பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, July 18, 2014

நபியின் பொருட்டால் துஆ செய்யலாமா?

கேள்வி:ஸஹீஹூல் புஹாரி ஹதீஸ் தொகுப்பில் ஒருஹதீஸ் உள்ளது.அதாவது “யாஅல்லாஹ் உத்தம நபியின் பொருட்டால் வேண்டினோம் எங்களுக்கு மழையை பெய்யச்செய்தாய்.இப்போது நபியின் பெரியதந்தை அப்பாஸ்(ரலி)அவர்களின் பொருட்டால் மழை பெய்யச்செய்வாயாக! என்று கூறுவார்கள் அவ்வாறே அவர்களுக்கு மழை பெய்யும் என்று வருகிறது.ஒருவரின் பொருட்டால் இவ்வாறு துஆ செய்யலாமா?

பதில்:
நீங்கள் குறிப்பிட்ட பொருளில் ஒரு ஹதீஸ் வந்துள்ளது.நபி (ஸல்)அவர்களுடைய காலத்தில் மழைஇல்லாமல் பஞ்சம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்களிடம் மக்கள் முறையிட்டார்கள்.அப்போது நபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடி பிரார்த்தனை செய்தார்கள் மழையும் பெய்தது.நபி(ஸல்)அவர்கள் இறந்தபின்பு உமர்(ரலி)அவர்களுடைய ஆட்ச்சிகாலத்தில் மழை இல்லாத நிலை ஏற்பட்டபோது அன்று மக்களில் சிறந்நவர்களாகக்கருதப்பட்ட அப்பாஸ்(ரலி) அவர்களை அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டினார்கள்அவர்களும் பிரார்த்தனை செய்தார்கள் மழைபெய்தது.
இந்த செய்திகளில் பொருட்டால் என்று வந்திருப்பதன் பொருள் அவர்களின் பிரார்த்தனையால் என்பதாகும்.நபியின் பொருட்டால் என்பது நபியின் பிரார்த்தனையால் மழை பெய்தது என்பதாகும்.அப்பாஸ்(ரலி)அவர்களின் பொருட்டால் என்றால் அப்பாஸ்(ரலி) அவர்களின் பிரார்த்தனையால் என்பதாகும்.அவர்களுடைய அந்தஸ்த்தால்,அவர்களுடைய சிறப்பால் என்ற பொருள் கொடுப்பது கூடாது.நல்லவர்களின் சிறப்பையும் அந்தஸ்த்தையும் கொண்டு அல்லாஹ்விடத்தில் கேட்க்கலாம் என்பவர்களுக்கு இதில் மறுப்பு இருக்கிறது.அவர்களின் சிறப்பின் பொருட்டால் கேட்பதாக இருந்தால் எல்லோரையும் விட சிறப்புக்குரிய முஹம்மது நபி அவர்களுடைய சிறப்பைக்கொண்டுதான் உமர்(ரலி)அவர்கள் கேட்டிருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு செய்யாமல் அப்பாஸ்(ரலி)அவர்களை அல்லாஹ்விடம் துஆ கேட்குமாறு உமர்(ரலி)கேட்டுக்கொண்டார்கள்.அதே நிலையைத்தான் இப்போது நாமும் கடை பிடிக்கவேண்டும்.தண்ணீரில்லாமல் வறட்ச்சி ஏற்படும்போது அந்த நேரத்தில் யார் அந்தநேரத்தில் நல்லமனிதராக அல்லாஹ்வுக்கு விருப்பமானவராக இருக்கிறாரோ அவரை மழை வேண்டித் தொழுகை நடத்தச்சொல்லி அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு கூற வேண்டும்இதுதான் நபி(ஸல்)அவர்கள் காண்பித்த வழி முறையாகும்.

No comments:

Post a Comment