பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, August 21, 2025

சோதிடம் குறி பார்த்தல் இணைவைப்பாகும்


சோதிடம் குறி பார்த்தல் இணைவைப்பாகும்

மறைவான ஞானம் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது என்று மேற்கண்ட வசனங்களும் ஹதீஸ்களும் உறுதி செய்கின்றன. இதை விளங்காமல் வருங்காலத்தில் நடக்கவிருப்பதை சோதிடக்காரனும் குறி சொல்பவனும் அறிவான் என்று பலர் நினைக்கிறார்கள். அதனால்தான் அவர்களிடம் சென்று வருங்காலத்தை கணித்துச் சொல்லுமாறு கூறுகிறார்கள். இன்றைக்கு நவீனக் கருவிகள் மூலம் இந்த சோதிடம் பார்க்கப்படுகிறது. எடைபோடும் கருவிகள் நம் எடையைத் தெரிவிப்பதுடன் நமது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் தெரிவிக்கிறது. இதை நம்புவதும் இணைவைப்பாகும்.

நான், அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்திற்கு நெருக்கமானவன். அல்லாஹ் இந்த இஸ்லாமை வழங்கினான். எங்களில் சிலர் சோதிடர்களிடம் செல்கிறார்களே? என்றேன். அதற்கு அவர்கள் சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள் என்றார்கள். நான் எங்களில் இன்னும் சிலர் பறவையை வைத்துக் குறி பார்க்கிறார்களே? என்றேன். அதற்கு நபியவர்கள் இது, மக்கள் தம் உள்ளங்களில் காணும் (ஐதீகம் சார்ந்த) விஷயமாகும். ஆனால், இது அவர்களை அல்லது உங்களை (செயலாற்றுவதிலிருந்து) தடுத்திட வேண்டாம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹகம் (ரலி)

நூல் : முஸ்லிம் (935)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை.

அறிவிப்பவர் ; ஸஃபிய்யா (ரலி)

நூல் : முஸ்லிம் (4488)

No comments:

Post a Comment