பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, August 30, 2025

மவ்லித் என்பதின் பொருள் என்ன?


மவ்லித் என்பதின் பொருள் என்ன?

மவ்­லிது எனும் அரபிச் சொல்லி­ன் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும். (ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித், பக்கம்: 8)

ஆனால் பிற்காலத்தில் இஸ்லாத்தில் நபியவர்கள் காட்டாத பித்அத்தான, அனாச்சாரமான காரியங்களை உருவாக்கியவர்கள் நபியவர்களை இறைவனுக்கு நிகராக உயர்த்தி கடவுளாக சித்தரித்து படிக்கும் கேடு கெட்ட கவிதைகளுக்கு மவ்­லிது எனப் பெயரிட்டுவிட்டனர். இதற்கும் உண்மை இஸ்லாத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.

சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?

அல்லாஹ் மவ்லூத் ஓதியதாக பொய்யர்கள் கூறுகின்றனர். ஆனால் தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லி­தை எழுதியவர் யார் என்பது தெரியாது. இதோ அவர்களின் நூலிலேயே கூறப்பட்டிருப்பதைப் பாருங்க்.
மகுடமாய்த் திகழும் சுப்ஹான மவ்லி­தை கல்விக் கடல் கஸ்ஸாலி­ இமாம் (ரஹ்) அவர்களோ, அல் இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றி யிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘இயற்றியவர் யார்?’ என்று திட்டவட்டமாக தெரியவில்லை. (ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித், பக்கம்: 5)

மவ்லித் கூடாது என்பதற்கான ஆதாரங்கள் :

இஸ்லாம் என்பது அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் காட்டித் தந்தவைதான். மவ்­லித் என்பது அல்லாஹ்வோ, நபியவர்களோ காட்டித் தந்த ஒன்றல்ல. மார்க்கத்தில் ஒருவன் இணைவைக்காத, தவறில்லாத கவிதைகளை படித்தால் தவறில்லை என்ற அளவிற்குத்தான் மார்க்கம் கவிதைகளை மதிக்கின்றது. ஆனால் மவ்­லித் என்ற அனாச்சாரத்தை உருவாக்கி அதை மார்க்கமாக்கியவர்கள் குர்ஆனில் நபிமார்களைப் பற்றி கூறப்பட்ட வசனங்களையும், நபியவர்களைப் பற்றி இறைவன் புகழ்ந்து கூறும் வசனங்களையும், இணைவைப்பில்லாமல் சில ஸஹாபாக்கள் பாடிய கவிதைகளையும் காட்டி இவர்கள் இட்டுக்கட்டிய மௌ­தை ஓதலாம் என பிரசுரங்களை வெளியிட்டுள்ளனர். கேடுகெட்ட கவிதைகளை (இவர்கள் பாணியில் மவ்­லித்) நபியவர்கள் மிகக் கடுமையாக கண்டித்துள்ளதை மறைத்து விடுகின்றனர்.
ஸஹாபாக்கள் கூறிய கவிதைகள் அவரவர் கூறிய கவிதை தானே தவிர இவர்களைப் போன்று எவனோ உருவாக்கியவற்றை அவர்கள் எழுதிவைத்துப் படிக்கவில்லை.

ஸஹாபாக்கள் போர்க்களங்களிலும், யதார்த்தமான நிலையில் இருக்கும் போது மட்டுமே சில கவிதைகளைக் கூறியுள்ளார்கள். இவர்களைப் போன்று வழிபாடாகச் செய்யவில்லை
ஆனால் இவர்களோ அதற்கென்று நாள் நேரங்களைக் குறித்து, கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து, தோரணங்கள் கட்டி வழிபாடாகச் செய்கின்றனர்.

ஸஹாபாக்கள் கூறும் போது நபியவர்கள் அதிலுள்ள தவறுகளைத் திருத்தியுள்ளார்கள். இவர்கள் எழுதியவற்றை எதையும் நபியவர்கள் திருத்தவில்லை.

திருமணத்திற்கும் விபச்சாரத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளதோ, அது போன்று ஸஹாபாக்கள் கூறிய கவிதைகளுக்கும், முறைகளுக்கும் இவர்கள் பாடும் கவிதைகளுக்கும், முறைகளுக்கும் வித்தியாசங்கள் உள்ளது.
விபச்சாரியோடு செய்வதைத்தானே மனைவியோடும் செய்கின்றான் என்று கூறி விபச்சாரத்தை எப்படி நியாயப் படுத்த முடியாதோ அது போன்றே ஸஹாபாக்கள் பாடிய கவிதைகளைக் காட்டி இவர்கள் ஓதும் மௌ­தை நியாயப் படுத்த முடியாது. அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

மௌலித் யூத கிறிஸ்தவக் கலாச்சாரம்

3456- حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ ، قَالَ : حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ ، عَنْ أَبِي سَعِيدٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ :
لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ.
”உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கüன் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கு என்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ”அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”வேறெவரை?” என்று பதிலüத்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரி 3456

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தது போன்றே இன்று முஸ்­ம்களிடம் பிறந்த நாள் கொண்டாடுதல், இறந்த நாள் அனுஷ்டித்தல் போன்ற காரியங்கள் ஏற்பட்டு விட்டன. உண்மையில் பிறந்த நாள் விழா, இறந்த நினைவு தினம் எல்லாமே யூத, கிறித்தவ கலாச்சாரமாகும். இது இஸ்லாமிய கலாச்சாரம் கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்கு முந்தைய நபிமார்கள், நல்லடியார்கள் யாருக்கும் பிறந்த நாள் விழா எடுத்தது கிடையாது. யாருடைய இறந்த தினத்தையும் அனுசரித்தது கிடையாது. நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு நபித்தோழர்களின் காலத்திலும் இந்தக் கலாச்சாரம் தோன்றவில்லை. சிறந்த தலைமுறையினரான அவர்களிடம் இல்லாத ஒரு புதிய செயலை வணக்கம் என்ற பெயரில் இன்றைக்கு முஸ்­ம்கள் தங்களுக்கு மத்தியில் புகுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது யூத, கிறித்தவ கலாச்சாரமாகும்.

4033 – حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِى مُنِيبٍ الْجُرَشِىِّ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
« مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ».
”பிற சமுதாயக் கலாச்சாரத்திற்கு ஒப்ப நடப்பவன் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவனே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ர­) நூற்கள்: தப்ரானியின் அவ்ஸத், பஸ்ஸார் 

பிற மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸ் மூலமும், இன்னபிற கட்டளைகளின் மூலமும் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். இது போன்ற காரியங்களை ஒரு போதும் செய்யக் கூடாது என்று நபித்தோழர்களைத் தடுத்திருக்கின்றார்கள்.

நபியவர்கள் வெறுத்த மொளலித்

3445- حَدَّثَنَا الْحُمَيْدِيُّ ، حَدَّثَنَا سُفْيَانُ قَالَ : سَمِعْتُ الزُّهْرِيَّ يَقُولُ ، أَخْبَرَنِي عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ سَمِعَ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، يَقُولُ عَلَى الْمِنْبَرِ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ
لاَ تُطْرُونِي كَمَا أَطْرَتِ النَّصَارَى ابْنَ مَرْيَمَ فَإِنَّمَا أَنَا عَبْدُهُ فَقُولُوا عَبْدُ اللهِ وَرَسُولُه.
”கிறித்தவர்கள் மர்யமின் மகன் ஈஸாவை (கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியான் தான். (என்னைப் புகழ்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘அல்லாஹ்வின் தூதர்’ என்றும் கூறுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ர­) நூல்: புகாரி 3445, 6830

ஆனால் இவ்வளவு எச்சரித்த பிறகும் இன்றைய மவ்­து கிதாபுகளில் நபி (ஸல்) அவர்களைக் கடவுளாக்கும் கவிதைகள் ஏராளமாக நிறைந்து காணப்படுகின்றன. நபியவர்களை மனிதர் என்ற நிலையி­ருந்து உயர்த்தி அப்பட்டமாகக் கடவுள் நிலைக்குக் கொண்டு செல்லும் நாசக் கருத்துக்களை இந்த மவ்­துகள் தாங்கி நிற்கின்றன.

1897- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ أَبِي الْحُسَيْنِ اسْمُهُ : الْمَدَنِيُّ ، قَالَ : كُنَّا بِالْمَدِينَةِ يَوْمَ عَاشُورَاءَ ، وَالْجَوَارِي يَضْرِبْنَ بِالدَّفِّ وَيَتَغَنَّيْنَ ، فَدَخَلْنَا عَلَى الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ ، فَذَكَرْنَا ذَلِكَ لَهَا ، فَقَالَتْ :
دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ صَبِيحَةَ عُرْسِي ، وَعِنْدِي جَارِيَتَانِ يَتَغَنَّيَانِ ، وَتَنْدُبَانِ آبَائِي الَّذِينَ قُتِلُوا يَوْمَ بَدْرٍ ، وَتَقُولاَنِ فِيمَا تَقُولاَنِ : وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدِ ، فَقَالَ : أَمَّا هَذَا فَلاَ تَقُولُوهُ ، مَا يَعْلَمُ مَا فِي غَدٍ إِلاَّ اللَّهُ.
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ர­) அவர்கள் அறிவிக்கிறார்கள்: என்னுடைய திருமணத்தின் காலை வேளையிலே நபியவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது எனக்கருகில் இரண்டு சிறுமிகள் பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்களுடைய தந்தைமார்களைப் பற்றி இரங்கற்பாட்டு பாடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பாடும் போது அதில், ”எங்களிலே ஒரு நபியிருக்கின்றார். அவர் நாளை நடப்பதையெல்லாம் அறிவார்” என்று பாடினார்கள். உடனே நபியிவர்கள், ”இவ்வாறு பாடாதீர்கள். நாளை நடப்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.
நூல்: இப்னுமாஜா 1887

இறைவனுக்கு மட்டுமே உரிய ஒரு பண்பை அவனல்லாதவர்களுக்கு இருப்பதாகக் கூறுவது இறைவன் மன்னிக்காத இணை கற்பிக்கும் பாவமாகும். இதன் காரணமாகத் தான் நபியவர்கள் அவ்வாறு பாடிய சிறுமிகளைத் தடுக்கின்றார்கள்.

ஆனால் மௌலிதில் உள்ளதைப் பாருங்கள் :
عَالِمُ سِرٍّ وَأَخْفى مُتْسَجِيْبُ الدَّعَوَاتِ
அகமிய ரகசியம் அறிபவரே, ஆழிய மர்மம் அறிபவரே, அகமுணர்ந் திரங்கும் இறைஞ்சல்களை அன்பாய் ஏற்றுக் கொள்பவரே.
َلسَّلام عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ
நோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்

மௌ­லித் நபியவர்களுக்குத் தேவையில்லை

”இவருக்கு (முஹம்மதுக்கு) கவிதையை நாம் கற்றுத் தரவில்லை. (அது) அவருக்குத் தேவையுமில்லை” (அல்குர்ஆன் 36:69)
என்ற திருமறை வசனத்தின் பிரகாரம், நல்ல கவிதையாக இருந்தால் அதை ஒரு பொழுது போக்கிற்காக ரசிக்கலாமே தவிர அது ஒரு போதும் மார்க்கமாகாது என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

மௌலித் வழிபாடல்ல! வழிகேடே!

நபி (ஸல்) அவர்கள் சொல்லாத, செய்யாத, பிறர் செய்து அதை அங்கீகரிக்காத எந்தக் காரியத்தை வணக்கம் என்ற பெயரில் யார் செய்தாலும் அது வழிபாடு கிடையாது. வணக்கம் கிடையாது. அது அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படாது.

2697- حَدَّثَنَا يَعْقُوبُ ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ ، عَنْ أَبِيهِ ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :
مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப் பட்டதாகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2697

இந்த ஹதீஸின் அடிப்படையில் மவ்­லிது என்ற போலி­ வணக்கம் அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் வணக்கமாகும். பின்வரும் ஹதீஸ் இதை இன்னும் தெளிவாக விளக்கி விடுகின்றது.

4589 – حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَعَبْدُ اللَّهِ بْنُ عَوْنٍ الْهِلاَلِىُّ جَمِيعًا عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ قَالَ ابْنُ الصَّبَّاحِ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ حَدَّثَنَا أَبِى عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
« مَنْ أَحْدَثَ فِى أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ ».
நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்­ம் 3243

மௌலித் ஓதுபவர்கள் வழிகேடர்கள்

وَالشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ الْغَاوٗنَؕ‏

நபி (ஸல்) அவர்களை இறைவனுடைய அந்தஸ்திற்கு உயர்த்தி அவர்களின் மீது புனையப்பட்ட ஒரு புராணம் தான் இந்த மவ்லிது.
கவிஞர்களை வழிகேடர்கள் தான் பின்பற்றுவார்கள் (அல்குர்ஆன் 26:224)

என்ற இறைவனின் கூற்றுக்கேற்ப இந்தக் கவிதை வரிகளின் மூலம் மௌ­த் ஓதும் சமுதாயம் வழிகேட்டில் வீழ்ந்து விட்டது.

மௌலித் ஓதுபவனின் மறுமை நிலை

6585 – وَقَالَ أَحْمَدُ بْنُ شَبِيبِ بْنِ سَعِيدٍ الْحَبَطِيُّ ، حَدَّثَنَا أَبِي عَنْ يُونُسَ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ كَانَ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ :
يَرِدُ عَلَيَّ يَوْمَ الْقِيَامَةِ رَهْطٌ مِنْ أَصْحَابِي فَيُحَلَّؤُونَ ، عَنِ الْحَوْضِ فَأَقُولُ يَا رَبِّ أَصْحَابِي فَيَقُولُ إِنَّكَ لاَ عِلْمَ لَكَ بِمَا أَحْدَثُوا بَعْدَكَ إِنَّهُمُ ارْتَدُّوا عَلَى أَدْبَارِهِمُ الْقَهْقَرَى.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாüல் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் ”இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்” என்பேன். அதற்கு இறைவன் ”உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்று விட்டார்கள்” என்று சொல்வான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6585

மவ்­து ஓதுபவர்கள் தங்களுக்கு நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் கிடைக்கும், ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்தில் தண்ணீர் கிடைக்கும் என்று தான் ஓதுகின்றனர். ஆனால் மேற்கண்ட ஹதீஸின்படி இவர்கள் தடாகத்தை விட்டும் தடுக்கப்பட்டு விடுவார்கள்.

1578- أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللهِ ، قَالَ : أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ ، عَنْ سُفْيَانَ ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ، قَالَ : كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ فِي خُطْبَتِهِ :
يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ ، ثُمَّ يَقُولُ : مَنْ يَهْدِهِ اللَّهُ فَلاَ مُضِلَّ لَهُ ، وَمَنْ يُضْلِلْهُ فَلاَ هَادِيَ لَهُ ، إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللهِ ، وَأَحْسَنَ الْ هَدْيِ هَدْيُ مُحَمَّدٍ ، وَشَرُّ الأُمُورِ مُحْدَثَاتُهَا ، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلاَلَةٌ ، وَكُلُّ ضَلاَلَةٍ فِي النَّارِ ، ثُمَّ يَقُولُ : بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ ، وَكَانَ إِذَا ذَكَرَ السَّاعَةَ احْمَرَّتْ وَجْنَتَاهُ ، وَعَلاَ صَوْتُهُ ، وَاشْتَدَّ غَضَبُهُ كَأَنَّهُ نَذِيرُ جَيْشٍ يَقُولُ : صَبَّحَكُمْ مَسَّاكُمْ ، ثُمَّ قَالَ : مَنْ تَرَكَ مَالاً فَلأَهْلِهِ ، وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا فَإِلَيَّ أَوْ عَلَيَّ ، وَأَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ.
”செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ர­) நூல்: நஸயீ 1560

இதன்படி நரகம் தான். அல்லாஹ் நம்மைக் காப்பானாக! ஆக, மார்க்கத்தில் மீலாது, மவ்­து போன்ற புது வணக்கங்களைச் செய்வோருக்கு நரகமே தண்டனையாகக் கிடைக்கிறது.

நபியைக் கடவுளாக்கும் மௌலித்

وَالَّذِيْنَ اِذَا فَعَلُوْا فَاحِشَةً اَوْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللّٰهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْ وَمَنْ يَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ  وَلَمْ يُصِرُّوْا عَلٰى مَا فَعَلُوْا وَهُمْ يَعْلَمُوْنَ‏

மவ்­துப் பாடல்களில் நபி (ஸல்) அவர்களைக் கடவுளாக்கும் கவிதை வரிகள் இடம் பெறுகின்றன.
இறைவனுக்கு மட்டுமே உரித்தான பண்பு பாவங்களை மன்னிக்கும் ஆற்றலாகும்.
அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். அல்குர்ஆன் 3:135

قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ‌ ؕ اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا‌ ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)
படைத்த ரப்புல் ஆலமீனின் பண்பான இந்த மன்னிக்கும் ஆற்றலை, மவ்­தை இயற்றியவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்து மகிழ்கிறார்கள்.

اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ
பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் !
கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !

اَنْتَ غَفَّارُ الْخَطَايَا وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ
தவறுகளை மன்னிப்பது தாங்களன்றோ,
அழிவேற்படுத்தும் பாவங்களை மன்னிப்பது தாங்களன்றோ

كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ
என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!
சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!
اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ
மெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள் தான்

إِنَّا بِهِ نَسْتَجِيْرُ فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ
நிச்சயமாக நாம் ஒவ்வொரு தண்டனையையும் தடுத்திடும் விஷயத்தில் இவர்களிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறோம்.

இவை அனைத்தும் சுப்ஹான மவ்­தில் இடம் பெறும் கவிதை வரிகள். இது போன்ற ஏராளமான கருத்துக்கள் இந்த மவ்­துகளில் இடம் பெற்றுள்ளன.

முஹம்மத் (ஸல்) அவர்களைக் கடவுளாக்கும் இந்தக் கவிதை வரிகளைப் படிப்பவருக்கு மறுமையில் என்ன நிலை?

 وَاِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِىْ وَاُمِّىَ اِلٰهَيْنِ مِنْ دُوْنِ اللّٰهِ‌ؕ قَالَ سُبْحٰنَكَ مَا يَكُوْنُ لِىْۤ اَنْ اَقُوْلَ مَا لَـيْسَ لِىْ بِحَقٍّ‌ؕؔ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗ‌ؕ تَعْلَمُ مَا فِىْ نَفْسِىْ وَلَاۤ اَعْلَمُ مَا فِىْ نَفْسِكَ‌ؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ‏

مَا قُلْتُ لَهُمْ اِلَّا مَاۤ اَمَرْتَنِىْ بِهٖۤ اَنِ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْ‌ۚ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيْدًا مَّا دُمْتُ فِيْهِمْ‌ۚ فَلَمَّا تَوَفَّيْتَنِىْ كُنْتَ اَنْتَ الرَّقِيْبَ عَلَيْهِمْ‌ؕ وَاَنْتَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ

”மர்யமின் மகன் ஈஸாவே! ‘அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!’ என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?” என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, ”நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்” என்று அவர் பதிலளிப்பார். ”நீ எனக்குக் கட்டளையிட்ட படி ‘எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.” (அல்குர்ஆன் 5:116, 117)
மறுமை விசாரணையின் போது, தம்மைக் கடவுளாக்கியது பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று ஈஸா (அலை) அவர்கள் பதிலளிக்கிறார்கள். இதே பதிலைத் தான் நபி (ஸல்) அவர்களும் கூறுவார்கள் என்று புகாரியில் (3349) இடம் பெற்றுள்ள ஹதீஸ் கூறுகின்றது.
மவ்­துப் பாடல்கள் நபி (ஸல் அவர்களைக் கடவுளாக்குகின்றன. எனவே இந்த மவ்­துகளை ஓதுபவர்களுக்கு நிரந்தர நரகம் தண்டனையாகக் கிடைக்கிறது. எனவே இந்த மவ்­து, மீலாதுகளைக் கொண்டாடலாமா? என்பதை ஒருமுறை நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.
மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் விருப்பு வெறுப்பின்றி சிந்தித்துப் பார்த்து, இனியாவது இந்தக் கொடும் பாவத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

மவ்லிதுகள் புகழ் மாலைகளல்ல, பொய் மாலைகள் தான்

நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் பிறந்ததும் மலக்குகள் கெண்டியில் தண்ணீர், மாணிக்கங்கள், மரகதங்கள், முத்துக்களால் பதிக்கப் பட்ட தட்டுகளையும் தாம்பூலங்களையும் சுமந்து வந்து நபி (ஸல்) அவர்களின் பளிங்கு போன்ற இதயத்தைக் கழுவி தூதுவர் என்று முத்திரையிடுகின்றார்கள்.

இந்நேரத்தில் ரஹ்மான் மலக்குகளை அழைத்து அவரைத் தூக்கிக் கொண்டு, அர்ஷ் மற்றும் விரிவான சுவனபதிகளை சுற்றி வலம் வாருங்கள் என்று சொன்னான். (மௌ­த்)
மேற்கண்டவாறு பல்வேறு பொய்கள் மௌ­தில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு எந்த ஹதீஸிலும் நபியவர்கள் கூறவில்லை

108- حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ ، عَنْ عَبْدِ الْعَزِيزِ قَالَ أَنَسٌ إِنَّهُ لَيَمْنَعُنِي أَنْ أُحَدِّثَكُمْ حَدِيثًا كَثِيرًا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَال
مَنْ تَعَمَّدَ عَلَيَّ كَذِبًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ.
”என் மீது எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டிக் கூறுவானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: அனஸ் (ர­) நூல்: புகாரி 108, 1291)

5 – وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِى حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ حَدَّثَنَا عَلِىُّ بْنُ رَبِيعَةَ قَالَ أَتَيْتُ الْمَسْجِدَ وَالْمُغِيرَةُ أَمِيرُ الْكُوفَةِ قَالَ فَقَالَ الْمُغِيرَةُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ
« إِنَّ كَذِبًا عَلَىَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ فَمَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ».
”என் மீது பொய் சொல்வ தென்பது வேறு யார் மீதும் பொய் சொல்வதைப் போன்றதல்ல. என் மீது வேண்டுமென்று பொய் சொல்பவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் : முகீரா (ரலி) நூல் : முஸ்லிம்

நபியவர்களை இழிவுபடுத்திய மௌலித்

لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا‌ ؕ قَدْ يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا‌ ۚ فَلْيَحْذَرِ الَّذِيْنَ يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏

திருக்குர்ஆனில் நபி (ஸல்) அழைத்துக் கூப்பிடும் ஒழுங்கைப் பற்றிக் கூறுகையில்,
உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள் (அல்குர்ஆன் 24:63)
இந்த வசனம் இறங்கியதற்கான காரணத்தை அப்பாஸ் (ரலீ) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள். ”அரபு மக்கள் ‘யா முஹம்மத், யாஅபல் காசிம்’ என்று கூறிக் கொண்டு இருந்தார்கள். அப்போது தான் நபியவர்களைக் கண்ணியத்தைப் பாதிக்கும் வகையில் அவ்வாறு கூறக் கூடாது என அல்லாஹ் அவர்களைத் தடுக்கிறான்” என கூறுகிறார்கள். (தஃளீம் கத்ரிஸ் ஸலா பாகம் : 1 பக்கம் : 85)
ஆனால் மௌ­தில் யாநபி பாட­ல் ஏழாவது அடியில் ”யாமுஹம்மத்” என்று நபியவர்களின் பெயரைச் சொல்­ மிகவும் விகாரமாகவே மரியாதையில்லாமல் அழைக்கப்படுகிறது. அது போன்ற அஸ்ஸலாமு அலைக்கும் பைத்தில் நபியவர்களை அஹ்மத் என்று பெயர் கூறி அழைத்து இழிவுபடுத்தியுள்ளனர்.

பள்ளிவாசலா? பாடல் அரங்கமா?

وَّاَنَّ الْمَسٰجِدَ لِلّٰهِ فَلَا تَدْعُوْا مَعَ اللّٰهِ اَحَدًا ۙ‏
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! அல்குர்ஆன் 72:18
ஆனால் மேற்கண்ட இறைக்கட்டளையை மீறி இறைவனைப் போன்று நபிகள் நாயகத்தையும் அழைக்கும் மௌ­துகளைப் பாரீர்.
وَاعْطِفْ عَلَىَّ بِعَفْوِ مِنْكَ يَشْمَلُنِيْ فَاِنَّنِيْ عَنْكَ يَا مَوْلاَيَ لَمْ اَحِدِ

என்னெஜமான் ஆனவரே, ஏற்றமிகு நுமைத்தவிர அன்னியரை நிச்சயமாய் அழையேனே! ஆத­னால் மன்னவரே! தங்களுயர் மன்னிக்கும் அரிய பண்பால் என்னிடத்தில் கழிவிரக்கம் என்றென்றும் காட்டிடுவீர்.
بَسَطْتُ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ

என் வறுமை என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்துவிட்டேன். ஆகவே யான் தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத்தன்மையை எதிர்பார்க்கிறேன்.
اِنِّيْ اِذَا مَسَنِّيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ

என்னை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்.
நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்: ”அல்லாஹ்வின் ஏதாவது ஒரு வீட்டில் ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை தங்களுக்குள் பாடம் நடத்தினால் அவர்கள் மீது அமைதி இறங்கும். அவர்களை ரஹ்மத் சூழ்ந்து கொள்ளும். மலக்குமார்கள் அவர்களை போர்த்திக் கொள் வார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் (4867)
அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டிய பள்ளிவாசல்களில் இந்த ஆராதனைப் பாடல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

சாபத்தை பெற்றுத் தரும் மவ்­தும் ஷஃபாஅத்தைப் பெற்றுத் தரும் ஸலவாத்தும்

اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ ؕ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்! (அல்குர்ஆன் 33:56)
இந்த வசனத்தைக் கண்டவுடன் அல்லாஹ்வின் தூதருக்காக ஸலவாத், ஸலாம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகின்றது. இதற்காக நமது சொந்த வார்த்தைகளைக் கொண்டும், மௌ­த் என்ற கேடுகெட்ட வரிகள் மூலமும் புகழ் மாலை தொடுக்கும் போது நிச்சயமாக அது யூத, கிறித்தவர்கள் புகுந்த பாதையில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். பாழாய்ப் போன ஷிர்க் என்னும் பெரும் பாவத்தில் நம்மைப் புதைத்து விடும். மௌ­து பொய்யர்கள் எழுதிய வரிகளை விட நம்முடைய உயிரினும் மேலான நபிகள் நாயகம் கூறிய வரிகளே மேலானது. அதனால் தான் மேற்கண்ட வசனம் இறங்கியவுடன் நபித் தோழர்கள் ஸலவாத் சொல்வது எப்படி என்று நபி (ஸல்) அவர்களிடமே கேட்டு, கற்றுக் கொள்கின்றார்கள்.

4797- حَدَّثَنِي سَعِيدُ بْنُ يَحْيَى ، حَدَّثَنَا أَبِي ، حَدَّثَنَا مِسْعَرٌ ، عَنِ الْحَكَمِ ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ،
قِيلَ يَا رَسُولَ اللهِ أَمَّا السَّلاَمُ عَلَيْكَ فَقَدْ عَرَفْنَاهُ فَكَيْفَ الصَّلاَةُ قَالَ قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ ، وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ ، وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.
நபி (ஸல்) அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று சொல்லுங்கள்” என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி) நூல் : புகாரி 4797

மௌலிதும் சீழ் நிரம்பிய உள்ளமும்

மொளி­தில் கேடுகெட்ட கவிதை வரிகள்தான் நிரம்பிக் கிடக்கின்றன என்பதற்குச் சில சான்றுகளைப் பார்த்தோம். இந்த கேடுகெட்ட கவிதை வரிகள் நிறைந்த உள்ளத்தைப் பற்றி நபியவர்கள் கூறுவதைப் பாருங்கள். :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதரின் வயிற்றில் புரையோடும் அளவுக்குச் சீழ் சலம் நிரம்பியிருப்பது, அது கவிதையால் நிரம்பியிருப்பதை விட மேலானதாகும். (புகாரி 6154)

ஷைத்தானே மௌலிது ஓதுகிறான்

6032 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ الثَّقَفِىُّ حَدَّثَنَا لَيْثٌ عَنِ ابْنِ الْهَادِ عَنْ يُحَنِّسَ مَوْلَى مُصْعَبِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ
بَيْنَا نَحْنُ نَسِيرُ مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- بِالْعَرْجِ إِذْ عَرَضَ شَاعِرٌ يُنْشِدُ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « خُذُوا الشَّيْطَانَ أَوْ أَمْسِكُوا الشَّيْطَانَ لأَنْ يَمْتَلِئَ جَوْفُ رَجُلٍ قَيْحًا خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا ».
அபூசயீத் அல்குத்ரீ (ரரி­) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘அல்அர்ஜ்’ எனுமிடத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று” என்று கூறினார்கள் (முஸ்­ம் 4548)

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

மாநபி (ஸல்) மவ்­தையொட்டி இந்த (அல்ம­க்குல் முழஃப்ஃபர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அ­ய்யிப்னு புக்தகீன்) மன்னர் ஏற்பாடு செய்த விருந்து வைபவத்தில் ஒரு முறை பங்கேற்றவர்களில் ஒருவர் கூறுகிறார். ”அவ்விருந்தில் சமைக்கப் பட்ட ஐயாயிரம் ஆட்டுத் தலைகள், பத்தாயிரம் கோழிகள், ஒரு இலட்சம் வெண்ணெய் பலகாரங்கள் முப்பதாயிரம் ஹல்வா தட்டைகள் இருந்தன. அந்த விருந்தில் ஞானிகள் மற்றும் சூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கெல்லாம் மன்னர், பொன்னாடைகள் போர்த்திக் கவுரவித்தார். மேலும் அன்பளிப்பு களும் வழங்கினார். லுஹர் முதல் சுபுஹ் வரை சூஃபிகளுக்காவே மன்னர் தனியாக ஒரு இசையரங்கம் ஏற்பாடு செய்தார். அதில் பாடப்பட்ட பேரின்பப்பாடல் கேட்டு குதித்துக் களித்த சூஃபிகளுடன் சேர்ந்து மன்னரும் பக்திப் பரவசத்துடன் ஆடினார். ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்ஃபர் மாநபி (ஸல்) மவ்­துக்காகவே செலவிட்டார். (ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்­லித், பக்கம்: 13)

இதி­ருந்தே இந்த மவ்­துகள் தீனிக்காக உருவாக்கப்பட்டவைதான். இதற்கும் மார்க்கத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நபி வழி நடப்போம் புது வழி தவிர்ப்போம்.

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ‌‌ ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْكٰفِرِيْنَ

”நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக! ”அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31,32)

 مَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰى رَسُوْلِهٖ مِنْ اَهْلِ الْقُرٰى فَلِلّٰهِ وَلِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِۙ كَىْ لَا يَكُوْنَ دُوْلَةًۢ بَيْنَ الْاَغْنِيَآءِ مِنْكُمْ‌ ؕ وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا َنَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ ‌ؕ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‌ۘ‏
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதி­ருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 59:7)

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ ؕ وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا‏
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)

   قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ‌ ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ‏
”உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 9:24)

15- حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ : حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ ، عَنْ أَنَسٍ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم (ح) وَحَدَّثَنَا آدَمُ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسٍ قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم :
لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ.
உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை, அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மக்கள் அனைவரையும் விட மிகவும் பிரியத்திற்குரியவராக ஆகும் வரை அவர் உண்மையான ஈமான் கொண்டவராக ஆகமாட்டார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 15

எனவே, நபி(ஸல்) அவர்களை ஒரு சில நாட்கள் மட்டும் எண்ணிப் பார்க்காமல் அவர்களுடைய வாழ்க்கையையும் அவர்களுடைய நற்பண்புகளையும் நம்முடைய வாழ்க்கை நெறியாகப் பின்பற்றி உலகம் முழுமைக்கும் பரப்புவோமாக,, இம்மையிலும் மறுமையிலும் இறைவன் நம்மை நேசித்து அவன் மன்னிப்பைப் பெறுவோமாக!

நபி ஸல் அவர்களின் பிறந்த நாள் எது


நபி ஸல் அவர்களின் பிறந்த நாள் எது - அப்துல் காதிர் ஜீலானீ'யின் கூற்று.! 

பரலேவிய ஸூஃபிய தரீக்காவாதிகள் மத்ஹபு சுன்னத் ஜமாஅத்தினர் - நபி ஸல் அவர்களின் பிறந்த நாள் ரபீவுல் அவ்வல் - 12. என்று கூறி - மீலாது பிறந்த தினவிழா கொண்டாடி வருகின்றனர். 

ஆனால் அவ்லியாக்களின் தலைவர் என்று வழிகேடர்களால் புகழப்பட்டு வரும் - ஸூஃபிய வழிகேடரான அப்துல் காதிர் ஜீலானீ தனது குன்னியத்துத் தாலிபீன் என்ற நூலில் நபி ஸல் அவர்கள் முஹர்ரம் மாதம் பத்தாம் நாளில் பிறந்ததாக கூறியுள்ளார்.  

والعاشرة: ولد نبينا محمد -صلى الله عليه وسلم -فيه .                        நபி ஸல் அவர்கள் முஹர்ரம் மாதம் பத்தாம் நாளில் பிறந்தார்கள் என்று அப்துல் காதிர் ஜீலானீ கூறியுள்ளார்.
 நூல்: குன்னியத்துத் தாலிபீன் -பாகம் -2.பக்கம்.91.  

நபி ஸல் அவர்கள்  முஹர்ரம் 10.நாளில் பிறந்ததாக அப்துல் காதிர் ஜீலானீ கூறுவதும் ஆதாரமற்ற செய்தி ஆகும். * நபி ஸல் அவர்கள் பிறந்த தினம் எது என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் எதுவும் இல்லை.  நபி ஸல் அவர்களின் மீலாது பிறந்த தினவிழா கொண்டாடவும் ஆதாரங்கள் இல்லை. 
 * அப்துல் காதிர் ஜீலானீயின் கூற்றுக்கு சுன்னத் ஜமாஅத் பரலேவிகளின் பதில் என்ன.?

- Yasir Arafat Imthathi
NTF.

மவ்லிதுகள் மார்க்கத்திற்கு முரணானவையே!


*மவ்லிதுகள் மார்க்கத்திற்கு முரணானவையே!*

* ரபீஉல் அவ்வல் வந்து விட்டால் மஹல்லாக்களில் மவலிதுகள் வெகு விமர்சையாக ஓதப்படுகின்றன. 

* நபிகளாரைப் புகழ்வதாகச் சொல்லி மவ்லிது கச்சேரிகள் அரங்கேற்றப்படுகின்றன. 

* மவ்லிது ஓதாதவனெல்லாம் ஒரு இஸ்லாமியனா? என்று ஏளனமாய்ப் பார்க்கும் அளவிற்கு சிலர் மவ்லிது நம்பிக்கைகளில் தட்டழிந்து கிடக்கின்றனர். 

* உண்மையில் மவ்லிதுகள் மார்க்கத்தில் உள்ளவை என்றால் அதை ஒதுவதில் நாம் முன்னோடிகளாக இருந்திருப்போம். 

* அதை ஏகத்துவாதிகளான நாம் ஏன் எதிர்க்கிறோம் என்பதை மக்கள் நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்

*உயர்த்தப்பட்ட மாநபியின் புகழ்...*

* சுப்ஹான மவ்லிதை ஓதினால் தான் மாநபியின் புகழ் உயர்கிறது என மக்களில் சிலர் எண்ணுகின்றனர்.

* மகத்தான இறைவன் மாநபியின் புகழை வேண்டிய அளவு உயர்த்திவிட்டான். 

* உலகத்தில் எவராலும் பெறமுடியாத ஓங்கி உயர்ந்த மங்காத புகழை நபியவர்கள் அடைந்து விட்டார்கள். 

* அகிலத்தின் சொத்தாக அருளப்பட்ட அல்குர்ஆனில் வேண்டிய அளவிற்கு இறைவன் தன் நபியைப் புகழ்ந்து விட்டான்.

☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️

*உமக்காக உமது புகழை நாம் உயர்த்தினோம்.*

`☝️Qur'an 94:4 📖`

*(நபியே) நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.*

`☝️Qur'an 68:4 📖`

*உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்து விட்டார். நீங்கள் துன்பப்படுவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. அவர் உங்கள் (நலன்) மீது ஆவல் கொண்டவர். (அவர்) இறைநம்பிக்கையாளர்கள் விஷயத்தில் கருணையும் அன்பும் கொண்டவர்.*

`☝️Qur'an 9:128 📖`

📖📖📖📖📖📖📖📖📖📖📖📖

*வரம்பு மீறிப் புகழாதீர். வாட்டும் நரகில் வீழாதீர்.*

* நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீரம் மிக்கவர்கள். 

* குணக்குன்று. 

* ஒழுக்கசாலி அசத்தியத்தை அழித்தொழிக்க அரும்பாடுபட்டவர்கள் இவ்வாறெல்லாம் நாம் நமது நபியைப் புகழ்வதில் தவறேதும் இல்லை. 

* ஆனால் சிலர் எழுதி வைத்த குறிப்பிட்ட வரிகளைப் படிப்பதையும் நபிகளாரைப் புகழ்கிறோம் என்ற பெயரில் இறைவனுக்கு இணைகற்பிக்கின்ற அளவு புகழ் மாலைகளை (?) படிப்பதையும்தான் தவறு என்கிறோம். 

* நபிகளாருக்கு பிரச்சினை முந்தைய இருந்துள்ளது. காலங்களிலும் அதை ஒரு `நபியவர்கள் மனிதரை வரம்பு கடந்து புகழும் எச்சரித்துள்ளார்கள். கடுமையாக....`

📜📜📜📜📜📜📜📜📜📜📜📜

_கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈஸாவை (கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியான் தான். அல்லாஹ்வின் அடியான் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்._

`அறிவிப்பவர்: உமர் (ரலி) நூல்: புஹாரி: 3445`

📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

*கவிதைகள் வணக்கமாகுமா?*

* மவ்லிதுகள் என்பவை அரபுக் கவிதைகள் ஆகும். 

* அரபி மொழி தெரிந்த சில கவிஞர்கள் அதை இயற்றியுள்ளனர். 

* அவற்றைத்தான் இவர்கள் வணக்கம் எனக் கருதி ஓதிவருகின்றனர். 

* கவிதை குறித்த இஸ்லாத்தின் பார்வை என்ன என்பதை ஆராய்வோம்.

☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️

*இவருக்கு (முஹம்மதுக்கு) கவிதையை நாம் கற்றுத் தரவில்லை. அது அவருக்குத் தேவையுமில்லை.*

`☝️Qur'an 36:69 📖`

📖📖📖📖📖📖📖📖📖📖📖📖

* நபிகளாருக்கு கவிதை தேவையில்லை என்பதால் இறைவன் கற்றுக் கொடுக்கவில்லை. நபிகளாருக்கே கற்றுக் கொடுக்கப்படாத ஒன்று எவ்வாறு வணக்கமாக இருக்க இயலும் ?என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️

*வழிகேடர்களே கவிஞர்களைப் பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அவர்கள் அலைந்து திரிவதையும் தாம் செய்ததாக)க் கூறுவதையும் நீர் பார்க்கவில்லையா?*

`☝️Qur'an 26: 224-226 📖`

📖📖📖📖📖📖📖📖📖📖📖

* கவிஞர்களிடம் நிறைய பிரச்சினைகள் உண்டு அவர்கள் ஏராளமான பொய்களைப் புனைவர்கள் கவிதைக்கு பொய்யழகு என்பது அவர்களே ஏற்றிக் கொண்ட விஷயம் நானே பொய் மட்டுமல்ல வாண்ணை என்ற பெயரில் வரம்பு மீறுவர்.

* அவர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் வாழ்க்கைக்கு ஒத்து வராது இத்தகைய பிரச்சினைகள் இருப்பதால் தான் இஸ்லாம் கவிதைகளையும் கவிஞர்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

* மார்க்கத்திற்கு அனுமதியைத் தாண்டி கவிதைகளுக்கு இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் அடிப்படையிலேயே முரணில்லாத கவிதைகளை படித்துக் கொள்வது குற்றமில்லை என்கிற மவ்லிதுகள் தவறானவை என்பது இதன் இல்லை. எனவே மூலம் நிரூபணமாகிறது.

*ஒதும் வரிகளும், மோதும் நெறிகளும்:*

* ரபீஉல் அவ்வல் மாதம் ஓதப்படும் சுப்ஹான மவ்லிதில் இறைவனுக்கு இணைகற்பிக்கும் வரிகளும், மார்க்க வரம்புகளுக்கு எதிரான அபத்தங்கள் நிறைந்த ஆபத்தான வரிகளும் அதிகம் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

أنت غفار الخطايا

❌ என் பாவங்களை மன்னிப்பவர் தாங்களன்றோ...

كفروا علي ذنوبي

❌ என் பாவங்களை நன்மைகளாக மாற்றுங்கள்.

يا من تمادي واجترم لب واعترف وارج الكرم

ولد بمن حل الحرم

* ❌ குற்றமும் பாவமும் செய்து விட்டவனே. 

* ❌ மன்னிப்புக் கேள் குற்றத்தை ஒப்புக் கொள், அருனை எதிர்பார். 

* ❌ சரணடைந்து விடு இவை அனைத்தையும் ஹரமில் தங்கியிருப்பவரிடம் கேள் சுப்ஹான மவ்லிது கூறும் கொடி வரிகள் இவை. 

* ❌ இப்போது மாமறை கூறுவதைப் பாருங்கள் அவர்கள் மானக்கேடானதைச் செய்தாலோ...

* ❌ அல்லது தமக்குத் தாமே அநிர்யம் செய்து கொண்டாலோ...

☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️

*அல்லாஹ்வை நினைத்துத் தமது பாவங்களுக்காக மன்னிப்புக் கோருவார்கள். பாவங்களை மன்னிப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யார்? அவர்கள் தெரிந்து கொண்டே தாங்கள் செய்தவற்றில் நிலைத்திருக்க மாட்டார்கள்.*

`☝️Qur'an 3:135 📖`

📖📖📖📖📖📖📖📖📖📖📖📖

* *✅ அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது என இறைவன் தீர்க்கமாகக் கூறியிருக்கும் போது...*

* ❌ நபி (ஸல்) அவர்களும் பாவங்களை மன்னிப்பவர்கள் எனக்கூறுவதையும் அவர்களிடம் பிழை பொறுக்கத் தேடுவதையும் ஏற்க முடியுமா? 

* இந்த நம்பிக்கை ஒருவரின் ஈமானைத் தகர்த்தெறிந்து விடாதா? 

* அடுத்ததாக நோய் நிவாரணம் தருவது நபிகளார் என்ற அபத்தக் கருத்தை சுப்ஹான மவ்லிதில் ஓதுகிறார்கள். 

السلام عليك يا مبري السقام

❌ நோய் நீக்குபவரே. உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்.

الديه برء السقام

❌ நீ நோயாளியாக இருந்தால் அதற்கான நிவாரணம் நபியிடமே உள்ளது.

☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️

*இறைவனால் உற்ற நண்பன் என்று கூறப்பட்ட இப்ராஹீம் நபியவர்களே அல்லாஹ்விடம் தான் நோய் நிவாரணம் தேடியுள்ளனர். நான் நோயுற்றால் அவனே என்னைக் குணப்படுத்துகிறன்*

 `☝️Qur'an 26:80 📖`

📖📖📖📖📖📖📖📖📖📖📖📖

* இந்த வசனத்திற்கு முரணான கருத்தை மேலே நாம் குறிப்பிட்ட மவ்லிது வரிகள் தருகின்றன. 

* *இது போன்ற ஏராளமான அபத்தங்கள் நிறைந்த வரிகள் சுப்ஹான மவ்லிதில் நிரம்பக் காணப்படுகின்றன.* 

* எனவே இத்தகைய *மார்க்க முரண்கள் நிறைந்த மக்களை இணை கற்பிக்கும் பாவத்தில் தள்ளுகிற சுப்ஹான மவ்லிதைப் புறக்கணித்து அல்லாஹ்வும், தூதரும் காட்டிய வழியில் பயணிக்கும் நன்மக்களாக அல்லாஹ் நம் சமூக மக்களை ஆக்கியருள்வானாக.*

Friday, August 29, 2025

வெள்ளிக்கிழமை (ஜூம்ஆ )

வெள்ளிக்கிழமை (ஜூம்ஆ

வெள்ளிக்கிழமையின் சிறப்புகள்முழுவதுமாக படியுங்கள்.......


வெள்ளிக்கிழமையின் சிறப்புகள்
முழுவதுமாக படியுங்கள்.......

ஏக இறைவனின் அருளைப் பெறுங்கள்💖

இன் ஷா அல்லாஹ் ❤️‍🩹

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ

நம்பிக்கை கொண்டோரே! #வெள்ளிக்கிழமையில் #தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! #வியாபாரத்தை_விட்டு_விடுங்கள்! நீங்கள் அறிந்தால் 
இதுவே உங்களுக்கு நல்லது.

தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! 
நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

#திருக்குர்ஆன்  62:9-10

-------------🌹---------------🌹--------------‐--🌹

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். 

அன்று தான் முதல் மனிதர் 
ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்.

அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்.

அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். 

அன்றுதான் மரணித்தார்கள்.

அன்றுதான் யுக முடிவு நிகழும்.

நூல்கள் - முஸ்லிம் : 1547, 1548
                     அஹ்மத் : 10970
                     முஅத்தா : 106, 364

-------------🌹---------------🌹--------------‐--🌹

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

நாமே (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். நாமே சொர்க்கத்தில் முதலில் நுழைவோம். 

எனினும், (யூதர் மற்றும் கிறித்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அவர்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயத்தில் அல்லாஹ் நமக்குச் சத்தியத்திற்கு வழிகாட்டினான். 

இந்த (ஜுமுஆ) நாள் விஷயத்திலும் (அதை வார வழிபாட்டு நாளாக ஏற்பது தொடர்பாக) அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்துத் தந்தான். 

(இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடரக்கூடியவர்களே ஆவர்.) 

இன்று (வெள்ளிக்கிழமை) நமக்குரிய (வழிபாட்டு) நாளாகும். நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரிய நாளாகும். மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்குரிய நாளாகும்.

நூல்கள் - புகாரி : 876, 896,
               முஸ்லிம் : 1549, 1550, 1551

-------------🌹---------------🌹--------------‐--🌹

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை வந்துவிட்டால்  (ஜுமுஆ தொழுகை நடைபெறும்) பள்ளி வாசலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் வானவர்கள் நின்று கொண்டு, முதன்முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்கள் யார், யார் என) எழுதிப் பதிவு செய்துக் கொண்டிருப்பார்கள்.

#முதலில்_வருபவர்
🐪 ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரைப் போன்றும்,

அதற்கடுத்து வருபவர் 
🐂 மாட்டைக் குர்பானி 
கொடுத்தவர் போன்றும், அதன் பிறகு
🐐 ஆடு, பிறகு
🐓 கோழி, பிறகு
🥚 முட்டை ஆகியவற்றைக் குர்பானி கொடுத்தவர் போலவுமாவார்கள். 

இமாம் வந்துவிட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டிவிட்டுச் சொற்பொழிவைக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.' 

நூல்கள் :- புகாரி : 881, 929, 3211
                முஸ்லிம் : 1540 1554, 1555

-------------🌹---------------🌹--------------‐--🌹

இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்.

யார் அலட்சியமாக மூன்று ஜும்ஆவை விட்டுவிட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான். 

நூல் - நஸயீ : 1376

-------------🌹---------------🌹--------------‐--🌹

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். 
நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்!

#திருக்குர்ஆன்  33:56

-------------🌹---------------🌹--------------‐--🌹

உங்களது நாட்களில் 
மிகவும் சிறந்த_நாள் #வெள்ளிக்கிழமையாகும். 

அந்நாளில் தான் 
ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். 

அந்நாளில் தான் அவர்களது 
உயிர் கைப்பற்றப்பட்டது. 

அந்நாளில் தான்
ஸூர் ஊதுதல் நிகழும். 

அந்நாளில் தான் 
#மக்கள்_மூர்ச்சையாகுதல்_நிகழும். 

எனவே அந்நாளில் 
என் மீது #ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் வானவர்கள் மூலமாக என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது” என்று 
நபி ﷺ அவர்கள் கூறினார்கள். 

"அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே!” என்று நபித்தோழர்கள் கேட்ட போது, 

நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்” 
என்று பதிலளித்தார்கள்.

நூல்கள் - அபூதாவூத் : 883
                 இப்னுமாஜா : 1085
                         அஹ்மத் : 16162
                              நஸயி : 1374

-------------🌹---------------🌹--------------‐--🌹

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள். 

என்மீது ஒரு தடவை #ஸலவாத் சொல்கின்றவருக்கு 

அல்லாஹ் 
#பத்து_முறை அருள்புரிகின்றான்.

நூல் - முஸ்லிம் : 628 - 687

அல்லாஹ்வின்தூதரே! தங்களின் மீது நாங்கள் எப்படி 'ஸலவாத்' சொல்ல வேண்டும்?' என்று கேட்டோம். 

நபி ﷺ அவர்கள், 

'அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின், 
வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். 

அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் 
கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்' 

என்று கூறுங்கள் என்றார்கள். 

(பொருள் :- இறைவா! 

இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று 

முஹம்மத் ﷺ அவர்களுக்கும் அவர்கள் தம் குடும்பத்தாருக்கும் கருணை புரிந்திடுவாயாக! 

நீயே புகழுக்குரியவனும் கண்ணியமிக்கவனும் ஆவாய். 

இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தாருக்கு நீ சுபிட்சத்தை வழங்கியதைப் போன்று 

முஹம்மத் ﷺ அவர்களுக்கும் அவர்கள் தம் குடும்பத்தாருக்கும் சுபிட்சம் வழங்கிடுவாயாக! 

நீயே புகழுக்குரியவனும் கண்ணியமிக்கவனும் ஆவாய்.

நூல்கள் - புகாரி : 3369, 4797, 4798, 6265, 6357, 6358, 6360, 

முஸ்லிம் - 677, 682, 683, 686

-------------🌹---------------🌹--------------‐--🌹

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

( #குறிப்பு ) :- நமது ஸலவாத், ஸலாம் நபி ﷺ அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை வைத்துக் கொண்டு 
நபி ﷺ அவர்கள் தற்போதும் உயிருடன் இருக்கின்றார்கள் என்றோ அல்லது இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்றோ விளங்கிக் கொள்ளக் கூடாது. “நிச்சயமாக பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள்” என்று நபி ﷺ அவர்கள் கூறியதாக நஸயீயில் 1265வது ஹதீஸாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

நீங்கள் சொல்லும் ஸலவாத்தை நான் கேட்கின்றேன் என்று 
நபி ﷺ அவர்கள் கூறவில்லை. இதற்கென நியமிக்கப் பட்டிருக்கும் மலக்குகள் மூலம் இது தனக்கு எடுத்துக் காட்டப் படுவதாக 
நபி ﷺ அவர்கள் விளக்கமளிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்பாகும். வேறு யாருக்கும் இது கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.)

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

-------------🌹---------------🌹--------------‐--🌹

இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: 

'உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்' 

நூல் -  புகாரி : 877, 882, 894, 919

இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: 

'ஜும்ஆ நாளில் ஒருவர் குளித்து, இயன்றவரை தூய்மையாகிப் பிறகு எண்ணெய் தேய்த்து நறுமணம் பூசி, (ஜும்ஆவுக்குப்) புறப்பட்டு (அமர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்காமல் அவருக்கு விதிக்கப் பட்டதைத் தொழுது, பிறகு இமாம் வந்ததும் மவுனம் காத்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடைப் பட்ட குற்றங்கள் மன்னிக்கப்படும்.

நூல் - புகாரி : 910

-------------🌹---------------🌹--------------‐--🌹

இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை யார் அங்கத் தூய்மை (உளூ) செய்து, 
அதை செம்மையாகவும் செய்து ஜுமுஆவுக்கு வந்து (இமாமின் உரையை) செவிதாழ்த்தி மௌனமாகக் கேட்கிறாரோ அவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆவரைக்கும் மேற்கொண்டு மூன்று நாட்களுக்கும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (யாவும்) மன்னிக்கப்படுகின்றன.

நூல் - முஸ்லிம் : 1557

-------------🌹---------------🌹--------------‐--🌹

இறைத்தூதர் ﷺ  அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, 
உன் அருகில் இருப்பவரிடம் 
நீ "மௌனமாக இரு" என்று கூறினாலும் 

நீ வீண்பேச்சு பேசியவனாவாய்.

நூல் - முஸ்லிம் : 1541, 1542

-------------🌹---------------🌹--------------‐--🌹

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள். 

யார் இமாம் உரை நிகழ்த்தும்போது தரையில் கிடக்கும் 
சிறு கற்களைத் தொட்டு விளையாடிக்கொண்டிருக்கிறாரோ அவர் வீணான செயலில் ஈடுபட்டுவிட்டார்.

நூல் - முஸ்லிம் : 1557

-------------🌹---------------🌹--------------‐--🌹

ஜும்ஆ நாளில் நபி ﷺ அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். உடனே நபி ﷺ 
அவர்கள் 'நீர் தொழுது வீட்டீரா?' என்று கேட்டார்கள். அதற்கவர் 'இல்லை' என்றார். '(எழுந்து) #இரண்டு_ரக்அத் தொழுவீராக!' என்று கூறினார்கள். 

நூல் - புகாரி : 930, 931

-------------🌹---------------🌹--------------‐--🌹

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஜுமுஆ தொழுத பின் சுன்னத் தொழுவதாக இருந்தால் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழட்டும்!

நூல் - முஸ்லிம் : 1597, 1598, 1599

-------------🌹---------------🌹--------------‐--🌹

ஒருவர் தம் சகோதரரை அவரின் இடத்திலிருந்து கிளப்பிவிட்டு அவ்விடத்தில் உட்கார்வதை 
நபி ﷺ அவர்கள் தடுத்துள்ளனர். 
ஜும்ஆவிலா? என்று நாஃபிவு இடம் தாம் கேட்டபோது, ஜும்ஆவிலும் ஜும்ஆ அல்லாத மற்ற சமயங்களிலும் தான்' என்று நாஃபிவு விடையளித்ததாக இப்னு ஜுரைஜ் குறிப்பிடுகிறார்

நூல் - புகாரி : 911

--------------🌹----------------🌹-------------‐--🌹

இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்.

வெள்ளிக்கிழமையன்று 
ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை' 

அந்த நேரம் மிகவும் குறைவான நேரம் என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள்.

நூல்கள் - புகாரி : 935, 6400
               முஸ்லிம் : 1544, 1545
               அஹ்மத் : 10545

-------------🌹---------------🌹--------------‐--🌹

யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் 'அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்' என்றார். அதற்கு உமர்(ரலி) 'அது எந்த வசனம்?' எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார். 

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

திருக்குர்ஆன்  5:3 (இந்தத் திருவசனம்தான் அது). 

அதற்கு உமர்(ரலி) 'அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி ﷺ அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெருவெளியில் ஒரு #வெள்ளிக்கிழமை தினத்தில் 
நபி ﷺ அவர்கள் நின்று கொண்டிருக்கும்போதுதான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள்' என தாரிக் இப்னு ஷிஹாப்(ரலி) அறிவித்தார். 

நூல் - புகாரி : 45

-------------🌹---------------🌹--------------‐--🌹

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப்போடும். உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள்.

அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், "எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!" என்று கூறுவர். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்" என்று கூறுவர்.

நூல் - முஸ்லிம் : 5448

-------------🌹---------------🌹--------------‐--🌹

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு🍂

Wednesday, August 27, 2025

மக்கா காஃபிர்களும் தமிழக முஸ்லிம்களும் –

மக்கா காஃபிர்களும் தமிழக முஸ்லிம்களும் – ஒரு கொள்கை ஒப்பீடு

லா இலாஹ இல்லல்லாஹ்

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை இதுதான் இஸ்லாத்தின் கொள்கை முழக்க மந்திரமாகும். இதை சமரசமின்றி ஏற்றுக் கொள்பவர்களும், அதன்படி செயலாற்றுபவர்களுமே முஸ்லிம்கள் எனப்படுவர். குர்ஆன் எந்த மக்களை காஃபிர்கள் என்று அழைக்கின்றதோ அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயுள்ள முக்கியக் கொள்கை வேறுபாடே இதை ஏற்றுக் கொள்வதில் தான் உள்ளது.

“அல்லாஹ்வும் ஒரு இறைவன்’ எனும் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லாம் முஸ்லிம்களாகி விட முடியாது. ஏனெனில் “அல்லாஹ்வும் ஒரு இறைவன்’ என்பதில் மக்கா காஃபிர்களுக்கு எந்தச் சந்தேகமும் இருந்ததில்லை. இதில் இன்றைக்கு உள்ள முஸ்லிம்களை விட அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குரிய இறைவன் – வேறு யாரும் வணக்கத்திற்குரிய இறைவன் அல்ல எனும் சித்தாந்தத்தை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களே முஸ்லிம்கள் ஆவர்.

இந்த அளவீட்டின் படி, குர்ஆன் வசன சான்றுகளின் துணை கொண்டு அலசினால் அதற்கான விடை மக்கா காஃபிர்களுக்கும், தமிழக முஸ்லிம் களில் அனேகமானவர்களுக்கும் கொள்கை ரீதியாக எந்த வித்தியாசமும் இல்லை என்பதாகத்தான் உள்ளது. இறைக் கோட்பாடு தொடர்பாக மக்கா காஃபிர்களின் கொள்கை என்னவாக இருந்ததோ அதையே தான் இன்றைக்குப் பெரும்பாலான முஸ்லிம்கள் எனக் கூறிக் கொள்வோர் கொண்டிருக்கின்றனர்.

ஒப்பீடு: 1

வானம் பூமியைப் படைத்தது யார்?

வானம் பூமியைப் படைத்தது யார் என்று இன்றைக்கு உள்ள முஸ்லிம்களிடம் கேட்டால் அல்லாஹ் என்பார்கள். இதையே மக்கா காஃபிர்களும் சொன்னார்கள் என்கிறது திருக்குர்ஆன்.

“வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்‘ என்று அவர்கள் கூறுவார்கள். “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள். 

(அல்குர்ஆன்:31:25.)

“வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று கூறுவார்கள். அப்படியாயின் “எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?”

(அல்குர்ஆன்:29:61.)

“வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்” எனக் கூறுவார்கள். 

(அல்குர்ஆன்:43:9.)

ஒப்பீடு: 2

மழையைத் தருபவன் யார்?

வானிலிருந்து மழையைப் பொழிவித்து, மக்களை இரட்சிப்பவன் யார் என்று கேட்டால் இன்றைக்கு உள்ள முஸ்லிம்களிடம் கூட மாறுபட்ட பதில்கள் வெளிப்படலாம். ஆனால் மக்கா காஃபிர்கள் சந்தேமற அல்லாஹ் தான் மழையைப் பொழிவிக்கிறான் என்று உறுதியாக நம்பினார்கள்.

“வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்‘ என்றே கூறுவார்கள். “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை. 

(அல்குர்ஆன்:29:63.)

மழையை இறக்குபவன் அல்லாஹ் தான் எனும் நம்பிக்கையில் முஸ்லிம்களுக்கு சற்றும் சளைக்காத வர்களாக மக்கா காஃபிர்கள் இருந்துள்ளனர் என்பதை இவ்வசனம் தெளிவாக்குகின்றது.

ஒப்பீடு: 3

மனிதர்களைப் படைத்தவன் யார்?

இந்த வினாவிற்கு மக்கா காஃபிர்கள், இன்றைய முஸ்லிம்கள் ஆகிய இரு சாராரும் அளிக்கும் பதில் அல்லாஹ் என்பது தான். இதோ மக்கா காஃபிர்களிடம் அவர்களைப் படைத்தது யார் என்று வினவினால் அவர்களும் அல்லாஹ் என்பார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப் படுகின்றனர்?

(அல்குர்ஆன்:43:87.)

ஒப்பீடு: 4

பூமி யாருக்குச் சொந்தம்?

வானம், பூமியைப் படைத்தது மட்டுமின்றி அவற்றை நிர்வகிப் பவனும், அதற்கு உரிமை படைத்தோனும் அல்லாஹ்வே என்பதும் மக்கா காஃபிர்களின் நம்பிக்கையாக இருந்தது. இதிலும் இப்போதுள்ள முஸ்லிம்களுடன் ஒன்றுபடவே செய்கின்றனர்.

இதைப் பின்வரும் வசனத்தில் அறியலாம்.

“பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)” என்று (முஹம்மதே!) கேட்பீராக! ‘அல்லாஹ்வுக்கே‘ என்று அவர்கள் கூறுவார்கள். “சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக! 

(அல்குர்ஆன்:23:84, 85.)

ஒப்பீடு: 5

அர்ஷின் அதிபதி யார்?

அர்ஷ் என்றால் என்னவென்று சில முஸ்லிம்களே அறியாத நிலையில் உள்ளனர். ஆனால் அர்ஷின் அதிபதி யார் என்று முஹம்மது நபியவர்கள் மக்கா காஃபிர்களிடம் கேட்டால் அதற்கும் அவர்கள் அல்லாஹ் என்பார்களாம்.

“ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷின் அதிபதி யார்?” எனக் கேட்பீராக! “அல்லாஹ்வே” என்று கூறுவார்கள். “அஞ்ச மாட்டீர்களா?” என்று கேட்பீராக! 

(அல்குர்ஆன்:23:86, 87.)

இவ்வசனத்தின் பிரகாரம் இப்போதுள்ள முஸ்லிம்களை விட சற்றுத் தெளிவு உள்ளவர்களாகவே மக்கா காஃபிர்கள் இருந்துள்ளனர் என்பது புலனாகிறது.

ஒப்பீடு: 6

பெரும் துன்பத்தைப் போக்குபவன் யார்?

மக்கா காஃபிர்களைப் பற்றி திருக்குர்ஆன் கூறும் இந்தத் தகவல் நம்மில் சிலருக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். உலகில் தங்களுக்கு ஏற்படும் பேரிடரை, பெரும் துன்பத்தைப் போக்குபவன் அல்லாஹ் மட்டுமே என்று மக்கா காஃபிர்கள் உறுதியாக நம்பினார்கள். இந்த நம்பிக்கை இன்றுள்ள முஸ்லிம்களிடம் கூட சற்று குறைவாகத் தான் பார்க்க முடிகிறது. கல் தடுக்கி கீழே விழும்போது கூட, “அம்மா’ என்றோ “முஹ்யித்தீனே’ என்றோ அழைப்பவர்கள் நம்மில் அதிகம் உள்ளனர்.

அப்படியிருக்க பெரும் துன்பத்தின் போது மட்டும் இவர்களுக்கு அல்லாஹ்வா ஞாபகத்திற்கு வரப் போகிறான்? இதோ இந்த விஷயத்தில் மக்கா காஃபிர்களின் நம்பிக்கையைப் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடத் தெரிவிக்கின்றான்.

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும்போது உளத் தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை. 

(அல்குர்ஆன்:31:32.)

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணைகற்பிக்கின்றனர்.

(அல்குர்ஆன்:29:65.)

கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் (அவனைப்) புறக்கணிக் கிறீர்கள். மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்.  

(அல்குர்ஆன்:17:67.)

ஒப்பீடு: 7

நம்பிக்கையின் உச்சம்

அல்லாஹ்வை பற்றிய மக்கா காஃபிர்களுடைய நம்பிக்கையின் உச்சமாகப் பின்வரும் வசனத்தைக் குறிப்பிடலாம்.

“பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)” என்று கேட்பீராக! ‘அல்லாஹ்வே‘ என்று கூறுவார்கள். “எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?” என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்:23:88, 89.)

எல்லாவற்றையும் அல்லாஹ்வே பாதுகாக்கிறான்

அல்லாஹ்வுக்கு எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை

அனைத்து பொருளின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே!

இவைகள் யாவும் மக்கா காஃபிர்களின் நம்பிக்கையாக இருந்துள்ளது.

சுப்ஹானல்லாஹ்.

தமிழக முஸ்லிம்களிடம் அல்லாஹ்வைப் பற்றி என்னென்ன நம்பிக்கைகள் உள்ளனவோ அவற்றில் பெரும்பாலானவை மக்கா காஃபிர்களிடம் இருந்துள்ளன. சில விஷயங்களில் இன்றுள்ள முஸ்லிம்களை விட அதிகத் தெளிவு உள்ளவர்களாக அவர்கள் இருந்துள்ளார்கள் என்பது மேற்கண்ட வசனங்களிலிருந்து தெளிவாகிறது. அப்படியிருந்தும் அவர்களை இறைவன் முஸ்லிம்களாக அங்கீகரிக்கவில்லை. காஃபிர்களாகவே அடையாளப்படுத்துகிறான்.

திருக்குர்ஆனின் வழிநெடுக காஃபிர்களே, இறை மறுப்பாளர்களே என்று அல்லாஹ் அழைப்பது இந்த மக்களை நோக்கித் தான். அல்லாஹ்வைப் பற்றி பரவலான, அதிகமான நம்பிக்கைகள் அவர்களுக்கு இருந்தும் தாங்கள் அல்லாஹ்வின் அடிமைகளே என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டும் ஏன் இறைவன் அவர்களை முஸ்லிம் களாக ஏற்றுக் கொள்ளவில்லை?

இது தான் நாம் சிந்திக்க வேண்டிய முக்கியத் தருணமாகும்.

அல்லாஹ்வைப் பற்றிய பெரும் பாலான நம்பிக்கைகள் அவர்களிடம் இருந்தும் அல்லாஹ்வுக்கு இணை உண்டு என அவர்கள் நம்பியது தான் அல்லாஹ் அவர்களை முஸ்லிம்களாக அங்கீகரிக்காததற்கு முக்கியக் காரணமாகும்.

“காஃபிர்களே’ என்று இம்மக்களை நோக்கி அல்லாஹ் அழைப்பதன் பின்னணியிலும் இதுவே உள்ளது.

பரிந்துரையை வேண்டுதல்

அல்லாஹ்வுக்கு இணை உண்டு என்று அவர்கள் நம்பினார்கள்.

சில குட்டித் தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டு அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய வணக்கத்தை அவைகளுக்கு அவர்கள் செலுத்தினார்கள். அவர்களிடம் பரிந்துரையை வேண்டினார்கள். ஆகவே தான் இறைவன் அவர்களை முஸ்லிம்களாக அங்கீகரிக்காமல் காஃபிர்கள் என்கிறான்.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். “அவர்கள் அல்லாஹ்விடம் எங் களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்” என்றும் கூறுகின்றனர். “வானங் களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்:10:18.)

இதே ஒற்றுமை, காரணம் இப்போதுள்ள முஸ்லிம்களிடமும் உள்ளது. இவர்களும் அவ்லியாக்கள் மகான்கள் என்று சிலரை (குட்டித் தெய்வங்கள்) ஏற்படுத்திக் கொண்டு அவர்களை இறைவனுக்கு இணையாக்குகின்றனர். அவர்களிடம் பிரார்த்தனை புரிகிறார்கள்; ஸஜ்தா செய்கின்றனர்; பரிந்துரையை வேண்டுகிறார்கள்.

ஏன் இவர்களை வணங்குகிறீர்கள் என்று கேட்டால், “நாங்கள் இவர்களை வணங்கவில்லை; இவர்கள் அல்லாஹ் விடம் எங்களை நெருக்கி வைப்பார்கள்; அதற்காகத்தான் இந்த வழிபாடு’ என்கிறார்கள். இதே பதிலைத் தான் குட்டித் தெய்வங்களை வழிபட்டு வந்த மக்கா காஃபிர்களும் கூறினார்கள். இதோ திருக்குர்ஆன் கூறுகிறது.

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர் களை ஏற்படுத்திக் கொண்டோர் “அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற் காகவே தவிர இவர்களை வணங்க வில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். 

(அல்குர்ஆன்:39:3.)

ஆக இணைவைப்பிலும் அதை நியாயப்படுத்தக் காரணம் கூறுவதிலும் கூட அப்படியே மக்கா காஃபிர்களை இந்த முஸ்லிம்கள் ஒத்துள்ளனர்.

இடைத்தரகர் ஏற்படுத்தல்

இறைவனை நெருங்க வேண்டு மானால் ஒரு இடைத்தரகர் தேவை என்ற நம்பிக்கை மக்கா காஃபிர்களிடம் இருந்தது. அதனால் தான் அல்லாஹ் அம்மக்களிடம் நான் நெருக்கமாகவே இருக்கிறேன். என்னை நெருங்க எந்த இடைத்தரகரும் தேவையில்லை என்று அறிவிப்புச் செய்கிறான்.

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த் திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என் னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!)

(அல்குர்ஆன்:2:186.)

தர்காவை வழிபடும் முஸ்லிம் களிடமும் மக்கா காஃபிர்களின் இந்த நம்பிக்கை உள்ளது. அல்லாஹ்வை நாம் நேரடியாக நெருங்க முடியாது. அவ்லியாக்கள், மகான்களின் பரிந்துரை தேவை என்று முஸ்லிம்கள் என்று கூறும் இவர்களும் கூறிக் கொண்டிருக்கின்றனர். தர்ஹா வழிபாட்டைக் கூட இறைவனை நெருங்குவதற்காகவே செய்கிறோம் என்று பிதற்றுகின்றனர்.

சிலை வழிபாடு

மக்கா காஃபிர்களிடம் சிலை வழிபாடு இருந்தது. பொய்யான கற்பனைக் கதாபாத்திரங்களை கற்சிலைகளாக வடித்து அவற்றை இணை தெய்வங்களாகக் கருதி வழிபட்டனர். கஃபாவினுள்ளே பல நபிமார் களின் சிலைகளை வைத்து வழிபாடு செய்து கொண்டிருந்தார்கள் என்று ஹதீஸ்களில் பார்க்கிறோம்.

லாத், உஸ்ஸாவைப் பற்றியும் மற்றொரு மூன்றாவதான மனாத் பற்றியும் சிந்தித்தீர்களா?  உங்களுக்கு ஆண்! அவனுக்குப் பெண்ணா? அப்படியானால் இது அநியாயமான பங்கீடு தான். அவை வெறும் பெயர்கள் தவிர வேறு இல்லை. நீங்களும், உங்கள் மூதாதையருமே அந்தப் பெயரைச் சூட்டினீர்கள். இது பற்றி அல்லாஹ் எந்த சான்றையும் அருளவில்லை. ஊகத்தையும், மனோ இச்சைகளையும் தவிர வேறு எதையும் அவர்கள் பின்பற்றவில்லை.

(அல்குர்ஆன்:53:20-23.)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கஅபாவுக்குள் இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவச்சிலைகளைக் கண்டார்கள். அவற்றைத் தம் கைத்தடியால் அப்புறப்படுத்திய பின்பே உள்ளே நுழைந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி-1601, 3352, 4289,

மக்கா காஃபிர்களிடம் இருந்த சிலை வழிபாடும் இப்போதுள்ள முஸ்லிம்களிடம் தன்மை மாறாமல் அப்படியே, நிறையவே உள்ளது.

பல இடங்களில் கற்பனை பாத்திரங்களைச் சொல்லி அவற்றின் பெயரில் அடக்கத்தலங்கள், தர்காக்கள். சில இடங்களில் நல்லடியார்கள், மகான்கள் என்று சொல்லி அவர்களின் பெயரில் பள்ளிவாசலிலேயே சமாதிகள். அவற்றின் மேல் போர்வை கள், பூமாலைகள், சந்தனங்கள், ஊதுபத்திகள், அவற்றுக்கு முன் ஸஜ்தா செய்வது, பிரார்த்தனை புரிவது என மக்கா காஃபிர்களிடம் இருந்த சிலை வழிபாட்டிற்கும் இந்த முஸ்லிம்களிடம் கொஞ்சமும் குறைவில்லை.

கூத்து, கும்மாளம்

வணக்கம் என்ற பெயரில் சீட்டியடிப்பது, கும்மாளமிடுவது என்பன போன்ற காரியங்களில் மக்கா காஃபிர்கள் ஈடுபட்டிருந்தார்கள் என்று குர்ஆன் சொல்கின்றது.

சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) அந்த ஆலயத்தில் அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை. “நீங்கள் (ஏகஇறைவனை) மறுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் வேதனையை அனுபவியுங்கள்!” (என்று கூறப்படும்)

(அல்குர்ஆன்:8:35.)

தர்காவை வழிபடும் முஸ்லிம்களும் வணக்கம் என்ற பெயரில் கூத்தடிக்கின்றனர்; கும்மாளமிடுகின்றனர். இருட்டு திக்ர், ராத்திபு ஜல்ஸாக்களில் இவர்கள் போடும் ஜல்சா ஆட்டம் உலகம் அறிந்த ஒன்றே! வணக்கம் என்கிற பெயரில் அவர்களாவது கைதட்டினர்; சீட்டி எழுப்பினர். இவர்களோ இசைக் கருவிகளை வைத்து இசைக்கின்றனர். இறை நம்பிக்கையில் இவர்களை அவர்கள் மிஞ்சினார்கள். கூத்தடிப்பதில் அவர்களை இவர்கள் மிஞ்சுகிறார்கள். என்னவொரு போட்டா போட்டி?

அல்லாஹ்வின் பெயரைத் திரித்தல்

அல்லாஹ்வின் பெயர்களைத் திரித்துக் கூறும் பாவச் செயலில் மக்கா காஃபிர்கள் ஈடுபட்டார்கள் என்றும் அதற்குரிய தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள் என்றும் அல்லாஹ் தெரிவிக்கின்றான்.

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். 

(அல்குர்ஆன்:7:180.)

இன்றைய முஸ்லிம்கள் அதற்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் போன்று இதிலும் மல்லுக் கட்டிக்கொண்டு ஈடுபடுகின்றனர். அல்லாஹ்வின் அழகான பெயர்களை அநியாயத்திற்கு சிதைத்து சின்னாபின்னாமாக்கும் கண்டனத்திற்குரிய பாவத்தை மக்கா காஃபிர்களைப் போலவே இவர்களும் அரங்கேற்றுகிறார்கள்.

அல்லாஹ் என்பதை ஹூஹூ என்றும் அஹ் அஹ் என்றும் இன்னும் பல பெயர்களை, பலவாறாக திரித்துக் கூறி அதையும் வணக்கம் என்று சொல்லித் திரிகின்றனர். இப்படி இறை நம்பிக்கை, வழிபாடு என எல்லாவற்றிலும் மக்கா காஃபிர் களைப் பிரதிபலிக்கும் இவர்கள் யார்?

அல்லாஹ்வை ஒரே இறைவன் என்று நம்பிக் கொண்டே இத்தகைய காரியங்களில் ஈடுபட்ட அவர்கள் காஃபிர்கள் என்றால்… அதைத் தங்கள் வாழ்வில் அப்படியே ஒத்திருக்கும் இவர்கள் மட்டும் முஸ்லிம்களா?

இவர்களுக்கும் அவர்களுக்கும் ஒரே நம்பிக்கை, ஒரே செயல்பாடு, ஒரே வழிபாடு. ஆனால் அவர்கள் காஃபிர்கள், இவர்கள் முஸ்லிம்கள் என்றால் இது எப்படி நியாயம்? நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஒப்பீடுகளை மீண்டும் ஒருமுறை வாசித்து பாருங்கள்.

இன்னின்ன செயல்பாடுகளைக் கொண்டிருந்த மக்கா வாழ் மக்களை இறைவன் முஸ்லிம்களாக அங்கீகரிக் காமல் காஃபிர்கள் என பகிரங்க அறிவிப்புச் செய்கிறான் எனில் அவர்களது நிலையை ஒத்திருக்கும் முஸ்லிம்களுக்கும் இறைவனின் தீர்ப்பு இப்படித் தான் இருக்கும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறோம்.