எச்சரிக்கையூட்டும் நபிமொழி
நபிமொழி-86
குழப்புவது ஷைத்தானின் ஆயுதம்
قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ «إِنَّ عَرْشَ إِبْلِيسَ عَلَى الْبَحْرِ، فَيَبْعَثُ سَرَايَاهُ فَيَفْتِنُونَ النَّاسَ، فَأَعْظَمُهُمْ عِنْدَهُ أَعْظَمُهُمْ فِتْنَةً»
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்லீஸின் சிம்மாசனம் கடலில் மீதுள்ளது. அவன் தன் படைகளை அனுப்பி மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துகிறான். இப்லீஸிடம் மிகவும் மரியாதைச் குரியவன் மக்களிடையே அதிக குழப்பம் செய்பவனே!
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம்-5418
நபிமொழி-87
தீமையின் வெளிப்பாடு
وَالْإِثْمُ مَا حَاكَ فِي صَدْرِكَ، وَكَرِهْتَ أَنْ يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ»
தீமை என்பது உனது உள்ளத்தில் நெருடலை ஏற்படுத்தும் மக்கள் அதை தெரிந்து கொள்வதை நீ வெறுப்பாய்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி)
நூல்: முஸ்லிம்-4992
நபிமொழி-88
சாபத்திற்குரிய இரு செயல்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«اتَّقُوا اللَّعَّانَيْنِ» قَالُوا: وَمَا اللَّعَّانَانِ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ، أَوْ فِي ظِلِّهِمْ»
நபி (ஸல்) “சாபத்திற்குரிய இரண்டை தவிர்த்திடுங்கள்” என்றனர் சாபத்திற்குரியவை என்ன? அல்லாஹ்வின் தூதரே” என மக்கள் கேட்டனர். “மக்களின் நடைபாதையிலோ, நிழல்களிலோ மலம் கழிப்பது” என நபி (ஸல்) அவர்கள் விடை அளித்தனர்
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்-448
நபிமொழி-89
மூன்று நாட்களுக்கு மேல்
பேசாமல் இருக்க அனுமதி இல்லை
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ «لَا يَحِلُّ لِلْمُؤْمِنِ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ»
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் மூன்று நாட்களுக்கு மேல் தன் சகோதரனிடம் பேசாமல் இருக்க அனுமதி இல்லை.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: முஸ்லிம்-5004
நபிமொழி-90
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ «اتَّقُوا الظُّلْمَ، فَإِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ، وَاتَّقُوا الشُّحَّ، فَإِنَّ الشُّحَّ أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ، حَمَلَهُمْ عَلَى أَنْ سَفَكُوا دِمَاءَهُمْ وَاسْتَحَلُّوا مَحَارِمَهُمْ»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அநீதி இழைக்காதீர்கள். மறுமையில் அது பல இருள்களாகக் காட்சி தரும் கஞ்சத்தனம் செய்யாதீர்கள். உங்களுக்கு முன்னிருந்தவர்களை அது அழித்தது; இரத்தங்களைச் சிந்துவதற்கும், இறைவன் அவர்களுக்குத் தடை செய்ததை அவர்கள் ஆகுமாக்கிக் கொண்டதற்கும் தூண்டுகோலாக இருந்தது.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம்-5034
No comments:
Post a Comment