பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, November 17, 2017

அஸருடைய_முன்சுன்னத்

#தொழுகை

#அஸருடைய_முன்சுன்னத்

#அஸருடைய_முன்_சுன்னத்_நான்கு_ரக்அத்களா ?

நபி (ஸல்) அவர்கள் அஸருக்கு முன் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். நெருக்கமான வானவர்கள், மூஃமின்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரின் மீதும் ஸலாம் கூறுவதன் மூலம் அந்த நான்கு ரக்அத்களை (இரண்டிரண்டாக) பிரிப்பார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: திர்மிதீ 394

இது நமது ஜமாஅத் வெளியீடான சகோ.M.I.சுலைமான் அவர்கள் எழுதிய "நபிவழியில் தொழுகை சட்டங்கள்" என்ற நூலில் உள்ளது.

இது பலவீனமான செய்தி..

இதன் அறிவிப்பாளர் தொடரில் ஆஸிம் பின் லமுரா என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர்  பலவீனமானவர் ஆவார்.

و قال ابن عدي بتليينه فقال عاصم بن ضمرة لم أذكر له حديث لكثرة ما يروي عن علي مما لا يتابعه الناس عليه والذي يرويه عن عاصم قوم ثقات البلية من عاصم وليس ممن يروون عنه، و هو وسط.

و وذكره ابن حبان في المجروحين وقال: كان رديئ الحفظ فاحش الخطأ، يرفع عن علي، فلما فحش ذلك في روايته استحق الترك على أنه أحسن حالا من الحارث.

இப்னு ஹிப்பான், இப்னு அதீ, இப்னுல் ஜவ்சி போன்ற அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என விமர்சித்துள்ளனர். இவர் மனனத் தன்மையில் மோசமானவர். மிகக் கடுமையாக மூளை குழம்பியவர். அலீ (ரலி) அவர்கள் வழியாக நபி சொன்னதாக தவறாக பல செய்திகளை அறிவித்துள்ளார். மேற்குறிப்பிட்ட செய்தியும் இவர் வழியாகத்தான் வந்துள்ளது. எனவே இது பலவீனமானது..

சகோ_அப்துன்நாசர்_MISc.,

No comments:

Post a Comment