முகஸ்துதி சிறிய இணைவைப்பாகும்
பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக நல்ல காரியங்களைப் புரிவதும் இணைவைப்பாகும். ஆனால் இது சிறிய இணைவைப்பு என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே இதையும் நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
எனது சமூகத்தார் விசயத்தில் இணைவைப்பை நான் அஞ்சுகிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே உங்களுக்குப் பிறகு உங்கள் கூட்டத்தார்கள் இணைவைப்பார்களா? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம். இவர்கள் சூரியனையோ சந்திரனையோ கல்லையோ சிலையையோ வணங்க மாட்டார்கள். மாறாக (பிறருக்கு) காட்டுவதற்காக நற்காரியங்களைப் புரிவார்கள். (இதுவும் சிறிய இணைவைப்பாகும்) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) .
நூல் : அஹ்மத் (16498)
உங்கள் விசயத்தில் நான் மிகவும் அஞ்சுவது சிறிய இணைவைப்பைத்தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் சிறிய இணைவைப்பு என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அதுதான் முகஸ்துதி. மறுமை நாளில் மக்களுடைய செயல்பாடுகளுக்கு கூகொடுக்கப்படும் போது இந்த உலகத்தில் யாருக்காக நீங்கள் நற்காரியங்களைச் செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். உங்களுக்குக் கூலி அவர்களிடம் உள்ளதா என்று பாருங்கள் என்று சங்கையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் கூறுவான் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் ; மஹ்மூத் பின் லபீத் (ரலி)
நூல் : அஹ்மத் (22523)
No comments:
Post a Comment