பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Sunday, August 16, 2015

அத்தாஹிய்யாத்தில் தொழுகையில் இணையும் போது ?

அத்தாஹிய்யாத்தில் தொழுகையில் இணையும் போது எப்படி சேர வேண்டும்?

? தொழுகையில் இமாம் கடைசி ரக்அத்தில் அத்தஹிய்யாத்தில் இருக்கும் போது நாம் தொழுகைக்கு கைகளை உயர்த்தி தக்பீர் கட்டிக் கொண்டு, வஜ்ஜஹ்து ஓதி விட்டு செல்ல வேண்டுமா? அல்லது கைகளை உயர்த்தி அப்படியே செல்ல வேண்டுமா?
இஸ்மாயீல் ஷெரீப், சென்னை
தக்பீர் கூறி கைகளை உயர்த்திய பின் இமாம் எந்த நிலையில் இருக்கின்றாரோ அந்த நிலைக்குத் தான் நாம் செல்ல வேண்டும்.
இமாம் ஏதேனும் ஒரு நிலையில் இருக்கும் போது உங்களில் எவரேனும் தொழுவதற்கு வந்தால் அவர் இமாம் செய்வது போலவே செய்யட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆத் பின் ஜபல் (ரலி)
நூல்கள் : திர்மிதி 539, இப்னு அபீஷைபா
(குறிப்பு: 2003 செப்டம்பர் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

No comments:

Post a Comment