பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)
Showing posts with label Prophets. Show all posts
Showing posts with label Prophets. Show all posts

Wednesday, March 16, 2011

நபியின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?

நபியின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?




நபிகள் நாயகம் ஸல் அவர்களின் தந்தைக்கும் அவர்களின் பாட்டனாருகும் எந்த நபியும் அனுப்பப்படவில்லை. எந்த நபியின் போதனையும் அவர்களைச் சென்றடையவில்லை.

இதை திருக்குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது

ஞானமிக்க குர்ஆன் மீது ஆணையாக! . (முஹம்மதே!) நீர் தூதர்களில் ஒருவர். . (நீர்) நேரான பாதையில் இருக்கிறீர். . கவனமற்றும், முன்னோர் எச்சரிக்கப்படாமலும் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது.

திருக்குர்ஆன் 36: 2-6

ஆனாலும் அவர்கள் ஸாபியீன்களாக இருந்திருக்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 2:62

நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், ஸாபியீன்கள், மற்றும் கிறித்தவர்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி நல்லறங்களைச் செய்தோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 5:69

நம்பிக்கை கொண்டோரும், யூதர்களும், ஸாபியீன்களும், கிறித்தவர்களும், நெருப்பை வணங்குவோரும், இணை கற்பித்தோரும் ஆகிய அவர்களிடையே அல்லாஹ் கியாமத் நாளில்1 தீர்ப்பு வழங்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருப்பவன்.

திருக்குர்ஆன் 22:17

இவ்வசனங்களில் ஸாபியீன்கள் என்ற பிரிவினர் பற்றி கூறப்பட்டுள்ளது.

இவர்கள் ஸபூர் வேதப்படி நடப்பவர்கள் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மற்றும் சிலர் நெருப்பை வணங்கும் சமுதாயம் என்று கூறுகின்றனர். நெருப்பை வணங்கும் சமுதாயத்தின் நல்லறங்கள் ஏற்கப்படாது என்ற சாதாரண உண்மை கூட இவர்களுக்குத் தெரியவில்லை. மேற்கண்ட வசனங்களில் ஸாபியீன்களின் நன்மைகளுக்கு கூலி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளதற்கு மாற்றமாக இவர்களின் விளக்கம் அமைந்துள்ளது.

ஹதீஸ்களை ஆராயும் போது ஸாபியீன்கள் என்போர் இறைத் தூதர்கள் அனுப்பப்படாத காலத்தில் வாழ்ந்த போதும் தங்களின் சிந்தனையைப் பயன்படுத்தி ஒரே கடவுள் கொள்கையை விளங்கிக் கொண்டவர்கள் என்பது தெரிய வருகிறது. ஏக இறைவனை விளங்கி அவனுக்கு இணை கற்பிக்காத சமுதாயமே ஸாபியீன்கள் என்று கருத்துவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைச் சொன்ன போது அவர்களை இறைத் தூதர் என்று நம்பாத நபிகள் நாயகத்தின் எதிரிகள் நபிகள நாயகத்துக்கு வைத்த பெயர் ஸாபியீன்களில் ஒருவர் என்பதாகும்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஒரு பயணத்தில் தண்ணீர் கிடைக்காத போது தமது தோழர்களை அனுப்பி வைத்தனர். அவர்கள் தண்ணீர்க் குடத்துடன் ஒரு பெண் செல்வதைக் கண்டு நபிகள் நாயகத்திடம் அவளை அழைத்தனர். அதற்கு அந்தப் பெண் ஸாபியீ என்று சொல்லப்படும் அந்த மனிதரிடமா என்று கேட்டாள். அதற்கு நபித்தோழர்கள் ஆம் அவரிடம் தான் என்று கூறினார்கள். இது நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாகும். (பார்க்க : புஹாரி 344)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய மக்களால் ஸாபியீ என்று தான் அறியப்பட்டிருந்தார்கள் என்பதையும் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் மறுக்கவில்லை என்ப்தையும் இதில் இருந்து நாம் அறியலாம். இது தீய கொள்கை உடையவர்களைக் குறிப்பதாக இருந்தால் நபித் தோழர்கள் அந்தப் பெண்ணிடம் ஆட்சேபணை செய்திருப்பார்கள். அவ்வாறு செய்யாமல் அதை ஏற்றுக் கொல்கிறார்கள் என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.

அபூதர் ரலி அவர்கள் இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்தும் கேள்விப்பட்டு மக்கா வருகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இரகசியமாகச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் மக்காவில் இருந்த சிலை வணங்கிகளிடம் சென்று வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் நம்புகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தார். உடனே மக்காவின் சிலை வணங்கிகள் இந்த ஸாபியீ யை அடியுங்கள் எனக் கூறி தாக்கினார்கள் என்று புஹாரி 3522 வது ஹதீஸில் காணலாம். இஸ்லாத்தை ஒருவர் ஏற்றால் அவருக்கு அந்த மக்கள் வைத்த பெயர் ஸாபியீ என்பது தான் என இதில் இருந்து அறியலாம்.

அது போல் ஒரு கூட்டத்தினருடன் நடந்த போரில் அவர்கள் சரணடைந்து இஸ்லாத்தை ஏற்கவும் முன் வந்தனர். அப்போது நாங்கள் இஸ்லாத்தில் சேர்கிறோம் எனக் கூறாமல் நாங்கள் ஸாபியீ ஆகி விட்டோம் எனக் கூறினார்கள். ஆனால் இதை ஏற்காமல் தளபதி காலித் பின் வலீத் அவர்களுடன் போரைத் தொடர்ந்தார், இது பற்றி அறிந்த நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காலித் பின் வலீதைக் கண்டித்தனர். புஹாரி 4339, 7189

ஸாபியீ என்று சொல்லப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெறுக்கவில்லை என்பதில் இருந்து ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருந்த மக்கள் தான் ஸாபியீ என்று அழைக்கப்பட்டனர் என்பதை அறியாலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்படும் முன் கற்சிலைகளை வணங்க மறுத்து ஏக இறைவனை மட்டும் நம்பிய சமுதாயத்தினர் இருந்தனர். வணக்க வழிபாட்டு முறைகளைத் தான் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதை இறைத் தூதர்கள் வழியாகத் தான் அறிய இயலும். இதைத் தவிர மற்ற விஷயங்களில் ஒழுங்காக நடந்த சமுதாயமே ஸாபியீன்கள்.

இன்றைக்கும் இறைத்தூதர்களின் போதனைகள் சென்றடையாத சமுதாயம் இருக்கலாம். அவர்கள் ஸாபியீன்களாக வாழ்வதற்கு இறைவன் வழங்கிய அறிவே போதுமானதாகும்.

இப்படி வாழாமல் அறிவைப் பயன்படுத்தாமல் சிலைகளை வணங்கிய காரணத்தால் அவர்கள் குற்றவாளிகளாக ஆகிறார்கள்.

Thursday, October 21, 2010

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா?


ஈசா நபி ஹஜ் செய்ய மக்காவிற்குச் சென்றாரா?



கடந்த காலத்தில் ஈசா (அலை) அவர்கள் ஹஜ் செய்தார்களா? இல்லையா? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இது பற்றி நாம் கருத்து கூற முடியாது.


ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஈஸா நபி ஹஜ் செய்வது போல் கனவில் எடுத்துக் காட்டப்பட்டதாகப் பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.


3440 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இன்றிரவு கஅபாவின் அருகே நான் கனவில் (ஒரு நிகழ்ச்சியைக்) கண்டேன். மனிதர்களின் மா நிறத்திலேயே மிக அழகான மாநிறம் கொண்ட மனிதர் ஒருவர் அங்கிருந்தார். அவரது தலைமுடி அவரது தோள்களுக் கிடையே தொங்கிக் கொண்டிருந்தது; படிய வாரப்பட்ட தொங்கலான முடியுடையவராக அவர் இருந்தார். அவருடைய தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. இரு மனிதர்களின் தோள்கள் மீது தமது இரு கைகளையும் அவர் வைத்துக் கொண்டு கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்தார். நான், இவர் யார்? என்று கேட்டேன். மர்யமின் மகன் ஈசா அவர்கள் என்று பதிலளித்தார்கள். பிறகு, அவருக்குப் பின்னால் நிறைய சுருள் முடி கொண்ட, வலக் கண் குருடான ஒரு மனிதனைக் கண்டேன். அவன் நான் பார்த்தவர்களிலேயே இப்னு கத்தனுக்கு அதிக ஒப்பானவனாயிருந்தான். அவன் இறையில்லம் கஅபாவை வலம் வந்து கொண்டிருந்த ஒரு மனிதரின் தோள்களின் மீது தன் இரு கைகளையும் வைத்திருந்தான். நான், யார் இது? என்று கேட்டேன். இவன் தஜ்ஜால் என்னும் மஸீஹ் என்று பதிலளித்தார்கள்.


நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களும் இதை அறிவிக்கிறார்கள்.


கியாமத் நாள் ஏற்படுவதற்கு முன்பு ஈசா (அலை) அவர்கள் இந்த உலகத்திற்கு மீண்டும் இறைவனால் அனுப்பி வைக்கப்படுவார்கள். அப்போது ஹஜ் அல்லது உம்ரா அல்லது அவ்விரண்டையும் செய்வார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.


2196 و حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ وَعَمْرٌو النَّاقِدُ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ جَمِيعًا عَنْ ابْنِ عُيَيْنَةَ قَالَ سَعِيدٌ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ حَدَّثَنِي الزُّهْرِيُّ عَنْ حَنْظَلَةَ الْأَسْلَمِيِّ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُهِلَّنَّ ابْنُ مَرْيَمَ بِفَجِّ الرَّوْحَاءِ حَاجًّا أَوْ مُعْتَمِرًا أَوْ لَيَثْنِيَنَّهُمَا و حَدَّثَنَاه قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ ابْنِ شِهَابٍ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ قَالَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ و حَدَّثَنِيهِ حَرْمَلَةُ بْنُ يَحْيَى أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حَنْظَلَةَ بْنِ عَلِيٍّ الْأَسْلَمِيِّ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ بِمِثْلِ حَدِيثِهِمَا رواه مسلم


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக! (இறுதி நாட்களில்) மர்யமின் புதல்வர் (ஈசா) அவர்கள் (மக்கா - மதீனா இடையே உள்ள) "ஃபஜ்ஜுர் ரவ்ஹா' எனுமிடத்தில் ஹஜ்ஜுக்காக அல்லது உம்ராவிற்காக அல்லது அவ்விரண்டுக்குமாகத் தல்பியாச் சொல்வார்கள்.


இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் (2403)

Tuesday, July 27, 2010

தஜ்ஜாலையும், ஈஸா நபியையும் நபி (ஸல்) அவர்கள் பார்த்ததாக ??

?தஜ்ஜால் செல்லாத இடங்களில் கஅபாவும் ஒன்று. அப்படியிருக்க, தஜ்ஜாலையும், ஈஸா நபியையும் நபி (ஸல்) அவர்கள் பார்த்ததாக புகாரியில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே? விளக்கம் தரவும்.



நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இது தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நான் தூங்கிக் கொண்டிருக் கையில் (கனவில்) கஅபாவை வலம் வந்து கொண்டிருந்தேன். அப்போது மாநிறமுடைய, தலைமுடி படிந்து தொங்கிய வண்ணமிருந்த ஒரு மனிதர் தமது தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க... அல்லது வழிந்து கொண்டிருக்க... (நின்றிருந்தார்). அங்கே இருந்த நான், ''இவர் யார்?'' என்று கேட்டேன். ''மர்யமின் குமாரர்'' என்று பதிலளித்தார். நான் (தொடர்ந்து முன்னேறிச்) சென்றேன். அங்கு சிவப்பான, தடிமனான, சுருட்டைத் தலைமுடியுள்ள, வலக்கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. நான், ''யாரது?'' என்று கேட்டேன். ''தஜ்ஜால்'' என்று பதிலளித்தார்கள். (தோற்றத்தில்) மக்களிலேயே அவனுக்கு அதிக ஒப்பானவர் இப்னு கத்தன் தான்.

இமாம் ஸுஹர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு கத்தன் குஸாஆ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதன். அறியாமைக் காலத்திலேயே அவன் அழிந்து விட்டிருந்தான்.

நூல்: புகாரி 3441

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தமக்குக் கனவில் காட்டப்பட்ட ஒரு சம்பவத்தைக் கூறுகின்றார்கள். ஈஸா (அலை) அவர்களையும், தஜ்ஜாலையும் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் மக்கா, மதீனாவிற்குள் தஜ்ஜால் நுழைய முடியாது என்று இடம் பெறும் ஹதீஸ்கள் அனைத்தும் கியாமத் நாளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது. மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காவல் புரிந்து கொண்டு இருப்பார்கள். பின்னர் மதீனா, தனது குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்கு உள்ளாகும். அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறை மறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 1881

இந்தக் கருத்தில் இடம் பெறும் ஹதீஸ்கள் அனைத்தும் கியாமத் நாள் பற்றிய முன்னறிவிப்பாகவே கூறப்படுகின்றன. அதாவது கியாமத் நாள் நெருங்கும் போது தஜ்ஜால் வருவான். அவ்வாறு வரும் போது அவனால் மக்கா, மதீனாவிற்குள் நுழைய முடியாது என்பதைத் தான் இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. இதற்கும் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

--> Q/A Ehathuvam Aug 2007

Monday, July 26, 2010

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இன்ன பிற அறிஞர்களை இணை வைத்து??

?அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், காரல் மார்க்ஸ் போன்ற இன்ன பிற அறிஞர்களை இணை வைத்து ஒப்பு நோக்கலாமா?



நபி (ஸல்) அவர்கள் கூறிய கருத்துக்கள் இறைவனின் புறத்திலிருந்து வந்தவை. சாக்ரடீஸின் கருத்துக்கள் மனித சிந்தனையில் உதித்தவை. இந்த இரண்டு கருத்துக்களும் ஒரு போதும் சமமாக முடியாது.



'நபிகள் நாயகத்தைப் போல் சாக்ரடீஸ் என்பவரும் பல தத்துவங்களைக் கூறியுள்ளார்' என்று கூறக்கூடாது.


நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த தூதுச் செய்திக்குப் பங்கம் வரும் வகையில் ஒப்பு நோக்கக் கூடாது.

Sunday, July 25, 2010

நபிமார்களின் எண்ணிக்கை ??

? நபிமார்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம்; அவர்களில் ரசூல்மார்கள் முன்னூற்றுப் பதிமூன்று பேர்; அவர்களில் ஆதம் தான் முதல் இறைத் தூதர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மர்தவைஹி, இப்னு ஹிப்பான் ஆகிய நூற்களில் காணப்படும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?



இந்த ஹதீஸ் இப்னு ஹிப்பான், இப்னு மர்தவைஹி ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளதாக தப்ஸீர் இப்னு கஸீர் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்னு கஸீர் அவர்களின் இன்னொரு நூலான அல்பிதாயா வந்நிஹாயா என்ற நூலில், இப்னு ஹிப்பானிலும் இப்னு மர்தவைஹியிலும் இடம் பெறும் இந்த ஹதீஸின் தரத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்கள்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் இப்ராஹீம் பின் ஹிஷாம் பின் யஹ்யா அல்கஸ்ஸானீ என்பவரைப் பற்றி விமர்சனம் உள்ளது என்று இப்னு கஸீர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இப்ராஹீம் பின் ஹிஷாம் பின் யஹ்யா அல்கஸ்ஸானீ என்பவர் பொய்யர் என்று அபூசுர்ஆ அவர்களும், அபூஹாத்தம் அவர்களும் குறிப்பிடுகின்றார்கள். எனவே இது பலவீனமான ஹதீஸாகும்.

இதே கருத்தில் இப்னு அபீஹாத்தம், முஃஜமுல் கபீர் ஆகிய நூற்களில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இதில் மஆன் இப்னு ரிஃபாஆ என்பவர் இடம் பெறுகின்றார். இவரும் இவருடைய ஆசிரியர் அலீ பின் யஸீத், அவருடைய ஆசிரியர் காஸிம் ஆகியோரும் பலவீனமானவர்கள்.

இந்தக் கருத்தில் முஸ்னத் அஹ்மதில் இடம் பெறும் அறிவிப்பிலும் அலீ பின் யஸீத் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெறுகின்றார்.

நபிமார்களின் எண்ணிக்கை குறித்து இடம் பெறும் அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவையாகவே இருக்கின்றன.

குறிப்பு: பொதுவாக தப்ஸீர்களில் இடம் பெறும் செய்திகள் எல்லாமே ஆதாரப்பூர்வமானதாக இருப்பதில்லை. எனவே தப்ஸீர்களைத் தமிழாக்கம் செய்து வெளியிடுவோர் அதிலுள்ள பலவீனமான செய்திகளை அடையாளம் காட்டி வெளியிட வேண்டும்.

--> Q/A Ehathuvam Mar 07

Thursday, July 22, 2010

தவ்ராத், இஞ்சீல், ஸபூர் போன்ற வேதங்களை ??

? தவ்ராத், இஞ்சீல், ஸபூர் போன்ற வேதங்களை அல்லாஹ் எந்த வழியில் ஓதிக் காட்டினான்? அவற்றில் என்ன உள்ளது? நபி (ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் அருளப்பட்டது போன்று மற்ற நபிமார்களுக்குக் கொடுக்கப்பட்ட வேதங்கள் என்ன?




நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச் செய்தி அறிவித்தது போல் (முஹம்மதே!) உமக்கும் நாம் தூதுச் செய்தி அறிவித்தோம். இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், (அவரது) சந்ததிகள், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியோருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம். தாவூதுக்கு ஸபூரை வழங்கினோம். (அல்குர்ஆன் 4:163)

(முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை அவன் உமக்கு அருளினான். இது தனக்கு முன் சென்றவற்றை உண்மைப் படுத்துகிறது. இதற்கு முன் மனிதர்களுக்கு நேர் வழி காட்ட தவ்ராத்தையும், இஞ்சீலையும் அவன் அருளினான். (பொய்யை விட்டு உண்மையைப்) பிரித்துக் காட்டும் வழி முறையையும் அவன் அருளினான். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன். (அல்குர்ஆன் 3:3)

நபி (ஸல்) அவர்களுக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டதைப் போன்றே எல்லா வேதங்களும் அருளப்பட்டன என்பதையும், அந்த வேதங்களில் உள்ளவற்றை திருக்குர்ஆன் உண்மைப்படுத்துகிறது என்பதையும் இந்த வசனங்கள் எடுத்துரைக்கின்றன.

வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 42:51)

இறைத் தூதர்களிடம் அல்லாஹ் பேசுவதற்கு மூன்று விதமான வழிகளைக் கையாள்வதாக இந்த வசனம் தெரிவிக்கின்றது. எனவே இந்த மூன்று வழிகளின் அடிப்படையில் தான் தவ்ராத், இஞ்சீல், ஸபூர் உள்ளிட்ட எல்லா வேதங்களும் அருளப்பட்டுள்ளன.

முந்தைய வேதங்களிலுள்ளவற்றை திருக்குர்ஆன் உண்மைப்படுத்துகிறது என்று கூறப்படுவதால் திருக்குர்ஆன் கூறும் இதே ஓரிறைக் கொள்கையைத் தான் அனைத்து வேதங்களும் கொண்டிருந்தன என்பது தெளிவாகின்றது.

அந்த வேதங்களில் உள்ள சட்ட திட்டங்கள் வேண்டுமானால் காலத்திற்கு ஏற்றபடி வேறு பட்டிருக்கலாம். கொள்கையைப் பொறுத்த வரை திருக்குர்ஆனிலும் அதற்கு முந்தைய வேதங்களிலும் ஒரே விதமாகத் தான் இருந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது போல் அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத் தூதர்களுக்கும் அவரவரின் மொழியில் வேதங்கள் அருளப்பட்டன.

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 14:4)

திருக்குர்ஆனில் நான்கு வேதங் களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அவைகள் பின்வருமாறு:

1. ஸபூர்: தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது (4:163)

2. தவ்ராத்: மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (நூல்: புகாரீ 4116, 4367)

3. இஞ்சில்: ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (5:46)

4. திருக்குர்ஆன்: முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது (6:19)

இந்த நான்கு வேதங்களின் பெயர்கள் மட்டுமே திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. இதைத் தவிர வேறு வேதங்கள் இல்லை என்று எண்ணி விடக் கூடாது. எல்லா இறைத் தூதர்களுக்கும் அல்லாஹ் வேதங்களை அருளியுள்ளான். ஆனால், அவற்றின் பெயர்களைக் குறிப்பிடவில்லை.

மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண் பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான். (அல்குர்ஆன் 2:213)

எல்லா நபிமார்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டுள்ளன என்றாலும் அவற்றில் நாம் பின்பற்ற வேண்டிய வேதம் திருக்குர்ஆன் மட்டுமே! முந்தைய வேதங்களை நாம் நம்ப வேண்டுமே தவிர அவற்றைப் பின்பற்றக் கூடாது.

முந்தைய வேதங்களை நம்பச் சொல்லும் திருக்குர்ஆன் அந்த வேதங்களில் மனிதக் கருத்துக்கள் சேர்ந்து விட்டன, மாற்றப்பட்டன, மறைக்கப்பட்டன, திருத்தப்பட்டன எனவும் பல இடங்களில் கூறுகிறது.

அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் அல்லாஹ் வின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர். (அல்குர்ஆன் 2:75)

அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். ''இது அல்லாஹ் விடமிருந்து வந்தது'' எனவும் கூறுகின்றனர். அது அல்லாஹ்விடம் இருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 3:78)

திருக்குர்ஆனைத் தவிர எந்த வித மாறுதலுக்கும் உள்ளாகாத ஒரு வேதமும் உலகில் கிடையாது. அல்லாஹ் இதனைப் பாதுகாத்து உள்ளான். கியாமத் நாள் வரை இது தான் பின்பற்றப்பட வேண்டும்.

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். (அல்குர்ஆன் 15:9)

-> Q/A Ehathuvam June 06

லைலத்துல் கத்ர் இரவில் குர்ஆன் இறக்கப்பட்டது??

? லைலத்துல் கத்ர் இரவில் குர்ஆன் இறக்கப்பட்டது என்று கூறுகின்றார்கள். குர்ஆன் முழுவதுமாக இறக்கப்பட்டதா? அல்லது ஒரு அத்தியாயம் மட்டும் இறக்கப்பட்டதா?




குர்ஆன் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் இறக்கியருளப்படவில்லை. ஒவ்வொரு அத்தியாயமாகவும் அருளப்படவில்லை. சிறிது சிறிதாகவே அருளப்பட்டது.

நபி (ஸல்) அவர்களது வாழ்நாளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஒரு வசனமோ, அல்லது சில வசனங்களோ, அல்லது ஒரு முழு அத்தியாயமோ அருளப்பட்டது.

(முஹம்மதே!) நாமே உமக்கு இக்குர்ஆனைச் சிறிது சிறிதாக அருளினோம். (அல்குர்ஆன் 76:23)

மக்களுக்கு இடைவெளி விட்டு நீர் ஓதிக் காட்டுவதற்காக குர்ஆனைப் பிரித்து அதைப் படிப்படியாக அருளினோம். (அல்குர்ஆன் 17:106)

இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம். (அல்குர்ஆன் 25:32)

திருக்குர்ஆன் சிறிது சிறிதாகவே அருளப்பட்டது என்பதையும், அதற்கான காரணத்தையும் இந்த வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம் (அல்குர்ஆன் 97:1)

இந்த வசனத்தில் லைலத்துல் கத்ர் எனும் இரவில் அருளப்பட்டது என்று அல்லாஹ் கூறுவது திருக்குர்ஆன் அருளப்பட்டதன் துவக்கம் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! (அல்குர்ஆன் 96:1) என்ற வசனம் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வசனமாகும். இந்த வசனம் லைலத்துல் கத்ரு எனும் இரவில் தான் அருளப்பட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும்..

--Q/A Ehathuvam Magazine Apr 06

நபி (ஸல்) அவர்கள் முடி களைந்த போது நபித்தோழர்கள் ...???

? நபி (ஸல்) அவர்கள் முடி களைந்த போது நபித்தோழர்கள் போட்டி போட்டுக் கொண்டு அதை எடுத்து வைத்துக் கொண்டனர் என்றும், துப்பினால் கைகளில் உடம்பில் தேய்த்துக் கொண்டனர் என்றும் இடம் பெறக் கூடிய செய்திகள் உண்மையா? இதை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தார்களா?




நீங்கள் குறிப்பிடுவது போன்று இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் பல இருந்தாலும் இதே கருத்தில் சில ஹதீஸ்கள் இருப்பதும் உண்மை தான்.

நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த தண்ணீரையும், அவர்களது எச்சிலையும் புனிதம் என்று கருதி அதற்காக நபித் தோழர்கள் போட்டி போட்டுள்ளார்கள் என்று ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.

இது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய தனிச் சிறப்பாகும். இந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டி, சில ஏமாற்றுப் பேர்வழிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

நபி (ஸல்) அவர்களின் எச்சிலுக்குப் புனிதம் இருந்தது என்றால் அது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அற்புதமாகும். இது போன்ற அற்புதத்தை வேறு யாருக்கும் அல்லாஹ் வழங்கவில்லை.

(கைபர் போரின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''நாளை (இஸ்லாமியப் படையின்) கொடியை ஒரு மனிதரிடம் தரப் போகின்றேன். அல்லாஹ் அவருடைய கரங்களில் வெற்றியை அளிப்பான்'' என்று சொன்னார்கள். ஆகவே மக்கள் தம்மில் எவரிடம் அது கொடுக்கப்படும் என்ற யோசனையில் இரவெல்லாம் மூழ்கினார்கள். காலையானதும் மக்களில் ஒவ்வொருவரும் தன்னிடம் அது கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்ட வண்ணம் அல்லாஹ்வின் தூதரிடம் சென்றனர். நபி (ஸல்) அவர்கள், ''அலீ பின் அபீதாலிப் எங்கே?'' என்று கேட்டார்கள். மக்கள், ''அவருக்குக் கண் வலி, அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ''அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள்'' என்று உத்தரவிட்டார்கள். அலீ (ரரி) அவர்கள் வந்தவுடன், அவர்களுடைய இரு கண்களிலும் (தம் உமிழ்நீரை) உமிழ்ந்து அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். உடனே அவர்களுக்கு (அதற்கு முன்) வலியே இருந்ததில்லை என்பதைப் போன்று அலீ (ரலி) அவர்கள் குணமடைந்தார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல்: புகாரி 3701

இந்த ஹதீஸில் அலீ (ரலி) அவர்களின் கண்களில் நபி (ஸல்) அவர்கள் எச்சில் உமிழ்ந்து, அவர்களுக்காக பிரார்த்தனை செய்தவுடன் அலீ (ரலி) அவர்களுக்கு இருந்த கண் நோய் குணமாகி விட்டது என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்களின் எச்சிலைப் போன்று தனது எச்சிலும் புனிதமானது என்று யாரேனும் கூறினால் அவர் அதை நிரூபித்துக் காட்ட வேண்டும். அதுவும் இந்த ஹதீஸில் இடம் பெறுவதைப் போன்று உமிழ்ந்தவுடன் குணம் கிடைக்க வேண்டும். இப்படி ஒரு அற்புதத்தை வேறு யாருக்கும் அல்லாஹ் வழங்கவில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

--Q/A Ehathuvam Magazine Apr 06

Sunday, July 18, 2010

முஹம்மது என்ற சொல்???

?முஹம்மது என்ற சொல்லுக்கு புகழுக்கு உரியவர், புகழப்பட்டவர் என்பதாகப் பொருள் உண்டு. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே என்பதால் இதில் எனக்கு குழப்பமாக உள்ளது.



! அல்லாஹ்வின் பண்புகளில் அனேகமான பண்புகள் மனிதர்களிடமும் உள்ளன.கேட்பவன் பார்ப்பவன் அறிபவன் இரக்கமுள்ளவன் என்பன போன்ற தன்மைகள் இறைவனிடமும் உள்ளன. மனிதர்களிடமும் உள்ளன. ஒரு மனிதனை பார்ப்பவன் என்று கூறினால் அல்லாஹ்வின் பண்புகளை அவனுக்கு வழங்கியதாக ஆகாது.

 மனிதர்களிடம் உள்ள இப்பண்புகளுக்கும் அல்லாஹ்விடம் உள்ள இதே பண்புகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன. குறிப்பிட்ட தொலைவில் குறிப்பிட்ட அளவு வெளிச்சத்தில் இருந்தால் தான் மனிதனால் பார்க்க முடியும். எதுவும் தடுக்காமல் இருந்தால் தான் பார்க்க முடியும். ஒரு நேரத்தில் ஒன்றைத் தான் பார்க்க முடியும் என்றெல்லாம் மனிதனின் பார்க்கும் திறன் பலவீனமாக உள்ளது. எங்கே இருந்தாலும் எந்தத் தடை இருந்தாலும் இருட்டாக இருந்தாலும் இறைவன் பார்ப்பான். ஒரு நேரத்தில் முழு பிரபஞ்சத்தையும் அவனால் பார்க்க இயலும். மனிதனைப் பற்றி பார்ப்பவன் எனக் கூறும் போது இறைவனைப் போல் பார்ப்பவன் என்று கருதிக் கொண்டால் அது குற்றமாகிவிடும். இணை கற்பித்த லாகி விடும்.

மனிதனுக்கு இறைவன் வழங்கியுள்ள அளவுக்கு பார்ப்பவன் என்று கருதிக் கொண்டு இவ்வாறு பயன்படுத்தினால் குற்றமாகாது. இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகனின் அலி என்ற பெயரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்றவில்லை. அலி (உயர்ந்தவன்) என்பது அல்லாஹ்வின் பெயராகவும் உள்ளது. மனிதனுக்கும் பெயர் வைக்கலாம். இரண்டுக்கும் கருத்தில் வித்தியாசம் உள்ளது. முஹம்மது என்பதும் இது போன்றது தான். இறைவன் எவ்வாறு புகழப்படு கிறானோ அது போல மனிதனும் சில வேளை புகழப்படுகிறான். ஒருவர் நமக்கு உதவி செய்யும் போது அவருக்கு நாம் நன்றி கூறுவது கூட அவரைப் புகழ்வது தான். மனிதனைப் பற்றி புகழப்பட்டவன் என்று கூறினால் ஏதோ ஒரு சில காரியங்களைப் புகழத்தக்க வகையில் செய்திருக்கிறான் என்று பொருள்.

அல்லாஹ்வைப் பற்றி இவ்வாறு கூறினால் அவனது அனைத்து நடவடிக்கைகளும் புகழத்தக்க வகையில் உள்ளன என்பது பொருள். இந்த அடிப்படையில் தான் முஹம்மத் என்ற நபிகள் நாயகத்தின் பெயரை இறைவன் அனுமதிக்கிறான். இது பற்றி அதிக விளக்கம் அறிய பி. ஜைனுல் ஆபிதீன் எழுதிய திருமறையின் தோற்றுவாய் நூலைப் பார்க்கலாம்.

ஈஸா நபி திரும்பி வருவார்கள்??

? கியாமத் நாளின் 10 அடையாளங்கள் என்ற நூலில் (பி.ஜே. எழுதியது) ஈஸா நபி திரும்பி வருவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி என்பதற்கு முரணாக உள்ளதே?




! நபி என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் இந்தக் குழப்பம் தீர்ந்து விடும். நபி என்பது குறிப்பிட்ட பணியைச் செய்ய வேண்டிய பொறுப்பும்இ பதவியு மாகும். ஒருவரது பிறப்பு முதல் இறப்பு வரை ஒட்டிக் கொண்டிருக்கும் தன்மை அல்ல.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பது வயது வரை நபியாக இருக்கவில்லை. அவர்களிடம் ஒரு பொறுப்பு ஒப்படைக் கப்பட்ட பின்னர் தான் நபியாக ஆனார்கள். ஈஸா நபியவர்கள் மீண்டும் வரு வார்கள் என்றால் இறைத் தூதர் என்ற முறையில் எந்தப் பிரச்சாரத்தையும் மேற்கொள்ள மாட்டார்கள்.

இந்தச் சமுதாயத்துக்கு எந்த வகையிலும் தலைமை தாங்க மாட்டார்கள். தொழுகை நடத்தவும் மறுத்து விடுவார் கள். நீங்கள் தான் உங்களுக்குள் தலைமை தாங்க வேண்டும் என்று அறிவித்து விடுவார்கள் என்றெல்லாம் ஹதீஸ்கள் உள்ளன. இஸ்ரவேல் சமுதாயத்துக்கு அவர்கள் தூதராக முன்னர் அனுப்பப்பட்டிருந் தார்கள்.

இனி அவர்கள் வரும் போது இஸ்ரவேல் சமுதாயத்திற்கு நான் தான் தூதர் என்று கூற மாட்டார்கள். உயர்த் தப்படும் வரை தான் இஸ்ரவேல் சமுதா யத்துக்கு அவர்கள் நபியாக நியமிக்கப் பட்டார்கள். அவர்கள் நபி என்ற பொறுப்பைச் சுமந்து வர மாட்டார்கள் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) இறுதி நபி என்பதற்கு முரண் இல்லை.

ஐந்து நபிகளுக்கு மட்டும் ஏன் தனித்தனி தொழுகைகளை ??

ஆதம் நபிக்கு ஃபஜர் தொழுகையும், இப்ராஹிம் நபிக்கு ளுஹர் தொழுகையும், தாவூத் நபிக்கு அஸர் தொழுகையும், ஈசா நபிக்கு மஃரீப் தொழுகையும், யூசும் நபிக்கு இஷா தொழுகையும் என இந்த ஐந்து நபிகளுக்கு மட்டும் ஏன் தனித்தனி தொழுகைகளை இறைவன் கொடுத்தான். மற்ற நபிமார்களுக்கு ஏன் கொடுக்கப்படவில்லை?


! நீங்கள் சுட்டிக்காட்டுவது போல் அல்லாஹ்வும் அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை. ஐந்து வேளைத் தொழுகையும் நமக்குக் கடமையாக்கப்பட்டதாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

ஷாஃபி மத்ஹபின் நூலாகிய ஃபத்ஹுல் முயீன் (1/118) ஹனபி மத்ஹபின் நூலாகிய துர்ருல் முக்தார் (1/351) போன்ற நூல்களில் எவ்வித ஆதார மும் இல்லாமல் நீங்கள் சுட்டிக்காட்டும் செய்தியை எழுதி வைத்துள்ளனர். ஒவ்வொரு நபிமார்களுக்கும் ஒவ்வொரு தொழுகை கடமையாக்கப்பட்டது என்று கூறுவதாக இருந்தால் அதை அல் லாஹ்வோ அவனது தூதரோ சொல்லாமல் யாராலும் அறிந்து கொள்ள முடியாது. எனவே இது போன்ற கட்டுக்கதைகளை நம்பவேண்டாம். நீங்கள் கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.