பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, March 16, 2011

சில தொழுகைகளில் சப்தமில்லாமல் ஓதுவது??

சில தொழுகைகளில் சப்தமில்லாமல் ஓதுவது??



சில ரக் அத்களில் சப்தமாகவும் சில ரக் அத்களில் சப்தமில்லாமலும் ஓதி இமாம் தொழுவிப்பது ஏன்


ஃபஜர் தொழுகையிலும் மஃக்ரிப் மற்றும் இஷாத் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களிலும் இமாம் சப்தமிட்டு ஓதுவார். லுஹர் அஸர் தொழுகைகளிலும் மஃக்ரிப் தொழுகையின் மூன்றாவது ரக்அத்திலும் இஷாத் தொழுகையின் பிந்திய இரண்டு ரக்அத்களிலும் இமாம் சப்தமின்றி ஓதி தொழ வைப்பார்.

இவ்வாறு சில தொழுகையில் சப்தமிட்டும் சில தொழுகையில் சப்தமின்றியும் ஓதுவதற்கு குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ காரணம் சொல்லப்படவில்லை. பொதுவாக வணக்கம் தொடர்பான காரியங்களில் காரணங்கள் கூற முடியாது. மார்க்கம் நமக்கு கற்றுக் கொடுத்தவாறு அவற்றை அப்படியே செய்வதே நமது கடமை.

சிலர் தங்களுடைய சுய சிந்தனையைப் பயன்படுத்தி இவற்றுக்கு பலவிதமான காரணங்களைக் கூற முயலுகின்றனர். இவர்கள் அளிக்கும் விளக்கம் எதுவும் ஏற்புடையதல்ல.



இந்த வீடியோவையும் பார்க்கவும்
(http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/sabthamakavum_sabthamillamalum_othuthal/)

No comments:

Post a Comment