பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, August 20, 2020

ஆஷுரா நோன்பை முஹர்ரம் பிறை 9 & 10ல் தான் நோற்க்க வேண்டுமா❓

*ஆஷுரா நோன்பை முஹர்ரம் பிறை 9 & 10ல் தான் நோற்க்க வேண்டுமா❓*

அல்லது

*பிறை 10 & 11வது நாளிலும் நோன்பு நோற்கலாமா❓*

ஆஷுரா நோன்பு எப்போது நோற்க்க வேண்டும் என்பது பற்றி நம்மில் சிலர் பரவலாக முஹர்ரம் பிறை *9 & 10 அல்லது 10 & 11* வது நாளிலும் நோன்பு நோற்கலாம் எனக் கூறுகின்றனர். அதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

*ஆஷூரா நோன்பு வையுங்கள். அதில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர் களுக்கும் மாற்றம் செய்யுங்கள். அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு பிந்திய நாளோ நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்."*

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்: *அஹ்மத் 2047, பைஹகீ* 

இது தொடர்பான அனைத்து அறிவிப்புகளிலும் 
*இப்னு அபீ லைலா* என்பவர் இடம் பெறுகிறார். 

 இவர் *மனன சக்தியில் மிக மோசமானவர்* ஆவார். 

மேலும் இவரை *அறிஞர்கள் பலவீனமானவர்* என்றும் கூறியுள்ளனர். எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

*முஹர்ரம் 9 & 10 வது நாள் நோன்பு நோற்க வேண்டும்* என்று வரக் கூடிய செய்திகள் தான் ஆதாரப் பூர்வமானவை ஆகும்.

எனவே,

முஹர்ரம் 10 & 11வது நாள் *நோன்பு நோற்பது கூடாது, அது நபிவழிக்கு மாற்றமானதாகும்.*

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், *அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?''* என்று வினவினர். 

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், *இன்ஷா அல்லாஹ்  (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில்(சேர்த்து) நோன்பு நோற்போம்''* என்று கூறினார்கள். 

ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.

[நூல் : *முஸ்லிம் 2088*

*அடுத்த ஆண்டுவரை நான் உயிரோடிருந்தால் ஒன்பதாவது நாளில்(சேர்த்து) நோன்பு நோற்பேன்* என்று நபி (ஸல்) அவார்கள் கூறினார்கள்.

நூல் : *முஸ்லிம் 2089*

நபி (ஸல்) அவர்கள், ஒன்பதாவது நாள் நோன்பு நோற்காமல் இறந்து விட்டாலும் அவர்கள் நம்மை நோக்கி ஒன்பதாவது நாளும் சேர்த்து (9&10) நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதால்,

நாம் முஹர்ரம் பிறை ஒன்பது, பத்து ஆகிய இரண்டு நாட்களும் ஆஷுரா நோன்பு நோற்க வேண்டும்.
அது தான் நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த வழிமுறையாகும்!

No comments:

Post a Comment