பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, May 18, 2023

குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் நடத்தப்படும் மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்ளலாமா?

 குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் நடத்தப்படும் மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்ளலாமா?

பதில் :

மாறுவேடம் என்பது பொய்யான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாகும். சிறுவனைப் பெரியவரைப் போன்று வேடமிடச் செய்வதும், ஆணைப் பெண்ணைப் போன்று வேடமிடச் செய்வதும், பெண்ணை ஆணைப் போன்று வேடமிடச் செய்வதும், விலங்கினங்களைப் போன்று வேடமிட்டுக் கொள்வதுமாக, இவ்வாறு பல்வேறு வேடங்களைப் போட்டுக்கொள்கின்றனர்.

பொய் என்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றாகும். எனவே மாறுவேடம் என்பது உண்மைத் தோற்றத்தை மறைத்து பொய்யான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாக இருப்பதால் அதற்காகப் போட்டி நடத்துவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.

குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்காக இப்போட்டிகள் நடத்தப்பட்டாலும் இதைத் தவிரந்து கொள்வதே சிறந்ததாகும்.

பிறமதத்தினர் கடவுளாக வணங்கும் கற்பனைத் தெய்வங்களின் வேடத்தையும் போட்டு நடித்து அதை உண்மை போன்று மக்கள் மனதில் பதியவைக்கின்றனர். அது போன்று மறைந்து போன தலைவர்களின் வேடங்களை அணிந்து அவர்களைப் பற்றி உண்மைக்குப் புறம்பான பல பொய்யான தகவல்களை மக்கள் மனதில் பதியவைப்பதற்கும் இந்த மாறுவேடப் போட்டிகள் நடத்தப்படுகிறது. அது போன்று கிறித்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் கிறிஸ்துமஸ் தாத்தாவைப் போன்ற வேடத்தை முஸ்லிம்களில் சிலர் தமது குழந்தைகளுக்கு அணிவித்து மகிழ்கின்றனர்.

இவ்வாறு இணைவைப்புக் காரியங்களையும், பாவமான காரியங்களையும் செய்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

{وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ} [المائدة: 2]

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்! பாவத்திலும் பகைமையிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்

(அல்குர்ஆன் 5:2)

மாறுவேடம் என்பது பொய்யாக இருந்தாலும் ஓர் உண்மையை மக்களுக்குப் புரியவைப்பதற்காகவும், நல்லிணக்கக் கருத்தை ஏற்படுத்துவதற்காகவும் மார்க்கம் தடுத்துள்ள அம்சங்கள் இல்லாமல் அதைச் செய்துகொள்வது தடையல்ல.

வரதட்சணைக் கொடுமையைப் புரியவைப்பதற்காக, அல்லது இணைவைப்பின் அபாயத்தைப் புரியவைப்பதற்காக அல்லது வேறு ஒரு நல்ல நோக்கத்திற்காக ஒரு சிறுவனுக்கு வயோதிகரைப் போன்று வேடமிட்டும், ஒரு சிறுமிக்கு ஒரு வயோதிகப் பெண்ணைப் போன்று வேடமிட்டும் நாடகத்தைப் போன்று நடத்திக்காட்டினால் அது குற்றமல்ல.

حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ صَالِحٍ عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ حُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ أَخْبَرَهُ أَنَّ أُمَّهُ أُمَّ كُلْثُومٍ بِنْتَ عُقْبَةَ أَخْبَرَتْهُ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيْسَ الْكَذَّابُ الَّذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ فَيَنْمِي خَيْرًا أَوْ يَقُولُ خَيْرًا (رواه البخاري)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன்.

அறிவிப்பவர் : உம்மு குல்சும் பின்த் உக்பா (ரலி)

நூல் : புகாரி (2692)

ஆனால் இது போன்ற நிகழ்வுகளில் மார்க்கம் தடுத்துள்ள காரியங்களைச் செய்வது கூடாது.

பெண்களைப் போன்று ஆண்கள் ஒப்பனை செய்து கொள்வதையும், ஆண்களைப் போன்று பெண்கள் ஒப்பனை செய்து கொள்வதையும் நபி (ஸல்) சபித்துள்ளார்கள்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُتَشَبِّهِينَ مِنْ الرِّجَالِ بِالنِّسَاءِ وَالْمُتَشَبِّهَاتِ مِنْ النِّسَاءِ بِالرِّجَالِ (رواه البخاري)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (5885)

4100 – حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- الرَّجُلَ يَلْبَسُ لِبْسَةَ الْمَرْأَةِ وَالْمَرْأَةَ تَلْبَسُ لِبْسَةَ الرَّجُلِ.(رواه أبو داود)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்ணின் ஆடையை அணியும் ஆணையும், ஆணின் ஆடையை அணியும் பெண்ணையும் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : அபூதாவூத் (4100)

எனவே நல்ல கருத்தைச் சொல்வதற்கான நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆண் பெண்ணைப் போன்று வேடமிட்டுக் கொள்வதையும், பெண் ஆணைப் போன்று வேடமிட்டுக் கொள்வதையும், பிறமதத்தினர் தெய்வமாக வணங்குபவற்றை வேடமிட்டுக் கொள்வதையும், பாவமான காரியங்களை நியாயப்படுத்துவதற்காக வேடமிட்டுக் கொள்வதையும், மனிதத் தோற்றத்தை இழிவுபடுத்தும் தோற்றத்தை வேடமிட்டுக் கொள்வதையும் தவிரந்து கொள்ள வேண்டும்.

பள்ளிவாசலில் சஹர் உணவு ஏற்பாடு செய்யலாமா?

 பள்ளிவாசலில் சஹர் உணவு ஏற்பாடு செய்யலாமா?

பதில் :

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசல்கள் என்பவை தொழுகைக்கு மட்டுமல்லாமல் பல்வேறு நற்பணிகளுக்கும் உரிய இடமாகத் திகழ்ந்துள்ளன.

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வைத்துதான் நபித்தோழர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். போர்ப்படைகளைத் தயார்செய்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் சமுதாயம் தொடர்பான பல்வேறு ஆலோசனைகளைச் செய்வதற்குத் தலைமையகமாக இருந்தது பள்ளிவாசல்தான்.

பள்ளிவாசலில் தொழுகைக்காவோ, அல்லது வேறு நற்காரியங்களுக்காகவோ ஒன்று கூடுவோர் அங்கு உணவைத் தயார் செய்வதோ, பள்ளிவாசலில் வைத்து உண்பதோ, பருகுவதோ மார்க்க அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான்.

1657 – أخبرنا محمد بن الحسن بن قتيبة قال : حدثنا حرملة بن يحيى قال : حدثنا ابن وهب قال : أخبرني عمرو بن الحارث قال : حدثنا سليمان بن زياد الحضرمي  : أنه سمع عبد الله بن الحارث بن جزء يقول : كنا نأكل على عهد رسول الله صلى الله عليه و سلم في المسجد الخبز واللحم ثم نصلي ولا نتوضأ  (رواه إبن حبان)

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நாங்கள் பள்ளிவாசலில் வைத்து ரொட்டியையும், இறைச்சியையும் சாப்பிடுவோராக இருந்தோம். (இவற்றைச் சாப்பிடுவதால் உலூ முறியாது என்பதால் சாப்பிட்ட) பிறகு நாங்கள் உலூச் செய்யாமல் தொழுவோம்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் (ரலி)

நூல் : இப்னு ஹிப்பான் (1657)

17705 – حَدَّثَنَا هَارُونُ، قَالَ: أَبُو عَبْدِ الرَّحْمَنِ، وَسَمِعْتُهُ أَنَا مِنْ هَارُونَ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: أَخْبَرَنِي عُقْبَةُ بْنُ مُسْلِمٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ بْنِ جَزْءٍ الزُّبَيْدِيِّ، قَالَ: ” كُنَّا يَوْمًا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصُّفَّةِ، فَوُضِعَ لَنَا طَعَامٌ فَأَكَلْنَا، ثُمَّ أُقِيمَتِ الصَّلَاةُ، فَصَلَّيْنَا وَلَمْ نَتَوَضَّأْ “ (رواه أحمد)

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசலின்) திண்ணையில் இருந்தோம். அப்போது எங்களுக்காக உணவு வைக்கப்பட்டது. நாங்கள் (அதைச்) சாப்பிட்டோம். பிறகு நாங்கள் உலூச் செய்யாமல் தொழுதோம்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் (ரலி)

நூல் : அஹ்மத் (17705)

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து பள்ளிவாசலில் உணவு உண்பதும், பருகுவதும் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். எனவே பள்ளிவாசலில் ஸஹர் உணவு ஏற்பாடு செய்வதற்கு மார்க்க அடிப்படையில் எவ்விதத் தடையுமில்லை.

 அதே நேரத்தில் பள்ளிவாசலின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், தொழுகையாளிகளுக்கு பாதிப்பு வராத வகையிலும் இவற்றை அமைத்துக் கொள்ள வேண்டும்.

 4928   – حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا رَبَاحٌ، عَنْ مَعْمَرٍ، عَنْ صَدَقَةَ الْمَكِّيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اعْتَكَفَ وَخَطَبَ النَّاسَ فَقَالَ: ” أَمَا إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي الصَّلَاةِ، فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ، فَلْيَعْلَمْ أَحَدُكُمْ مَا يُنَاجِي رَبَّهُ، وَلَا يَجْهَرْ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ بِالْقِرَاءَةِ فِي الصَّلَاةِ ”  (رواه أحمد)

நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில்) இஃதிகாஃப் இருந்தபோது (ஒருநாள்) மக்களுக்கு உரையாற்றினார்கள். ”உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது அவர் இறைவனுடன் உரையாடுகிறார். எனவே உங்களில் ஒருவர் தாம் இறைவனுடன் என்ன உரையாடுகிறோம் என்பதை அறிந்து கொள்ளட்டும். தொழுகையில் நீங்கள் ஒருவருக்கொருவர் சப்தத்தை உயர்த்தி ஓதாதீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

நூல் : அஹ்மத் (4928)

நபித்தோழர்கள் பள்ளிவாசலில் தனித்தனியாகத் சுன்னத் தொழுத பொது சப்தமிட்டு ஓதித் தொழுதனர். அது பிறதொழுகையாளிகளுக்கு இடையூறாக இருந்த காரணத்தினால் நபியவர்கள் அவ்வாறு சப்தமிட்டு ஓதுவதைக் கூட தடை செய்துள்ளார்கள். எனவே உணவு பரிமாறுகிறோம் என்ற பெயரில் பள்ளியில் தொழும் தொழுகையாளிகளுக்கு நாம் இடையூறு ஏற்படுத்தி விடாத வகையில் நடந்து கொள்ளவேண்டும்.

பள்ளிவாசலின் தூய்மை கெடாத வகையிலும் நடந்து கொள்ள வேண்டும்.

« إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لاَ تَصْلُحُ لِشَىْءٍ مِنْ هَذَا الْبَوْلِ وَلاَ الْقَذَرِ إِنَّمَا هِىَ لِذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَالصَّلاَةِ وَقِرَاءَةِ الْقُرْآنِ ». أَوْ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-.قَالَ فَأَمَرَ رَجُلاً مِنَ الْقَوْمِ فَجَاءَ بِدَلْوٍ مِنْ مَاءٍ فَشَنَّهُ عَلَيْهِ. (رواه مسلم)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :-

“இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும்”

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் (480)

மேலும் மனிதர்களுக்குத் தொல்லை தருகின்ற பச்சை வெங்காயம்,  பச்சைப் பூண்டு போன்றவற்றை தொழுமிடங்களில் வைத்து சாப்பிடுவதும். அத்துர்வாடையுடன் தொழுகையில் கலந்து கொள்வதும் கூடாது.

5452- حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ ، حَدَّثَنَا أَبُو صَفْوَانَ عَبْدُ اللهِ بْنُ سَعِيدٍ ، أَخْبَرَنَا يُونُسُ ، عَنِ ابْنِ شِهَابٍ ، قَالَ : حَدَّثَنِي عَطَاءٌ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا زَعَمَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : مَنْ أَكَلَ ثُومًا ، أَوْ بَصَلاً فَلْيَعْتَزِلْنَا ، أَوْ لِيَعْتَزِلْ مَسْجِدَنَا. (رواه البخاري)

நபி (ஸல்) அவர்கள், வெள்ளைப் பூண்டோ வெங்காயமோ சாப்பிட்டவர் நம்மிடமிருந்து விலகியிருக்கட்டும்’ அல்லது நம் பள்ளிவாசலிலிருந்து விலகியிருக்கட்டும்’

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 5452

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا كَثِيرُ بْنُ هِشَامٍ عَنْ هِشَامٍ الدَّسْتَوَائِيِّ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْلِ الْبَصَلِ وَالْكُرَّاثِ فَغَلَبَتْنَا الْحَاجَةُ فَأَكَلْنَا مِنْهَا فَقَالَ مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ الْمُنْتِنَةِ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا فَإِنَّ الْمَلَائِكَةَ تَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ الْإِنْسُ (رواه مسلم)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று தடை செய்தார்கள். எங்களுக்குத் தேவை மிகைத்து விடவே அவற்றிலிருந்து நாங்கள் சாப்பிட்டு விட்டோம். அப்போது அவர்கள்,”துர்வாடையுள்ள இந்தச் செடியிலிருந்து விளைகின்றவற்றைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம்ஏனெனில் மனிதர்களுக்குத் தொல்லை தருகின்றவை வானவர்களுக்கும் தொல்லை தருகின்றன* என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (974)

தொடர்ந்து மூன்று வாரங்கள் ஜுமுஆ தொழாமல் விட்டால் அவர் உள்ளம் பாழடைந்த உள்ளம் என்று சொல்கிறார்களே இது உண்மையா?

 கேள்வி:

தொடர்ந்து மூன்று வாரங்கள் ஜுமுஆ தொழாமல் விட்டால் அவர் உள்ளம் பாழடைந்த உள்ளம் என்று சொல்கிறார்களே இது உண்மையா?

–              சங்கரன்கோவில் சம்சுதீன்

பதில்:

இஸ்லாமிய மார்க்கத்தில் ஐவேளை தொழுகை எவ்வாறு கடமையாக்கப்பட்டு இருக்கிறதோ அதே போல ஜுமுஆ தொழுகையும் கடமையாக ஆக்கப்பட்டுள்ளது.

ஜுமுஆ தொழுகையின் அவசியத்தையும், அதன் சிறப்புகள் குறித்தும் பல்வேறு செய்திகளை நபி [ஸல்] அவர்கள் கூறி இருக்கின்றார்கள்.

தொடர்ந்து மூன்று வாரங்கள் ஜுமுஆ தொழாமல் விட்டால் அவர் உள்ளம் பாழடைந்த உள்ளம் என்று சொல்லப்படுகிறதே என்று கேட்கப்படுவதைப் போல, மூன்று ஜுமுஆ விட்டவர்கள் காஃபிர்கள் என்றும் சில மக்களால் சொல்லப்படுகின்றது. இது குறித்து வரும் ஹதீஸை பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் சொற்பொழிவு மேடையின் படிகளில் நின்றபடி மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும். அல்லது அவர்களின் இதயங்கள் மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான். பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்து விடுவர் என்று கூறியதை நாங்கள் கேட்டோம்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் [ரலி]

மற்றும் அபூஹுரைரா [ரலி]

 நூல்: முஸ்லிம்(1570)

இதில் அல்லாஹ்வின் தூதர் சொல்வது என்னவெனில்,  ஜுமுஆவின் வணக்கத்தை கைவிட வேண்டாம் என்றும் அவ்வாறு அலட்சியப்படுத்தி விடுபவரின் உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையை குத்தி விடுகிறான் என்றும் சொல்கிறார்கள்.

“யக்திமன்ன” என்ற வார்த்தைக்கு முத்திரையை குத்தி விடுகிறான் என்ற பொருள். இதுபோல திருக்குர்ஆனில் பல இடங்களில் இந்த வார்த்தை  பயன் படுத்தப்பட்டுள்ளது. இறைமறுப்பாளர்களை பற்றி அல்லாஹ் குர்ஆனில் சொல்லும் போது

خَتَمَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ ۖ وَعَلَىٰ أَبْصَارِهِمْ غِشَاوَةٌ ۖ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ  (2:7)

அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான் அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.

(திருக்குர்ஆன் 2:7)

”கதம” என்ற சொல் இங்கே பயன் படுத்தப்பட்டுள்ளது  இதற்கு முத்திரை இட்டு விட்டான் என்று பொருள்.

அல்லாஹ்வை பற்றிய செய்திகளை இறைமறுப்பாளர்களிடம் சொன்னால் அவர்களுடைய உள்ளம் முத்திரை இடப்பட்டு விட்டதால், என்ன சொல்லப்பட்டாலும் அவர்களுடைய உள்ளத்தில் அது சென்றடையாது. எனவே நேர்வழி குறித்து சிந்தித்து விளங்க மாட்டார்கள். என்று திருமறைக் குர்ஆன் சொல்கிறது.

அது போலவே ஜுமுஆ தொழுகையை விடுவரின் உள்ளத்தில் முத்திரை இடப்படுகிறது. அதாவது ஜுமுஆவில் கலந்து கொள்வதின் மூலம் பல நல்ல விஷயங்களை உபதேசம் கேட்கும் வாய்ப்பு ஒருவருக்கு கிடைக்கிறது, அதனால் அவருடைய நம்பிக்கை வளரும், நன்மையான காரியங்களை செய்ய அவருடைய உள்ளம் தூண்டும். நல்ல அமல்கள் செய்ய கூடியவராக அவர் மாறிவிடுவார். தீமையான காரியங்களிலிருந்து விலகுவதற்கும் அந்த உபதேசம் பயனளிக்கும்.

ஜுமுஆ தொழுகையை விட்டுவிடும்போது  இமாம் உரையாற்றுவதில் சொல்லப்படும் நல்ல பல உபதேசங்கள் அவருடைய காதில் விழாமல் போகும் நிலை ஏற்படுகிறது. நல்ல அமல்கள் செய்வதில் அவருடைய உள்ளம் அவரை தூண்டாது. அதனால் அமல்கள் செய்யும் ஆர்வம் அவரிடம் நாளடைவில் குறைந்து, கடமையான தொழுகை போன்ற வணக்கங்களை கூட  அலட்சியப்படுத்தக் கூடியவராக, நாளடைவில் தீமைகளை செய்யக்கூடியவர்களில் ஒருவராக அவரது உள்ளம் அவரை மாற்றி விடும் என்பதே நபி ஸல் அவர்கள் சொன்ன ஹதீஸின் விளக்கமாகும்.  நபிகளாரின் அடுத்த எச்சரிக்கையை பாருங்கள்

«» وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ عَنْ أَبِي الأَحْوَصِ سَمِعَهُ مِنْهُ عَنْ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِقَوْمٍ يَتَخَلَّفُونَ عَنِ الْجُمُعَةِ: ((لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ رَجُلاً يُصَلِّي بِالنَّاسِ ثُمَّ أُحَرِّقَ عَلَى رِجَالٍ يَتَخَلَّفُونَ عَنِ الْجُمُعَةِ بُيُوتَهُمْ)).

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுகையில் கலந்துகொள்ளாத சிலர் குறித்து, “நான் ஒரு மனிதரிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறிவிட்டு, பின்னர் ஜுமுஆத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் (வீட்டில்) இருப்பவர்களை (நோக்கிச் சென்று அவர்களை) வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என எண்ணியதுண்டு” என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (1156)

ஜுமுஆ தொழுகையில் கலந்துகொள்ளாமல், வீட்டில் இருப்போருக்கு நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள். வீட்டோடு சேர்த்து எரித்துவிட நினைத்துள்ளார்கள் எனில், ஜுமுஆ  எவ்வளவு அவசியமான வணக்கம் என்பதை அறியலாம்.

நபி ஸல் அவர்கள் ஜுமுஆ உரைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஜுமுஆவிற்கு வரும் ஒருவர் உரையின் பாதியில் வந்து அமராமல் ஆரம்பத்திலேயே வர நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்துவதைப் பாருங்கள்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ “” مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً، فَإِذَا خَرَجَ الإِمَامُ حَضَرَتِ الْمَلاَئِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ “”.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக் கேட்கிறார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி (881)

இமாமின் உரையை மக்கள் முழுமையாக கேட்க வேண்டும் என்பதற்காக,  முதலில் வருபவர் அதற்கடுத்து வருபவர் என்று வகைப்படுத்தி,  ஒட்டகம், மாடு, ஆடு, கோழி, முட்டை போன்றதை குர்பானி கொடுத்த கூலியை பெறுகிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஜுமுஆ தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் உரைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தியுள்ளார்கள். ஜுமுஆவிற்கு வருபவர் யாரிடமும் பேசாமல் மவுனமாக அமர்ந்து இமாமின் உரையை கேட்குமாறு அறிவுரை அளிக்கிறார்கள்.

«934» حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((إِذَا قُلْتَ لِصَاحِبِكَ يَوْمَ الْجُمُعَةِ أَنْصِتْ. وَالإِمَامُ يَخْطُبُ فَقَدْ لَغَوْتَ)).

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் ‘வாய்மூடு!’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.’

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (934)

அதே போல இமாம் மிம்பரில் ஏறும் வரை ஜுமுஆ விற்கு வரும் மக்களை மலக்குமார்கள் தங்களுடைய ஏடுகளில் குறிப்பிட்டுக் கொள்வார்கள். இமாம் ஜுமுஆ உரைக்காக மிம்பரில் ஏறி விட்டால் மலக்குகள் தங்களின் ஏடுகளை மூடிவிடுவதாகவும் நபி ஸல் அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَالأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم “” إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ كَانَ عَلَى كُلِّ باب مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ الْمَلاَئِكَةُ، يَكْتُبُونَ الأَوَّلَ فَالأَوَّلَ، فَإِذَا جَلَسَ الإِمَامُ طَوَوُا الصُّحُفَ وَجَاءُوا يَسْتَمِعُونَ الذِّكْرَ “”.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜும்ஆ நாள் (வெள்ளிக்கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வசாலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம், உரை மேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்துவிட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்துவிட்டு (அவரின் உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம் (உள்ளே) வருவார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (3211)

இந்த போதனையிலும் ஜுமுஆவுடைய உரையை கேட்காமல் நம்முடைய  இதயம் முத்திரை குத்தப்பட்டதாக ஆகிவிடக்கூடாது என்பதால் தான் நபி (ஸல்) அவர்கள் இந்த அளவுக்கு ஆர்வப்படுத்தியுள்ளார்கள்.

மேலும் ஜுமுஆவின்  உரையை மக்கள் கேட்க வேண்டும்; அதற்காக விரைந்து வரவேண்டும்  என்பதை நபி [ஸல்] அவர்கள் எந்த அளவுக்கு வலியுறுத்துகிறார்கள் என்பதை பாருங்கள்.

 எடுத்து வைக்கும் அடியை தொடுத்து வரும் நன்மை

1398 – أخبرنا محمود بن خالد قال حدثني عمر بن عبد الواحد قال سمعت يحيى بن الحارث يحدث عن أبي الأشعث الصنعاني عن أوس بن أوس الثقفي عن رسول الله صلى الله عليه و سلم قال

من غسل واغتسل وابتكر وغدا ودنا من الإمام وأنصت ثم لم يلغ كان له بكل خطوة كأجر سنة صيامها وقيامها

யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி),

நூல் : நஸயீ (1381)

இதே கருத்தில் அமைந்த பல்வேறு ஹதீஸ்களில் “வாகனத்தில் வராமல்….” என்பதும் சேர்த்து அறிவிக்கப் பட்டுள்ளது

ஒருவர் தொடர்ந்து ஜுமுஆவை விடுவதால் அவர் இமாமின் உரையில் சொல்லப்படும் நல்ல செய்திகளை கேட்க முடியாதவறாகி விடுகிறார் அதனால் அவரின் இதயம் முத்திரை இடப்பட்டதாகி விடுகிறது. இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ உரைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை மேற்கண்ட செய்திகளிலிருந்து அறியலாம்.

ஜுமுஆ குறித்து முத்திரை என்ற வாசகம் தான் இடம் பெற்று இருக்கிறதே தவிர, பாழடைந்த உள்ளம் என்ற கருத்தில் ஹதீஸ் இல்லை. அது போல,  மூன்று ஜுமுஆக்களை விட்டவர் காஃபிர் ஆகிவிட்டார் என்று கூறுவதற்கும் ஆதாரம் இல்லை.

தாய்மாமாவின் மச்சினிச்சியை திருமணம் செய்யலாமா?

 தாய்மாமாவின் மச்சினிச்சியை திருமணம் செய்யலாமா?

 பதில் :

தாய்மாமா என்பவர் தாயின் உடன்பிறந்த சகோதரர் ஆவார்.

தாய்மாமாவின் மச்சினிச்சி என்பவர் தாய்மாமாவுடைய மனைவியின் தங்கை ஆவார்.

ஒருவருடைய தாயின் உடன் பிறந்த சகோதரர் ஒரு பெண்ணை திருமணம் செய்த காரணத்தினால் அப்பெண்ணின் சகோதரரி அவருக்கு (அதாவது மருமகனுக்கு) திருமணம் செய்வதற்கு தடுக்கப்பட்டவராகமாட்டார்

இவர்கள் அன்னியப் பெண்களே ஆவர். திருமணம் செய்வதற்கு மார்க்கம் தடுத்துள்ள பெண்களின் பட்டியலில் இவர்கள் வரமாட்டார்கள்.

ஆனால் அப்பெண்கள் திருமணம் செய்வதற்கு தடைசெய்யப்பட்ட உறவுகளாகவோ அல்லது பால்குடிச் சகோதரிகளாக இருந்தால் திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டதாகும்.

திருமணம் செய்வதற்கு தடைசெய்யப்பட்ட உறவுகளை திருமறைக்குர்ஆனும், நபிமொழிகளும் தெளிவுபடுத்தியுள்ளன.

وَلَا تَنْكِحُوا مَا نَكَحَ آبَاؤُكُمْ مِنَ النِّسَاءِ إِلَّا مَا قَدْ سَلَفَ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَمَقْتًا وَسَاءَ سَبِيلًا (22)حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُمْ مِنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُمْ بِهِنَّ فَإِنْ لَمْ تَكُونُوا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ وَأَنْ تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا (23) وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ كِتَابَ اللَّهِ عَلَيْكُمْ وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَلِكُمْ أَنْ تَبْتَغُوا بِأَمْوَالِكُمْ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُمْ بِهِ مِنْ بَعْدِ الْفَرِيضَةِ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا (24) )النساء: 23(

22. உங்கள் தந்தையர் திருமணம் முடித்த பெண்களை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். (இதற்கு) முன்னர் நடந்து முடிந்ததைத் தவிர! அது மானக்கேடானதாகவும், வெறுப்பிற்குரியதாகவும், கெட்ட வழியாகவும் உள்ளது.

23. உங்கள் தாய்மார்கள், உங்கள் மகள்கள், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையின் சகோதரிகள், உங்கள் தாயின் சகோதரிகள், உங்கள் சகோதரனின் மகள்கள், உங்கள் சகோதரியின் மகள்கள், உங்களுக்குப் பாலூட்டிய தாய்மார்கள், உங்கள் பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் தாய்மார்கள், நீங்கள் உடலுறவு கொண்ட மனைவியரின் (முந்தைய கணவருக்குப் பிறந்த) உங்கள் பொறுப்பில் வளரும் மகள்கள் ஆகியோர் உங்களுக்குத் (திருமணம் செய்யத்) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் அந்த மனைவியருடன் உடலுறவு கொள்ளாவிட்டால் (அவர்களை மணவிலக்குச் செய்துவிட்டு அவர்களின் மகள்களை மணந்து கொள்வதில்) உங்கள்மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த ஆண்மக்களின் மனைவியரும் (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்றிணைத்துக் கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது.) முன்னர் நடந்து முடிந்ததை தவிர. அல்லாஹ் மன்னிப்புமிக்கவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்.94

24. உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர மற்ற பெண்களில் கணவன் உள்ளவர்களையும் (திருமணம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது.) இவை உங்கள்மீது அல்லாஹ் விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர மற்றவர்களை நீங்கள் விபச்சாரம் செய்வோராக இல்லாமலும், கற்பு நெறியைப் பேணியவர்களாகவும் உங்கள் செல்வங்களைக் கொடுத்துத் (திருமணத்தின் மூலம்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அவர்களிடமிருந்து அடையும் இன்பத்திற்காக அவர்களுக்குரிய திருமணக் கொடைகளைக் கட்டாயமாக வழங்கி விடுங்கள். நிர்ணயித்த பின்னர் (திருமணக் கொடையில் மாற்றம் செய்து அதை) நீங்கள் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொண்டால் அதில் உங்கள்மீது குற்றமில்லை. அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:22,23,24)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُجْمَعُ بَيْنَ الْمَرْأَةِ وَعَمَّتِهَا وَلَا بَيْنَ الْمَرْأَةِ وَخَالَتِهَا (رواه البخاري)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக்கொள்ளலாகாது. (இதைப் போன்றே) ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : புகாரி (5109)

மேற்குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள் மற்றும் நபிமொழியில் தடுக்கப்பட்டுள்ள பெண்களைத் தவிர மற்ற இறைநம்பிக்கையுள்ள பெண்களை திருமணம் செய்துகொள்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.

பள்ளிவாசலுக்கென வசூல் செய்துவிட்டு பள்ளிவாசல் இடத்தின் ஒரு பகுதியில் அலுவலகம் அமைப்பது சரியா?

 பள்ளிவாசலுக்கென வசூல் செய்துவிட்டு பள்ளிவாசல் இடத்தின் ஒரு பகுதியில் அலுவலகம் அமைப்பது சரியா?

எந்த நோகத்திற்காக வசூலிக்கப்படுகிறதோ அதே நோக்கத்திற்குதான் பயன்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பள்ளிவாசலுக்காக வசூல் செய்ய பணத்தில் பள்ளிவாலும் கட்டி அந்த பணத்தில் அலுவலகம் கட்டினால் அந்த அலுவலகம் எந்த நோக்கத்திற்காக கட்டப்படுகிறது என்பதை கவனத்தில் கொண்டு கூடும். கூடாது என்று கூறமுடியும்.

பள்ளிவாசல் நிர்வாகத்திற்காக அந்த கட்டடம் கட்டப்பட்டால் அது தவறாகாது. ஏனெனில் பள்ளிவாசலின் செயல்படுத்துவற்குரிய ஒரு பணிகளில் ஒன்றாக அமைந்து விடுகிறது.

அது போன்று வாடகைக்காக கட்டப்பட்டு அதன் வருமானம் பள்ளிவாசலுக்கு செல்லுமானால் அதுவும் தவறாகாது.

இவற்றைத் தவிர்த்து பள்ளிவாசலுக்கு எந்த தொடர்பு இல்லாத மார்க்கப்பணிகளும் தொடர்பில்லாத ஒரு கட்டடத்தை கட்டினால் அது கூடாது.

பள்ளிவாசல் அது தொடர்பான பணிகளாக இருக்கும் பட்சத்தில் அதற்கு பயன்படுத்துவது தவறாகாது.

பள்ளிவாசல் என்று வசூல் செய்து உளூச் செய்வதற்குரிய கட்டடம், கழிவறை, இமாம் தங்கும் அறை, பள்ளிப் பொருட்கள் வைக்கும் அறை இவைகள் போன்றவற்றை எப்படி சரி என்றும் நாம் சொல்வோமோ அது போன்றே பள்ளிவாசல் அது தொடர்பான விசயங்களுக்காக கட்டடம் கட்டுவது தவறாகாது.

ஜமாஅத் தொழுகைநடைபெறும்போது ஒலிபெருக்கி வசதியுடன் பள்ளிவாசலுக்கு எதிரில் உள்ள கட்டிடத்தில் பெண்கள் தொழலாமா?

 ஜமாஅத் தொழுகை நடைபெறும்போது ஒலிபெருக்கி வசதியுடன் பள்ளிவாசலுக்கு எதிரில் உள்ள கட்டிடத்தில் பெண்கள் தொழலாமா?

فَقَالَ إِنَّمَا الإِمَامُ ، أَوْ إِنَّمَا جُعِلَ الإِمَامُ – لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا ، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا ، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا ، وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا رَبَّنَا لَكَ الْحَمْدُ ، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا. (رواه البخاري)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“பின்பற்றப்படுவதற்காகவே இமாம் நியமிக்கப்பட்டுள்ளார்’ அவர் தக்பீர் (அல்லாஹ் அக்பர்’ என்று) சொன்னால் நீங்களும் தக்பீர் (அல்லாஹ் அக்பர் எனச்) சொல்லுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள்; அவர் (ருகூஉவிலிருந்து நிமிரும் போது) சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்’ என்று கூறினால், நீங்களும் ரப்பனா ல(க்)கல் ஹம்து’ என்று கூறுங்கள்; அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்.”

அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : புகாரி (733)

இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பதின் நோக்கத்தை மேற்கண்ட நபிமொழி தெளிவாகக் குறிப்பிடுகிறது இமாம் தக்பீர் கூறும் போதும், ருகூஉ செய்யும் போதும், ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போதும், சஜ்தா செய்யும் போதும், அவருடன் நாம் சேர்ந்து அவரைப் பின்பற்றுவதுதான் இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பதின் நோக்கமாகும்.

இடவசதி இன்மையாலோ, அல்லது அதிகமான மக்களின் வருகையினாலோ அல்லது நிர்பந்தமான வேறு காரணங்களினாலோ தொடர்ச்சியான வரிசைகளில் நின்று தொழுவதற்கு இயலாவிட்டால் தேவையின் நிமித்தம் பள்ளியின் வெளியிலோ, மாடியிலோ அல்லது பள்ளிக்கும் அந்த கட்டடத்திற்கும் இடைவெளி இல்லாத அருகில் இணைந்த கட்டிடங்களிலோ தொழுது கொள்ளலாம். ஆனால் அக்கட்டிடம் இமாமைப் பின்பற்றும் வகையில், அல்லது இமாம் கூறுவதை அருகில் இருப்பவர்கள் எடுத்துக் கூறினால் அதைக் கேட்டு பின்பற்றித் தொழும் வகையில் இருக்க வேண்டும். அது போன்று அக்கட்டிடம் இமாமுக்குப் பின்னால் இருக்க வேண்டும்.

நபியவர்கள் காயமுற்ற காலகட்டதில் தமது வீட்டின் மாடியறையில் இருந்தவாறே இமாமத் செய்துள்ளார்கள். நபித்தோழர்கள் பள்ளியில் இருந்தவாறே நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழுதுள்ளனர்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ أَخْبَرَنَا حُمَيْدٌ الطَّوِيلُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَقَطَ عَنْ فَرَسِهِ فَجُحِشَتْ سَاقُهُ أَوْ كَتِفُهُ وَآلَى مِنْ نِسَائِهِ شَهْرًا فَجَلَسَ فِي مَشْرُبَةٍ لَهُ دَرَجَتُهَا مِنْ جُذُوعٍ فَأَتَاهُ أَصْحَابُهُ يَعُودُونَهُ فَصَلَّى بِهِمْ جَالِسًا وَهُمْ قِيَامٌ فَلَمَّا سَلَّمَ قَالَ إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا وَإِنْ صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا (رواه البخاري)

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணம் செய்து கொண்டிருந்த போது) தமது குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டார்கள். இதனால் அவர்களது கணைக் கால்’ அல்லது தோள்பட்டை’ கிழிந்து விட்டது. மேலும் (இந்தக் காலகட்டத்தில்) நபி (ஸல்) அவர்கள் தம் மனைவிமார்களை ஒரு மாத காலத்திற்கு நெருங்கமாட்டேன்’ என்றும் சத்தியம் செய்திருந்தார்கள். அப்போது அவர்கள் தமக்குரிய மாடி அறையொன்றில் ஏறி அமர்ந்தார்கள். அதனுடைய ஏணி பேரீச்சங்கட்டையினால் அமைந்திருந்தது. ஆகவே அவர்களுடைய தோழர்கள் அவர்களிடம் உடல்நலம் விசாரிக்க வந்த போது (அந்த அறைக்குள்ளேயே) அவர்களுக்கு அமர்ந்தவாறே தொழுவித்தார்கள்; நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து (தொழுகையை) முடித்த போது, பின்பற்றப்படுவதற்காக இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள்; அவர் ருகூஉ செய்தால் ருகூஉ செய்யுங்கள்; அவர் சஜ்தாச் செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்; அவர் நின்றவராகத் தொழுதால் நீங்களும் நின்றவராகத் தொழுங்கள் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி (378)

இமாம் கூறுவதை அவருக்கு அருகில் இருப்பவர்கள் பின்னால் இருக்கும் மக்களுக்குக் கேட்கும் வகையில் சப்தமாக எடுத்துச் சொன்னால் கேட்கும் வகையில் கட்டிடங்கள் இருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறும் தக்பீர் மக்களுக்கு கேட்காத நிலையில் அபூபக்கர் (ரலி) நபியவர்கள் கூறிய தக்பீரை மக்களுக்கு கேட்கும் படி எடுத்துக் கூறியுள்ளார்கள்.

…அபூபக்ர் (ரலி) தொழுகை நடத்தினார். நபி(ஸல்) அவர்கள் கால்கள் தரையில் இழுபடுமாறு இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியவர்களாக (பள்ளிக்குச்) சென்றார்கள். அவர்களைக் கண்ட அபூபக்ர்(ரலி) பின்வாங்க முயன்றார்கள். தொழுகையை நடத்துமாறு அவருக்கு நபி(ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். அபூபக்ர் (ரலி)யின் வலப்புறமாக நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறும் தக்பீரை அபூபக்ர் (ரலி) மற்றவர்களுக்குக் கேட்கச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (712)

மேற்கண்ட சான்றுகளின் அடிப்படையில் இமாமைப் பின்பற்றும் வகையில், அல்லது இமாம் கூறுவதை எடுத்துரைத்தால் கேட்டுப் பின்பற்றி தொழும் வகையில் அருகிலுள்ள கட்டிடம் இருந்தால் தேவைகளின் நிமித்தம் தொழுது கொள்ளலாம்.

ஒலிபெருக்கி இல்லாவிட்டாலும், மின்சாரம் இல்லாவிட்டாலும் தடையின்றித் தொழும் வகையில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத கட்டிடங்களில் தொழுவது கூடாது.

ஒலி பெருக்கி வசதி என்பது நமது வசதிக்காக நாம் ஏற்படுத்திக் கொண்ட ஒன்றுதான். எனவே அதனுடைய சப்தம் கேட்பதை வைத்து மார்க்கச் சட்டங்களை நாம் வரையறுக்க இயலாது.