பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, September 16, 2014

சஜ்தா திலாவத் முறை எப்படி ???

கேள்வி:

        சஜ்தா  திலாவத் என்று  சொல்லப்படும்  குரானில்  உள்ள  நாலு  வசனங்களுக்கு  எப்படி  சஜ்தா  திலாவத் செய்ய  வேண்டும்  ?  உளூ  வேண்டுமா  ? தக்பீர்  சொல்ல  வேண்டுமா  ? இரண்டு  சஜ்தக்கள்  செய்ய  வேண்டுமா  ?
ரசூல்  ஸல்  அவர்கள்  சொல்லி  தந்த  துவாவை  மற்றும்  சொல்ல  வேண்டுமா  அல்லது  ஸுப்ஹன  ரப்பியல்  ஆளா சொல்லலாமா  ? மேலும்  மகிழ்ச்சியின்  போது  செய்யும்  சஜ்தாக்கு  சட்டம்  என்ன ? மேலே உள்ள  கேள்விகளின்  அடிபடையில்(உளூ , எதனை முறை சஜ்தா, துவா )  இந்த  மகிழ்ச்சி  சஜ்டவுக்கும்  விளக்கவும்.

==> அப்துல் அலீம் -- அய்யம்பேட்டை .

தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்கின்றோம்.  இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு (53வது) அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்தார்கள்.  ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர்.  அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்து தமது நெற்றிக்குக் கொண்டு சென்றுஇவ்வாறு செய்வது எனக்குப் போதும் என்று கூறினார்.  பின்னர் அவர் காஃபிராகக் கொல்லப் பட்டதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : புகாரி 1067, 1070
இதே கருத்து புகாரியில் 1071, 4862, 4863 ஆகிய ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளன.
ஸாத் (38வது) அத்தியாயம் ஓதப்படும் போது ஸஜ்தா கட்டாயமில்லை.  (ஆனால்) நபி (ஸல்) அவர்கள் அந்த அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தா செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)நூல் : புகாரி 1069, 3422
அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நான் இஷா தொழுத போது, "இதஸ்ஸமாவுன் ஷக்கத்என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய வசனம் வந்ததும்) ஸஜ்தா செய்தார்கள். இது பற்றி நான் அவர்களிடம் கேட்ட போது, "நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இதற்காக) நான் ஸஜ்தா செய்திருக்கின்றேன்.  (மறுமையில்) அவர்களைச் சந்திக்கின்ற வரை (மரணிக்கின்ற வரை) நான் அதை ஓதி ஸஜ்தா செய்து கொண்டு தான் இருப்பேன்என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ராஃபிவு,
நூல் : புகாரீ 766, 768, 1078
இதஸ்ஸமாவுன் ஷக்கத்இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க ஆகிய அத்தியாயங்களில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஜ்தா செய்தோம்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 905, 906
மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் நஜ்மு (53வது அத்தியாயம்)ஸாத் (38வது அத்தியாயம்)இன்ஷிகாக்(84வது அத்தியாயம்)அலக் (96வது அத்தியாயம்) ஆகிய நான்கு அத்தியாயங்களை ஓதும் போது அதிலுள்ள ஸஜ்தா வசனங்களுக்காக நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்துள்ளார்கள் என்பதை அறிய முடிகின்றது.
இந்த ஸஜ்தா வசனங்களை ஓதும் போதும் ஸஜ்தா செய்வது கட்டாயமில்லை விரும்பினால் ஓதிக் கொள்ளலாம் என்பதற்குக் கீழ்கண்ட ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.
நான் நபி (ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன்.  அப்போது அவர்கள் ஸஜ்தா செய்யவில்லை.
அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி),
நூல் : புகாரீ 1072. 1073
ஒருவர் குர்ஆனில் உள்ள வசனங்களில் ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிள்ள எந்த வசனத்தை ஓதினாலும் விரும்பினால் அவ்வசனத்திற்காக ஸஜ்தா செய்து கொள்ளலாம்.
ஆதமின் மைந்தன் ஸஜ்தா (செய்யுமாறு கட்டளையுள்ள) வசனத்தை ஓதி ஸஜ்தா செய்தால் ஷைத்தான் அழுதவாறே அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் ஸஜ்தா செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் ஸஜ்தா செய்து விட்டான். அவனுக்கு செர்க்கம் கிடைக்கப் போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்கு) ஸஜ்தா செய்யுமாறு எனக்கு கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே எனக்கு நரகம் தான் என்று கூறியபடி விலகிச் செல்கிறான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல்கள் : முஸ்லிம் (133), இப்னுமாஜா (1042), அஹ்மத் (9336)
ஸஜ்தா திலவாத் துஆ
தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்கின்றோம்.அப்போது ஓதுவதற்கென நபி (ஸல்) அவர்கள் பின்வரும் துஆவை கற்றுத்தந்துள்ளார்கள்.
ஸஜத வஜ்ஹிய லில்லதீ கலகஹு வஷக்க ஸம்அஹு வபஸரஹு பி ஹவ்லிஹி வ குவ்வ(த்)திஹி.
பொருள் : என் முகத்தைப் படைத்து அதில் செவிப்புலனையும் பார்வைப்புலனையும் ஏற்படுத்தி, (தீயதை விட்டும்) அதைத் திருப்பி (நல்லவற்றில்) ஈடுபடுத்திய அல்லாஹ்வுக்காக என் முகம் ஸஜ்தா செய்கின்றது.
நூல்கள் : திர்மிதீ (529), நஸயீ (1117), அபூதாவூத் (1205), அஹ்மத் (22895)
வழமையாக தொழுகையில் சஜ்தாவில் ஓதும் சுப்ஹான ரப்பியல் அஃலா என்பதை ஓதினாலும் குற்றமில்லை. இந்த சஜ்தாவிற்கு உளூ அவசியமில்லை. தக்பீர் கூற வேண்டியதில்லை. இந்த நான்கு இடங்கள் வரும் போது ஒரு முறை சஜ்தா செய்தால் போதும். இரண்டு முறை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இந்த சஜ்தாவை இரண்டு முறை செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் நமக்கு உத்தரவிடவில்லை.

மகிழ்ச்சி ஏற்பட்ட நேரத்தில் சஜ்தா செய்யலாமா?
மகிழ்ச்சி ஏற்பட்ட நேரத்தில் சஜ்தா செய்வதும் தவறல்ல. இறைவனுக்கு நன்றி செலுத்தி பணியும் வகையில் இவ்வாறு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.
மூசா நபியவர்கள் செய்த அற்புதத்தை பார்த்துவிட்டு சூனியக்காரர்கள் அல்லாஹ்வை நம்பிக்கைக்கொண்டு உடனே சஜ்தாவில் விழுந்தார்கள்.
{فَأُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوا آمَنَّا بِرَبِّ هَارُونَ وَمُوسَى (70)20
"உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்'' (என்றும் கூறினோம்.) உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, "மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்'' என்றனர்.
அல்குா்ஆன் (20 – 70)
கஅப் பின் மாலிக் என்ற நபித்தோழர் தபூக் போர்களத்தில் கலந்துகொள்ளாத காரணத்தால் 50 நாட்கள் நபி (ஸல்) அவரிடம் யாரும் பேசக்கூடாது என தடைசெய்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களிடமிருந்து அழைப்பு வந்தவுடன் சந்தோஷத்தில் சஜ்தாவில் விழுந்தார்கள். மகிழ்சி காரணமாக சஜ்தா செய்யும் வழக்கம் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்களிடம் இருந்துள்ளது என்பதை இதன் மூலம் புரிய முடிகின்றது.
4418حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبِ بْنِ مَالِكٍ وَكَانَ قَائِدَ كَعْبٍ مِنْ بَنِيهِ حِينَ عَمِيَ قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ يُحَدِّثُ فَلَمَّا صَلَّيْتُ صَلَاةَ الْفَجْرِ صُبْحَ خَمْسِينَ لَيْلَةً وَأَنَا عَلَى ظَهْرِ بَيْتٍ مِنْ بُيُوتِنَا فَبَيْنَا أَنَا جَالِسٌ عَلَى الْحَالِ الَّتِي ذَكَرَ اللَّهُ قَدْ ضَاقَتْ عَلَيَّ نَفْسِي وَضَاقَتْ عَلَيَّ الْأَرْضُ بِمَا رَحُبَتْ سَمِعْتُ صَوْتَ صَارِخٍ أَوْفَى عَلَى جَبَلِ سَلْعٍ بِأَعْلَى صَوْتِهِ يَا كَعْبُ بْنَ مَالِكٍ أَبْشِرْ قَالَ فَخَرَرْتُ سَاجِدًا وَعَرَفْتُ أَنْ قَدْ جَاءَ فَرَجٌ وَآذَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَوْبَةِ اللَّهِ عَلَيْنَا حِينَ صَلَّى صَلَاةَ الْفَجْرِ رواه البخاري
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
எங்களிடம் பேசக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்த நாளிலிருந்து ஐம்பது நாட்கள் எங்களுக்குப் பூர்த்தியாயின. நான் ஐம்பதாம் நாளின் ஃபஜ்ருத் தொழுகையை எங்கள் வீடுகளில் ஒன்றின் மாடியில் நிறைவேற்றிவிட்டு அல்லாஹ் (எங்கள் மூவரையும் குறித்து 9:118ஆவது வசனத்தில்) குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருந்தேன். (அதாவது:) "பூமி இத்தனை விரிவாய் இருந்தும் என்னைப் பொருத்த வரையில் அது குறுகிநான் உயிர் வாழ்வதே மிகக் கஷ்டமாயிருந்தது. அப்போது, "சல்உமலை மீதேறி பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவர் உரத்த குரலில்,  "கஅப் பின் மாலிக்கே! நற்செய்தி பெற்றுக்கொள்க!'' என்று கூறினார். உடனே நான் சஜ்தாவில் விழுந்தேன். சந்தோஷம்  வந்துவிட்டது என்று நான் அறிந்து கொண்டேன்.
நுால் – புகாரி (4418)
*********************பதிலளித்தவர் அப்பாஸ் அலி*************************

No comments:

Post a Comment