பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, September 23, 2020

பெண்கள் மண்ணறைகளுக்குச்செல்லலாமா?

பெண்களுக்கான
நபிவழி சட்டங்கள்

பெண்கள் மண்ணறைகளுக்குச்செல்லலாமா?

மரண பயத்தையும் மறுமை சிந்தனைûயும் வரவழைத்துக் கொள்வதற்காக பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்வதற்கு அனுமதியுள்ளது.

மண்ணறைகளுக்குச் செல்பவர்கள் ஓத வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். 

நான் “அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில்இருப்ப)வர்களுக்காக நான் என்னசொல்ல வேண்டும்?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “அஸ்ஸலாமுஅலா அஹ்லிலித் தியாரி மினல்முஃமினீன வல் முஸ்லிலிமீன். வயர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீனமின்னா வல் முஸ்தஃகிரீன். வஇன்னா இன்ஷா அல்லாஹுபி(க்)கும் ல லாஹிகூன்” என்று சொல்” என்றார்கள்.

(பொருள்: அடக்கத் தலங்களில்உள்ளஇறைநம்பிக்கையாளர்களுக்கும்முஸ்லிலிம்களுக்கும் சாந்திபொழியட்டும்! நம்மில் முந்திச்சென்றுவிட்டவர்களுக்கும் பிந்திவருபவர்களுக்கும் அல்லாஹ்கருணை புரிவானாக! நாம்அல்லாஹ் நாடினால்உங்களுக்குப் பின்னால் வந்துசேரக்கூடியவர்களாக உள்ளோம்.)

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (1774)

அடக்கத் தலங்களைச்சந்தியுங்கள். ஏனெனில், அவைமரணத்தை நினைவூட்டும்!’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (1777)

அடக்கத்தலங்களை சந்திப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன்.

முஹம்மதுவிற்கு அவரின்தாயாருடைய அடக்கத்தலத்தைசந்திப்பதற்கு அனுமதிதரப்பட்டுவிட்டது. எனவே நீங்கள்மண்ணறைகளை சந்தியுங்கள். அவை உங்களுக்கு மறுமையைநினைவூட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

நூல் : திர்மிதி (974)

மண்ணறைகளை ஜியாரத்செய்கிறோம் என்றுகூறிக்கொண்டு சில பெண்கள்தர்ஹாக்களுக்குச்செல்கிறார்கள். தர்ஹாக்களில்இணைவைப்புஅறங்கேற்றப்படுவதாலும்மார்க்கம் தடை செய்த ஏராளமானஅம்சங்கள் அங்குநடைபெறுவதாலும் அங்குஆண்களாக இருந்தாலும்பெண்களாக இருந்தாலும்செல்வது கூடாது. பொதுமையவாடிகளு
 க்குச்செல்லலாம்.

ஏகத்துவம்.

No comments:

Post a Comment