பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, December 29, 2017

பெண்கள் எப்படி ஹிஜாப் போட வேண்டும்?

ு✔

👗👗

பெண்கள் எப்படி ஹிஜாப் போட வேண்டும்? ஹிஜாப் கருமை நிறத்தில்தான் இருக்க வேண்டுமா?நாம் கரும்காக்கை போல் தோற்றம் அளிக்கனுமா?பல வண்ணங்களில் மக்கனா அணியலாமா?

🌹பதில்:🌹

ஹிஜாப் என்பது அன்னிய ஆடவர்களின் பார்வைகளிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அல்லாஹ் அளித்த ஒன்றாகும்,. இதில் முகம்,முன்னங்கை, அதிகபட்சமாக கால் பாதங்களை தவிர ஏனைய இடங்களை கட்டாயம் மறைக்க வேண்டும். ஹிஜாப் என்ற பெயரில் அணியக்கூடிய ஆடைகள் இறுக்கமாகவோ, மெல்லியதாகவோ, அடுத்தவர்களை தன் பக்கம் இழுக்கக்கூடியதாகவோ இருக்கக்கூடாது.

இது கருமை நிறத்திலும் இருக்கலாம்,மற்ற நிறங்களிலும் இருக்கலாம், ஆனால் அந்த நிறம் மற்றவரை கவரும் விதமாக இருக்கக்கூடாது., அதே போல் மக்கனாவும் அடுத்தவரை கவரும் விதமாக இல்லாமல் இருக்க வேண்டும். கரும் காக்கை போல்தான் இருக்க வேண்டும் என்பதில்லை., அப்படி இருந்தாலும் அது தவறில்லை.

🍁ஆதாரங்கள்:🍁

يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا

59. நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன்  33:59

📘4316. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு,மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 37. ஆடையும் அலங்காரமும்

🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵
🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵

No comments:

Post a Comment