பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, July 18, 2014

இரவுத் தொழுகை ஜமாஅத்

கேள்வி : ரமலான் மாத இரவுத் தொழுகையை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மூன்று நாளுக்குப் பின் தொடரவில்லை. அடுத்த (4வது) நாள் இந்த இரவுத் தொழுகை உங்களின் மீது கடமையாக்கப் பட்டு அதனை நிறைவேற்றுவதற்கு நீங்கள் இயலாதவர்களாகி விடுவீர்களோ என நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்கள். இப்படி இருக்க இன்று எல்லா மஸ்ஜிதுகளிலும் இந்த இரவுத் தொழுகை ஜமாஅத்தாக, கடமையாக்கப்பட்டத் தொழுகையாக தொழவைக்கப்படுகிறது. நபி(ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபி மூலம் இது கட்டாய மாக ஆக்கப்பட்டது? இது எப்படி ஒப்புக் கொள்ளப்பட்டது?

பதில் : 
தங்களின் கேள்விக்கான பதிலுக்கு முன்தங்கள் கேள்வியிலுள்ள மிக மோசமான மார்க்கத் துக்கு எதிரான வாசகத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
நபி(ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபி மூலம் இது கட்டாயாமாக ஆக்கப்பட்டது? என்று கேட்டுள்ளீர் கள். நபி முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதர் என்பது தான் முஸ்லிம்கள் அனைவரது நம்பிக்கையுமாகும். ஆகவே தங்கள் கேள்வியின் இப்பகுதி மிகத் தவறானதாகும். இதுபோன்ற வாசகத்தை ஒரு பேச்சுக்காக என்ற விதத்திலும் கூட பயன்படுத்தக் கூடாது!
ரமலான் இரவுத் தொழுகை கடமையானது என்று நம்பப்படுவது போல் உங்களுக்குத் தோன்றினால் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கடமையாக்கப்படாத ஒரு தொழுகை அவர்களுக்குப் பின் எவ்வாறு கடமையான தொழுகையின் நிலையை அடைந்தது? என்று தான் கேட்க வேண்டும்
நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்தது போலவே இன்று வரை முஸ்லிம்கள் ரமலான் இரவுத் தொழுகையை கடமையல்லாத ஆர்வமூட்டப்பட்ட உபரித் தொழுகை என்ற நிலையில் வைத்தே நிறைவேற்றி வருகிறார்கள்.
தாங்கள் குறிப்பிட்டுள்ள புகாரி 924வது ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் இத்தொழுகையை ஜமாஅத்தாக தொழ வைத்ததாக வருகிறது. ஆகவே பள்ளிவாசலில் இத்தொழுகையை ஜமாஅத்தாக தொழுவது நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியே!
அதன் பின், இத்தொழுகை கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தினாலேயே நபி(ஸல்) அவர்கள் மூன்று நாட்களுக்கு பிறகு ஜமாஅத்தாக தொழ வைக்கவில்லை என்று அந்த ஹதீஸிலேயே கூறப் பட்டுள்ளது. நபி(ஸல்) அவர்களுக்குப் பின் அது கடமையாக் கப்படாது எனும் போது தாராளமாக இத்தொழுகையை ஜமாஅத்தாக தொழலாம் என்பது தெளிவாகிறது

No comments:

Post a Comment