்கின்றனர். இது சரியா?



இட ஒதுக்கீட்டைக் கிறித்தவர்கள் ஏன் மறுத்தனர் என்ற காரணம் தெரியாமல் நுணிப்புல் மேய்ந்தவர்கள் இப்படி ஒரு வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.


முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பாதிப்பு என்று வாதிட்டால் இட ஒதுக்கீட்ட்டுக்கு முன் முஸ்லிம்களுக்குக் கிடைத்த வாய்ப்புகள் எவ்வளவு? இட ஒதுக்கீட்டுக்குப் பின் கிடைத்துள்ள வாய்ப்புகள் எவ்வளவு என்பதைப் புள்ளி விபரத்துடன் எடுத்துக் காட்டி தங்கள் வாதத்தை நிறுவ வேண்டும்.


மொட்டை தாதன் குட்டையில் விழுந்தான் என்பது போல் உளறக் கூடாது.


கிறித்தவர்கள் கிடைத்த இட ஒதுக்கீட்டை மறுத்தனர் என்பது பற்றியாவது அறிந்து வைத்துக் கொண்டு வாதிட வேண்டும். அந்த அறிவும் இவர்களுக்கு இல்லை.


தமிழகத்தில் 69 சதவிகிதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.


இதில் 18 தலித்களுக்கு. ஒரு சதவிகிதம் பழங்குடியினருக்கும் ஆக 19 சதவிகிதம் போய் விடும்.


எம்பிசி எனப்படும் மிகவும் பிற்பட்ட மக்களுக்கு 20 சதவிகிதம் போய் விடும்.


இந்த இரண்டு வகையிலும் முஸ்லிம்களும் கிறித்தவர்களும் வர மாட்டார்கள்.


எஞ்சிய 30 சத விகிதம் பிற்பட்டோருக்கானது.


இதில் பிறபட்ட சாதிகளும், பிற்பட்ட கிறித்தவர்களும் பிற்பட்ட முஸ்லிம்களும் அடங்குவார்கள்.


இந்த முப்பதைத் தான் 23 இந்து பிற்பட்டோருக்கு என்றும், மூன்றரை சதம் முஸ்லிம்களுக்கு என்றும் மற்றொரு மூன்றரை கிறித்தவர்களுக்கும் என்று வழங்கப்பட்டது


இதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்


முஸ்லிமளில் பிற்பட்டவர் என்றால் முஸ்லிம்களில் மட்டும் உள்ள ஆறு பிரிவினர் மட்டுமே அடங்குவார்கள்.


.ஆனால் இந்து மதத்தில் உள்ள செட்டியார், நாடார், வன்னியர் உள்ளிட்ட எல்லா பிரிவும் கிறித்தவர்களிடமும் உள்ளது. கிறித்தவர்களிடம் இந்து மத்த்தில் உள்ள எல்லா சாதிப்பிரிவும் உள்ளதால் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அடைந்து வந்தனர்.


அதாவது கிறித்தவர் இட ஒதுக்கீடு பெறுவதற்கு மத்த்தைக் குறிப்பிட வேண்டியதில்லை. நாடார், வன்னியர் என்பன போன்ற சாத்திப்பிரிவுகளைத் தான் குறிப்பிட வேண்டும்.


கிறித்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு முன்னர் 30 சதவிகிதத்தில் சுமார் 25 சத்விகித்தைப் பெற்று வந்தனர். மத அடிப்படையில் இல்லாமல் சாதி அடிப்படியில் அவர்கள் அதிகம் பயன் பெற்றனர்.


உதாரணமாக குமரி மாவட்டத்தில் நாடார்கள் அதிகம். இவர்களில் இந்து நாடார்களும் கிறித்தவ நாடார்களும் உண்டு.


ஆனால் இந்து நாடார்களை விட கிறித்த்வர் நாடார்கள் தான் படிப்பதற்கு அதிக வாய்ப்பைப் பெற்றனர். காரனம் அவர்களிடம் தான் கல்விக்கூடங்கள் உள்ளன.


தம்மைக் கிறித்தவர் என்று குறிப்பிடாமல் நாடார் எனக் குறிப்பிட்டு முப்பது இடங்களில் 25 இடங்களை அவர்கள் எடுதுக் கொண்டு வந்தனர். இந்து நாடார்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்ததால் அவர்கள் ஏமாந்து வந்தனர்.


இப்போது மத அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதால் நாடார், வன்னியர் எனக் கூறி கிறித்தவர்கள் அதிக இடங்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. கிறித்தவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீட்டைப் பெற முடியும். அதுவும் மூன்றரை சதம் மட்டுமே கிடைக்கும் நிலை உருவானது.


இதன் காரணமாகத் தான் அவர்கள் தனி இட ஒதுக்கீடு வேண்டாம் என்றனர். இந்துக்களுக்குக் கிடைக்க வேண்டிய 25 இடங்களைத் தொடர்ந்து அனுபவிக்க இந்த தனி இட ஒதுக்கீடு அவர்களுக்கு தடையாக அமைந்தது. ஆபத்தாக முடிந்தது இதனனால் இட ஒதுக்கீடு அவர்களுக்கு பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்தியது.


ஆனால் முஸ்லிம்களின் நிலை இதற்கு நேர் முரணானது.


தனி இட ஒதுக்கீட்டுக்கு முன்னர் முஸ்லிமக்ள் இரண்டு சதம் அளவுக்குத் தான் வாய்ப்புகளைப் பெற்றனர். மூனரை என்பது அதை விட அதிகம் என்பதால் இது முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.


இந்த நுணுக்மான வேறுபாடு தெரியாதவர்கள் தான் இப்படி கேள்வி எழுப்புகிறார்கள்.

No comments:

Post a Comment