பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, May 18, 2023

குர்ஆன் வசனங்களை ஓதியப் பிறகு ஸதக்கல்லாஹுல் அளீம் என்று சொல்வது நபி வழியா?

 குர்ஆன் வசனங்களை ஓதியப் பிறகு ஸதக்கல்லாஹுல் அளீம் என்று சொல்வது நபி வழியா?

பதில் :

திருக்குர்ஆனை ஓதி முடிக்கும் போது ஸதக்கல்லாஹுல் அளீம் (மகத்துவ மிக்கவன் உண்மையை கூறினான்) என்று சொல்லும் வழக்கம் பரவலாக காணப்படுகிறது.

திருக்குர்ஆன் வசனங்களை ஓதி முடித்தவுடன் இவ்வாறு கூற வேண்டுமென்று திருக்குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ இடம்பெறவில்லை. எனவே இவ்வாறு சொல்வது நபிவழி அல்ல.

இறைக் கருத்தை வலியுறுத்தி பேச வேண்டிய இடங்களில் அவசியம் ஏற்பட்டால் ஸதக்கல்லாஹுல் அளீம் “ மகத்துமிக்க அல்லாஹ் உண்மைச் சொன்னான்“ என்று சொல்லிக் கொள்ளலாம். அல்லது இதே கருத்தை தரும் வேறு வார்த்தைகளிலும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இதை குர்ஆன் ஓதி முடிக்கும் போது எப்போதும் சொல்ல வேண்டும் என்பதற்கு ஆதாரமில்லை.

மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்கு எனது சொத்தில் பங்கு உண்டா?

 மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்கு எனது சொத்தில் பங்கு உண்டா?

பதில் :

“(சொத்தில்) இரண்டு பெண்களின் பங்கைப் போன்றது ஓர் ஆணுக்குரியது. பெண் மக்களாகவே (இருவர் அல்லது) இருவருக்கு மேல் இருந்தால் இறந்தவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்குரியது. ஒரேயொரு மகள் மட்டும் இருந்தால் அவளுக்குப் பாதி உண்டு” என உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகிறான்.

அல்குர்ஆன் 4:11

இறைவன் பங்கு தொடர்பாக குறிப்பிடும் போது உங்கள் பிள்ளைகள் என்று குறிப்பிடுகின்றான்.

உங்கள் பிள்ளைகள் என்றால் அவருக்கு பிறந்த குழந்தையாக இருக்க வேண்டும். மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை உங்கள் குழந்தையாகாது. எனவே முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தைக்கு உங்கள் சொத்தில் பங்கு வராது.

அதே நேரத்தில் உங்கள் மனைவி இறந்து விட்டால் அவரின் சொத்தில் அந்த குழந்தைக்கு பங்கு கிடைக்கும். அந்த குழந்தை வேறு கணவர் மூலாமாக பிறந்தாலும் அந்த குழந்தையின் தாய் உங்கள் மனைவிதான். எனவே அவரின் சொத்தில் பங்கு கிடைக்கும்.

ஜுமுஆ தொழுகை முடிந்து நோயாளிகளைக் குறிப்பிட்டு அவர்கள் குணமடைய பிராத்தனை செய்ய வேண்டி அறிவிப்பு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?

 ஜுமுஆ தொழுகை முடிந்து நோயாளிகளைக் குறிப்பிட்டு அவர்கள் குணமடைய பிராத்தனை செய்ய வேண்டி அறிவிப்பு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?

பதில் :

ஒரு முஸ்லிம் முஸ்லிமான தனது சகோதரரிடம் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கேட்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

5652حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ عِمْرَانَ أَبِي بَكْرٍ قَالَ حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ أَلَا أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ قُلْتُ بَلَى قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنِّي أُصْرَعُ وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي قَالَ إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ فَقَالَتْ أَصْبِرُ فَقَالَتْ إِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي أَنْ لَا أَتَكَشَّفَ فَدَعَا لَهَا حَدَّثَنَا مُحَمَّدٌ أَخْبَرَنَا مَخْلَدٌ عَنْ ابْنِ جُرَيْجٍ أَخْبَرَنِي عَطَاءٌ أَنَّهُ رَأَى أُمَّ زُفَرَ تِلْكَ امْرَأَةً طَوِيلَةً سَوْدَاءَ عَلَى سِتْرِ الْكَعْبَةِ رواه البخاري

கறுப்பு நிறப் பெண்மணி ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு அந்தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும் போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 5652

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ قَالَ نَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي قَالَ فَقَرَّبْنَا إِلَيْهِ طَعَامًا وَوَطْبَةً فَأَكَلَ مِنْهَا ثُمَّ أُتِيَ بِتَمْرٍ فَكَانَ يَأْكُلُهُ وَيُلْقِي النَّوَى بَيْنَ إِصْبَعَيْهِ وَيَجْمَعُ السَّبَّابَةَ وَالْوُسْطَى قَالَ شُعْبَةُ هُوَ ظَنِّي وَهُوَ فِيهِ إِنْ شَاءَ اللَّهُ إِلْقَاءُ النَّوَى بَيْنَ الْإِصْبَعَيْنِ ثُمَّ أُتِيَ بِشَرَابٍ فَشَرِبَهُ ثُمَّ نَاوَلَهُ الَّذِي عَنْ يَمِينِهِ قَالَ فَقَالَ أَبِي وَأَخَذَ بِلِجَامِ دَابَّتِهِ ادْعُ اللَّهَ لَنَا فَقَالَ اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ رواه مسلم

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் தந்தையிடம் தங்கினார்கள். அப்போது அவர்களுக்கு அருகே உணவும் வத்பா எனும் ஒரு வகைப் பலகாரமும் வைத்தோம். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள். பிறகு பேரீச்சம் பழங்கள் கொண்டு வரப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, அவற்றின் கொட்டைகளை தம்மிரு விரல்களுக்கிடையே வைத்துக் கொண்டார்கள். பிறகு ஒரு பானம் கொண்டு வரப்பட்ட போது, அதை அருந்தினார்கள். பிறகு மீதியிருந்ததைத் தமக்கு வலப் பக்கத்திலிருந்தவருக்குக் கொடுத்தார்கள். (அவர்கள் புறப்படத் தயாரான போது) என் தந்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு, “எங்களுக்காகப் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இறைவா! நீ இவர்களுக்கு வழங்கிய உணவில் பரக்கத் எனும் அருள் புரிவாயாக! இவர்களை மன்னித்து, இவர்களுக்குக் கருணை புரிவாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)
நூல் : முஸ்லிம் (4149)

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَا حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا حَمَّادٌ وَهُوَ ابْنُ سَلَمَةَ عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ بِهَذَا الْإِسْنَادِ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ خَيْرَ التَّابِعِينَ رَجُلٌ يُقَالُ لَهُ أُوَيْسٌ وَلَهُ وَالِدَةٌ وَكَانَ بِهِ بَيَاضٌ فَمُرُوهُ فَلْيَسْتَغْفِرْ لَكُمْ (رواه مسلم)

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தாபியீன்களில் (உங்களைத் தொடர்ந்து வரு வோரில்) சிறந்தவர் உவைஸ் எனப்படும் ஒரு மனிதர் ஆவார். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார்; அந்த மனிதருக்கு வெண்குஷ்டம் இருக்கும். (அவரைக் கண்டால்) உங்களுக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்திக்கச் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள்” என உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உசைர் பின் ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (4970)

அன்றாடம் நமது தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக ஸலவாத் எனும் துஆ செய்கிறோம். இவ்வாறு தனக்காக துஆ செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மை வலியுறுத்தி உள்ளனர்.

பாங்கு முடிந்தவுடன் எனக்காக துஆச் செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அதை ஏற்று நாம் அல்லாஹும்ம் ரப்ப ஹாதிஹித் … என்ற துஆவை பாங்குக்குப் பின்னர் ஓதுகிறோம். இதையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஜூம்ஆவில் நோய்வாய்ப்பட்டவர்களுக்காக துஆச் செய்யுங்கள் என்று அறிவிப்புச் செய்வது சிறந்த நடைமுறையாக இருக்காது. ஏனெனில் ஒவ்வொரு ஊரிலும் ஏராளமான நோயாளிகள் இருப்பார்கள். அனைவரும் ஜும்ஆவில் இது போன்ற அறிவிப்புச் செய்ய முன்வந்தால் அது தேவையற்ற நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும். நாளடைவில் அது ஒரு பித்அத்தாக மாறிவிடும் அபாயமும் உள்ளது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இது போன்ற நடைமுறை இருந்ததில்லை.

எனவே அதைத் தவிரந்து கொள்வதே சிறந்ததாகும். அதிகமான மக்கள் வருந்தும் ஒரு நிகழ்வுக்காக எப்போதாவது ஜூம்ஆவில் அறிவிப்புச் செய்தால் அது பிழையாகாது.

ஆனால் அதை வாடிக்கையாகக் கொள்வது சிறந்ததல்ல.

ஜமாஅத் தொழுகை முடிந்த பிறகு தனித்தனியாக துஆ செய்வதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை என சிலர் கூறுகின்றனர். இதன் உண்மை நிலை என்ன?

 ஜமாஅத் தொழுகை முடிந்த பிறகு தனித்தனியாக துஆ செய்வதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை என சிலர் கூறுகின்றனர். இதன் உண்மை நிலை என்ன?

பதில்

கடமையான தொழுகையை ஜமாத்தாக தொழுது முடித்த பிறகு கூட்டாக சேர்ந்து ஒருவர் துஆ கேட்டு மற்றவர்கள் ஆமின் சொல்லும் கூட்டு துஆ முறை என்பது தான் இஸ்லாத்தில் சொல்லப்படாத ஆதாரமற்ற செயலாகும்.

இதை பற்றி விரிவாக அறிய

<https://onlinetntj.com/kelvipathil/kootu-dua-aatharam-ullatha>

<https://onlinetntj.com/kelvipathil/kootu-dua-kuduma>

அதே சமயம் தொழுகைக்குப் பின் தனித் தனியே அவரவர் தான் விரும்பியவைகளை துஆ செய்வதற்கு மார்க்கத்தில் ஏராளமான ஆதாரங்கள் இருக்கிறது.

பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். பணிந்து நடப்பவர்களைத் தவிர (மற்றவர்களுக்கு) அது பெரும் பாரமாக இருக்கும்.

அல்குர்ஆன் 2: 45

இந்த வசனத்தில் தொழுகையின் மூலம் இறைவன் தன்னிடத்தில் உதவித் தேடுமாறு கட்டளையிடுகிறான்.

கடமையான, உபரியான என்று எந்தவொரு தொழுகையாயினும் அந்த தொழுகையை நிறைவேற்றிய பிறகு இறைவனிடத்தில் துஆ செய்யும் போது அதற்கு கூடுதல் முக்கியத்துவம் உள்ளது.

இவ்வாறு தொழுகையை முடித்த பிறகு துஆ கேட்பது தொடர்பான பொதுவாக வரக்கூடிய ஆதாரங்களும் இருக்கிறது.
நேரடியாக, நபி(ஸல்) அவர்கள் ஜமாஅத் தொழுகை முடித்த பிறகு துஆ கேட்டதற்கும் ஆதாரம் இருக்கிறது.

و حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ عَنْ مِسْعَرٍ عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ عَنْ ابْنِ الْبَرَاءِ عَنْ الْبَرَاءِ قَالَ كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْبَبْنَا أَنْ نَكُونَ عَنْ يَمِينِهِ يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ قَالَ فَسَمِعْتُهُ يَقُولُ رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ أَوْ تَجْمَعُ عِبَادَكَ و حَدَّثَنَاه أَبُو كُرَيْبٍ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مِسْعَرٍ بِهَذَا الْإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழும்போது அவர்களுக்கு வலப் பக்கம் இருப்பதையே விரும்புவோம். அவர்கள் (தொழுது முடித்ததும்) எங்களை நோக்கித் திரும்புவார்கள். அப்போது, “ரப்பீ கினீ அதாபக யவ்ம தப்அஸு (அல்லது “தஜ்மஉ’) இபாதக்க’ (இறைவா! உன் அடியார்களை “உயிர் கொடுத்து எழுப்பும்’ நாளில் உன் வேதனையிலிருந்து என்னைக் காப்பாயாக!) என்று அவர்கள் பிரார்த்திப்பதை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : பரா பின் ஆஸிப் (ரலி)

நூல் : முஸ்லிம் 1280

மேலும், நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்கு பின்னால் கேட்க வேண்டிய ஏராளமான துஆக்களையும் கற்றுத் தந்துள்ளார்கள்.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

‘அல்லாஹும்ம இன்னீ அவூதுபி(க்)க மினல் புக்லி, வஅவூதுபி(க்)க மினல் ஜுப்னி, வஅவூதுபி(க்)க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வஅவூது பி(க்)க மின் பித்ன(த்)தித் துன்யா, வஅவூது பி(க்)க மின் அதாபில் கப்ர்.
(பொருள்: இறைவா! உன்னிடம் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாப்புத் கோருகிறேன். கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என இறைவனிடம் தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடினார்கள்.

அறிவிப்பவர்: சஅத் (ரலி)
நூல்: புகாரீ 5384, 2822

اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

‘அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரி(க்)க வஷுக்ரி(க்)க வஹுஸ்னி இபாத(த்)திக்
(பொருள்: இறைவா! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!) என ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் கூறுவதை விட்டுவிடாதே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆத் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 1301, அஹ்மத் 21109

இவ்வாறான துஆக்களை நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்கு பின் செய்ய வேண்டிய துஆக்களாக நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்.
மேலும், நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் நபித்தோழர்களும் தொழுகையை முடித்த பிறகு துஆ செய்துள்ளார்கள் என்பதற்கு பின்வரும் செய்தி ஆதாரமாக இருக்கிறது.

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ وَسَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ دَخَلَ أَعْرَابِيٌّ الْمَسْجِدَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ فَصَلَّى فَلَمَّا فَرَغَ قَالَ اللَّهُمَّ ارْحَمْنِي وَمُحَمَّدًا وَلَا تَرْحَمْ مَعَنَا أَحَدًا فَالْتَفَتَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَقَدْ تَحَجَّرْتَ وَاسِعًا فَلَمْ يَلْبَثْ أَنْ بَالَ فِي الْمَسْجِدِ فَأَسْرَعَ إِلَيْهِ النَّاسُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَهْرِيقُوا عَلَيْهِ سَجْلًا مِنْ مَاءٍ أَوْ دَلْوًا مِنْ مَاءٍ ثُمَّ قَالَ إِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த போது ஒரு கிராமவாசி பள்ளிக்குள் நுழைந்தார். அவர் தொழுது முடித்தவுடன் இறைவா எனக்கும், முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அருள்புரிவாயாக. எங்களுடன் சேர்த்து வேறு யாருக்கும் அருள் புரிந்துவிடாதே என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை நோக்கி நீ (அல்லாஹ்வின்) விசாலமான அருளை (நம் இருவருக்காக மட்டும்) சுருக்கிவிட்டாயே என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதி 137

இந்த இடத்தில் அவர் கேட்ட பிரார்த்தனையின் கருத்தை தவறானது என்று தான் நபி(ஸல்) கண்டித்தார்களே தவிர தொழுகைக்கு பின் அவர் கேட்ட தருணத்தையும் நபி(ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனை அல்லாமல் அவராக சுயமாக அவர் விரும்பியதை கேட்டதையும் கணடிக்கவில்லை.

எனவே, ஜமாஅத் தொழுகை முடிந்த பிறகு கூட்டாக சேர்ந்து ஒருவர் துஆ கேட்க மற்றவர் ஆமின் சொல்வதற்கு தான் மார்க்தக்தில் ஆதாரம் இல்லையே தவிர ஒவ்வொருவரும் தனித தனியே துஆ கேட்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் மார்க்கத்தில் இருக்கிறது.

இருவரும் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தை முறிக்கலாமா??

 இருவரும் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தை முறிக்கலாமா??

பதில்:

ஒப்பந்தம் என்பது இருவரோ அல்லது இரு தரப்பினரோ தங்களுக்கு மத்தியில் பரஸ்பர நிபந்தனைகளை வகுத்து அதன் அடிப்படையில் இருவரும் நடப்போம் என்று ஒப்புக்கொண்டு எழுத்திலோ வாய்மொழியாகவோ வாக்குறுதியளிப்பதாகும்.

ஒப்பந்தத்தை நிறைவேற்ற இருவரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதை போல தங்களுக்கு மத்தியில் உள்ள ஒப்பந்தத்தை முறிப்பதாக இருந்தால் இருவரும் ஒப்புக் கொண்டு பிரிவதில் எவ்வித குற்றமும் இல்லை.

ஒருவர் தன்னால் இயலாமல் பிரிய நினைத்தால் கூட இருவரும் பேசி பிரிந்து விடுவதிலும் எவ்வித குற்றமும் இல்லை.

ஒப்பந்தம் குறித்து மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படையான தகவல்களை அறிந்துக் கொள்வோம்.

ஒப்பந்தம் செய்தால் அதை நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்கம் கூறுகிறது.

இறைநம்பிக்கை கொண்டோரே! உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள்.

அல்குர்ஆன் 5: 1

அநாதையின் செல்வத்தை, அவர் பருவமடையும் வரை சரியான முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்! வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்! வாக்குறுதி விசாரிக்கப்படக் கூடியதாகும்.

அல்குர்ஆன் 17: 34

ஒரு சமுதாயத்தவர், இன்னொரு சமுதாயத்தவரைவிடப் பெரும்பான்மையாக இருப்பதால் (இவர்களுக்கு ஆதரவாக) உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையே மோசடியாக்கி, (அவற்றை முறித்து விடாதீர்கள். இதன் மூலம்) நூலை நூற்று, அது உறுதியான பின் அதைத் தனித்தனியாகப் பிரித்து விட்டவளைப் போல் நீங்கள் ஆகிவிடாதீர்கள்! இதைக் கொண்டு உங்களை அல்லாஹ் சோதிக்கிறான். நீங்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அதனை அவன் மறுமை நாளில் உங்களுக்குத் தெளிவுபடுத்துவான்.

அல்குர்ஆன் 16: 92

ஒப்பந்தத்தை பரஸ்பரமில்லாமல் முறிப்பதை இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (1/ 15)

34- حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُرَّةَ ، عَنْ مَسْرُوقٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ : أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا ، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا إِذَا اؤْتُمِنَ خَانَ ، وَإِذَا حَدَّثَ كَذَبَ ، وَإِذَا عَاهَدَ غَدَرَ ، وَإِذَا خَاصَمَ فَجَرَ.

நான்கு குணங்கள் எவனிடம் குடி கொண்டுள்ளனவோ அவன் அப்பட்டமான நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். எவனிடம் அவற்றில் ஒரு குணம் குடி கொண்டுள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் குடியிருக்கும். (அந்த நான்கு குணங்களாகிறது) 1. (ஏதேனுமொன்றை) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வதும், 2. பேசும் போது பொய் சொல்வதும், 3. ஒப்பந்தம் செய்து கொண்டால் நம்பிக்கை மோசடி செய்வதும், 4. வழக்காடினால் அவமதிப்பதும் ஆகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 34

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْغَادِرَ يُرْفَعُ لَهُ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ يُقَالُ هَذِهِ غَدْرَةُ فُلَانِ بْنِ فُلَانٍ

மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்பட்டு இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி) என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 6177

தமது உடன்படிக்கையை அவர்கள் முறித்ததாலும், அல்லாஹ்வின் வசனங்களை மறுத்ததாலும், நபிமார்களை அநியாயமாகக் கொன்றதாலும், “எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளன” என்று கூறியதாலும் (அவர்களைச் சபித்தோம்.) மேலும் அவர்களின் இறைமறுப்பின் காரணமாக அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டான். எனவே சிலரைத் தவிர அவர்கள் இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

அல்குர்ஆன் 4: 155

அவர்கள் தமது வாக்குறுதிக்கு மாறு செய்ததால் அவர்களைச் சபித்தோம். அவர்களின் உள்ளங்களை இறுகச் செய்தோம். அவர்கள் (வேத) வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் மாற்றுகின்றனர். அவர்களுக்குச் சொல்லப்பட்ட அறிவுரையின் ஒரு பகுதியை மறந்தனர். அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்களிடமிருந்து ஏதேனும் ஒரு மோசடியைக் கண்டுகொண்டே இருப்பீர். எனவே அவர்களை மன்னித்து, அலட்சியம் செய்வீராக! நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.

அல்குர்ஆன் 5: 13

உங்கள் சத்தியங்களை, உங்களுக்கிடையே மோசடியாகப் பயன்படுத்தாதீர்கள்! அவ்வாறு செய்தால், (உங்கள்) பாதம் நிலைபெற்ற பின் அது சறுக்கி விடும். மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் நீங்கள் தடுத்ததால் துன்பத்தை அனுபவிப்பீர்கள். உங்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.

அல்குர்ஆன் 16: 94

ஜுமுஆ உரைக்கு மிம்பர் இல்லாமல் தரையில் நின்று உரை நிகழ்த்தலாமா?

 ஜுமுஆ உரைக்கு மிம்பர் இல்லாமல் தரையில் நின்று உரை நிகழ்த்தலாமா?

பதில்:

ஜும்ஆ நிறைவேறுவதற்கு கூட்டாக சேர்ந்து நிறைவேற்ற வேண்டும், தொழுகைக்கு முன்னால் உரை அவசியம் என்பன போன்ற பல நிபந்தனைகளை மார்க்கம் நமக்கு  சொல்லித் தருகிறது.

இவற்றில் மிம்பர் என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்ட ஒரு வழிமுறையாக உள்ளது.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (2/ 10)

912- حَدَّثَنَا آدَمُ قَالَ : حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ كَانَ النِّدَاءُ يَوْمَ الْجُمُعَةِ أَوَّلُهُ إِذَا جَلَسَ الإِمَامُ عَلَى الْمِنْبَرِ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَلَمَّا كَانَ عُثْمَانُ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، وَكَثُرَ النَّاسُ زَادَ النِّدَاءَ الثَّالِثَ عَلَى الزَّوْرَاءِ.

நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் ஜுமுஆ நாளின் முதல்பாங்கு இமாம் மிம்பர் மீது அமர்ந்ததும் சொல்லப்பட்டுவந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் (ஆட்சிக்) காலத்தில் (மதீனாவில்) மக்கள் தொகை அதிகரித்த போது ஸவ்ரா’ எனும் கடைவீதியில் (பாங்கு, இகாமத் அல்லாமல்) மூன்றாவது தொழுகை அறிவிப்பை அதிகப்படுத்தினார்கள்.

அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத்(ரலி)

நூல்: புகாரி 912

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (2/ 12)

919- حَدَّثَنَا آدَمُ قَالَ : حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ سَالِمٍ ، عَنْ أَبِيهِ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ فَقَالَ مَنْ جَاءَ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ.

நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்றபடி ஜுமுஆத் தொழுகைக்கு வருபவர் குளித்துக் கொள்ளட்டும்’ என்று கூறுவதை நான் செவியேற்றேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி 919

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (2/ 15)

933- حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ قَالَ : حَدَّثَنَا الْوَلِيدُ قَالَ : حَدَّثَنَا أَبُو عَمْرٍو ، قَالَ : حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ أَصَابَتِ النَّاسَ سَنَةٌ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَبَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ فِي يَوْمِ جُمُعَةٍ قَامَ أَعْرَابِيٌّ فَقَالَ يَا رَسُولَ اللهِ هَلَكَ الْمَالُ وَجَاعَ الْعِيَالُ فَادْعُ اللَّهَ لَنَا فَرَفَعَ يَدَيْهِ وَمَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا وَضَعَهَا حَتَّى ثَارَ السَّحَابُ أَمْثَالَ الْجِبَالِ ثمَّ لَمْ يَنْزِلْ عَنْ مِنْبَرِهِ حَتَّى رَأَيْتُ الْمَطَرَ يَتَحَادَرُ عَلَى لِحْيَتِهِ صلى الله عليه وسلم فَمُطِرْنَا يَوْمَنَا ذَلِكَ وَمِنَ الْغَدِ وَبَعْدَ الْغَدِ وَالَّذِي يَلِيهِ حَتَّى الْجُمُعَةِ الأُخْرَى وَقَامَ ذَلِكَ الأَعْرَابِيُّ ، أَوْ قَالَ غَيْرُهُ – فَقَالَ يَا رَسُولَ اللهِ تَهَدَّمَ الْبِنَاءُ وَغَرِقَ الْمَالُ فَادْعُ اللَّهَ لَنَا فَرَفَعَ يَدَيْهِ ، فَقَالَ : اللَّهُمَّ حَوَالَيْنَا ، وَلاَ عَلَيْنَا فَمَا يُشِيرُ بِيَدِهِ إِلَى نَاحِيَةٍ مِنَ السَّحَابِ إِلاَّ انْفَرَجَتْ وَصَارَتِ الْمَدِينَةُ مِثْلَ الْجَوْبَةِ وَسَالَ الْوَادِي قَنَاةُ شَهْرًا وَلَمْ يَجِئْ أَحَدٌ مِنْ نَاحِيَةٍ إِلاَّ حَدَّثَ بِالْجَوْدِ

நபி (ஸல்) அவர்களது காலத்தில் ஒருமுறை பஞ்சம் ஏற்பட்டது. ஒரு ஜுமுஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு கிராமவாசி எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்து விட்டன; குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்ற னர். எனவே, எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பிரார்த்திக்க) தம் கைகளை ஏந்தினார்கள்.- அப்போது எந்த மழைமேகத்தையும் நாங்கள் வானத்தில் காணவில்லை- என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்கள் தமது கையை கீழே விடுவதற்கு முன்பாக மலைகளைப் போன்ற மேகங்கள் பரவத் தொடங்கின. நபி (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவு மேடையை விட்டும் இறங்கியிருக்கவில்லை. மழை பெய்து அவர்களது தாடியில் வழிந்ததை நான் பார்த்தேன். எங்களுக்கு அன்றைய தினமும் மறுதினமும் அதற்கடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் அடுத்த ஜுமுஆ வரையிலும் மழை கிடைத்தது.

(அந்த ஜுமுஆவில்) அதே கிராமவாசி’ அல்லது வேறொருவர்’ எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! கட்டடங்கள் இடிந்து கொண்டிருக்கின்றன; செல்வங்கள் வெள்ளநீரில் மூழ்குகின்றன. எனவே, எங்களுக்கு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தி, இறைவா! எங்களைச் சுற்றிலும் (எங்களுக்கு நன்மை ஏற்படும் விதத்தில்) மழையைப் பொழிவாயாக! எங்களுக்கெதிராக (எங்களுக்கு கேடு நேரும் விதத்தில்) மழை பொழியச் செய்யாதே! என்று பிரார்த்தித்தார்கள். மேகத்தின் எந்த பகுதியை நோக்கி நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்களோ அம்மேகம் விலகிச் சென்றது. மதீனா(வைச் சூழ்ந்திருந்த மேகம் விலகியதால் அது) பாதாளம் போன்று மாறிவிட்டிருந்தது. கனாத்’ ஓடையில் ஒரு மாதம் தண்ணீர் ஓடியது. எந்தப் பகுதியிலிருந்து யார் வந்தாலும் இந்த அடை மழை பற்றிப் பேசாமால் இருக்கவில்லை.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 933

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (3/ 13)

2049 – وَحَدَّثَنِى عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِىُّ أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَسَّانَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أُخْتٍ لِعَمْرَةَ قَالَتْ أَخَذْتُ (ق وَالْقُرْآنِ الْمَجِيدِ) مِنْ فِى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- يَوْمَ الْجُمُعَةِ وَهُوَ يَقْرَأُ بِهَا عَلَى الْمِنْبَرِ فِى كُلِّ جُمُعَةٍ.

நாங்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஓராண்டு அல்லது ஓராண்டும் சில மாதங்களும் ஒரே அடுப்பையே பயன் படுத்திவந்தோம். நான் “காஃப். வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நாவி லிருந்தே மனனமிட்டேன். அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி மக்களுக்கு உரையாற்றும் போது அந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: ஹாரிஸா பின் நுஅமான் (ரலி) அவர்களின் புதல்வியார் உம்மு ஹிஷாம் (ரலி)

நூல்: முஸ்லிம் 1582

மேற்படி ஆதாரங்கள் அனைத்திலும் நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையை மிம்பரின் மீது ஏறி செய்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

அதே சமயம், மிம்பரை ஜும்ஆவிற்கான ஒரு கட்டாய நிபந்தனையாக நபி(ஸல்) அவர்கள் விதிக்கவில்லை.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (1/ 122)

449- حَدَّثَنَا خَلاَّدٌ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ ، عَنْ أَبِيهِ عَنْ جَابِرٍ أَنَّ امْرَأَةً قَالَتْ يَا رَسُولَ اللهِ أَلاَ أَجْعَلُ لَكَ شَيْئًا تَقْعُدُ عَلَيْهِ فَإِنَّ لِي غُلاَمًا نَجَّارًا قَالَ إِنْ شِئْتِ فَعَمِلَتِ الْمِنْبَرَ

ஒரு (அன்சாரிப்) பெண்மணி, அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தச்சு வேலை தெரிந்த ஓர் அடிமை இருக்கிறார்; நீங்கள் அமர்ந்துகொள்வதற்கேற்ப (மேடை) ஒன்றை நான் உங்களுக்கு செய்து தரலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் விரும்பினால் (செய்து கொடுங்கள்) என்று கூற, அப்பெண்மணி சொற்பொழிவு மேடை (மிம்பர்) ஒன்றை செய்(து கொடுத்)தார்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 449

இந்த நிகழ்வுக்கு முன்பு மிம்பர் எனும் மேடை அமைக்கப்படவில்லை என்று தெரிகிறது.  மிம்பர் இல்லாமல் தான் அதில் உரை நிகழ்த்தியிருப்பார்கள்.

மிம்பர் கட்டாய நிபந்தனையாக இருக்கும் என்றால் விரும்பினால் செய்து கொடுங்கள் என்று நபியவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள்.

அதே சமயம், நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையை மிம்பரின் மீது நிகழ்த்தி பெருநாள் உரைக்கு மிம்பர் இல்லாமல் உரை நிகழ்த்தியிருப்பதால் நபி(ஸல்) அவர்கள் தனது ஜும்ஆ உரையில் கடைபிடித்த ஒரு வழிமுறையாக இருக்கிறது.

மிம்பர் செய்து கொடுத்த பின்னர் நபிகளார் தொடர்ந்து அந்த மிம்பரை பயன்படுத்தி வந்துள்ளார்கள். எனவே அவற்றை பின்பற்றி நடப்பதே சிறந்தது.

மிம்பர் என்பது குறிப்பிட்ட உயரத்தில் இருக்க வேண்டும், குறிப்பிட்ட படிகள் அமைந்திருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.

மிம்பர் என்பது தரையிலிருந்து சற்று உயரமாக இருக்க கூடியதாக அமைய வேண்டும்.

இதை பின்வரும் செய்தியிருந்து அறிந்துக் கொள்ளலாம்.

وَنَزَلَ ، عَنِ الْمِنْبَرِ فَصَلَّى فَلَمَّا انْصَرَفَ

நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையிலிருந்து இறங்கி (ஜுமுஆத் தொழுகை) தொழுவித்தார்கள்.

நூல்: புகாரி 1021