பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, March 13, 2014

அருகில் மத்ஹப் பள்ளி மட்டுமே இருந்தால்?

அருகில் மத்ஹப் பள்ளி மட்டுமே இருந்தால்?
அருகில் மத்ஹப் பள்ளி மட்டுமே இருந்தால் அங்கே தொழலாமாதொப்பி போடாமல்தொழக்கூடாது என்று போர்டு போடாவிட்டால் அங்கே தொழலாமா?
எந்தப் பள்ளிகளுக்குச் சென்று தொழக் கூடாது என்பதை மார்க்கம்தெளிவுபடுத்தியுள்ளதுஇதற்கு மார்க்கம் கூறும் அளவுகோல் எந்த பள்ளிகளுக்குப்பொருந்துகிறதோ அந்தப் பள்ளிகளுக்குச் சென்று தொழக்கூடாது.
நம்முடைய பகுதியில் மார்க்கம் அங்கீகரித்த பள்ளிவாசல்கள் இருந்தால் அங்கு சென்றுதொழுகையை நிறைவேற்ற முடியும்கடமையான தொழுகையைப் பள்ளியில்நிறைவேற்றுவது இந்தச் சூழ்நிலையில் தான் நம் மீது கடமையாகும்.
நம் பகுதியில் பள்ளிவாசல்கள் எதுவும் இல்லாவிட்டால் அல்லது தொழதடைசெய்யப்பட்ட பள்ளிகள் மட்டும் இருந்தால் இது கடமையான தொழுகையைப்பள்ளியில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலையாகும்இது போன்ற நிலையில்உள்ளவர்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளலாம்.
இவர்கள் பள்ளியில் தொழ வேண்டும் என்று நினைக்கின்றனர்ஆனால் அதற்கானவாய்ப்பு இல்லைஎண்ணத்திற்கு நற்கூலி வழங்கப்படும் என்ற அடிப்படையில்பள்ளியில் தொழுத நன்மை இவர்களுக்குக் கிடைக்கும்.
ஆனால் அனுமதிக்ப்பட்ட பள்ளிவாசல்கள் இல்லை என்பதைக் காரணமாகக்கூறிக்கொண்டு தடைசெய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று விடக்கூடாது.
மார்க்கம் தடைசெய்த காரியத்தைச் செய்து நன்மையைச் சம்பாதிக்க முடியாதுஅப்படிச்செய்தால் அந்தச் செயலுக்கு நன்மை கிடைக்காததோடு மார்க்க வரம்பை மீறிய குற்றம்ஏற்படும்.
ஒருவர் நன்மைகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அடுத்தவருடையசெல்வத்தைத் திருடி தர்மம் செய்தால் இவர் நன்மை செய்தவராக மாட்டார்திருட்டுக்குற்றத்தைச் செய்த பாவியாகி விடுவார்.
எனவே மார்க்க உத்தரவுகளை நம்மால் முடிந்த அளவு நிறைவேற்ற வேண்டும்.மார்க்கம் தடை செய்த விஷயங்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட வேண்டும்.
7288 حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنِي مَالِكٌ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعُونِي مَا تَرَكْتُكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ رواه البخاري
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கூறினார்கள் :
நான் எதை (செய்யுங்கள் என்றோசெய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்)உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்)நீங்களும் விட்டுவிடுங்கள்உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம்அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்கேள்வி கேட்டதும், அவர்களுடன்கருத்து வேறுபாடு கொண்டதும் தான்ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்குநான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள்ஒன்றைச்செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச்செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (லி)
நூல் : புகாரி (7288)
தொழக்கூடாத பள்ளிவாசல் குறித்து அறிந்திட

No comments:

Post a Comment