பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, September 23, 2020

பெண்கள் பள்ளிவாசலுக்குச்செல்லலாமா?

.
பெண்களுக்கான
நபிவழி சட்டங்கள்

பெண்கள் பள்ளிவாசலுக்குச்செல்லலாமா?

    பெண்கள் பள்ளிவாசலிற்கு செல்லக்கூடாது என்று முஸ்லிம்களில் பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் பெண்கள் பள்ளிக்கு வருவதை தடைசெய்கிறார்கள்.

ஆனால் ஆண்களும் பெண்களும் சந்திக்கும் சபைகளுக்கும் கடைத்தெருக்களுக்கும் செல்ல அனுமதிக்கிறார்கள். 

    நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் தாராளமாக பள்ளிக்கு வந்து தொழுதுள்ளார்கள். அதை நபி (ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள். இதை ஏராளமான நபிமொழிகளில் நம்மால் காணமுடியும். 

நம்பிக்கையுள்ள (மூமினான) பெண்கள் தங்களது கம்பளிஆடைகளால் போர்த்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர்தொழுகையில்பங்கெடுப்பவர்களாக இருந்தனர்.

தொழுகையை முடித்துக்கொண்டு தமது இல்லங்களுக்குதிரும்பிச் செல்வார்கள் .இருட்டின்காரணமாக அவர்களை யாரும்(ஆணா பெண்ணா என்று) அறிந்துகொள்ள முடியாது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (578)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீண்ட நேரம் தொழுவிக்கும். எண்ணத்துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால்தொழுதுகொண்டிருக்கும்பெண்களின்) குழந்தை அழுவதைநான் கேட்பேன். அந்தக்குழந்தையின் தாய்க்குசிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுவேன்.

அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)

நூல் : புகாரி (707)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் (தொழுத இடத்திலேயே) வீற்றிருப்பார்கள். (இதன் அறிவிப்பாளர்கüல் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகையில்,

“அல்லாஹ் நன்கறிந்தவன்! தொழுகை முடித்து திரும்பும்ஆண்கள் பெண்கüடம் வருவதற்குமுன் பெண்கள் (அங்கிருந்து) புறப்பட்டுச் சென்றுவிடவேண்டும்என்பதற்காகவே நபி (ஸல்) அவ்வாறு வீற்றிருந்தார்கள்என்றே நான் கருதுகிறேன்” என்றார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி) 

நூல் : புகாரி (837)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்எனக்) கூறுதல்ஆண்களுக்குரியதும்கைதட்டுதல்பெண்களுக்குரியதுமாகும். 

 அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)

நூல் : புகாரி (1203)

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாதி இரவு வரை) இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள் அவர்களை அழைத்து,

“(தொழுகைக்கு வந்திருந்த) பெண்களும் சிறுவர்களும்உறங்கிவிட்டனர்” என்று கூறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது அறையிலிருந்து) புறப்பட்டு வந்து,

“பூமியில் வசிப்போரில்உங்களைத் தவிர வேறுயாரும்இந்தத் தொழுகையைத்தொழவில்லை” என்று கூறினார்கள்.    

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (862)

உமர் (ரலி) அவர்கüன் மனைவியரில் (ஆத்திகா எனும்) ஒருவர் சுப்ஹு, இஷா ஆகியத் தொழுகையைப் பள்üயில் ஜமாஅத்தில் தொழச் செல்வார்.

அவரிடம், “(உங்கள் கணவர்) உமர்(ரலிலி) அவர்கள் இ(வ்வாறுசெல்வ)தை வெறுக்கிறார்கள்; ரோஷப்படுகிறார்கள் என்றுதாங்கள் அறிந்திருந்தும் நீங்கள்ஏன் (பள்üக்குச்) செல்கிறீர்கள்?”

என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “(என்னைப் பள்ளிக்குச் செல்லவேண்டாமென்று கூறவிடாமல்) அவரை எது தடுக்கிறது?” என்று கேட்க, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பெண்கள்பள்ளிவாசல்களுக்குச்செல்வதைத் தடுக்காதீர்கள்என்று கூறியதே உமர் (ரலி) அவர்களைத் தடுக்கிறது”

என்று பதில் வந்தது.

    அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி (900) 

    காஃப் வல்குர்ஆன் மஜீத் என்றுதொடங்கும் அத்தியாயத்தை நபி(ஸல்) அவர்களின் வாயிலிருந்து(மனனமாக) நான் எடுத்துக்கொண்டேன். அதை அவர்கள்ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்மிம்பரில் ஓதுவார்கள். 

அறிவிப்பவர் : அம்ரா (ரலி) அவர்களின் சகோதரி

நூல் : முஸ்லிம் (1442)

ஏகத்துவம்.

No comments:

Post a Comment