பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Sunday, August 31, 2025

மாதவிடாய் பெண்கள் அல் குர்ஆனை தொடலாமா? ஓதலாமா?


மாதவிடாய் பெண்கள் அல் குர்ஆனை தொடலாமா? ஓதலாமா?

• அதிகமான கருத்து வேறுபாடு உள்ள கேள்விகளில் இதுவும் ஒன்று ஆகும்!

• ஹைலு, நிபாஸ் நிலையில் அல்லது குளிப்பு கடமை நிலையில் அல் குர்ஆனை ஓத கூடாது அல்லது தொட கூடாது என்பதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த ஆதாரமும் கிடையாது!

• ஆனால் சில செய்திகளில் மறைமுகமக கருத்து உள்ள ஹதீஸ்கள் உண்டு! ஆனால் அனைத்துமே மிகவும் பலகீனமான ஹதீஸ்கள் ஆகும்!

• மாதவிடாய் என்பதை இஸ்லாத்தில் ஹைலு என்று கூறுவார்கள்!

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்!

(அல்குர்ஆன் : 2:222)

• அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் ஹைலு என்பது அசுத்தமான நிலை என்றும் அவர்கள் முழுமையாக சுத்தமாகும் வரை அவளுடன் உடலுறவு கூடாது என்று  கூறி உள்ளான்!

• இன்னும் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் ஹைலு உள்ள ஒரு பெண் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்று நமக்கு தெளிவாக கூறி உள்ளார்கள் அதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்!

❤️ நோன்பு :

• ஹைளு நிபாஸ் உள்ள பெண்கள் எந்த வகையான நோன்பும் நோற்க கூடாது! இதனால் அவர்கள் மீது குற்றம் கிடையாது!

• ஆனால் விடுபட்ட பர்ளான நோன்புகளை தூய்மை அடைந்த பின்பு கட்டாயம் நோற்க வேண்டும்! சுன்னத் ஆன நோன்புகளை களா செய்ய வேண்டிய அவசியம் கிடையாது!

(நூல் : முஸ்லிம் : 560)

❤️ தொழுகை :

• தொழுகை பொறுத்த வரை நோன்பை போன்று தான் எந்த வகையான தொழுகையும் தொழ கூடாது!

• அதே போன்று விட்ட தொழுகைகளை களா செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது!

(நூல் : முஸ்லிம் : 560)

❤️ காபாவை வலம் வர கூடாது :

• ஆயிஷா (ரழி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்றிருந்த போது அவர்களுக்கு மாதவிடாய்  ஏற்பட்டு விட்டது! அப்போது நபி (ஸல்) அவர்கள் தவாஃபைத் தவிர ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்யுமாறு கூறினார்கள்.

(நூல் : புஹாரி : 305)

• ஹாஜிகள் மினா, அரபாவில் இருக்கும் போது திக்ர் செய்வர், துஆவில் ஈடுபடுவர், குர்ஆன் ஓதுவர் முடிந்த அளவுக்கு அனைத்து அமல்களையும் செய்வார்கள்! ஆனால் இது பற்றி எதையும் நபியவர்கள் தடுக்கவில்லை!

• இந்த அடிப்படையில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் குர்ஆனை ஓதுவதிலோ, தொடுவதிலோ மார்க்க ரீதியாக எந்தத் தடையும் இல்லை!

❤️ பள்ளி வாசலுக்கு செல்ல கூடாது :

• பள்ளிவாசலுக்கு செல்ல கூடாது பள்ளியினுல் தங்கவும் கூடாது!

(நூல் : அபூதாவூத் : 232)

❤️ உடலுறவு :

• மாதவிடாய் நிலையில் கணவன் மனைவி இருவரும் சேர கூடாது!

ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்!

(அல்குர்ஆன் : 2:222)

💟 மாதவிடாய் பெண்கள் அசுத்தமானவர்களா!?

• ஆரம்ப காலத்தில் யூதர்கள் மாதவிடாய் உள்ள பெண்களை அசுத்தமானவர்களாவே கருதினார்கள்!

• அவர்களை தொடுவதே பாவம் அவர்கள் உணவு சமைக்க கூடாது எந்த பொருளையும் தொட கூடாது என மாதவிடாய் காலங்களில் அவர்களை ஒதுக்கி தனியாக வைத்து விடுவார்கள்! ஆனால் இஸ்லாம் இதை முற்றிலும் ஒழித்து விட்டது!

• ஒரு முஸ்லீம் எப்போதும் அசுத்தம் அடைய மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்!

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபா (ரழி) அவர்களை சந்திக்கும் போது அவர்களை நோக்கி கைக்குழுக்குவதற்கு கையை நீட்டினார்கள்! உடனே குளிப்பு கடமையான நிலையில் உள்ளேன் என்றார் அப்போது நபி (ஸல்) அவர்கள் முஸ்லீம் அசுத்தம் ஆக மாட்டார் என்றார்கள்!

(நூல் : அபூதாவூத் : 230)

• இஸ்லாத்தில் மாதவிடாய் பெண்கள் திக்ர் செய்யலாம் துஆ செய்யலாம் அல் குர்ஆனை ஓதலாம் படிக்கலாம்! வெளியே செல்லலாம் - சமையல் செய்யலாம் - கணவன் உடன் ஒன்றாக உறங்கலாம்! இவை எல்லாம் அனுமதிக்கப்பட்ட ஒன்றே இஸ்லாத்தில்!

💜 உடலில் ஒரு சிறிய பகுதி மட்டுமே அசுத்தம் ஆகும் :

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃபில்) இருந்துகொண்டு, (அறையிலுள்ள) தொழுகை விரிப்பை எடு  என்று என்னிடம் சொன்னார்கள். அதற்கு நான் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அப்போது அவர்கள் மாதவிடாய் என்பது உனது கையில் (ஒட்டிக்கொண்டிருப்பது) இல்லை என்று கூறினார்கள்.

(நூல் : முஸ்லிம் : 502)

• மாதவிடாய் என்பது உடலில் உள்ள ஒரு பகுதி மட்டுமே அசுத்தம் ஆகும் இதனால் அவர்கள் முழுமையாக அசுத்தம் அடைய மாட்டார்கள்!

• மேலும் இந்த ஹதீஸை அடிப்படியாக வைத்து இமாம்கள் ஜனாஸாவை கூட மாதவிடாய் பெண்கள் குளிப்பாட்டலாம் என்று கூறி உள்ளார்கள்!

• இன்னும் நபி (ஸல்) அவர்கள் மாதவிடாய் உள்ள தனது மனைவியின் மடியில் படுத்து கொண்டு வழமையாக அல் குர்ஆ னை ஓதி உள்ளார்கள்!

ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள் :

'எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்'

(நூல் : புகாரி : 297)

💟 ஹைளுடைய காலத்தில் குர்ஆனை தொட கூடாதா? ஓத கூடாதா?

• மாதவிடாய் பெண்கள் அல்லது குளிப்பு கடமையில் உள்ள ஆண்கள் அல் குர்ஆனை ஓத கூடாது அல்லது தொட கூடாது என்பதற்க்கு ஸஹீஹான ஒரு ஆதாரம் கிடையாது!

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

மாதவிடாய் பெண்கள் அல் குர்ஆனை ஓதலாம் அதற்கு எந்த ஆதாரப்பூர்வமான தடையும் கிடையாது!

(பத்வா மஜ்மூஃ : 2/387)

• ஸஹாபாக்களிடம் இதை பற்றி கேட்பட்ட போது அவர்கள் பதில் ஓதலாம் என்பதே ஆகும்!

முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களிடம் அப்துர்ரஹ்மான் பின் கனம் (ரழி) அவர்கள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனை ஓதலாமா? என்று கேட்டபோது, ஆம் ஓதலாம். யார் அதனை தடுக்கின்றாரோ அவர் இந்த விடயம் குறித்து அறிவில்லாமல் அதனை செய்கிறார் என்றார்கள்

(நூல் : புகாரியின் விரிவுரை: இப்னு பத்தால் : 1/423)

💟 நேரடியாக தொட கூடாதா :

• மாதவிடாய் அல்லது குளிப்பு கடமையாக உள்ளவர்கள் அல் குர்ஆனை நேரடியாக தொடுவதை விட சில இமாம்கள் cloves அல்லது ஆடை மூலம் தொட்டு ஓதுவதை சிறந்தது என்று கூறி உள்ளார்கள்!

(இமாம் உதைமீன் (ரஹ்) : Fataawa Noor ‘ala ad-Darb : 123/27)

💟 அல் குர்ஆனை ஓத கூடாது என்பதற்கு வாதமும் பதிலும் :

• சூபியாக்கள் மற்றும் ஷாபிஈ மற்றும் ஹனபி மத்ஹப்பை பின் பற்ற கூடியவர்கள் குளிப்பு கடமையான நிலையில் அல் குர்ஆனை ஓதவோ அல்லது தொடவே கூடாது என்று கூறுகிறார்கள் இதற்கு ஆதாரமாக சில செய்திகளை காட்டுகிறார்கள் ஆனால் ஒரு செய்தி கூட சரியானது அல்ல! 

• குளிப்பு கடமையான நிலையில் அல்லது மாதவிடாய் நிலையில் அல் குர்ஆனை தொட கூடாது ஓத கூடாது என்பதற்கு அல் குர்ஆன் வசனத்தையும் சில ஹதீஸ்களை முன் வைக்கிறார்கள் அதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்!

• ஹதீஸ்களை பொறுத்த வரை சட்டம் அமல் எதுவாக இருந்தாலும் அதை செய்ய வேண்டும் அல்லது செய்ய கூடாது என்று கூற ஒரு ஸஹீஹான ஹதீஸ் ஆவது அல்லது ஆதாரம் ஆவது இருக்க வேண்டும்!

• லஹிப் - பலகீனமான ஹதீஸ்களை வைத்து மட்டுமே நாம் அமலோ அல்லது சட்டமோ பின் பற்ற கூடாது! இது ஹதீஸ் கலை சட்டங்களில் ஒன்று ஆகும்!

💜 முதல் வாதம் - பதில் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திலிருந்து வெளிவந்து எங்களுக்கு குர்ஆனைக் கற்றுத் தருவார்கள். எங்களுடன் இறைச்சியைச் சாப்பிடுபவர்கள். கடமையான குளிப்பைத் தவிர வேறு எதுவும் குர்ஆன் ஓதுவதை விட்டும் அவர்களைத் தடுக்காது.

(நூல் : அபூதாவூத் : 198)

• இந்த ஹதீசை முன் வைத்து குளிப்பு கடமையான நிலையில் ஓத கூடாது என்று கூறுகிறார்கள் ஆனால் இது மிகவும் பலகீனமான ஹதீஸ் ஆகும்!

• இந்தச் செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர் வரிசையில் வரும் அப்துல்லாஹ் பின் சலமா என்பவர் மனனம் சக்தியில் கோளறு உள்ளது. இவருடைய மோசமான மனனத் தன்மை உள்ளவர் இவர் நிறைய பலகீனமான செய்திகளை அறிவித்து உள்ளார்! இந்த காரணத்தால் பல அறிஞர்கள் இவர் அறிவிக்கும் ஹதீஸ்களை ஏற்று கொள்ள கூடாது என்றே கூறி உள்ளார்கள்!

• இந்த கருத்தை இமாம்  ஹிப்பான் (ரஹ்), இமாம் ஹாகிம் (ரஹ்), இமாம் ஷாபிஈ (ரஹ்) ஆகிய இமாம்கள் விளக்கம் கூறி உள்ளார்கள்!

(நூல் : மீஸானுல் இஃதிதால்)

• எனவே இந்த ஹதீசை வைத்து அல் குர்ஆனை ஓத கூடாது என்று நாம் கூற முடியாது!

💜 இரண்டாவது வாதம் - பதில் :

தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.

(அல்குர்ஆன் : 56:79)

• தூய்மையானவர்கள் என்ற வசனத்தில் வரும் வார்த்தை வானவர்களையே குறிக்கும் என்று இப்னு அப்பாஸ் (ர­ழி) அவர்கள் கூறினார்கள்!

(நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம்: 4, பக்கம்: 299)

• இந்த அல் குர்ஆன் வசனத்தை மிக முக்கியமான ஆதாரமாக வைத்து குளிப்பு கடமையானவர்கள் - மாதவிடாய் பெண்கள் அல் குர்ஆனை தொடவே கூடாது என்று கூறுகிறார்கள் இதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்!

• முதலில் அல் குர்ஆன் முழுவதும் நபி (ஸல்) அவர்களுக்கு எழுத்து வடிவமாகவோ அல்லது கிதாப் போன்றோ அல்லாஹ் கொடுக்க வில்லை!

• ஜிப்ரயில் (அலை) அவர்கள் சொல்ல நபி (ஸல்) அவர்கள் அதை அப்படியே மனனம் செய்து கொள்ளுவார்கள்! இப்படி தான் முழு அல் குர்ஆனும் இறக்கியது!

• இரண்டாவது அல் குர்ஆன் நபி (ஸல்) அவர்கள் வாழ்த்த காலம் வரை ஒரு தொகுப்பாக எழுத வில்லை யாருமே! நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்பு அபூபக்கர் சித்திக் (ரழி) அவர்கள் காலத்தில் தான் அல் குர்ஆன் கிதாபாக ஒரு தொகுப்பாக உருவாக்கினார்கள்!

• அல் குர்ஆன் முழுவதும் எழுத்து வடிமாக அல்லாஹ் அருளாத போது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் வரை அல் குர்ஆன் ஒரு தொகுப்பாக இல்லாத போது அல் குர்ஆனை தொட கூடாது என்ற கேள்வியே நமக்கு தோன்றாது!

• மூன்றாவது தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் தொட மாட்டார்கள் என்று வசனத்தில் தூய்மையானவர்கள் என்றால் பலரும் மனிதர்கள் தான் என்று புரிந்து கொண்டு உள்ளார்கள் ஆனால் அல்லாஹ் இதே போன்று பல வசனங்களை குறிப்பிட்டு உள்ளான் அதை நாம் படித்தால் நமக்கே தெளிவாக விளக்கும்!

இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள். அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.

(அல் குர்ஆன் : 56 : 77 & 79)

• இதில் உள்ள பாதுகாக்கப்பட்ட பதிவேடு என்பது
லவ்ஹுல் மஹ்ஃபூள் என்று பதிவேடையே குறிக்கும்!

• அதே போன்று பரிசுத்தமானவர்கள் என்ற வசனத்திற்கு அர்த்தம் மலக்கு மார்கள் தான் மனிதர்கள் அல்ல! அல்லாஹ் இதை பற்றி அல்லாஹ் மற்றொரு இடத்தில் கூறி உள்ளான்!
 ‏
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது
உயர்வாக்கப்பட்டது; பரிசுத்தமாக்கப்பட்டது (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால் (லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.

(அல்குர்ஆன் : 80 : 11 & 16)

• இந்த வசனத்தில் தூய்மையானவர்கள் என்று அல்லாஹ் யாரை கூறி உள்ளான் பாதுகாக்கப்பட்ட பதிவேடு என்றால் என்ன என்று நமக்கு இந்த வசனத்தின் மூலம் நமக்கு தெளிவாகிறது!

💜 மூன்றாவது வாதம் - பதில் :

நபி (ஸல்) அவர்கள் ரோமாபுரியின் அரசர் ஹெர்குலிஸுக்கு இஸ்லாத்தின் பக்கம் வர ஒரு கடிதம் எழுதினார்கள் அதில் : 

‘ பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ’

என்று எழுதி விட்டு இஸ்லாத்தின் பக்கம் வர அழைப்பு கொடுத்தார்கள் பின்பு ; கிழே உள்ள அல் குர்ஆன் வசனத்தையும் எழுதி அனுப்பினார்கள் : 

(நபியே! அவர்களிடம்) “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்

(அல்குர்ஆன் : 3:64)

(நூல் : புஹாரி : 2941)

• அசுத்தமானவர்கள் தொட கூடாது ஓத கூடாது என்று இருந்தால் ஏன் நபி (ஸல்) அவர்கள் மாற்று மதத்தை சேர்ந்த அரசருக்கு அல் குர்ஆன் வசனத்தை எழுதி அனுப்பினார்கள்?

💜 நான்காவது வாதம் - பதில் :

இப்னு உமர் ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள் :

மாதாந்த இயற்கை உபாதைக்குள்ளான பெண்களும் குளிப்புக்கடமையான ஆண்களும் குர்ஆனிலிருந்து எதையும் ஓத வேண்டாம்!

(நூல் : திர்மிதி)

• இது மிகவும் பலகீனமான ஹதீஸ் ஆகும்! இந்த ஹதீஸின் அனைத்து அறிவிப்பாளர் வரிசையும் பலவீனமாதே என இப்னுல் ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறி உள்ளார்கள்!

(நூல் : பத்ஹுல் பாரி : 1/409)

• இந்த ஹதீஸ் பொறுத்த வரை அனைத்து அறிஞர்களின் ஒட்டுமொத்த கருத்துப்படி பலவீனமான ஹதீஸ் ஆகும் என இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(பஃத்வா : 21/460)

• நவீன காலத்தில் அல்லாமா அல்பானி (ரஹ்) அவர்களும் இந்த ஹதீஸ் ‘முன்கர்’ என்ற தரத்திலுள்ள பலவீனமான ஹதீஸ் என கூறியுள்ளார்.

(நூல் : அல்இர்வா : 495)

💜 ஐந்தாவது வாதம் - பதில் :

நபி (ஸல்) அவர்கள் எமன் நாட்டவருக்கு எழுதிய கடிதத்தில் 'தூய்மையானவர்களைத் தவிர, மற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது' என்று குறிப்பிட்டார்கள்.

(நூல் : ஹாக்கிம், தாரகுத்னி) 

• மேலே உள்ள ஹதீஸ் ஹாக்கிம், தாரகுத்னி நூல்களில் வருகிறது. இந்த செய்தியில் ஸுவைத் பின் அபீஹாத்திம் என்பவர் அறிவிப்பாளராக வருகிறார்.

• இவர் பலகீனமான அறிவிப்பாளர். இவர் இடம்பெறும் ஹதீஸ்கள் அனைத்துமே பலகீனமாகும். ஹதீஸ்கலை அறிஞர்கள் அனைவருமே இவரையும் பலகீனமான அறிவிப்பாளர் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்

💟 அனைத்து மார்க்க அறிஞர்களின் கருத்து ஓதலாம் என்பதே :

• மாதவிடாய், நிபாஸ் உடைய பெண்கள் மற்றும் குளிப்பு கடமையானவர்கள் அல் குர்ஆனை தொட கூட என்று கூறும் அறிஞர்களை விட தொடலாம் ஓதலாம் என்று கூறும் அறிஞர்களே மிக அதிகம் ஆகும்!

1) இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கருத்து தொடலாம் ஓதலாம் என்பதாகும்!

(நூல் :  கலாநிதி ஜாஸிர் அவ்தா)

2) இமாம் நவவி (ரஹ்) அவர்கள் தனது அவர்கள் மாதவிடாய் உள்ளவர்கள் அல் குர்ஆனை ஓதலாம் தொடலாம் என்றே கூறி உள்ளார்கள்!

(நூல் : முஸ்லிம் ஹதீஸ் கிரந்தத்தின் விரிவுரை : 4/290)

• இது போன்று நிறைய மார்க்க அறிஞர்களின் கருத்துகள்  ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள், நவீன கால அறிஞர்கள் என பலரும் மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதுவது கூடும் என்றே கூறி உள்ளார்கள்!

• அதே நேரத்தில் பெண்களை குர்ஆன் ஓதுவதை தடுக்கக் கூடிய மிகச் சரியான தெளிவான நேரடியான எந்த ஆதாரங்களும் அல் குர்ஆனிலும் ஸஹீஹான ஹதீஸ்களிலும் கிடையாது!

No comments:

Post a Comment