பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, October 28, 2020

மூன்று சிசுக்கள் இறந்துவிட்டால் தாய்க்கு சொர்க்கமா❓*

*மூன்று சிசுக்கள் இறந்துவிட்டால் தாய்க்கு சொர்க்கமா❓*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து, 

*அல்லாஹ்வின் தூதரே! உங்கள் உரைகளை (பெண்கள் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச் சென்று விடுகின்றனர். ஆகவே நாங்கள் தங்களிடம் வந்து, அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்ததிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நிர்ணயித்து விடுங்கள்*!என்று கூறினார். 

நபி (ஸல்) அவர்கள், *இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்று கூடுங்கள்* என்று சொன்னார்கள். அவ்வாறே பெண்கள் ஒன்று திரண்டனர். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்று, அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து போதித்தார்கள். 

பிறகு, *உங்களில் எந்தப் பெண் தனக்கு (மரணம் வரும்) முன்பாக தன் குழந்தைகளில் மூன்று பேரை இழந்து விடுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறி விடுவார்கள்* என்று கூறினார்கள். 

அப்போது அப்பெண்களில் ஒருவர் *அல்லாஹ்வின் தூதரே! இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலும்* என்று கேட்டார். 

இதை அப்பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்க, *ஆம்! இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலும் தான்* என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்: *புகாரி 7310*

புகாரியின் 102 வது அறிவிப்பில் *பருவ வயதை அடையாத குழந்தைகளை..* என்று இடம் பெறுகின்றது. இந்த அறிவிப்புக்கள் ஆதாரப்பூர்வமானவை தான்.

*தான் மரணிப்பதற்கு முன் தனது குழந்தைகளை இழக்கும் பெண்ணுக்கு* என்று தான் மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. எனவே இது பிறந்த சிசுக்களையும் உள்ளடக்கும்.
———————————
*ஏகத்துவம்*

No comments:

Post a Comment