பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)
Showing posts with label Quraan. Show all posts
Showing posts with label Quraan. Show all posts

Saturday, May 26, 2018

தூய்மை_இல்லாமல்_குர்ஆன்_ஓதலாமா?

#மார்க்க_சட்டங்கள்

#தூய்மை_இல்லாமல்_குர்ஆன்_ஓதலாமா?

#ஓதலாம்

198 حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ قَالَ دَخَلْتُ عَلَى عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا وَرَجُلَانِ رَجُلٌ مِنَّا وَرَجُلٌ مِنْ بَنِي أَسَدٍ أَحْسَبُ فَبَعَثَهُمَا عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَجْهًا وَقَالَ إِنَّكُمَا عِلْجَانِ فَعَالِجَا عَنْ دِينِكُمَا ثُمَّ قَامَ فَدَخَلَ الْمَخْرَجَ ثُمَّ خَرَجَ فَدَعَا بِمَاءٍ فَأَخَذَ مِنْهُ حَفْنَةً فَتَمَسَّحَ بِهَا ثُمَّ جَعَلَ يَقْرَأُ الْقُرْآنَ فَأَنْكَرُوا ذَلِكَ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَخْرُجُ مِنْ الْخَلَاءِ فَيُقْرِئُنَا الْقُرْآنَ وَيَأْكُلُ مَعَنَا اللَّحْمَ وَلَمْ يَكُنْ يَحْجُبُهُ أَوْ قَالَ يَحْجِزُهُ عَنْ الْقُرْآنِ شَيْءٌ لَيْسَ الْجَنَابَةَ رواه أبو داود

நானும் இன்னும் இருவரும் அலீ (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். (அவ்விருவரில்) ஒருவர் எங்களைச் சார்ந்தவர். இன்னொருவர் பனூ அசத் கிளையைச் சார்ந்தவர் என்று கருதுகிறேன். அவ்விருவரையும் அலீ (ரலி) அவர்கள் ஒரு (முக்கிய) பணி நிமித்தமாக அனுப்பினார்கள். அப்போது (அவ்விருவரையும் நோக்கி) நீங்கள் இருவரும் செயலாற்றுவதில் திறம் படைத்தவர்கள். உங்கள் மார்க்கப் பணியை திறம்படச் செய்யுங்கள் என்று அறிவுரை பகர்ந்தார்கள். பிறகு கழிப்பிடம் சென்று வெளியே வந்து தண்ணீர் கொண்டு வரச் செய்து அதில் ஒரு கையளவு நீரள்ளி அதை (கைகளில் அல்லது வேறு உறுப்பில்) தடவிக் கொண்டார்கள். பிறகு குர்ஆன் ஓதத் துவங்கினார்கள். இதை அவர்கள் (தோழர்கள்) ஆட்சேப்பித்தார்கள். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திலிருந்து வெளிவந்து எங்களுக்கு குர்ஆனைக் கற்றுத் தருவார்கள். எங்களுடன் இறைச்சியைச் சாப்பிடுபவர்கள். கடமையான குளிப்பைத் தவிர வேறு எதுவும் குர்ஆன் ஓதுவதை விட்டும் அவர்களைத் தடுக்காது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் சலமா

நூல் : அபூதாவுத் (198)

இந்தச் செய்தியை அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் சலமா நல்லவர் என்றாலும் அவருடைய மனன சக்தியில் கோளறு உள்ளது. இவருடைய மோசமான மனனத் தன்மையின் காரணத்தால் பல அறிஞர்கள் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

இவரிடத்தில் பலவீனம் இருப்பதாக இமாம் புகாரி கூறியுள்ளார். இவர் சரியான செய்திகளையும் பிழையான செய்திகளையும் அறிவிப்பவர் என இமாம் அபூஹாதிம் கூறியுள்ளார். இவர் தவறிழைப்பவர் என இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். இவர் அறிவிக்கும் செய்திகள் சரியானவை அல்ல என இமாம் ஹாகிம் கூறியுள்ளார். இவரது மனன சக்தியில் பாதிப்பு ஏற்பட்டு மாறிவிட்டது என இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்.

ஹதீஸ் கலை அறிஞர்கள் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என இமாம் ஷாஃபி கூறியுள்ளார். இவருக்கு வயது முதிர்ந்தவுடன் மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் மேற்கண்ட செய்தியை இவர் பாதிப்பு ஏற்பட்ட காலத்திலே அறிவித்ததாகவும் ஷுஃபா கூறியதாக இமாம் பைஹகீ தெரிவிக்கின்றார். அப்துல்லாஹ் பின் சலமா பலவீனமானவர் என்பதால் இவர் இடம்பெறும் மேற்கண்ட ஹதீஸை இமாம் அஹ்மது பின் ஹம்பள் பலவீனமானது என்று கூறியுள்ளார்.

எனவே இந்த பலவீனமான செய்தியை வைத்துக் கொண்டு குளிப்புக் கடமையானவர்கள் குர்ஆனை ஓதக் கூடாது எனக் கூற முடியாது.

Friday, May 18, 2018

குர்ஆனை தமிழில் ஓதினால் நன்மை கிடைக்குமா?

குர்ஆனை தமிழில் ஓதினால் நன்மை கிடைக்குமா?
பதில்: திருக்குர்ஆன் மூலம் ஒரு முஸ்லிம் பல வித நன்மைகளை அடைந்து கொள்ள முடியும்.

அல்லாஹ்வின் வேதத்தை அவன் கூறியவாறு அப்படியே ஓதுவதன் மூலம் நன்மை அடையலாம்.

இப்படி ஓதுவதால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான். இந்த நன்மை மொழிபெயர்ப்புகளை வாசிக்கும் போது கிடைக்காது.

அல்லாஹ் திருக்குர்ஆனை வழங்கியது பொருள் தெரியாமல் வாசிப்பதற்காக மட்டும் அல்ல. மாறாக அதை விளங்குவதற்கும், சிந்திப்பதற்கும் தான் அல்லாஹ் அருளினான். விளங்குவதற்கும், சிந்திப்பதற்கும் அரபுமொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்குப் பிரச்சனை இல்லை. அரபுமொழி தெரியாதவர்களுக்கு மொழி பெயர்ப்புகளை வாசிப்பதன் மூலம் தான் இது சாத்தியமாகும்.

மொழி பெயர்ப்பை வாசித்து அதைப் புரிந்து கொண்டு சிந்தித்தால் குர்ஆனை விளங்கிய நன்மையும் சிந்தித்ததற்கான நன்மையும் கிடைக்கும்.

குர்ஆனைச் சிந்திப்பது மட்டுமின்றி அதன்படி அமல் செய்தால் அதற்கான நன்மையைப் பெற முடியும்.

ஒருவர் மூலத்தை வாசித்து மொழி பெயர்ப்பைப் பார்த்து புரிந்து கொண்டு அதன்படி செயல்பட்டால் அவர் எல்லா விதமான நன்மைகளையும் பெற்றுக் கொள்வார்.

ஒருவர் அர்த்தத்தை விளங்காமல் வெறுமனே ஓதிக் கொண்டு வந்தால் அந்த நன்மை மட்டும் தான் அவருக்குக் கிடைக்கும். மற்றொருவர் மூலத்தை ஓதத் தெரியாமல் புரிந்து கொள்ள மட்டும் முயற்சி செய்தால் அதற்கான நன்மை அவருக்குக் கிடைக்கும்.

Saturday, December 9, 2017

வாகிஆ_அத்தியாயம்_ஓதினால்_ஆரோக்கியம்_கிடைக்கும்_என்கிறார்கள்?

வாகிஆ_அத்தியாயம்_ஓதினால்_ஆரோக்கியம்_கிடைக்கும்_என்கிறார்கள். #அது_சரியா?

#பதில் :

شعب الإيمان للبيهقي – تخصيص سور منها بالذكر

أخبرنا أبو طاهر الفقيه ، أخبرنا أبو حامد بن بلال ، حدثنا أبو الأحوص إسماعيل بن إبراهيم الإسفراييني ، حدثنا العباس بن الفضل البصري ، حدثنا السري بن يحيى ، حدثناابو شجاع ، عن أبي ظبية ، عن ابن مسعود ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : ” من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا ” ” وكان ابن مسعود يأمر بناته يقرأن بها كل ليلة ” وكذا رواه يونس بن بكير ، عن السري *

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல் : பைஹகீ 2392

மேற்கண்ட செய்தியை ஆதாரமாகக் கொண்டு தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதும் வழக்கம் சிலரிடம் உள்ளது. ஆனால் மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல.

இச்செய்தியில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுவதால் இது பலவீனமான செய்தியாகும்.

இந்த செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து

அபூ ளப்யா என்பவரும்

அபூ ளப்யாவிடமிருந்து அபூ ஷுஜாஉ என்பவரும்

அறிவிக்கின்றனர்.

இவ்விரு அறிவிப்பாளர்களும் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படாத முகவரி அற்றவர்கள் என்று அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

ميزان الإعتدال في نقد الرجال ج: 7 ص: 380

10292 أبو شجاع نكرة لا يعرف عن أبي ظبية ومن أبو ظبية عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال من قرأ الواقعة كل ليلة لم تصبه فاقة أبدا رواه الربيع بن طارق وابن وهب عن السري بن يحيى أن هذا حدثه أخرجه ابن وهب في جامعه وأبو عبيد في فضائل القرآن والسري ثقة وأما

لسان الميزان ج: 7 ص: 60

583 أبو شجاع نكرة لا يعرف عن أبي طيبة عن بن مسعود في قراءة سورة الواقعة

அபூ ளப்யாவிடமிருந்து அறிவிக்கும் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்பகத்தன்மையும் உறுதி செய்யப்படவில்லை என்று அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

நூல் : மீஸானுல் இஃதிதால் பாகம் : 7 பக்கம் : 380

நூல் : லிசானுல் மீஸான் பாகம் : 7 பக்கம் : 60

العلل المتناهية – (1 / 112)

151 – اخبرنا المبارك بن خيرون قال اخبرنا احمد بن الحسن قال انا ابو طاهر بن العلاف قال انا عثمان بن محمد قال انا ابو بكر بن ابي داؤد قال انا محمد بن احمد بن المثنى قال انا خالد بن خداش قال حدثني عبدالله بن وهب قال حدثني السري بن يحيى ان شجاعا حدثه عن ابي ظبية عن ابن مسعود قال سمعت رسول الله صلى الله عليه و سلم يقول من قرأ سورة القارعة في كل ليلة لم تصبه فاقه قال احمد بن حنبل هذا حديث منكر وشجاع والسري لا أعرفهما

அஹ்மது பின் ஹம்பல் அவர்கள் இந்த ஹதீஸ் மறுக்கப்பட வேண்டியது; இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்கத்தன்மை தெரியவில்லை எனக் கூறியுள்ளார்கள். இதை இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தனது நூலில் எடுத்தெழுதியுள்ளார்கள்.

நூல் : அல்இலலுல் முதனாஹியா பாகம் : 1 பக்கம் : 112

எனவே ஒவ்வொரு இரவிலும் அல்வாகிஆ அத்தியாயத்தை ஓதினால் வறுமை நீங்கும் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

தினமும் இரவில் ஓதுவதற்கு பல துஆக்கள் உள்ளன. அவற்றை அறிய துஆக்களின் தொகுப்பு நூலை வாசிக்கவும்

Friday, December 24, 2010

குர்ஆனுக்கு முரணாக அறிவிப்பவர் பொய்யரா


குர்ஆனுக்கு முரணாக அறிவிப்பவர் ??

குர்ஆனுக்கு முரணாக அறிவிப்பவர் பொய்யரா
குர்ஆனுக்கு
முரண்படும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டபட்டவை என்றால் அந்த ஹதீஸ்களை அறிவித்த அறிவிப்பாளர்களில் நிச்சயம் ஒரு பொய்யர் இருப்பார் . அவர் யார் என்று கண்டுபிடித்து விட்டால் இந்த ஹதீஸ்களை இட்டுக்கட்டபட்டவை என இலகுவாக ஒதுக்கி விட முடியும். அவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்று இருந்தால் எமது இரண்டு மூலாதாரங்களில் ஒன்றான ஹதீஸ்கள் இவ்வளவு சிக்கலினூடாகவா எங்களுக்குக் கிடைக்கப்பெற்று இருக்கிறது ?

பதில் :
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்ட வகையுடன் சேர்ந்தவை என்று நாம் கூறுகின்றோம். நம்மைப் போல் பல அறிஞர்களும் இவ்வாறு கூறுகின்றனர்.
குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை வைத்துப் பார்த்தாலும் ஹதீஸ் கலையில் கூறப்பட்ட இவ்விதி சரியானது என்பதைச் சந்தேகமற அறியலாம். விரிவான விளக்கங்களுக்கு ஹதீஸ்கள் குர்ஆனுடன் முரண்படுமா? என்ற பெயரில் நமது இணையதளத்தில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அதைப் படித்து புரிந்து கொள்ளவும்.  
பொதுவாக ஹதீஸ் கலையில் பலவீனமான செய்திகள் பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இந்த வகைகளில் மிக மோசமான தரத்தில் அமைந்தவை இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகும்.
குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் இந்த வகையுடனே சேர்க்கப்படுகின்றது. ஏனென்றால் மோசமான நினைவாற்றல் அறிவிப்பாளர் தொடர்பு முறிவு போன்ற காரணங்களால் பலவீனமடையும் ஹதீஸ்கள் அவற்றில் தவறு ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது என்ற அனுமானத்தில் அடிப்படையில் மறுக்கப்படுகின்றன.
ஆனால் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களைப் பொறுத்தவரை அவை வலுவான ஆதாரமாக இருக்கின்ற குர்ஆனுடன் முரண்படுவதால் அவை நூற்றுக்கு நூறு சதவீதம் சரியான செய்திகள் அல்ல என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது.
இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் எவ்வளவு மோசமான தரத்தைப் பெற்றதோ அது போன்று குர்ஆனுக்கு முரண்படும் செய்தியும் மிக மோசமான தரத்தைப் பெற்ற பலவீனமான செய்திகளாக உள்ளன என்பதை உணர்த்துவதற்காகவே இந்த ஹதீஸ்களை இட்டுக்கட்டப்பட்ட வகையுடன் சேர்த்தோம்.
குர்ஆனுக்கு முரண்பட்டு அறிவிப்பவர் பொய் சொல்லி இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மெய்யைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அறிவித்தாலும் தவறுதலாக ஒரு வார்த்தையை விட்டு விட்டு அறிவித்தாலும் கூட கருத்து மாறிவிடும். அதனால் குர்ஆனுக்கு முரண்படும் நிலை ஏற்படும். அறிவிப்பாளர் பொய் சொல்லியிருந்தால் தான் ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படும் என்று நாம் உறுதியாகக் கூற முடியாது.
ஒரு நம்பகமான அறிவிப்பாளர் ஹதீஸின் ஒரு வாசகத்தை நேர் எதிரான கருத்தில் தவறுதலாகப் புரிந்ததின் விளைவாலும் இத்தகைய நிலை ஏற்படலாம்.
குர்ஆனுக்கு முரண்படும் ஒரு செய்தியில் நம்பகமானவர்கள் என உறுதிசெய்யப்பட்ட அறிவிப்பாளர் வந்தால் இவர்களில் யாரோ பொய் கூறியிருக்கின்றார் என்று முடிவு செய்வதை விட இவர்களில் யாரோ தவறிழைத்துள்ளார் என்று முடிவு செய்வதே நியாயமானது. ஏனென்றால் நம்பகமானவர்கள் விஷயத்தில் நல்லெண்ணம் வைக்க வேண்டும்.
ஒரு மிக நம்பகமானவரின் அறிவிப்புக்கு இன்னொரு நம்பகமானவரின் அறிவிப்பு முரண்பட்டால் அந்த அறிவிப்பில் அவர் பொய் சொல்லி விட்டார் என்று ஹதீஸ் கலையில் கருதப்படாது. மாறாக இவர் இதில் அறியாமல் தவறு செய்துள்ளார் என்றே கருதப்படும்.
இதே அடிப்படையில் தான் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களில் வரும் நம்பகமானவர்களின் விஷயத்திலும் நாம் முடிவெடுக்க வேண்டும்.
மேலும் இந்த ஹதீஸ்களில் பல அறிவிப்பாளர்கள் வருகிறார்கள். இவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருந்தால் இவர்களில் இன்னார் தான் தவறு செய்தார் என்று குறிப்பிட முடியாது.
ஒரு பேச்சுக்கு அவ்வாறு கண்டுபிடுத்து விட்டால் கூட குர்ஆனுக்கு முரண்பாடாக அவர் அறிவிக்கும் குறிப்பிட்ட அந்த அறிவிப்பு மட்டுமே நிராகரிக்கப்படும். அவர் அறிவித்த மற்ற அறிவிப்புகள் நிராகரிக்கப்படாது.
ஏனென்றால் இவருடைய அறிவிப்பு குர்ஆனுக்கு மாற்றமாக இருப்பதே இதில் இவர் தவறு செய்துள்ளார் என்பதை தெளிவுபடுத்தி விடுகின்றது. இவர் நம்பகமானவராக இருக்கும் பட்சத்தில் எந்த முரண்பாடும் வராத இவரது மற்ற அறிவிப்புகளை ஒட்டுமொத்தமாக எவ்வாறு நிராகரிக்க முடியும்?
இவற்றிலும் இவர் தவறு செய்திருப்பார் என்று யூகிப்பது அடிப்படையற்ற யூகமாகும். ஏனென்றால் ஒரு நம்பகமானவர் சரியாக அறிவிப்பார் என்றே கருத வேண்டும்.
எனவே ஒரு நம்பகமானவர் குர்ஆனுக்கு முரணாக செய்தியை அறிவிப்பதால் இதை வைத்துக் கொண்டு அவரைப் பொய்யர் என்று கூறக் கூடாது. நாமும் அவ்வாறு கூறவில்லை.
இந்த ஹதீஸ்களை இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுடன் நாம் சேர்த்ததற்குக் காரணம் இவற்றில் உள்ள நம்பகமானவர்கள் பொய் சொல்லி விட்டார்கள் என்பதற்காக அல்ல. இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் புறக்கணிக்கப்படுவதைப் போன்று இந்தச் செய்திகளும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதே காரணம்.
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுப்பதால் ஹதீஸ்கள் சிக்கலுடன் இருக்கின்றது என்ற தோற்றம் ஏற்படுகிறது என்ற வாதம் பல காரணங்களால் தவறானது. ஹதீஸ்களை ஆதராமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு இது ஒரு பிரச்சனையே கிடையாது.
ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமானது என்றும் பலவீனமானது என்றும் ஆய்வு செய்து தரம் பிரிக்கின்றனர். இவ்வாறு ஆய்வு செய்வதால் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்பவர்கள் ஹதீஸ்களில் சிக்கல் இருக்கின்றது எனக் கூறுவதில்லை.
பல நம்பகமானவர்களின் அறிவிப்புக்கு முரணாக ஒரு நம்பகனமானவர் அறிவிப்பதுண்டு. மிக வலுவான ஒருவரின் அறிவிப்புக்கு மாற்றமாக அவரை விட மனன சக்தியில் சற்று தரம் குறைந்த நம்பகமானவர் அறிவிப்பதும் உண்டு. ஒருவரை விட மற்றவர் மனன சக்தியில் உயர்ந்து விடாத வகையில் அனைவரும் சம நிலையில் உள்ள நம்பகமான அறிவிப்பாளர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டு அறிவிப்பதும் உண்டு.
இது போன்ற நிலைகளில் ஹதீஸ்களை ஆதாரமாக ஏற்றுக் கொண்டவர்கள் ஹதீஸ்களில் சிக்கல் உள்ளது என்று கூறி ஒட்டுமொத்தமாக ஹதீஸ்களை மறுப்பதில்லை. அனைத்து செய்திகளிலும் சந்தேகம் கொள்வதில்லை.
நம்பகமானவர்களுக்கிடையே முரண்பாடு தோன்றினாலும் யார் மிக வலிமையானவர்? அதிகமானோர் எவ்வாறு அறிவிக்கிறார்கள்? என்று பார்த்து அந்த அறிவிப்பாளர்களின் அறிவிப்பே சரியானது என்றும் அதற்கு முரணாக உள்ள அறிவிப்புகள் அவற்றை அறிவித்தவர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் தவறானது என்றும் முடிவு செய்கின்றனர்.
ஒருவரை விட ஒருவரை முற்படுத்துவதற்கு எந்தக் காரணமும் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் அனைவரின் அறிவிப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் நிறுத்தி வைத்து விடுகின்றனர். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
குர்ஆன் என்பது ஹதீஸ்களை விட பன்மடங்கு வலுவான ஆதாரம். இதை யாரும் மறுக்க மாட்டார்கள். அப்படி இருக்க வலுவான ஆதாரமாகத் திகழும் குர்ஆனுடன் அதற்குக் கீழ் நிலையில் உள்ள ஹதீஸ் முரண்பட்டால் குர்ஆனை எடுத்துக் கொண்டு முரண்படும் அந்த ஹதீஸை விட்டு விடுவது தானே சரி. இந்த முடிவில் ஒரு சிக்கலும் இல்லை.
நடைமுறை வாழ்க்கையிலும் கூட நாம் இவ்வாறு தான் முடிவு எடுக்கின்றோம். எனவே குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுப்பதால் எந்தச் சிக்கலும் ஏற்படுவதில்லை. மாறாக அவற்றை ஏற்றுக் கொண்டால் தான் குர்ஆன் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படும்.
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களைப் பற்றி பேசும் போது எடுத்து வைக்கப்படும் இந்தக் கேள்விகள் அறிவிப்பாளர் பலவீனமாக இருக்கும் போதும் எழத்தான் செய்யும். ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டதாக இல்லையே என்ற கேள்வியை யாரும் கேட்பதாகத் தெரியவில்லை.
ஒருவரது அறிவிப்புக்கு மாற்றமாக பலர் அறிவிக்கும் போதும் இந்தக் கேள்வி வரும். ஆனாலும் யாரும் கேட்பதில்லை.
அது போல் மிக நம்பிக்கைக்குரியவரின் அறிவிப்புக்கு எதிராக நடுத்தரமானவர் அறிவிக்கும் போதும் இந்தக் கேள்விகள் எழ வேண்டும், ஆனாலும் யாரும் கேட்பதாகத் தெரியவில்லை.
ஆனால் குர் ஆனுடன் முரண்படுகிறது என்பதற்காக ஒரு ஹதீஸை நிராகரிக்கும் போது மட்டும் இது போன்ற கேள்விகள் எழுவது ஏன்?
இதுவரை நாம் நம்பியதற்கு மாற்றமாக உள்ளதால் இதை ஜீரணிக்க உள்ளம் தயக்கம் காட்டுகிறது. இது தான் காரணம். பழகிப்போன விஷயத்தில் சரியாக புரிந்து கொள்கிறது. எனவே மனோ இச்சைக்கு இடம் கொடுக்காமல் குர்ஆனுக்கு முரண்படுவது பெரிய விஷயமா? சாதாரண விஷயமா? அறிவிப்பாளரிடம் காணப்படும் குறையை விட குர் ஆனுக்கு முரண்படுவது மிகப் பெரிய விஷயம் என்பதைப் புரிந்து கொண்டால் இந்தக் கேள்விகள் எழாது

Saturday, July 31, 2010

திருக்குர்ஆன் கேள்வி - பதில் -- II

திருக்குர்ஆன் கேள்வி - பதில் -- II


கேள்வி : மரம், செடி, கொடிகள் போன்றவை எப்படி இறைவனுக்கு பணிகின்றன?

பதில் : வலப்புறம், இடப்புறம் சாய்ந்து பணிகின்றன. (அல்குர்ஆன் 16:48)

கேள்வி : உடரிலுள்ள மூட்டுகளுக்காக ஒவ்வொரு நாளும் என்ன செய்ய வேண்டும்?

பதில் : தர்மம் செய்ய வேண்டும் (ஆதாரம் : புகாரி 2989)

கேள்வி : மனிதரல்லாதவர்களில் பெருமையடிக்காதவர்கள் யார்?

பதில் : வானவர்கள் (அல்குர்ஆன் 16:49)

கேள்வி : நாட்டுக்கழுதை உண்பதற்கு எப்போது தடைசெய்யப்பட்டது?

பதில் : கைபர் போரின்போது (ஆதாரம் : புகாரி 2991)

கேள்வி : மார்க்கத்தின் சட்டங்களின் அதிகாரம் எல்லா காலங்களிலும் யாருக்குரியது?

பதில் : அல்லாஹ்வுக்கு (அல்குர்ஆன் 16:52)

கேள்வி : நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை என்று எப்போது நபிகளார் கூறினார்கள்?

பதில் : நபித்தோழர்கள் அல்லாஹ்வை சப்தமிட்டு அழைத்தபோது (ஆதாரம் : புகாரி 2992)

கேள்வி : பெண் குழந்தை பிறந்தால் அன்றைய கால மக்கள் எப்படி ஆகி விடுகின்றனர்?

பதில் : முகம் கருத்து, கவலைப்பட்டவர்களாக ஆகி விடுகின்றனர். (அல்குர்ஆன் 16:58)

கேள்வி : எனது (பிரத்தியேக) உதவியாளர் என்று நபிகளார் யாரைக் குறிப்பிட்டார்கள்?

பதில் : ஸுபைர் பின் அவ்வாம் (ரரி) (ஆதாரம் : புகாரி 2997)

கேள்வி : பிறந்த பெண் குழந்தையை என்ன செய்ய துணிந்தனர்?

பதில் : மண்ணில் உயிருடன் புதைக்கத் துணிந்தனர் (அல்குர்ஆன் 16:59)

கேள்வி : இப்னு உமர் (ரரி) அவர்களின் மனைவி பெயர் என்ன?

பதில் : ஸஃபிய்யா பின் அபீ உபைத் (ரரி) (ஆதாரம் : புகாரி 3000)

கேள்வி : தீய பண்பு உள்ளவர்கள் யார்?

பதில் : மறுமையை நம்பாதோர் (அல்குர்ஆன் 16:60)

கேள்வி : பயணம் என்பதை நபிகளார் எப்படி குறிப்பிட்டார்கள்?

பதில் : வேதனையின் ஒரு பங்கு (ஆதாரம் : புகாரி 3001)

கேள்வி : மனிதன் செய்யும் தீயசெயல்களுக்கு உடனுக்குடன் தண்டிக்கப்பட்டால் நிலை என்ன?

பதில் : பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான் (அல்குர்ஆன் 16:61)

கேள்வி : பயணத்தின் வேலை முடிந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

பதில் : உடன் தம் வீட்டாரிடம் திரும்ப வேண்டும் (ஆதாரம் : புகாரி 3001)

கேள்வி : பால் எங்கு உற்பத்தியாகிறது?

பதில் : கால்நடைகளின் வயிறுகளில் உள்ள செறிக்கப்பட்ட உணவுக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் உற்பத்தியாகிறது. (அல்குர்ஆன் 16:66)

கேள்வி : தர்மம் செய்த பொருளை திரும்ப விலைக்கு வாங்கலாமா?

பதில் : கூடாது (ஆதாரம் : புகாரி 3002)

கேள்வி : தேன் எங்கு உற்பத்தியாகிறது?

பதில் : தேனியின் வயிற்றிரிருந்து (அல்குர்ஆன் 16:69)

கேள்வி : நபிகளாரின் விவரங்களை மக்காவிற்கு எடுத்து சென்ற பெண்ணை பிடித்து வருமாறு யாரை நபிகளார் அனுப்பினார்கள்?

பதில் : அலீ (ரரி), மிக்தாத் (ரரி) (ஆதாரம் : புகாரி 3007)

கேள்வி : அல்லாஹ்வுக்கு உதாரணங்கள் கூறலாமா?

பதில் : கூடாது (அல்குர்ஆன் 16:74)

கேள்வி : மக்காவில் கடிதம் கொண்டு சென்றபெண்மணி எந்த இடத்தில் இருப்பதாக நபிகளார் கூறினார்கள்?

பதில் : ரவ்ளத்துக்காக் (ஆதாரம் : புகாரி 3007)

கேள்வி : மறுமை நாள் எவ்வளவு நேரத்தில் வரும்?

பதில் : கண்மூடித் திறப்பதுபோல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். (அல்குர்ஆன் 16:77)

கேள்வி : மக்கா வாசிகளுக்கு கடிதம் கொடுத்த நபித்தோழர் யார்?

பதில் : ஹாத்திப் பின் அபீ பல்தஆ (ரரி). (ஆதாரம் : புகாரி 3007)

கேள்வி : இறைவன் வீடுகளை ஏற்படுத்தியது எதற்கு?

பதில் : நிம்மதியடைவதற்கு. (அல்குர்ஆன் 16:80)

கேள்வி : உளவு சொன்ன ஹாத்திப் பின் அபீ பல்தஆ (ரரி) அவர்களை என்ன செய்வதாக உமர் (ரரி) கூறினார்கள்?

பதில் : அவரின் கழுத்தை வெட்டிவிடுவதாக கூறினார்கள் (ஆதாரம் : புகாரி 3007)

கேள்வி : இறைச் சட்டங்களில் நபியின் கடமை என்ன?

பதில் : தெளிவாக எடுத்துச் சொல்வதே! (அல்குர்ஆன் 16:82)

கேள்வி : ஹாத்திப் பின் அபீபல்தஆ (ரரி) அவர்களுக்கு தண்டனை ஏன் நபிகளார் வழங்கவில்லை?

பதில் : பத்ர் போரில் அவர்கள் கலந்து கொண்டதால் கிடைத்த நன்மையின் காரணமாக (ஆதாரம் : புகாரி 3008)

கேள்வி : வேதனை காணும்போது தண்டனை இலேசக்கப்படுமா?

பதில் : வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள் (அல்குர்ஆன் 16:85)


-->  Dheengula Penmani Jan 2010

திருக்குர்ஆன் கேள்வி பதில்

திருக்குர்ஆன் கேள்வி பதில்


கேள்வி : மறுமை நாளில் கடவுளாக இட்டுக்கட்டி வணங்கியவைகள் என்னவாகும்?

பதில் : அவர்களை விட்டும் மறைந்துவிடும் (அல்குர்ஆன் 16:87)

கேள்வி : கைபர் போரில் யாரிடம் இஸ்லாமிய கொடியை நபிகளார் கொடுத்தார்கள்?

பதில் : அலீ (ரலி) (ஆதாரம் : புகாரி 3009)

கேள்வி : வேதனைக்கு மேல் வேதனை பெறுவோர் யார்?

பதில் : அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர், குழப்பம் செய்தோர். (அல்குர்ஆன் 16:88)

கேள்வி : அல்லாஹ் யாரைப் பார்த்து வியப்படைவான்?

பதில் : சங்கிகளால் பிணைக்கப்பட்டவர்களாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டத்தாரைப் பார்த்து (ஆதாரம் : புகாரி 3010)

கேள்வி : மறுமைநாளில் யாரை எதிரான சாட்சியாக அல்லாஹ் ஆக்குவான்?

பதில் : ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிரான சாட்சியை ஆக்குவான் (அல்குர்ஆன் 16:89)

கேள்வி : அடிமைப் பெண்ணுக்கு அழகிய முறையில் கல்வியும் ஒழுக்கும் கற்பித்து, அவளையே திருமணம் செய்து கொண்டவருக்கு கிடைக்கும் கூலி எவ்வளவு?

பதில் : இரண்டு தடவை கூலி வழங்கப்படும் (ஆதாரம் :புகாரி 3011)

கேள்வி : அல்லாஹ் தடுத்தவை எவை?

பதில் : வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுதல் (அல்குர்ஆன் 16:90)

கேள்வி : போர் களத்தில் யாரைக் கொல்லக்கூடாது?

பதில் : பெண்களையும் குழந்தைகளையும் (ஆதாரம்:புகாரி 3015)

கேள்வி : மோசடி செய்தவற்காக சத்தியம் செய்தால் என்ன ஏற்படும்?

பதில் : உறுதிப்பட்ட பாதம் சறுகிப்போய்விடும் (அல்குர்ஆன் 16:94)

கேள்வி : நெருப்பால் தண்டனை கொடுக்க தகுதியானவன் யார்?

பதில் : அல்லாஹ் மட்டுமே (ஆதாரம் : புகாரி 3016)

கேள்வி : அல்லாஹ்வின் பாதையில் செல்வதை தடுத்தால் என்ன ஏற்படும்?

பதில் : தீங்கும் கடும் தண்டனையும் கிடைக்கும். (அல்குர்ஆன் 16:94)

கேள்வி : பத்ர் போரில் பிடிபட்ட அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபிகளார் யாருடை சட்டை அணிய கொடுத்தார்கள்?

பதில் : நயவஞ்சகனின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை (ஆதாரம் : புகாரி 3008)

கேள்வி : குர்ஆன் ஓதும்போது என்ன செய்ய வேண்டும்?

பதில் : விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும் (அல்குர்ஆன் 16:98)

கேள்வி : ஏமன் நாட்டு கஅபா என்று அழைக்கப்பட்ட ஆலயத்தின் பெயர் என்ன?

பதில் : துல் கலஸா (ஆதாரம் : புகாரி 3020)

கேள்வி : ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் எதிரிகள் என்ன கூறினார்கள்?

பதில் : நபி இட்டுக்கட்டி செல்கிறார் என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 16:101)

கேள்வி : ஏமன் நாட்டு கஅபா என்று அழைக்கப்பட்ட துல்கலஸா ஆலயத்தை உடைத்தவர் யார்?

பதில் : ஜரீர் (ரலி) (ஆதாரம் : புகாரி 3020)

கேள்வி : குர்ஆன் யார் மூலம் இறக்கப்பட்டது?

பதில் : இறைவனிடமிருந்து ரூஹுல் குதுஸ் எனும் (ஜிப்ரீல் மூலம்) (அல்குர்ஆன் 16:102)

கேள்வி : யூதனின் தலைவன் அபூ ராஃபிஉ என்பவனை கொன்றவர் யார்?

பதில் : அப்துல்லாஹ் பின் அதீக் (ரலி) (ஆதாரம் : புகாரி 3023)

கேள்வி : யாருக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்?

பதில் : அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதோருக்கு (அல்குர்ஆன் 16:104)

கேள்வி : போர்களத்தின் ஏற்படும் துன்பங்களை பார்க்கும்போது எப்படி இருக்க வேண்டும்?

பதில் : நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருக்கு வேண்டும். (ஆதாரம் :புகாரி 3026)

கேள்வி : அல்லாஹ்வை நம்பாதோர் என்ன செய்வார்கள்?

பதில் : பொய்யை இட்டுக்கட்டுவார்கள் (அல்குர்ஆன் 16:105)

கேள்வி : கொடியவன் கஅப் பின் அஷ்ரஃபை கொன்றவர் யார்?

பதில் : முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) (ஆதாரம் : புகாரி 3031)

கேள்வி : அல்லாஹ்வின் கோபமும் வேதனையும் யாருக்கு ஏற்படும்?

பதில் : அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் (அல்குர்ஆன் 16:106)

கேள்வி : மார்பில் அதிக முடியுடையவர்களா இருந்தவர்கள் யார்?

பதில் : நபி (ஸல்) அவர்கள் (ஆதாரம் :புகாரி 3034)

கேள்வி : பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் யாருக்கு அணிவித்தான்?

பதில் : பசியும் பயமும் இல்லாமல் இருந்து அல்லாஹ்வை மறந்தவர்களுக்கு (அல்குர்ஆன் 16:112)

கேள்வி : முஆத் (ரலி) அவர்களை எந்த நாட்டு ஆளுநராக நபிகளார் நியமித்தார்கள்?

பதில் : ஏமன் (ஆதாரம் : புகாரி 3038)

கேள்வி : இறைவனை மட்டும் வணங்குவோர் என்ன செய்வார்கள்?

பதில் : அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துவார்கள் (அல்குர்ஆன் 16:114)

--> Q/A Dheengula Penmani Feb 2010

ஆயத்துல் குர்ஸி ஓதினால் வறுமை விலகும் என்பதும்??

ஆயத்துல் குர்ஸி ஓதினால் வறுமை விலகும் என்பதும், 70000 மலக்குகளின் பாதுகாப்பு கிடைக்கும் என்பதும், 40 ஹஜ் செய்த நன்மை கிடைக்கும் என்பதும், 40 படித்தரங்கள் உயர்த்தப்படும் என்பதும் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின் யாரெல்லாம் ஆயதுல்குர்ஸி (குர்ஆன் 2:255) ஓதுகிறாரோ, மரணத்தைத் தவிர அவர் சொர்க்கத்தை அடைவதிலிருந்து தடுப்பது ஏதுமில்லை என்ற நபிமொழியும் ஆதாரப்பூர்மானதா?

யார் முஃமினா இருக்கும் நிலையில் ஆயத்துல் குர்ஸியை ஓதுவாரோ அது அனைத்து தீங்கிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அல்லு அஃபாவுல் உகைலீ, பாகம் : 2, பக்கம் : 324

இச்செய்தில் இடம்பெறும் அப்துர்ரஹ்மான் பின் அபீபக்ர் பின் அபீ மலீக்கா என்பவர் பலவீனமானவராவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஹாமீன் அல் முஃமீன் என்ற அத்தியாயத்தை இலைஹில் மஸீர் வரை காலையில் ஓதுவாரோ மேலும் ஆயத்துல் குர்ஸியையும் காலை நேரத்தில் ஓதுவாரோ அவருக்கு மாலைநேரம் இவ்விரு ஆயத்துகளின் காரணத்தால் பாதுகாப்படுவார். யார் மாலை நேரத்தில் இவ்விரண்டையும் ஓதுவாரோ அவர் காலைவரை இவ்விரு ஆயத்துகளின் காரணத்தால் பாதுகாக்கப்படுவார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி (2804)

இந்த ஹதீஸ் தாரமி (3252) ஷுஅபுல் ஈமான் (பாகம் 2, பக்கம் :483) ஷரஹ் சுன்னா (பாகம்: 2, பக்கம்: 349) ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள் ளது.

இந்த செய்தி பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்கள் (இச் செய்தியில் இடம் பெறும்) அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் அல்முலைக்கி என்பவரை அவரின் நினைவாற்றல் குறைவின் காரணத்தால் ஹதீஸ்கலை அறிஞர்க ளில் சிலர் விமர்சித்துள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இரண்டாவது இதே ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அப்துர் ரஹ் மான் பின் அபீ பக்ர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை இமாம் புகாரி இவர் தகுதியற்றவர் என்றும். இமாம் இப்னு மயீன் அவர்கள், இவர் பலவீ னமானவர் என்றும். இமாம் அஹ்மத் அவர்கள் ஹதீஸ் துறையில் நிராகரிக் கப்பட்டவர் என்றும். இமாம் நஸயீ அவர்கள் கைவிடப்பட்டவர் என்று விமர்சித்துள்ளனர்.
நூல்: மீஸானுல் இஃதிதால்,பாகம்: 4, பக்கம்: 263

யார் குர்பானி அறுக்கும் நாள் (ஹஜ்ஜுப் பெருநாள்) அன்று இரண்டு ரக்அத் தொழுது, ஒவ்வொரு ரக்அத்திலும் ஸுரத்துல் பாத்திஹா பதி னைந்து தடவையும் குல்ஹுவல்லாஹு அஹத் பதினைந்து தடவையும் குல் அவூது பிரப்பில் பலக் பதினைந்து தடவையும் குல் அவூது பிரப்பிந் நாஸ் பதினைந்து தடவையும் ஓதி ஸலாம் கொடுத்த பின்னர் ஆயத்துல் குர்ஸியை மூன்று தடவை ஓதினால் அல்லாஹ் பதினைந்து தடவை மன் னிப்பு வழங்குவான். அவருடை பெயரை சொர்க்கவாதிகளில் ஆக்குவான். வெளிப்படையான அந்தரங்கமான பாவங்களை மன்னிப்பான். அவர் ஓதி ஒவ்வொரு ஆயத்துக்கு ஹஜ், உம்ரா செய்த நன்மையை பதிவு செய்வான், இஸ்மாயீல் (அலை) அவர்களின் குழந்தைகளில் அறுபது நபர்களை விடு தலை செய்தவர்களைப் போன்று ஆக்குவான். மேலும் அவர் இதை செய் ததிலிருந்து அடுத்த ஜுமுஆக்கிடையில் இறந்தால் அவர் ஷஹீதாக மர ணித்தவராக கணிக்கப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி), நூல் : அல்மவ்லூஆத் - இப்னுல் ஜவ்ஸி, பாகம் : 2, பக்கம் : 134

இச்செய்தியில் அஹ்மத் பின் முஹம்மத் பின் காலிப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நபிமொழிகளை இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர். எனவே இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது.

கடமையான தொழுகைக்கு பிறகு ஆயத்துல் குர்ஸி ஓதினால் அவர் சொர்க்கம் செல்வார் என்ற கருத்தில் அலீ (ரலி), ஜாபிர் (ரலி), முஃகீரா பின் ஷுஃபா (ரலி), அபூ உமாமா (ரலி) ஆகியோர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ்களின் தரங்களைப் பற்றி ஆய்வு செய்வோம்.

அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி :

ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தை தவிர வேறு எதுவும் தடுக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி), நூல் : ஷுஅபுல் ஈமான்-பைஹகீ, பாகம் : பக்கம் : 2, பக்கம் : 458

இச்செய்தியில் நஹ்ஷல் பின் ஸயீத் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பொய்யர் என்று குற்றம் சாட்டப்பட்டவர்.

இமாம் அபூதாவூத், இஸ்ஹாக் பின் ராஹவைஹி ஆகியோர் இவர் பொய்யர் என்றும் இப்னு மயீன் இவர் நம்பகமானவர் இல்லை என்றும். இமாம் அபூஸர்ஆ, தாரகுத்னீ ஆகியோர் இவர் பலவீனமானவர் என்றும். இமாம் அபூஹாத்திம் அவர்கள் இவர் பலம்வாய்ந்தவர் இல்லை என்றும் ஹதீஸ்துறையில் கைவிடப்பட்டவர் என்றும் கூறியுள்ளார்கள். இமாம் நஸயீ அவர்கள் இவர் ஹதீஸ்துறையில் கைவிடப்பட்டவர் என்றும். இப்னு ஹிப்பான் அவர்கள் இவர் நம்பகமானவர்கள் அறிவிக்காத ஹதீஸ்களை அவர்கள் அறிவித்ததாக கூறுபவர், இவருடைய செய்திகளை ஆச்சரிய மான செய்திகள் என்பதற்காகவே தவிர ஹதீஸ் நூல்களில் எழுதுக் கூடாது என்றும். இவர் லஹ்ஹாக் மூலம் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறி விப்பவர் என்று நுக்காஸ் அவர்களும் கூறியுள்ளனர். நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 10, பக்கம்: 427

மேலும் இச்செய்தியை பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களும் அந்த செய்தியின் இறுதியில் இதன் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இதைப் போன்று ஸஹீஹ் இப்னு ஹிப்பானில் (பாகம் :2, பக்கம் : 76) இடம் பெற்றுள்ளது. இதில் இடம்பெறும் ஹஃப்ஸ் பின் உமர் அர்ரிகாஷி என்பவர் யாரென அறியப்படாதவர்.

பாத்திஹா அத்தியாயமும் ஆயத்துல் குர்ஸியும் ஆலு இம்ரானில் ஷஹி தல்லாஹு அன்னஹு லாயிலாஹா இல்லா ஹுவ என்ற ஆயத்தும் குலில்லாஹும்ம மாலிகுல் முல்கி என்ற ஆயத்தும் (அர்ஷின் கீழ்) தொங்க விடப்பட்டவைகளாகும். அல்லாஹ்வுக்கும் அதற்கும் மத்தியில் எந்த தடை யும் இல்லை. அல்லாஹ் இவைகளை பூமியில் இறக்குவதற்கு நாடிய போது அவை களை அர்ஷோடு தொங்கி கொண்டு, இறைவா! நீ எங்களை பூமியின் பக்கமும் உனக்கு மாறு செய்பவர்களின் பக்கமும் அனுப்புகிறாயே என்று கேட்டது. என்மீது சத்தியமிட்டு கூறுகிறேன்: என்னுடைய அடியார்களில் யார், ஒவ்வொரு தொழுகைக்குப்பின்னும் அதை ஓதுவாரோ அவருக்கு சொர்க்கத்தை அவர் தங்குமிடமாக நான் ஆக்குவேன். அல்லது பரிசுத்த மான இடத்தில் தங்க வைப்பேன். அல்லது மறைத்துவைக்கப்பட்ட தன் கண்களால் ஒவ்வொரு நாளும் எழுபது தடவை அவரைப் பார்ப்பேன். அல்லது ஒவ்வொரு நாளும் எழுபது தேவைகளை பூர்த்தி செய்வேன். அல்லது ஒவ்வொரு விரோதிகளிடமிருந்தும் நான் பாதுகாப்பு அளிப்பேன். அவர்களிடமிருந்து உதவிபுரிவேன். அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தைத் தவிர வேறு எதுவும் தடுக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி), நூல்: அமலுல் யவ்மி வல் லைலா, பாகம்: 1, பக்கம்: 238

இந்த செய்தியில் இடம் பெறும் அபூ ஜஅஃபர் பின் பக்ர் என்பவர் பற்றி குறிப்புகள் நாம் பார்த்தவரை கிடைக்கவில்லை. இதில் இடம் பெறும் முஹம்மத் பின் ஸன்பூர் என்பவரைப் பற்றி குறையும் நிறையும் கூறப்பட் டுள்ளது. குறிப்பாக இவர் அல்ஹாரிஸ் பின் உமைர் வழியாக அடிப்படை யில்லாத மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவித்துள்ளார் என்று மஸ்லமா அவர்கள் கூறிப்பிட்டுள்ளார்கள். இந்த செய்தி அல்ஹாரிஸ் பின் உமைர் வழியாகவே முஹம்மத் பின் ஸன்பூர் என்பவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இடம் பெறும் அல்ஹாரிஸ் பின் உமைர் என்பவரை பலர் நம்பக மானவர் என்று கூறிப்பிட்டிருந்தாலும் இவரின் இந்த செய்தியை குறிப் பிட்டு எழுதும் இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் இவர் நம்பகமானவர் கள் பெயரை பயன்படுத்தி இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பவர் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கள். மேலும் இந்த செய்தி குறிப்பிட்டு இது அடிப்படையில்லாத இட்டுக்கப்பட்ட செய்தி என்று விமர்சனம் செய்துள்ளார்கள். (நூல் : அல்மஜ்ரூஹீன், பாகம்: 1, பக்கம் : 223)

இதே கருத்தில் சில வாசகங்கள் மாற்றத்துடன் லஆலில் மஸ்னூஆ என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இதுவும் தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்.

இது தொடர்பு அறுந்த செய்தியாகும் என்று இப்னு அதீ அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : அல்காமில் லி இப்னி அதீ, பாகம் : 7, பக்கம் : 90)

முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் மூலம் அறிவிப்பட்ட செய்தி :
ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தை தவிர வேறு எதுவும் தடுக்காது. அவர் மரணித்துவிட்டால் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முகீரா (ரலி), நூல் : ஹில்யாத்துல் அவ்லியா, பாகம் :3, பக்கம் :221

இச் செய்தியில் உமர் பின் இப்ராஹீம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப்பற்றி அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

உமர் பின் இப்ராஹீம் என்பவர் பலவீனமானவர் (நூல் : அல்முக்னீ ஃபீ லுஅஃபா, பாகம் :2, பக்கம் :279)

இவருடைய ஹதீஸ்களுக்கு ஒத்ததாக யாருடைய அறிவிப்பும் இருக்காது. (நூல் : லிஸானுல் மீஸான், பாகம் : 4, பக்கம் :279)

ஜாபிர் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தி:
யார் ஐவேளைத் தொழுகைக்கு பிறகு ஆயத்துல் குர்ஸியை தொடர்ந்து ஓதிவந்தால் மரணத்திற்குரிய வானவர் வந்து அவருடைய உயிரை கைப்பற்றுவதைத் தவிர வேறு எதுவும் அவரை சொர்க்கம் செல்வதை தடுக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : அல்காமில் லி இப்னு அதீ, பாகம் : 3, பக்கம் : 40

இச்செய்தியில் இடம் பெறும் அபூஜுனைத் காலித் பின் ஹுஸைன் என்பவரை இச்செய்தியை பதிவு செய்த இப்னு அதீ அவர்கள் பின்வரு மாறு கூறியுள்ளார்கள்:

இவரை யாஹ்யா பின் மயீன் அவர்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். மேலும் இவருடைய பெரும்பான்மையான செய்திகள் பலவீனமானவர்கள் மூலமாகவும் யாரென அறியப்படாதவர்கள் மூலமாக இடம்பெற்றுள்ளது. நூல்: அல்காமில் பீ லுபாயிர் ரிஜால், பாகம்: 3, பக்கம்: 40

இதே செய்தி காமில் ஃபீ லுபாயிர் ரிஜால் (பாகம் 3 பக்கம் 40) இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் அபூஜுனைத் காலித் பின் ஹுஸைன் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரையும் ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

அறிஞர் யஹ்யா பின் மயீன் அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும். இப்னு அதீ அவர்கள் இவருடைய பெருபான்மையான ஹதீஸ்கள் பலவீன மானவர்கள் மூலமாகவும் யாரென்று அறியப்படாதவர்கள் மூலமாகவும் இடம்பெற்றுள்ளது.
நூல்: அல்காமில் பீ லுபாயிர் ரிஜால், பாகம்: 3, பக்கம்: 40

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தி :
யார் ஆயத்துல் குர்ஸியை ஐவேளைத் தொழுகைக்கு பிறகு ஓதுவாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), நூல் : ஜம்ஹரத்துல் அஜ்ஸாயில் ஹதீஸிய்யா, பாகம் :1, பக்கம் : 20)

இச் செய்தியில் பக்கிய்யா பின் வலீத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை ஹதீஸ்கலை அறிஞர்கள் குறைகூறியுள்ளார்கள்.

அபூமுஸ்ஹிர் அவர்கள் இவரைப் பற்றி இரத்தினச் சுருக்கமாக இவ்வாறு கூறியுள்ளார்கள் : பக்கிய்யா உடைய ஹதீஸ்கள் தூய்மையானவை அல்ல! அவருடை ஹதீஸ்களிலிருந்து நீ தவிர்ந்து கொள் என்று கவிதை நடையில் கூறியுள்ளார்கள். (நூல் : மீஸானுல் இஃதிதால் , பாகம் : 2, பக்கம் :46)

மேலும் இச்செய்தில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளர் ஜஸர் பின் அல்ஹஸன் என்பவரை இமாம் நஸயீ, அல்ஜவ்ஸஜானீ ஆகியோர் பலவீனமானர் என்று கூறியுள்ளார்கள். இவர் எந்த மதிப்பும் இல்லாதவர் என்று இமாம் இப்னு மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : மீஸானுல் இஃதிதால் பாகம் : 2, பக்கம் : 123)

அபூ உமாமா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தி :
அபூ உமாமா (ரலி) அவர்கள் வழியாக தப்ரானி அவர்களின் அல்முஃஜ முல் அவ்ஸத் (பாகம் : 8, பக்கம் : 92) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் போன்று தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் (பாகம்:8, பக்கம் : 114) இடம் பெற்றுள்ளது. இந்நூல்களில் ஹாரூன் பின் தாவூத் அந்நகார் என்பவர் இடம் பெற்றுள்ளளார். அவரின் நம்பகத்தன்மை பற்றி விவரங்கள் கிடைக்க வில்லை.

இதே போன்று முஸ்னதுஸ் ஷாமீன் என்று நூலில் (பாகம் : 2, பக்கம்:9) இடம் பெற்றுள்ளது. இதிலும் ஹாரூன் பின் தாவூத் அந்நக்கார் என்பவரே இடம்பெற்றுள்ளார்.

இதே செய்தி அமலுல் யவ்மி வ லைலா, பாகம் : 1, பக்கம் :237) இடம் பெற்றுள்ளது. இதில் அல்யமான் பின் ஸயீத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர். (மஜ்மவுஸ் ஸாவயித், பாகம் : 3, பக்கம் : 167)

இதே செய்தி அஹ்பார் உஸ்பஹான் என்ற நூலில் (பாகம் :5, பக்கம் : 189) இடம்பெற்றுள்ளது. இதில் இடம் பெறும் ரிழ்வான் பின் ஸயீத் என்ப வரின் நம்பத்தன்மை அறியப்படவில்லை.

தொழுகைக்குப் பின் ஆயதுல் குர்ஸி ஓதுவது சிறப்புக்குரியது என்று வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமாக இருந்தாலும் இமாம் நஸயீ அவர்களுக்குரிய சுனனுல் குப்ராவில் இடம் பெறும் செய்தி ஆதாரப்பூர் வமானதாக உள்ளது.

ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தை தவிர வேறு எதுவும் தடுக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி), நூல் : நூல்: சுனனுல் குப்ரா, பாகம்: 6, பக்கம் 30

சில அறிஞர்கள் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் முஹம் மத் பின் ஹிம்யர் என்பவரைப்பற்றி விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் அது சரியில்லை.

இமாம் அபூஹாதம் அவர்கள் இவருடைய ஹதீஸ்களை எழுதிக் கொள்ளலாம் ஆனால் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும். இமாம் யஃகூப் பின் சுப்யான் அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.

இமாம் அஹ்மத் அவர்கள், இவரிடத்தில் நல்லதை தவிர வேறு எதையும் அறியவில்லை என்றும்.இமாம் இப்னு மயீன் மற்றும் துஹைம் ஆகியோர் இவரை உறுதியானவர் என்றும். இமாம் நஸயீ அவர்கள் இவரிடத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும். இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் இவரை பலமானவர் என்றும். இமாம் தாரகுத்னீ அவர்கள் இவரிடத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும். இப்னுல் கானிஃ என்பவர் இவர் நல்லவர் என்றும். சான்று அளித்துள்ளார்கள்.

நூல்: தஹ்தீப் தஹ்தீப், பாகம்: 9, பக்கம்: 117

பொதுவாக ஒருரைப்பற்றி குறையும் நிறையும் வரும்போது குறை தெளிவாக இருந்தால் குறையைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். கார ணம் பலருக்கு தெரியாத குறை சிலருக்கு தெரிந்திருக்கும் என்ற அடிப்ப டையில்.

அதே நேரத்தில் குறை கூறியவர்கள், காரணத்தை தெளிவு படுத்த வேண்டும். இல்லையெனில் குறையை நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. நிறையையே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படையில் இந்த அறிவிப்பாளரின் மீது விமர்சனம் செய்த அறிஞர்கள் காரணத்தை சமர்ப்பிக்கவில்லை. ஏன் இவர் பலவீனமானவர்?. இவருடைய செய்திகளை ஏன் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ளக்கடாது.? என்ற கேள்விக்கு பதில் அவர்கள் கூறவில்லை. எனவே இந்த அறிஞர்க ளின் விமர்சனத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இவர் புகாரியின் அறிவிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் நதாயிஜுல் அஃப்கார் (பாகம் 2 பக்கம் 279) ல் யஃகூப் பின் சுஃப்யான் அவர்கள் செய்த விமர்சனம் கார ணம் கூறப்படாதது. தெளிவில்லாதது என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் இப்னுல் ஜவ்ஸி இந்த ஹதீஸை மவ்லுஆத் (இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்க ளின் தொகுப்பு) என்ற கிதாபில் சேர்த்ததற்காக ஹாபிழ் லியாவுல் மக்தஸி மற்றும் இப்னு அப்தில் ஹாதி ஆகியோர் கண்டித்துக் கூறியுள்ளார்கள்.

மேலும் இவரை விமர்சனம் செய்யும் அறிஞர்களின் விமர்சனத்தையும். இவரை நல்லவர் என்று சொல்லக்கூடிய அறிஞர்களின் கருத்தையும் எழுதி விட்டு இமாம் தஹபீ அவர்கள் இவருடைய செய்திகள் ஹஸன் தரத்தில் கவனிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்.

நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா (பாகம் 9 பக்கம் 234)

எனவே தொழுகைக்குப்பின்னால் ஆயத்துல் குர்ஸி ஓதுவது சிறப்பிற் குரியதுதான் ஓதலாம். அல்லாஹ் மிகஅறிந்தவன்.

ஆயத்துல் குர்ஸி தொடர்பான மேலும் விபரங்களுக்கு தீன்குலப் பெண்மணி ஜனவரி 2008, மார்ச் 2008, மே 2008 ஆகிய இதழ்களை பார்வையிடுக!

--> Q/A Dheengula Penmani Feb 2010