பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, July 18, 2014

கடலில் இறந்தவர்கள் ***கப்ரு வேதனை உண்டா?

கேள்வி:கடலில் பயணம் செய்யும்போது இறந்தவர்களை அடக்கம் செய்யாமலேயே கடலில் போட்டு விடுகின்றனர்.இவர்களுக்கு கப்ரு வேதனை உண்டா?

பதில்:கடலில் பயணம் செய்து இறந்தவர்கள் மட்டுமல்ல இன்னும் சிலரது விஷயத்திலும் கூட இந்த சந்தேகம் எழுவது இயற்கையே.உடலை எரித்து சாம்பலாக்கி பல பகுதிகளிலும் தூவி விடப்பட்டவர்கள்,மிருகங்களால் அடித்து கொல்லப்பட்டு அவற்றுக்கு உணவாகிப்போனவர்கள் ஆகியோருக்கு கப்ரு வேதனை எவ்வாறு? இவர்களுக்கு கப்ரே கிடையாது எனும்போது கப்ரு வேதனை எவ்வாறு இருக்கும் என கேட்கலாம்.
கப்ருடைய வேதனையைக் குறிப்பிடும்போது அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக்கூறுவது பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டே சொல்லப்படுகிறது.மண்ணுக்கு உள்ளேதான் அந்த வேதனை நடக்கிறது என்று கருதிக்கொள்ளக்கூடாது.இவ்வாறு நாம் கூறுவதற்கு நியாயமான காரரணங்கள் உள்ளன.
முஸ்லிம்களானாலும் காபிர்களானாலும் அவர்கள் அனைவரும் கப்ருடைய வாழ்வை சந்தித்தே தீருவார்கள்.காபிர்களும் கப்ரில் வேதனை செய்யப்படுவார்கள் என்பதை பல ஹதீஸ் கள் கூறுகின்றன.மண்ணுக்குள் அடக்கம் செய்யப்படுபவர்கள் மட்டுமே கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்கள் என்ற நாம் கூறினால் பெரும்பாலான காபிர்கள் அந்த வேதனையிலிருந்து விடுதலை பெறுகிறார்கள்.ஏனெனில் அவர்கள் மண்ணில் புதைக்காமல் எரித்துச் சாம்பலாக்கிவிடுகின்றனர்.காபிர்களுக்கும் கப்ருடைய வேதனை உண்டு என்ற நபிமொழிக்கு முரணாக இது அமைகின்றது.
பாவம் செய்த முஸ்லிம்களை கப்ரில் வேதனை செய்யும் இறைவன் சில காபிர்களுக்கு அத்தகைய வேதனை வழங்கமாட்டான் என்பது இறைவனின் நியதிக்கும் நியாயத்திற்கும் ஏற்புடையதாக இல்லை.
அவர்கள் திரும்ப எழுப்ப்படும்வரை திரைமறைவு(வாழ்க்கை)உண்டு.(அல்குர்ஆன்)என்ற வசனத்தின்படி கப்ருடைய வேதனை என்பது ஒரு திரைமறைவு வாழ்க்கை என்பது புரிகிறது.மண்ணுக்குள்தான் அது நடக்கவேண்டும் என்று அர்த்தமில்லை.
மேலும் ஒரு கப்ரில் ஸாலிஹான நல்லடியார்களும் மிக மோசமான வர்களும் அடுத்தடுத்து அடக்கம் செய்யப்படுகின்றனர்.அடக்கம் செய்த இடத்திற்குள்ளேயே வேதனை நடக்கிறது என்றால் அந்த இடத்தில்தான் நல்லவர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆத்மாக்கள் மரணிக்கம்போதும் மரணிக்காத ஆத்மாக்களை உறக்கத்தின்போதும் அல்லாஹ் கைப்பற்றுகிறான்.யாருக்கு மரணத்தை விதித்துவிட்டானோ அதைத்தன் கைவசம் வைத்துக்கொள்கிறான்(அல்குர்ஆன்)
இந்த வசனத்திலிருந்து இறைவன் தன் கைவசம் அனைத்து உயிர்களையம் வைத்துள்ளான் என்பது தெளிவு.நமது புலனுணர்வுக்கு தென்படாத மற்றொரு உலகத்தில் அந்த ஆத்மாக்களுக்கு அவன் வேதனையோ சுகமோ வழங்குவான் என்று எடுத்துக்கொண்டால் எவருமே கப்ருடைய வாழ்விலிலருந்து தப்பிக்க இயலாது.
கப்ருகளுக்கு நாம் ஸலாம் சொல்வதும்,ஸியாரத்துக்கு செல்வதும்,கப்ரில் வேதனை செய்யப்பட்ட இருவரின் அடக்கத்தலத்திற்கு நபி(ஸல்)அவர்கள் பேரீத்த மட்டையைப் பிளந்து ஊன்றியதும் அந்த இடத்திலேயே வேதனை செய்யப்படுகிறது என்ற கருத்தைத்தருவது உண்மையே.இதை அடிப்படையாக வைத்து மண்ணுக்குள்தான் வேதனை செய்யப்படுகிறது என்று நாம் முடிவுசெய்தால் காபிர்கள் அந்த வேதனையிலிருந்து தப்பிக்கும் நிலை ஏற்படுகின்றது.
யார் மண்ணுக்குள் அடக்கம் செய்யப்படுகிறார்களோ அவர்களின் கப்ருவாழ்க்ககை அடக்கத்தலத்தில் அமையும்.யார் அடக்கம் செய்யப்படாமல் வேறுவகையில் இறுதிப்பயணத்தை அடைகின்றார்களோ அவர்களுக்கு இறைவன் தன் வல்லமையினால் ஒரு உலகை உருவாக்கி அதில் அவர்களின் கப்ருடைய வாழ்க்கையை அமைப்பது அவனுக்கு சிரமமானதல்ல.
அல்லது அனைவருக்குமே மண்ணுலகம் அல்லாத மற்றொரு உலகில் கப்ருடைய வாழ்வை இறைவன் அமைக்கலாம்.அடக்கதலம்தான் அடையாளமாக இருப்பதாலும் மக்கள் புரிந்து கொள்ளவேண்டுமென்பதாலும் அடக்கத்தலத்தில் நபி(ஸல்)அவர்கள் பேரீத்த மட்டைகளை நட்டு வைத்திருக்கலாம்.எப்படி வைத்துக்கொண்டாலும் கப்ருடைய வாழ்விலிருந்து எவரும் விலக்குப்பெற முடியாது என்பதில் சந்தேகமில்லை.
அல்-ஜன்னத் (July 2014) 

No comments:

Post a Comment