பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, October 28, 2020

அல்லாஹ்* ⤵ *உருவமற்றவனா - 35

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை [ 01 ] 🔥*

      *🔥 அல்லாஹ்*
                                   ⤵
                    *உருவமற்றவனா❓*

           *✍🏻...தொடர் [ 35 ]*

*☄இறைவனைக்*
             *காண முடியுமா❓[ 08 ]*

              *🏖 இறுதி பாகம் 🏖*

_இந்த இனிய இறை தரிசனத்தைக் கேட்டுப் பிரார்த்திக்கவும் வேண்டும்.  இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரார்த்தனையையும் கற்றுத் தந்திருக்கிறார்கள்._

_*🍃அம்மார் பின் யாஸிர் எங்களுக்குத் தொழுவித்தார்கள். மக்களில் ஒருவர், "நீங்கள் தொழுகையைச் சுருக்கி விட்டீர்கள்'' என்று அவரிடம் சொன்னார். "நான் இவ்வாறு சுருக்கித் தொழுதாலும் அல்லாஹ்வின் தூதரிடம் செவியுற்ற துஆக்களைக் கொண்டு அந்தத் தொழுகையில் துஆச் செய்தேன்'' என்று பதில் சொன்னார். அவர் எழுந்ததும் அவரை ஒருவர் பின்தொடர்ந்து அவரிடம் அந்த துஆ பற்றிக் கேட்டார். பிறகு வந்து அதை மக்களிடம் அறிவித்தார்.*_

_அல்லாஹும்ம பி இல்மிகல் கைப வ குத்ரத்திக அலல் கல்கி, அஹ்யினி மாஅலிம்தல் ஹயாத கைரன்லீ வதவஃப்பனீ இதா அலிம்தல் வஃபாத கைரன்லீ அல்லாஹும்ம வஅஸ்அலுக கஷ்யதக ஃபில் கைபி வஷ்ஷஹாததீ. வஅஸ்அலுக கலிமதல் ஹக்கி ஃபிர்ரிளா வல் களபி வஅஸ்அலுகல் கஸ்த ஃபிஃபக்ரி வல்கினா வஅஸ்அலுக நயீமன் லாயன்ஃபது அ வஅஸ்அலுக குர்ரதி அய்னின் லா தன்கதிவு வ அஸ்அலுகர் ரிளாஅ பஃதல் களாயி அ அஸ்அலுக பர்தல் ஈஷி பஃதல் மவ்தி அ அஸ்அலுக லத்தத்தன் நள்ரி இலா வஜ்ஹிக வஷ்ஷவ்க இலா லிகாயிக ஃபீ கைரி ளர்ராஅ முளிர்ரத்தின் வலா ஃபித்னதின் முளில்லதின் அல்லாஹும்ம ஸ(ழ)ய்யின்னா பி ஸீ(ழ)னதில் ஈமானி வஜ்அல்னா ஹுதாத்தன் முஹ்ததீன்_

_*பொருள்: மறைவானதை அறிகின்ற உன் ஞானத்தைக் கொண்டும், படைப்பின் மீதுள்ள உன் ஆற்றலைக் கொண்டும், (எனது) வாழ்வு நன்மை என்று நீ அறிந்திருக்கின்ற வரை என்னை வாழ வை! மரணம் எனக்கு நன்மை என்று நீ அறிந்தால் என்னை மரணிக்கச் செய்! அல்லாஹ்வே! மறைவிலும் நேரிலும் உன்னை அஞ்சுவதை உன்னிடம் கேட்கிறேன். திருப்தியிலும் கோபத்திலும் நேரிய வார்த்தையை உன்னிடம் நான் கேட்கிறேன். வறுமையிலும் செல்வத்திலும் நடுநிலையை உன்னிடம் நான் கேட்கிறேன். அழியாத அருட்கொடையை உன்னிடம் நான் கேட்கிறேன். அறுந்து விடாத கண் குளிர்ச்சியை உன்னிடம் நான் கேட்கிறேன். விதிக்குப் பின்னால் திருப்தியை உன்னிடம் நான் கேட்கிறேன். இறந்த பின்பு வாழ்க்கையின் இதத்தை உன்னிடம் நான் கேட்கிறேன்.*_

*இடர் அளிக்கக்கூடிய துன்பம் மற்றும் வழிகெடுக்கக் கூடிய குழப்பம் இல்லாத சூழலில் உன் திருமுகத்தைப் பார்க்கின்ற சுவையையும், உன்னைச் சந்திக்கின்ற ஆசையையும் உன்னிடம் நான் கேட்கின்றேன். அல்லாஹ்வே! ஈமானின் அழகைக் கொண்டு எங்களை அழகுபடுத்துவாயாக! எங்களை நேர்வழி பெற்ற வழிகாட்டிகளாக ஆக்கு!*

*🎙அறிவிப்பவர்:*
             *ஸாயிப் பின்*
                                *மாலிக்,*

   *📚 நூல்: நஸயீ 1288 📚*

*🏮🍂"இறைவனுக்கு உருவம் இல்லை; இறைவன் என்றால் சூனியம்'' என்று கூறி இறைவன் இல்லை என்பதை வேறு வார்த்தைகளில்* யார் கூறுகிறார்களோ அத்தகைய நிராகரிப்பாளர்களுக்கும் இணை கற்பிப்பவர்களுக்கும் *இறைவனைக் காணும் பேரின்பம் நிச்சயம் கிடைக்காது.*

*🏮🍂எனவே இணை வைக்காமல், நல்லமல்கள் செய்து, இந்தப் பிரார்த்தனையைப் புரிந்து அல்லாஹ்வின் திருமுகத்தைக் காண்கின்ற பேறும் பாக்கியமும் பெற்றவர்களாக ஆவோமாக!*


*🏮🍂அல்லாஹ் உருவமற்றவனா❓ என்ற இந்தத் தலைப்பில் இதுவரை நீங்கள் பார்த்த ஆதாரங்கள் அனைத்தும் குர்ஆன், ஹதீஸில் உள்ளவையாகும்.* இவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கின்றது என்று நிரூபிக்கும் ஆதாரங்கள். *இவை அனைத்திற்கும் எந்தவொரு விளக்கமும், வியாக்கியானமும் கூறாமல், திரிபு வாதம் செய்யாமல், திசை திருப்பாமல் ஒவ்வொரு முஸ்லிமும் நம்பியே ஆக வேண்டும். அவ்வாறு நம்பாதவர் இறை மறுப்பாளர் ஆவார்; நிரந்தர நரகத்தின் விறகாவார். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *தொடர் முடிந்தது*
                            ⤵⤵⤵
        
அல்ஹம்துலில்லாஹ்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment