பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, February 21, 2018

இஹ்ராம்_ஆடை_அணியும்போது_கிப்லாவை_முன்னோக்கி_நின்றுதான்_

#ஹஜ்_உம்ரா

#இஹ்ராம்_ஆடை_அணியும்போது_கிப்லாவை_முன்னோக்கி_நின்றுதான்_கட்டவேண்டுமா? #அல்லது_இஹ்ராம்_கட்டும்_எல்லைக்கு_வந்து_நிய்யத்_சொல்லும்_போது_தான்_கிப்லாவை_முன்னோக்கி_இருக்கவேண்டுமா?

#பதில்

#ஆடைக்கு_இல்லை.
#மீக்காத்தில்_தல்பியாவின்_போது_கிப்லாவை_நோக்க_வேண்டும்.

இஹ்ராம் ஆடை அணியும் போது கிப்லாவை முன்னோக்க வேண்டும் என்று ஹதீஸில் வரவில்லை. ஆனால் மீக்காத் எனப்படும் எல்லைக்கு வந்து தல்பியா கூறும் போது கிப்லாவை முன்னோக்க வேண்டும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் துல்ஹுலைஃபாவில் சுப்ஹு தொழுதவுடன் புறப்படும்படி கட்டளையிடுவார்கள். வாகனக் கூட்டம் புறப்பட்டதும் அன்னாரும் புறப்படுவார்கள். வாகனம் நிலைக்கு வரும்போது கிப்லாவை முன்னோக்கி நின்று கொள்வார்கள். பின்னர் தல்பியா கூறத் தொடங்குவார்கள். ஹரம் – புனித எல்லை வரும் வரை தல்பியா கூறிக்கொண்டேயிருப்பார்கள். பிறது தூத்துவா எனுமிடத்தை அடையும்போது தல்பியாவை நிறுத்தி அங்கேயே விடியும் வரை தங்குவார். சுப்ஹுத் தொழுதுவிட்டு அங்கேயே குளிப்பார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்ததாகவும் கூறுவார்கள்.

(நூல்: பைஹகீ சுனனுல் குப்ரா 9258)

No comments:

Post a Comment