பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, July 31, 2010

திருக்குர்ஆன் கேள்வி - பதில் -- II

திருக்குர்ஆன் கேள்வி - பதில் -- II


கேள்வி : மரம், செடி, கொடிகள் போன்றவை எப்படி இறைவனுக்கு பணிகின்றன?

பதில் : வலப்புறம், இடப்புறம் சாய்ந்து பணிகின்றன. (அல்குர்ஆன் 16:48)

கேள்வி : உடரிலுள்ள மூட்டுகளுக்காக ஒவ்வொரு நாளும் என்ன செய்ய வேண்டும்?

பதில் : தர்மம் செய்ய வேண்டும் (ஆதாரம் : புகாரி 2989)

கேள்வி : மனிதரல்லாதவர்களில் பெருமையடிக்காதவர்கள் யார்?

பதில் : வானவர்கள் (அல்குர்ஆன் 16:49)

கேள்வி : நாட்டுக்கழுதை உண்பதற்கு எப்போது தடைசெய்யப்பட்டது?

பதில் : கைபர் போரின்போது (ஆதாரம் : புகாரி 2991)

கேள்வி : மார்க்கத்தின் சட்டங்களின் அதிகாரம் எல்லா காலங்களிலும் யாருக்குரியது?

பதில் : அல்லாஹ்வுக்கு (அல்குர்ஆன் 16:52)

கேள்வி : நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை என்று எப்போது நபிகளார் கூறினார்கள்?

பதில் : நபித்தோழர்கள் அல்லாஹ்வை சப்தமிட்டு அழைத்தபோது (ஆதாரம் : புகாரி 2992)

கேள்வி : பெண் குழந்தை பிறந்தால் அன்றைய கால மக்கள் எப்படி ஆகி விடுகின்றனர்?

பதில் : முகம் கருத்து, கவலைப்பட்டவர்களாக ஆகி விடுகின்றனர். (அல்குர்ஆன் 16:58)

கேள்வி : எனது (பிரத்தியேக) உதவியாளர் என்று நபிகளார் யாரைக் குறிப்பிட்டார்கள்?

பதில் : ஸுபைர் பின் அவ்வாம் (ரரி) (ஆதாரம் : புகாரி 2997)

கேள்வி : பிறந்த பெண் குழந்தையை என்ன செய்ய துணிந்தனர்?

பதில் : மண்ணில் உயிருடன் புதைக்கத் துணிந்தனர் (அல்குர்ஆன் 16:59)

கேள்வி : இப்னு உமர் (ரரி) அவர்களின் மனைவி பெயர் என்ன?

பதில் : ஸஃபிய்யா பின் அபீ உபைத் (ரரி) (ஆதாரம் : புகாரி 3000)

கேள்வி : தீய பண்பு உள்ளவர்கள் யார்?

பதில் : மறுமையை நம்பாதோர் (அல்குர்ஆன் 16:60)

கேள்வி : பயணம் என்பதை நபிகளார் எப்படி குறிப்பிட்டார்கள்?

பதில் : வேதனையின் ஒரு பங்கு (ஆதாரம் : புகாரி 3001)

கேள்வி : மனிதன் செய்யும் தீயசெயல்களுக்கு உடனுக்குடன் தண்டிக்கப்பட்டால் நிலை என்ன?

பதில் : பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான் (அல்குர்ஆன் 16:61)

கேள்வி : பயணத்தின் வேலை முடிந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

பதில் : உடன் தம் வீட்டாரிடம் திரும்ப வேண்டும் (ஆதாரம் : புகாரி 3001)

கேள்வி : பால் எங்கு உற்பத்தியாகிறது?

பதில் : கால்நடைகளின் வயிறுகளில் உள்ள செறிக்கப்பட்ட உணவுக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் உற்பத்தியாகிறது. (அல்குர்ஆன் 16:66)

கேள்வி : தர்மம் செய்த பொருளை திரும்ப விலைக்கு வாங்கலாமா?

பதில் : கூடாது (ஆதாரம் : புகாரி 3002)

கேள்வி : தேன் எங்கு உற்பத்தியாகிறது?

பதில் : தேனியின் வயிற்றிரிருந்து (அல்குர்ஆன் 16:69)

கேள்வி : நபிகளாரின் விவரங்களை மக்காவிற்கு எடுத்து சென்ற பெண்ணை பிடித்து வருமாறு யாரை நபிகளார் அனுப்பினார்கள்?

பதில் : அலீ (ரரி), மிக்தாத் (ரரி) (ஆதாரம் : புகாரி 3007)

கேள்வி : அல்லாஹ்வுக்கு உதாரணங்கள் கூறலாமா?

பதில் : கூடாது (அல்குர்ஆன் 16:74)

கேள்வி : மக்காவில் கடிதம் கொண்டு சென்றபெண்மணி எந்த இடத்தில் இருப்பதாக நபிகளார் கூறினார்கள்?

பதில் : ரவ்ளத்துக்காக் (ஆதாரம் : புகாரி 3007)

கேள்வி : மறுமை நாள் எவ்வளவு நேரத்தில் வரும்?

பதில் : கண்மூடித் திறப்பதுபோல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். (அல்குர்ஆன் 16:77)

கேள்வி : மக்கா வாசிகளுக்கு கடிதம் கொடுத்த நபித்தோழர் யார்?

பதில் : ஹாத்திப் பின் அபீ பல்தஆ (ரரி). (ஆதாரம் : புகாரி 3007)

கேள்வி : இறைவன் வீடுகளை ஏற்படுத்தியது எதற்கு?

பதில் : நிம்மதியடைவதற்கு. (அல்குர்ஆன் 16:80)

கேள்வி : உளவு சொன்ன ஹாத்திப் பின் அபீ பல்தஆ (ரரி) அவர்களை என்ன செய்வதாக உமர் (ரரி) கூறினார்கள்?

பதில் : அவரின் கழுத்தை வெட்டிவிடுவதாக கூறினார்கள் (ஆதாரம் : புகாரி 3007)

கேள்வி : இறைச் சட்டங்களில் நபியின் கடமை என்ன?

பதில் : தெளிவாக எடுத்துச் சொல்வதே! (அல்குர்ஆன் 16:82)

கேள்வி : ஹாத்திப் பின் அபீபல்தஆ (ரரி) அவர்களுக்கு தண்டனை ஏன் நபிகளார் வழங்கவில்லை?

பதில் : பத்ர் போரில் அவர்கள் கலந்து கொண்டதால் கிடைத்த நன்மையின் காரணமாக (ஆதாரம் : புகாரி 3008)

கேள்வி : வேதனை காணும்போது தண்டனை இலேசக்கப்படுமா?

பதில் : வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள் (அல்குர்ஆன் 16:85)


-->  Dheengula Penmani Jan 2010

திருக்குர்ஆன் கேள்வி பதில்

திருக்குர்ஆன் கேள்வி பதில்


கேள்வி : மறுமை நாளில் கடவுளாக இட்டுக்கட்டி வணங்கியவைகள் என்னவாகும்?

பதில் : அவர்களை விட்டும் மறைந்துவிடும் (அல்குர்ஆன் 16:87)

கேள்வி : கைபர் போரில் யாரிடம் இஸ்லாமிய கொடியை நபிகளார் கொடுத்தார்கள்?

பதில் : அலீ (ரலி) (ஆதாரம் : புகாரி 3009)

கேள்வி : வேதனைக்கு மேல் வேதனை பெறுவோர் யார்?

பதில் : அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர், குழப்பம் செய்தோர். (அல்குர்ஆன் 16:88)

கேள்வி : அல்லாஹ் யாரைப் பார்த்து வியப்படைவான்?

பதில் : சங்கிகளால் பிணைக்கப்பட்டவர்களாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டத்தாரைப் பார்த்து (ஆதாரம் : புகாரி 3010)

கேள்வி : மறுமைநாளில் யாரை எதிரான சாட்சியாக அல்லாஹ் ஆக்குவான்?

பதில் : ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிரான சாட்சியை ஆக்குவான் (அல்குர்ஆன் 16:89)

கேள்வி : அடிமைப் பெண்ணுக்கு அழகிய முறையில் கல்வியும் ஒழுக்கும் கற்பித்து, அவளையே திருமணம் செய்து கொண்டவருக்கு கிடைக்கும் கூலி எவ்வளவு?

பதில் : இரண்டு தடவை கூலி வழங்கப்படும் (ஆதாரம் :புகாரி 3011)

கேள்வி : அல்லாஹ் தடுத்தவை எவை?

பதில் : வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுதல் (அல்குர்ஆன் 16:90)

கேள்வி : போர் களத்தில் யாரைக் கொல்லக்கூடாது?

பதில் : பெண்களையும் குழந்தைகளையும் (ஆதாரம்:புகாரி 3015)

கேள்வி : மோசடி செய்தவற்காக சத்தியம் செய்தால் என்ன ஏற்படும்?

பதில் : உறுதிப்பட்ட பாதம் சறுகிப்போய்விடும் (அல்குர்ஆன் 16:94)

கேள்வி : நெருப்பால் தண்டனை கொடுக்க தகுதியானவன் யார்?

பதில் : அல்லாஹ் மட்டுமே (ஆதாரம் : புகாரி 3016)

கேள்வி : அல்லாஹ்வின் பாதையில் செல்வதை தடுத்தால் என்ன ஏற்படும்?

பதில் : தீங்கும் கடும் தண்டனையும் கிடைக்கும். (அல்குர்ஆன் 16:94)

கேள்வி : பத்ர் போரில் பிடிபட்ட அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபிகளார் யாருடை சட்டை அணிய கொடுத்தார்கள்?

பதில் : நயவஞ்சகனின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை (ஆதாரம் : புகாரி 3008)

கேள்வி : குர்ஆன் ஓதும்போது என்ன செய்ய வேண்டும்?

பதில் : விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும் (அல்குர்ஆன் 16:98)

கேள்வி : ஏமன் நாட்டு கஅபா என்று அழைக்கப்பட்ட ஆலயத்தின் பெயர் என்ன?

பதில் : துல் கலஸா (ஆதாரம் : புகாரி 3020)

கேள்வி : ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் எதிரிகள் என்ன கூறினார்கள்?

பதில் : நபி இட்டுக்கட்டி செல்கிறார் என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 16:101)

கேள்வி : ஏமன் நாட்டு கஅபா என்று அழைக்கப்பட்ட துல்கலஸா ஆலயத்தை உடைத்தவர் யார்?

பதில் : ஜரீர் (ரலி) (ஆதாரம் : புகாரி 3020)

கேள்வி : குர்ஆன் யார் மூலம் இறக்கப்பட்டது?

பதில் : இறைவனிடமிருந்து ரூஹுல் குதுஸ் எனும் (ஜிப்ரீல் மூலம்) (அல்குர்ஆன் 16:102)

கேள்வி : யூதனின் தலைவன் அபூ ராஃபிஉ என்பவனை கொன்றவர் யார்?

பதில் : அப்துல்லாஹ் பின் அதீக் (ரலி) (ஆதாரம் : புகாரி 3023)

கேள்வி : யாருக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்?

பதில் : அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதோருக்கு (அல்குர்ஆன் 16:104)

கேள்வி : போர்களத்தின் ஏற்படும் துன்பங்களை பார்க்கும்போது எப்படி இருக்க வேண்டும்?

பதில் : நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருக்கு வேண்டும். (ஆதாரம் :புகாரி 3026)

கேள்வி : அல்லாஹ்வை நம்பாதோர் என்ன செய்வார்கள்?

பதில் : பொய்யை இட்டுக்கட்டுவார்கள் (அல்குர்ஆன் 16:105)

கேள்வி : கொடியவன் கஅப் பின் அஷ்ரஃபை கொன்றவர் யார்?

பதில் : முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) (ஆதாரம் : புகாரி 3031)

கேள்வி : அல்லாஹ்வின் கோபமும் வேதனையும் யாருக்கு ஏற்படும்?

பதில் : அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் (அல்குர்ஆன் 16:106)

கேள்வி : மார்பில் அதிக முடியுடையவர்களா இருந்தவர்கள் யார்?

பதில் : நபி (ஸல்) அவர்கள் (ஆதாரம் :புகாரி 3034)

கேள்வி : பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் யாருக்கு அணிவித்தான்?

பதில் : பசியும் பயமும் இல்லாமல் இருந்து அல்லாஹ்வை மறந்தவர்களுக்கு (அல்குர்ஆன் 16:112)

கேள்வி : முஆத் (ரலி) அவர்களை எந்த நாட்டு ஆளுநராக நபிகளார் நியமித்தார்கள்?

பதில் : ஏமன் (ஆதாரம் : புகாரி 3038)

கேள்வி : இறைவனை மட்டும் வணங்குவோர் என்ன செய்வார்கள்?

பதில் : அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துவார்கள் (அல்குர்ஆன் 16:114)

--> Q/A Dheengula Penmani Feb 2010

அறிவிப்பாளர்களை விமர்சனம் செய்யும்போது ??

? அறிவிப்பாளர்களை விமர்சனம் செய்யும்போது குறைகளை தெளி வுபடுத்தினால்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளீர் கள். ஆனால் நீங்கள் சில அறிவிப்பாளர்களை பற்றி கூறும்போதும் காரணம் கூறாமல் பலவீனமானது என்று கூறியுள்ளீர்களே?


ஒரு அறிவிப்பாளர் நம்பகமானவராக இருக்க வேண்டுமானால் அவரை நம்பகமானவர் என்று அதற்கு தகுதியானவர் கூற வேண்டும். ஒரு அறிவிப் பாளரைப்பற்றி எந்த விமர்சனமும் இல்லையானால் அவர் அறிவிக்கும் எந்த செய்தியும் ஆதாரமாக கொள்ளக்கூடாது. இதைப் போன்று ஒரு அறி விப்பாளரைப் பற்றி குறையும் நிறையும் இருக்குமானால் அவரைப் பற்றி குறை கூறுபவர்கள் காரணத்தை தெளிவுபடுத்தினால் அந்த காரணம் ஏற் றுக் கொள்ளும் வகையில் இருந்தால் குறைக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரின் செய்திகள் நிராகரிக்கப்படும். நிறை இருக்கும்போது குறை கூறியவர்கள் காரணத்தை தெளிவுபடுத்தவில்லையானால் நிறையை எடுத் துக் கொண்டு அவரின் செய்திகள் ஆதாரமாகக் கொள்ளப்படும்.

இதைப் போன்று ஒரு அறிவிப்பாளரை அனைத்து அறிஞர்களும் குறைமட்டும் கூறியிருந்தால் அந்த குறைக்கு காரணம் கூறவில்லையானா லும் குறையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவரை யாரும் நம்பகமானவர் என்று கூறவில்லை.

நாம் சில அறிவிப்பாளர்களைப் பற்றி எழுதும்போது விரிவஞ்சி சுருக்க மாக சொல்வோம். அப்போது குறைகளை தெளிவுபடுத்தாமல் சுருக்கமாக சொல்லியிருப்போம். சில நேரங்களில் அவரைப்பற்றி அனைவரும் குறை களை கூறியிருக்கும் போதும் காரணம் கூறாமல் சொல்வோம். குறையும் நிறையும் வரும்போது குறைக்குரிய காரணம் சொல்ல வேண்டும் என்று அடிப்படையிலிருந்து நாம் மாறவில்லை. ஒருவரைப் பற்றி குறைமட்டும் இருந்தால் அதற்கு காரணம் கூறத் தேவையில்லை என்பதை கவனத்தில் கொள்க!

--> Q/A Dheengula Penmani Feb 2010

ஆயத்துல் குர்ஸி ஓதினால் வறுமை விலகும் என்பதும்??

ஆயத்துல் குர்ஸி ஓதினால் வறுமை விலகும் என்பதும், 70000 மலக்குகளின் பாதுகாப்பு கிடைக்கும் என்பதும், 40 ஹஜ் செய்த நன்மை கிடைக்கும் என்பதும், 40 படித்தரங்கள் உயர்த்தப்படும் என்பதும் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின் யாரெல்லாம் ஆயதுல்குர்ஸி (குர்ஆன் 2:255) ஓதுகிறாரோ, மரணத்தைத் தவிர அவர் சொர்க்கத்தை அடைவதிலிருந்து தடுப்பது ஏதுமில்லை என்ற நபிமொழியும் ஆதாரப்பூர்மானதா?

யார் முஃமினா இருக்கும் நிலையில் ஆயத்துல் குர்ஸியை ஓதுவாரோ அது அனைத்து தீங்கிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அல்லு அஃபாவுல் உகைலீ, பாகம் : 2, பக்கம் : 324

இச்செய்தில் இடம்பெறும் அப்துர்ரஹ்மான் பின் அபீபக்ர் பின் அபீ மலீக்கா என்பவர் பலவீனமானவராவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஹாமீன் அல் முஃமீன் என்ற அத்தியாயத்தை இலைஹில் மஸீர் வரை காலையில் ஓதுவாரோ மேலும் ஆயத்துல் குர்ஸியையும் காலை நேரத்தில் ஓதுவாரோ அவருக்கு மாலைநேரம் இவ்விரு ஆயத்துகளின் காரணத்தால் பாதுகாப்படுவார். யார் மாலை நேரத்தில் இவ்விரண்டையும் ஓதுவாரோ அவர் காலைவரை இவ்விரு ஆயத்துகளின் காரணத்தால் பாதுகாக்கப்படுவார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி (2804)

இந்த ஹதீஸ் தாரமி (3252) ஷுஅபுல் ஈமான் (பாகம் 2, பக்கம் :483) ஷரஹ் சுன்னா (பாகம்: 2, பக்கம்: 349) ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள் ளது.

இந்த செய்தி பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்கள் (இச் செய்தியில் இடம் பெறும்) அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் அல்முலைக்கி என்பவரை அவரின் நினைவாற்றல் குறைவின் காரணத்தால் ஹதீஸ்கலை அறிஞர்க ளில் சிலர் விமர்சித்துள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இரண்டாவது இதே ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அப்துர் ரஹ் மான் பின் அபீ பக்ர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை இமாம் புகாரி இவர் தகுதியற்றவர் என்றும். இமாம் இப்னு மயீன் அவர்கள், இவர் பலவீ னமானவர் என்றும். இமாம் அஹ்மத் அவர்கள் ஹதீஸ் துறையில் நிராகரிக் கப்பட்டவர் என்றும். இமாம் நஸயீ அவர்கள் கைவிடப்பட்டவர் என்று விமர்சித்துள்ளனர்.
நூல்: மீஸானுல் இஃதிதால்,பாகம்: 4, பக்கம்: 263

யார் குர்பானி அறுக்கும் நாள் (ஹஜ்ஜுப் பெருநாள்) அன்று இரண்டு ரக்அத் தொழுது, ஒவ்வொரு ரக்அத்திலும் ஸுரத்துல் பாத்திஹா பதி னைந்து தடவையும் குல்ஹுவல்லாஹு அஹத் பதினைந்து தடவையும் குல் அவூது பிரப்பில் பலக் பதினைந்து தடவையும் குல் அவூது பிரப்பிந் நாஸ் பதினைந்து தடவையும் ஓதி ஸலாம் கொடுத்த பின்னர் ஆயத்துல் குர்ஸியை மூன்று தடவை ஓதினால் அல்லாஹ் பதினைந்து தடவை மன் னிப்பு வழங்குவான். அவருடை பெயரை சொர்க்கவாதிகளில் ஆக்குவான். வெளிப்படையான அந்தரங்கமான பாவங்களை மன்னிப்பான். அவர் ஓதி ஒவ்வொரு ஆயத்துக்கு ஹஜ், உம்ரா செய்த நன்மையை பதிவு செய்வான், இஸ்மாயீல் (அலை) அவர்களின் குழந்தைகளில் அறுபது நபர்களை விடு தலை செய்தவர்களைப் போன்று ஆக்குவான். மேலும் அவர் இதை செய் ததிலிருந்து அடுத்த ஜுமுஆக்கிடையில் இறந்தால் அவர் ஷஹீதாக மர ணித்தவராக கணிக்கப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி), நூல் : அல்மவ்லூஆத் - இப்னுல் ஜவ்ஸி, பாகம் : 2, பக்கம் : 134

இச்செய்தியில் அஹ்மத் பின் முஹம்மத் பின் காலிப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நபிமொழிகளை இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர். எனவே இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது.

கடமையான தொழுகைக்கு பிறகு ஆயத்துல் குர்ஸி ஓதினால் அவர் சொர்க்கம் செல்வார் என்ற கருத்தில் அலீ (ரலி), ஜாபிர் (ரலி), முஃகீரா பின் ஷுஃபா (ரலி), அபூ உமாமா (ரலி) ஆகியோர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ்களின் தரங்களைப் பற்றி ஆய்வு செய்வோம்.

அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி :

ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தை தவிர வேறு எதுவும் தடுக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி), நூல் : ஷுஅபுல் ஈமான்-பைஹகீ, பாகம் : பக்கம் : 2, பக்கம் : 458

இச்செய்தியில் நஹ்ஷல் பின் ஸயீத் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பொய்யர் என்று குற்றம் சாட்டப்பட்டவர்.

இமாம் அபூதாவூத், இஸ்ஹாக் பின் ராஹவைஹி ஆகியோர் இவர் பொய்யர் என்றும் இப்னு மயீன் இவர் நம்பகமானவர் இல்லை என்றும். இமாம் அபூஸர்ஆ, தாரகுத்னீ ஆகியோர் இவர் பலவீனமானவர் என்றும். இமாம் அபூஹாத்திம் அவர்கள் இவர் பலம்வாய்ந்தவர் இல்லை என்றும் ஹதீஸ்துறையில் கைவிடப்பட்டவர் என்றும் கூறியுள்ளார்கள். இமாம் நஸயீ அவர்கள் இவர் ஹதீஸ்துறையில் கைவிடப்பட்டவர் என்றும். இப்னு ஹிப்பான் அவர்கள் இவர் நம்பகமானவர்கள் அறிவிக்காத ஹதீஸ்களை அவர்கள் அறிவித்ததாக கூறுபவர், இவருடைய செய்திகளை ஆச்சரிய மான செய்திகள் என்பதற்காகவே தவிர ஹதீஸ் நூல்களில் எழுதுக் கூடாது என்றும். இவர் லஹ்ஹாக் மூலம் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறி விப்பவர் என்று நுக்காஸ் அவர்களும் கூறியுள்ளனர். நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 10, பக்கம்: 427

மேலும் இச்செய்தியை பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களும் அந்த செய்தியின் இறுதியில் இதன் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இதைப் போன்று ஸஹீஹ் இப்னு ஹிப்பானில் (பாகம் :2, பக்கம் : 76) இடம் பெற்றுள்ளது. இதில் இடம்பெறும் ஹஃப்ஸ் பின் உமர் அர்ரிகாஷி என்பவர் யாரென அறியப்படாதவர்.

பாத்திஹா அத்தியாயமும் ஆயத்துல் குர்ஸியும் ஆலு இம்ரானில் ஷஹி தல்லாஹு அன்னஹு லாயிலாஹா இல்லா ஹுவ என்ற ஆயத்தும் குலில்லாஹும்ம மாலிகுல் முல்கி என்ற ஆயத்தும் (அர்ஷின் கீழ்) தொங்க விடப்பட்டவைகளாகும். அல்லாஹ்வுக்கும் அதற்கும் மத்தியில் எந்த தடை யும் இல்லை. அல்லாஹ் இவைகளை பூமியில் இறக்குவதற்கு நாடிய போது அவை களை அர்ஷோடு தொங்கி கொண்டு, இறைவா! நீ எங்களை பூமியின் பக்கமும் உனக்கு மாறு செய்பவர்களின் பக்கமும் அனுப்புகிறாயே என்று கேட்டது. என்மீது சத்தியமிட்டு கூறுகிறேன்: என்னுடைய அடியார்களில் யார், ஒவ்வொரு தொழுகைக்குப்பின்னும் அதை ஓதுவாரோ அவருக்கு சொர்க்கத்தை அவர் தங்குமிடமாக நான் ஆக்குவேன். அல்லது பரிசுத்த மான இடத்தில் தங்க வைப்பேன். அல்லது மறைத்துவைக்கப்பட்ட தன் கண்களால் ஒவ்வொரு நாளும் எழுபது தடவை அவரைப் பார்ப்பேன். அல்லது ஒவ்வொரு நாளும் எழுபது தேவைகளை பூர்த்தி செய்வேன். அல்லது ஒவ்வொரு விரோதிகளிடமிருந்தும் நான் பாதுகாப்பு அளிப்பேன். அவர்களிடமிருந்து உதவிபுரிவேன். அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தைத் தவிர வேறு எதுவும் தடுக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி), நூல்: அமலுல் யவ்மி வல் லைலா, பாகம்: 1, பக்கம்: 238

இந்த செய்தியில் இடம் பெறும் அபூ ஜஅஃபர் பின் பக்ர் என்பவர் பற்றி குறிப்புகள் நாம் பார்த்தவரை கிடைக்கவில்லை. இதில் இடம் பெறும் முஹம்மத் பின் ஸன்பூர் என்பவரைப் பற்றி குறையும் நிறையும் கூறப்பட் டுள்ளது. குறிப்பாக இவர் அல்ஹாரிஸ் பின் உமைர் வழியாக அடிப்படை யில்லாத மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவித்துள்ளார் என்று மஸ்லமா அவர்கள் கூறிப்பிட்டுள்ளார்கள். இந்த செய்தி அல்ஹாரிஸ் பின் உமைர் வழியாகவே முஹம்மத் பின் ஸன்பூர் என்பவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இடம் பெறும் அல்ஹாரிஸ் பின் உமைர் என்பவரை பலர் நம்பக மானவர் என்று கூறிப்பிட்டிருந்தாலும் இவரின் இந்த செய்தியை குறிப் பிட்டு எழுதும் இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் இவர் நம்பகமானவர் கள் பெயரை பயன்படுத்தி இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பவர் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கள். மேலும் இந்த செய்தி குறிப்பிட்டு இது அடிப்படையில்லாத இட்டுக்கப்பட்ட செய்தி என்று விமர்சனம் செய்துள்ளார்கள். (நூல் : அல்மஜ்ரூஹீன், பாகம்: 1, பக்கம் : 223)

இதே கருத்தில் சில வாசகங்கள் மாற்றத்துடன் லஆலில் மஸ்னூஆ என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இதுவும் தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்.

இது தொடர்பு அறுந்த செய்தியாகும் என்று இப்னு அதீ அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : அல்காமில் லி இப்னி அதீ, பாகம் : 7, பக்கம் : 90)

முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் மூலம் அறிவிப்பட்ட செய்தி :
ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தை தவிர வேறு எதுவும் தடுக்காது. அவர் மரணித்துவிட்டால் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முகீரா (ரலி), நூல் : ஹில்யாத்துல் அவ்லியா, பாகம் :3, பக்கம் :221

இச் செய்தியில் உமர் பின் இப்ராஹீம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப்பற்றி அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

உமர் பின் இப்ராஹீம் என்பவர் பலவீனமானவர் (நூல் : அல்முக்னீ ஃபீ லுஅஃபா, பாகம் :2, பக்கம் :279)

இவருடைய ஹதீஸ்களுக்கு ஒத்ததாக யாருடைய அறிவிப்பும் இருக்காது. (நூல் : லிஸானுல் மீஸான், பாகம் : 4, பக்கம் :279)

ஜாபிர் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தி:
யார் ஐவேளைத் தொழுகைக்கு பிறகு ஆயத்துல் குர்ஸியை தொடர்ந்து ஓதிவந்தால் மரணத்திற்குரிய வானவர் வந்து அவருடைய உயிரை கைப்பற்றுவதைத் தவிர வேறு எதுவும் அவரை சொர்க்கம் செல்வதை தடுக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : அல்காமில் லி இப்னு அதீ, பாகம் : 3, பக்கம் : 40

இச்செய்தியில் இடம் பெறும் அபூஜுனைத் காலித் பின் ஹுஸைன் என்பவரை இச்செய்தியை பதிவு செய்த இப்னு அதீ அவர்கள் பின்வரு மாறு கூறியுள்ளார்கள்:

இவரை யாஹ்யா பின் மயீன் அவர்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். மேலும் இவருடைய பெரும்பான்மையான செய்திகள் பலவீனமானவர்கள் மூலமாகவும் யாரென அறியப்படாதவர்கள் மூலமாக இடம்பெற்றுள்ளது. நூல்: அல்காமில் பீ லுபாயிர் ரிஜால், பாகம்: 3, பக்கம்: 40

இதே செய்தி காமில் ஃபீ லுபாயிர் ரிஜால் (பாகம் 3 பக்கம் 40) இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் அபூஜுனைத் காலித் பின் ஹுஸைன் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரையும் ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

அறிஞர் யஹ்யா பின் மயீன் அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும். இப்னு அதீ அவர்கள் இவருடைய பெருபான்மையான ஹதீஸ்கள் பலவீன மானவர்கள் மூலமாகவும் யாரென்று அறியப்படாதவர்கள் மூலமாகவும் இடம்பெற்றுள்ளது.
நூல்: அல்காமில் பீ லுபாயிர் ரிஜால், பாகம்: 3, பக்கம்: 40

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தி :
யார் ஆயத்துல் குர்ஸியை ஐவேளைத் தொழுகைக்கு பிறகு ஓதுவாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), நூல் : ஜம்ஹரத்துல் அஜ்ஸாயில் ஹதீஸிய்யா, பாகம் :1, பக்கம் : 20)

இச் செய்தியில் பக்கிய்யா பின் வலீத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை ஹதீஸ்கலை அறிஞர்கள் குறைகூறியுள்ளார்கள்.

அபூமுஸ்ஹிர் அவர்கள் இவரைப் பற்றி இரத்தினச் சுருக்கமாக இவ்வாறு கூறியுள்ளார்கள் : பக்கிய்யா உடைய ஹதீஸ்கள் தூய்மையானவை அல்ல! அவருடை ஹதீஸ்களிலிருந்து நீ தவிர்ந்து கொள் என்று கவிதை நடையில் கூறியுள்ளார்கள். (நூல் : மீஸானுல் இஃதிதால் , பாகம் : 2, பக்கம் :46)

மேலும் இச்செய்தில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளர் ஜஸர் பின் அல்ஹஸன் என்பவரை இமாம் நஸயீ, அல்ஜவ்ஸஜானீ ஆகியோர் பலவீனமானர் என்று கூறியுள்ளார்கள். இவர் எந்த மதிப்பும் இல்லாதவர் என்று இமாம் இப்னு மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : மீஸானுல் இஃதிதால் பாகம் : 2, பக்கம் : 123)

அபூ உமாமா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தி :
அபூ உமாமா (ரலி) அவர்கள் வழியாக தப்ரானி அவர்களின் அல்முஃஜ முல் அவ்ஸத் (பாகம் : 8, பக்கம் : 92) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் போன்று தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் (பாகம்:8, பக்கம் : 114) இடம் பெற்றுள்ளது. இந்நூல்களில் ஹாரூன் பின் தாவூத் அந்நகார் என்பவர் இடம் பெற்றுள்ளளார். அவரின் நம்பகத்தன்மை பற்றி விவரங்கள் கிடைக்க வில்லை.

இதே போன்று முஸ்னதுஸ் ஷாமீன் என்று நூலில் (பாகம் : 2, பக்கம்:9) இடம் பெற்றுள்ளது. இதிலும் ஹாரூன் பின் தாவூத் அந்நக்கார் என்பவரே இடம்பெற்றுள்ளார்.

இதே செய்தி அமலுல் யவ்மி வ லைலா, பாகம் : 1, பக்கம் :237) இடம் பெற்றுள்ளது. இதில் அல்யமான் பின் ஸயீத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர். (மஜ்மவுஸ் ஸாவயித், பாகம் : 3, பக்கம் : 167)

இதே செய்தி அஹ்பார் உஸ்பஹான் என்ற நூலில் (பாகம் :5, பக்கம் : 189) இடம்பெற்றுள்ளது. இதில் இடம் பெறும் ரிழ்வான் பின் ஸயீத் என்ப வரின் நம்பத்தன்மை அறியப்படவில்லை.

தொழுகைக்குப் பின் ஆயதுல் குர்ஸி ஓதுவது சிறப்புக்குரியது என்று வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமாக இருந்தாலும் இமாம் நஸயீ அவர்களுக்குரிய சுனனுல் குப்ராவில் இடம் பெறும் செய்தி ஆதாரப்பூர் வமானதாக உள்ளது.

ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தை தவிர வேறு எதுவும் தடுக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி), நூல் : நூல்: சுனனுல் குப்ரா, பாகம்: 6, பக்கம் 30

சில அறிஞர்கள் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் முஹம் மத் பின் ஹிம்யர் என்பவரைப்பற்றி விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் அது சரியில்லை.

இமாம் அபூஹாதம் அவர்கள் இவருடைய ஹதீஸ்களை எழுதிக் கொள்ளலாம் ஆனால் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும். இமாம் யஃகூப் பின் சுப்யான் அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.

இமாம் அஹ்மத் அவர்கள், இவரிடத்தில் நல்லதை தவிர வேறு எதையும் அறியவில்லை என்றும்.இமாம் இப்னு மயீன் மற்றும் துஹைம் ஆகியோர் இவரை உறுதியானவர் என்றும். இமாம் நஸயீ அவர்கள் இவரிடத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும். இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் இவரை பலமானவர் என்றும். இமாம் தாரகுத்னீ அவர்கள் இவரிடத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும். இப்னுல் கானிஃ என்பவர் இவர் நல்லவர் என்றும். சான்று அளித்துள்ளார்கள்.

நூல்: தஹ்தீப் தஹ்தீப், பாகம்: 9, பக்கம்: 117

பொதுவாக ஒருரைப்பற்றி குறையும் நிறையும் வரும்போது குறை தெளிவாக இருந்தால் குறையைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். கார ணம் பலருக்கு தெரியாத குறை சிலருக்கு தெரிந்திருக்கும் என்ற அடிப்ப டையில்.

அதே நேரத்தில் குறை கூறியவர்கள், காரணத்தை தெளிவு படுத்த வேண்டும். இல்லையெனில் குறையை நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. நிறையையே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படையில் இந்த அறிவிப்பாளரின் மீது விமர்சனம் செய்த அறிஞர்கள் காரணத்தை சமர்ப்பிக்கவில்லை. ஏன் இவர் பலவீனமானவர்?. இவருடைய செய்திகளை ஏன் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ளக்கடாது.? என்ற கேள்விக்கு பதில் அவர்கள் கூறவில்லை. எனவே இந்த அறிஞர்க ளின் விமர்சனத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இவர் புகாரியின் அறிவிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் நதாயிஜுல் அஃப்கார் (பாகம் 2 பக்கம் 279) ல் யஃகூப் பின் சுஃப்யான் அவர்கள் செய்த விமர்சனம் கார ணம் கூறப்படாதது. தெளிவில்லாதது என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் இப்னுல் ஜவ்ஸி இந்த ஹதீஸை மவ்லுஆத் (இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்க ளின் தொகுப்பு) என்ற கிதாபில் சேர்த்ததற்காக ஹாபிழ் லியாவுல் மக்தஸி மற்றும் இப்னு அப்தில் ஹாதி ஆகியோர் கண்டித்துக் கூறியுள்ளார்கள்.

மேலும் இவரை விமர்சனம் செய்யும் அறிஞர்களின் விமர்சனத்தையும். இவரை நல்லவர் என்று சொல்லக்கூடிய அறிஞர்களின் கருத்தையும் எழுதி விட்டு இமாம் தஹபீ அவர்கள் இவருடைய செய்திகள் ஹஸன் தரத்தில் கவனிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்.

நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா (பாகம் 9 பக்கம் 234)

எனவே தொழுகைக்குப்பின்னால் ஆயத்துல் குர்ஸி ஓதுவது சிறப்பிற் குரியதுதான் ஓதலாம். அல்லாஹ் மிகஅறிந்தவன்.

ஆயத்துல் குர்ஸி தொடர்பான மேலும் விபரங்களுக்கு தீன்குலப் பெண்மணி ஜனவரி 2008, மார்ச் 2008, மே 2008 ஆகிய இதழ்களை பார்வையிடுக!

--> Q/A Dheengula Penmani Feb 2010

நகம், முடி, இவற்றை மண்ணில் புதைக்க வேண்டும் என்று கூறுகிறார்களே இது சரியா?

நகம், முடி, இவற்றை மண்ணில் புதைக்க வேண்டும் என்று கூறுகிறார்களே இது சரியா?




இது தொடர்பாக ஒரு நபிமொழி இடம் பெற்றுள்ளது.
முடி, நகம் இவற்றை புதைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி), நூல்கள் : தப்ரானீ-கபீர், பாகம் : 15, பக்கம் : 408, ஷுஅபுன் ஈமான்-பைஹகீ, பாகம் : 8, பக்கம் : 44, முஸன்னஃப் அபீ ஷைபா, பாகம் : 8, பக்கம் : 47, லுஃபாவுல் உகைலீ, பாகம் : 4, பக்கம் : 332, அல்காமில்-இப்னு அதீ, பாகம் : 4, பக்கம் : 201.

இந்நூல்களில் லுஃபாவுல் உகைலீ, அல்காமில் ஆகிய நூல்களில் இடம்பெற்றிரும் செய்தியில் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் பின் அபீ ரவ்வாத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார். அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் என்பவர் பொய்யான செய்திகளை அறிவிப்பவர் என்ற இப்னுல் ஜனீத் கூறுகிறார். (ஆதாரம் : தன்ஸீஹு ஷரீஅத்துல் மர்ஃபூஆ, பாகம் : 1, பக்கம் : 73)

அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் உடைய ஹதீஸ்களை நான் உற்று நோக்கினேன். இவருடைய செய்திகளில் மறுக்கப்பட வேண்டிய செய்திகளைக் கண்டேன். எனவே இவருடைய செய்திகளை நான் எழுதிக் கொள்வதில்லை. இவர் என்னிடத்தில் உண் மையாளர் இல்லை என்று அபூஹாத்திம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம் : அல்ஜர்ஹு வத்தஃதீல், பாகம் : 5, பக்கம் : 104)

அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் இவர் தம் தந்தை வழியாக மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவித்துள்ளார். (இந்த செய்தியும் அவர் தந்தை வழியாகவே இடம்பெற்றுள்ளது) இச்செய்திகள் நம்பகமானவை அல்ல! உறுதியான செய்திகளில் உள்ள வையும் அல்ல! என்று உகைலீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம் : லுஅஃபாவுல் உகைலீ, பாகம் : 2, பக்கம் : 279)

அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் உடைய செய்தி களைப் போன்று எவரும் அறிவித்ததில்லை என்று இப்னுல் அதீ அவர் கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆதாரம் : அல்காமில்-இப்னு அதீ, பாகம் : 4, பக்கம் : 201)

அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் உடைய செய்தி கள் எந்த மதிப்பும் அற்றது என்று இப்னுல் ஜனீத் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம் : லிஸானுல் மீஸான், பாகம் : 4, பக்கம் : 516)

இதே கருத்தில் வேறு அறிவிப்பாளர்கள் வழியாக இப்னு அதீ அவர்கள் அல்காமில் என்ற நூலில் (பாகம் : 6, பக்கம் : 457) ல் பதிவு செய்துள்ளார்கள்.

இந்த அறிவிப்பாளர் தொடரும் பலவீனமானதாகும். இதில் இடம் பெறும் ஈஸா பின் அப்துல்லாஹ் பின் சுலைமான் அல்குறைஷீ என்பவர் பலவீனமா னவர்.

இவரைப்பற்றி இதை பதிவு செய்த இமாம் இப்னு அதீ அவர்களே இவர் பலவீனமானவர் ஹதீஸை திருடுபவர் என்று குற்றம் சுமத்தியுள்ளார்கள். (அல்காமில், பாகம் : 6, பக்கம் : 454)

அல்காமில், லுஅஃபாவுல் உகைலீ ஆகிய நூல்கள் அல்லாவற்றில் இடம் பெற்றிருக்கும் செய்தியில் மூன்று குறைகள் இடம்பெற்றுள்ளனர்.

முதலாவது: அதன் அறிவிப்பாளர் வரிசை துண்டிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெறும் அப்துல் ஜப்பார் பின் வாயில் என்பவர் தம் தந்தை வழியாக அறிவித்துளார்கள். ஆனால் அவர் தம் தந்தையிடமிருந்து எதையும் செவி யுற்றதில்லை.

இரண்டாவது : இதில் இடம்பெறும் இன்னொரு அறிவிப்பாளர் கைஸ் பின் ரபீவு என்பவர் நினைவாற்றல் கோளறின் காரணமாக இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள்.

மூன்றாவது : முஹம்மத் பின் ஹஸன் என்பவர் இடம் பெற்றிருக்கிறார். இவரிடம் பலவீனம் உள்ளது என்று ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிட்டுள் ளார்கள்.

இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் பலவீனமானதாகும்.

--> Q/A Dheengula Penmani Mar 2010

சந்திர, சூரிய கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதலாமா?

சந்திர, சூரிய கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதலாமா?
(சூரிய கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதக்கூடாது என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு சில ஆதாரங்களை எடுத்துரைக்கின்றனர். இவர்களின் வாதங்களையும் அதற்குரிய பதிலையும் கேள்வி பதில் முறையில் இங்கு வழங்குகிறோம்.)

கேள்வி : சூரிய கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓத வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இமாம் அபூ ஹனீஃபா, இமாம் ஷாபிஈ, இமாம் மாலிக் இவ்வாறு ஓதக்கூடாது என்று கூறியுள்ளார்களே இதில் எது சரி?


பதில் : சப்தமிட்டு ஓத வேண்டும் என்பதே சரியாகும்.

கேள்வி : அது எப்படி சரியாகும்? இமாம்களின் கூற்றை விட இக்கருத்து சரியானதா?

பதில் : சூரிய சந்திர கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதுவதுதான் சரியானதாகும். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூரிய, சந்திர கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதியதாக புகாரி, முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கருத்தைதான் அலீ பின் அபீதாலிப், அப்துல்லாஹ் பின் யஸீத், பரா பின் ஆஸிப், ஸைத் பின் அர்க்கம், அஹ்மத் பின் ஹன்பல், இஸ்ஹாக் பின் ராஹவைஹி, இப்னு முன்திர், அபூயூஸீப் (அபூஹனிபாவின் மாணவர்), முஹம்மத் பின் ஹஸன் (ஹனபி மத்ஹப்) தாவூத் லாஹரி ஆகியோர் (நபிவழியின் கருத்தையே) தேர்ந்தெடுத்துள்ளார்கள். நூல்: அல் மஜ்மூவ், பாகம் : 5, பக்கம் : 58

கேள்வி : சூரிய கிரகணத் தொழுகை பகல் தொழுகையாகும். பகலில் தொழும் தொழுகையான லுஹர், அஸர் தொழுகையில் சப்தமின்றிதான் ஓதுகிறோம். எனவே பகலில் தொழும் சூரிய கிரணத் தொழுகை சப்தமின்றி ஓத வேண்டும். இரவு நேரத் தொழுகையில் சப்தமிட்டு ஓதுகிறோம். இதைப்போன்று சந்திர கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓத வேண்டும் என்று சில கூறுகின்றனரே?

பதில் : பகல் தொழுகையில் சப்தமிட்டு ஓதுவதில்லை என்பதால் சூரிய கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதக்கூடாது என்பது சரியான கருத்தாக இருந்தால் பகலில் தொழும் ஜுமுஆத் தொழுகை, பெருநாள் தொழுகை, மழைத் தொழுகை போன்றவற்றிலும் சப்தமில்லாமல்தானே ஓத வேண்டும்? இதற்கு என்ன பதில் சொல்வோம்? நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுகையிலும் பெருநாள் தொழுகையிலும், மழைத் தொழுகையிலும் சப்தமிட்டு ஓதியுள்ளார்கள் அதனால் இவற்றில் மட்டும் சப்தமிட்டு ஓதுவோம் என்று கூறுவோம். இதைப்போன்று சூரிய கிரகணத் தொழுகையிலும் நபி (ஸல்) அவர்கள் சப்தமிட்டு ஓதி உள்ளதால் நாமும் சப்தமிட்டே ஓத வேண்டும்.

கேள்வி : சூரிய கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓத வில்லை என்ற கருத்தை தரும் ஒரு செய்தி புகாரியில் இடம் பெற் றுள்ளதே!

இப்னு அப்பாஸ் (ர) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் (ஜமாஅத்தாக கிரகணத் தொழுகை) தொழுவித்தார்கள். அத்தொழுகையில் அல்பகரா (2ஆவது) அத்தியாயம் போன்றதை ஓதும் அளவுக்கு நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பிறகு (ருகூஉவிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இந்த நிலை முந்திய நிலையைவிட குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூச் செய்தார்கள் அந்த ருகூஉ முந்திய ருகூஉவைவிட குறைவானதாக இருந்தது. பின்னர் சஜ்தாச் செய்தார்கள். பிறகு (சஜ்தாவிருந்து) எழுந்து (இரண்டாவது ரக்அத்தில்) நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இந்த நிலை முந்திய நிலையை விட குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இந்த ருகூஉ முந்திய ருகூஉவைவிட குறைவானதாகவே இருந்தது. பிறகு (ருகூஉவிருந்து) நிமிர்ந்து வெகு நேரம் நிலையில் நின்றார் கள். இது முந்திய நிலையைவிடக் குறைவானதாகவே இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இது முந்திய ருகூஉவைவிடக் குறைவானதாக இருந்தது. பிறகு சஜ்தாச் செய்தார்கள். (கிரகணம் விலகி) வெச்சம் வந்துவிட்டிருந்த நிலையில் தொழுது முடித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உரையாற்றுகையில், சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகல் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை. எனவே இ(த்தகைய கிரகணத்)தை நீங்கள் கண்டால் அல்லாஹ்வை நினைவு கூருங்கள் என்று கூறினார்கள்.

அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (தொழுது கொண் டிருக்கையில் இதோ) இந்த இடத்தில் எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியிருந்து) பின் வாங்கியதையும் கண்டோமே! (அது ஏன்?) என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் (தொழுது கொண்டிருக்கையில்) சொர்க்கத்தைக் கண்டேன். (அதிருந்து பழக்) குலையொன்றை எடுக்க முயன்றேன். அது கிடைத்திருந்தால் இந்த உலகம் உள்ளவரை நீங்கள் அதிருந்(தப் பழத்தி ருந்)து புசித்திருப்பீர்கள். மேலும் நான் (தொழுது கொண்டிருக்கையில்) நரகம் எனக்குக் காட்டப்பட்டது. இன்றைய தினத்தைப் போன்று மிக பயங்கரமான காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. மேலும், நரக வாசிகல் அதிகமாகப் பெண்களையே கண்டேன் என்று கூறினார்கள்.

மக்கள், ஏன் (அது), அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், பெண்கன் நிராகரிப்பே காரணம் என்றார்கள். அப்போது பெண்கள் அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்? என்று வினவப்பட்டது. அதற்கு கணவன்மார்களை நிராகரி(த்து நிந்தி)க் கிறார்கள். (கணவர் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள் கண்டால் உன்னிடமிருந்து எந்த நலனையும் ஒருபோதும் நான் கண்டேதேயில்லை என்று சொல்விடுவாள் என்று பதிலத்தார்கள்

நூல் : புகாரி 1052

கேள்வி : நபி ஸல் அவர்கள் சப்தமிட்டு ஓதியிருந்தால் அதை நமக்கு இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவித்திருப்பார்களா இல்லையா? இந்த நபிமொழியில் அவ்வாறு கூறப்படாததால் நபிகளார் சப்தமில்லாமல்தான் ஓதியுள்ளார்கள் என்று விளங்க முடியகிறதே?

பதில் : இந்த ஹதீஸில் சப்தமிட்டு ஓதவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த செய்தியில் நபி (ஸல்) அவர்கள் சூரியகிரணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள் என்றோ அல்லது சப்தமில்லாமல் ஓதினார்கள் என்றோ எந்த தகவலும் இல்லை. எனவே இதை வைத்துக் கொண்டு சப்தமில்லாமல் ஓதினார்கள் என்று கூறமுடியாது.

கேள்வி : நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு சூரிய கிரணத் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களிடமிருந்து எந்த சப்தத்தையும் செவியுறவில்லை என்ற செய்தி அஹ்மத், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளதே? மேலும் இதை பதிவு செய்த இமாம் ஹாகிம் இந்த செய்தி புகாரி, முஸ்லிம் அறிஞர்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று சொல்லியுள்ளார்களே?

பதில் : அல்லாஹ் அருள் புரியட்டும், ஹாகிம் அவர்கள், நபிமொழியை ஆதாரப்பூர்வமானது என்று கூறுவதில் அலட்சியப்போக்கு உள்ளவர். பல பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைக்கூட ஆதாரப்பூர்வமானது என்று கூறியுள்ளார்கள். எனவே இவர் ஆதாரப்பூர்வமானது என்று கூறுவதை மட்டும் வைத்து அது நம்பகமான செய்தி என்று முடிவு செய்யக் கூடாது. இந்த செய்தி இடம் பெற்ற அனைத்து இடங்களிலும் ஸஅலபா பின் இபாத் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் புகாரி, முஸ்லிமின் அறிவிப்பாளரில் உள்ளவர் இல்லை. எனவே இந்த செய்தி புகாரி, முஸ்லிம் அறிஞர்களின் நிபந்தனைக்கு உட்பட்டது என்று கூற முடியாது.

கேள்வி : புகாரி, முஸ்லிமின் நிபந்தனைக்கு உட்பட்டது என்று கூற முடியாவிட்டால் அதை ஆதாரமாக கொள்ளக்கூடாதா?

பதில் : ஆதாரமாகக் கொள்ளலாம். அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பகமானவராக இருந்தால். ஆனால் ஸஅலபா பின் இபாத் என்பவர் யாரென அறியப்படாதவர் என்று இப்னுல் முதைனி, இப்னு ஹஸ்ம், இப்னுல் கத்தான், இஜ்லி, தஹபீ ஆகியோர் கூறியுள்ளனர். இவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாததால் இந்த செய்தி பலவீனம் அடைகிறது. மேலும் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, இப்னுமுன்திர், இப்னு குஸைமா, ஹாகிம், பைஹகி, இப்னு ஹிப்பான், தப்ரானி கபீர் ஆகிய அனைவர்களும் இந்த செய்தியை ஸஅலபா என்பவர் வழியாகத்தான் பதிவு செய்துள்ளார்கள்.

கேள்வி : நான் நபி (ஸல்) அவர்களுக்கு பின்னால் சூரிய கிரணத் தொழுகைத் தொழுதேன். அவர்களிடமிருந்து ஒரு எழுத் தைக்கூட செவியுறவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர் கள் அறிவிக்கும் செய்தி முஸ்னத் அபீ யஃலா என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளதே?

பதில் : இந்த செய்தியும் ஆதாரப்பூர்வமானது இல்லை. இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள நான்காவது அறிவிப்பாளர் இப்னு லஹீஆ என்பவர் பல வீனமானவராவார். எனவே இந்த செய்தியை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது. எனவே சூரிய, சந்திர கிகரணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதுவதுதான் நபிவழியாகும்.

கேள்வி : சந்திர, சூரிய கிரகணத் தொழுகையின்போது சப்தமிட்டு ஓதுவதற்கு ஹதீஸ்களில் நேரடி ஆதாரம் உள்ளதா?

பதில் : ஆம்! கீழ்க்கண்ட ஹதீஸை காண்க...

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப் பின் னால் மக்கள் அணிவகுத்து நின்றனர். நபி (ஸல்) அவர்கள், தக்பீர் (தஹ்ரீமா), கூறி / நீண்ட நேரம் ஓதினார்கள். பிறகு தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பின்னர், சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், (அல்லாஹ் தன்னைப் புகழ்ந்தோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) என்று கூறி நிலையில் நின்றார்கள். சஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் ஓதினார்கள். ஆனால் இது முதலில் ஓதியதைவிட குறைந்த நேரமே அமைந்திருந்தது. பிறகு தக்பீர் கூறி ருகூஉச் செய்தார்கள். இந்த ருகூஉ முதல் ருகூஉவைவிட குறைந்த நேரமே அமைந்திருந்தது. பின்னர், சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் / ரப்பனா வல(க்) கல் ஹம்து, என்று கூறி (நிமிர்ந்து) விட்டு/ சஜ்தாச் செய்தார்கள். பிறகு இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். அப்போது நான்கு சஜ்தாக் (கள் கொண்ட இரண்டு ரக்அத்)களில் நான்கு ருகூஉகள் செய்து முடித்தார்கள். அவர்கள் தொழுகையை முடிப்தற்கு முன் (கிரகணம் விலகி) வெளிச்சம் வந்துவிட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான குணஙகளைக் கூறிப் போற்றி(ய பின் உரை நிகழ்த்தி)னார்கள். அவர்கள் (தமது உரையில்)/ (சூரியன், சந்திரன்) இவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை. அவற்றை நீஙகள் கண்டால் தொழுகையில் கவனம் செலுத்துங்கள்... என்று கூறினார்கள். (இதன் அறிவிப் பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் (எனக்கு இதையறிவித்த) உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களிடம்/ மதீனாவில் சூரிய கிரகணம் ஏற்பட்ட தினம் உங்கள் சகோதரர் (அப்துல்லாஹ் பின் ஸுபைர் - ரலி) இரண்டு ரக்அத்களைவிட கூடுதலாக்கா மல் சுப்ஹுத் தொழுகை போன்று தொழுவித்தார்களே... என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள் ஆம்! (அவர் அவ்வாறு தொழுவித்தார்கள்.) அவர் நபி வழியை தவறவிட்டார்... என்று பதிலளித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாயிலாகவும் இதுபோன்ற ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அது கஸீர் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), புஹாரி : 1046

-->யூசுஃப் பைஜீ, கடையநல்லூர்
--> Dheengula Penmani Feb 2010

தராவீஹ் தொழுகை தொடர்பாக புகாரியில் இடம் பெறும் 1147வது ஹதீஸ் ??

? தராவீஹ் தொழுகை எட்டு ரக்அத்கள் தொடர்பாக புகாரியில் இடம் பெறும் 1147வது ஹதீஸ் தராவீஹ் தொடர்புடையது அல்ல! என்று பின்வரும் காரணங்களை கூறுகின்றனர்.

தராவீஹ் தொழுகை ரமளான் மாதத்தில் மட்டும்தான் தொழப்படுகிறதே தவிர மற்ற மாதங்களில் தொழப்படுவதில்லை எனவே இந்த ஹதீஸ் தராவீஹ் தொழு கைக்கு பொருந்தாது. இந்த ஹதீஸ் ஒரு ஸலாமைக் கொண்டு நான்கு ரக்அத் தொழுததாகக் கூறப்படுகிறது. ஆனால் தராவீஹ் இரண்டு ரக்அத்க ளுக்கு ஒரு ஸலாம் என்ற அடிப்படையில் தொழப்படுகிறது.
இந்த ஹதீஸ் தஹஜ்ஜத் தொழுகைப் பற்றியதாகும். ஏனெனில் தஹஜ்ஜத் தொழுகைதான் ரமாளானிலும் ரமலான் அல்லாத மாதங்களிலும் தொழப்படு கிறது. இந்த ஹதீஸ் ரமலான் தொடர்புடையது அல்ல! என்பதால் தான் இதை தஹஜ்ஜத் (கியாமுல் லைல்) என்ற தலைப்பில்
ஹதீஸ் நூல் ஆசிரியர்கள் கொண்டுவந்துள்ளனர். இதற்கு உங்கள் பதில் என்ன?

! நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியான ஆயிஷா (ரலி) அவர்களிடம், ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமலான் அல்லாத மற்ற காலங்களி லும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள்.(முதல்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்'' என்று விடையளித்தார்கள்.
நான், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வித்ர் தொழுவதற்கு முன் உறங்குவீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் என் கண்தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லை'' என்று விடையளித்தார்கள்' எனவும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசலமா பின் அப்திர்ரஹ்மான், நூல் :புகாரி (1147)

தராவீஹ் தொழுகை ரமலான் மாதத்தில் மட்டும் தொழுவதால் இந்த ஹதீஸ் தராவீஹ் தொழுகையைப் பற்றி கூறுவதாக சொல்லமுடியாது என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதத்தை எடுத்து வைப்பவர்கள் முதலில் தராவீஹ் தொழுகை ரமலான் மாதத்தில் மட்டும்தான் தொழவேண்டும் என்பதை முதலில் நிரூபித்து விட்டு இந்த கருத்தை அவர்கள் எடுத்து வைக்க வேண்டும். தராவீஹ் தொழுகை (இரவுத் தொழுகை) ரமலான் மாதத்தில் மட்டும்தான் தொழ வேண் டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாதபோது இந்த வாதம் ஏற்புடையது அல்ல.

மேலும் நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தொழுதது ஓரே தொழுகை தான். நேர காலங்களை கவனித்து அதற்கு வெவ்வோறு பெயர்கள் ஹதீஸ் களில் கூறப்பட்டுள்ளது.

இரவில் இந்த தொழுகை நிறைவேற்றப்படுவதால் இதற்கு ஸலாத்துல் லைல், கியாமுல் லைல் (இரவு தொழுகை) என்று கூறப்படுகிறது. உறங்கி எழுந்து இந்த தொழுகை தொழலாம் என்பதால் தஹஜ்ஜத் தொழுகை (இரவில் எழுந்து தொழும் தொழுகை) என்று கூறப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் இரவில் ஒரே தொழுகையைத்தான் தொழுதார்கள் என்பதற்கு பின்வரும் நபிமொழிகள் தெளிவான சான்றுகளாகும்.

நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1340

நபி (ஸல்) அவர்கள் இரவின் முழுவதும் தொழுத தொழுகை மொத்தம் (8+3) 11 ரக்அத்துகள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இந்த நபிமொழியில் கூறப்படுவது தஹஜ்ஜத் தொழுகை என்று கூறினால். நபிகளார் தொழுத தராவீஹ் தொழுகை எங்கே என்ற கேள்விக்கு மாற்றுக் கருத்துள்ளவர்களால் பதில் சொல்ல முடியாது. இரண்டும் ஓரே தொழுகை என்றால்தான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியும்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருபத்தி மூன்றாவது நோன்பி னுடைய இரவுப் பகுதியில் இரவின் முதல் பகுதியில் மூன்றில் ஒரு பகுதி வரை தொழுதோம். பிறகு இருபத்தைந்தாம் இரவில் அவர்களுடன் பாதி இரவுவரை தொழுதோம். பிறகு இருபத்து ஏழாம் இரவில் அவர்களுடன் நாங்கள் ஸஹர் (உணவை) அடைய முடியாதோ என்று எண்ணும் அளவிற்கு தொழுதோம்.
அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல் : நஸயி (1588)

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ரமலானில் நோன்பு நோற்றோம். ரமளானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி மூன்றாம் நாள் இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம்வரை எங்களுக்குத் தொழவைத்தார்கள். அதன் பிறகு (சில நாட்கள்) தொழவைக்கவில்லை. ரமலானில் மூன்று நாட்கள் எஞ்சியிருக் கும்போது மீண்டும் எங்களுக்குத் தொழவித்தார்கள். தம் குடும்பத்தின ரையும் மனைவியரையும் அதில் பங்கெடுக்கச் செய்தார்கள். ஸஹர் நேரம் முடிந்து விடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவிற்கு நீண்ட நேரம் தொழவைத்தார்கள். அறிவிப்பவர் : அபூதர் (ரலி) நூல் : நஸயீ இப்னு மாஜா (1317)

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் நோன்பு நோற்றோம். (கடைசி) ஏழு நாட்கள் எஞ்சியிருக்கின்றவரை நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தில் எதையும் தொழுவிக்கவில்லை. (அந்நாளில்) இரவில் ஒரு பகுதி செல்லும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆறு (நாட்கள்)இருக்கும் போது எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. (மாதம் முடிய) ஐந்து நாள் இருக்கும்போது இரவின் பாதிவரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதரே இந்த இரவு (முழுவதும்) நீங்கள் எங்களுக்கு உபரியாகத் தொழுகை நடத்தக் கூடாதா? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபியவர்கள் ''ஒரு மனிதர் இமாம் (தொழுகை நடத்தி) முடிக்கின்றவரை அவருடன் தொழுதால் அவருக்கு இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை கணக்கிடப்படுகிறது என்று கூறினார்கள். (மாதம் முடிய) நான்கு நாள் இருந்தபோது எங்களுக்கு அவர்கள் தொழ வைக்கவில்லை. (மாதம் முடிய) மூன்று நாள் இருந்தபோது தம்முடைய குடும்பத்தார்களையும் மனைவிமார்களையும் ஒன்றிணைத்து எங்க ளுக்கு ஸஹர்( நேரம்) தவறிவிடுமோ என்று நாங்கள் அஞ்சும் அள விற்கு எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். பிறகு மாதத்தின் மீத முள்ள நாட்களில் அவர்கள் தொழுகை நடத்தவில்லை.
நூல் : அபூ தாவூத் (1167)

நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் மக்களுக்கு ஜமாஅத்தாக தொழு வித்தார்கள். அது எந்த நேரம்வரை என்று மேற்கூறப்பட்ட நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளது. மூன்றுநாட்கள் மீதமுள்ள நிலையில் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தது இறுதி, ஸஹர் நேரம் இறுதிவரை. ஸஹர் நேர இறுதிவரை நபி (ஸல்) அவர்கள் தொழுவித்த இந்த தொழுகை தராவீஹ் என்றால் அவர்கள் தஹஜ்ஜத் எங்கே தொழுதார்கள் என்ற கேள்வி எழும்? தொழுத தஹஜ்ஜத் என்றால் தராவீஹ் தொழுகை எங்கே என்ற கேள்வி எழும்? இரண்டும் வெவ்வேறு பெயர்கள் உள்ள ஒரே தொழுகைதான் என்று கூறினால் மட்டுமே இதற்கு சரியான பதிலை கூற முடியும்.

நபி (ஸல்) அவர்கள் எல்லா காலங்களில் இதே எண்ணிக்கையில் தொழு திருந்தால் நீங்கள் மட்டும் ஏன் ரமளான் மாத்ததில் மட்டும் தொழுகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.

எல்லா காலங்களிலும் இந்த தொழுகையை இந்த எண்ணிக்கையில் தொழலாம் என்றிருந்தாலும் ரமலான் மாத்தில் கிடைக்கும் நன்மையை எண்ணி இதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். நபிகளாரும் இந்த மாதத்தில் இந்த தொழுகைக்க முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரப் பூர்வமான பல சான்றுகள் உள்ளன.

எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவரா கவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (37), முஸ்லிம் (1391)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் நின்று வழிபடுவதைக் கட்டாயப்படுத்தாமல் அதை மக்களுக்கு ஆர்வமூட்டிவந் தார்கள். எவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் ரமளானில் நின்றுவழிபடுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்'' என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (1392)

 மற்ற மாதங்களில் இரவுத் தொழுகையை ரமலான் மாதத்தின் இரவுத் தொழுகை அளவுக்கு ஆர்வுமூட்டாத நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகை அதிகம் வலியுறுத்தி அதற்கு ஏராளமான நன்மைகள் உள்ளதையும் குறிப்பிட்டதால் நாமும் ரமலான் மாதத்தில் இதற்கு முக்கியத்து வம் கொடுத்து வருகிறோம்.

எட்டு ரக்அத்கள் என்று வரும் ஹதீஸில் நான்கு ரக்அத்களில் ஸலாம் கொடுத்தாக வருகிறது. ஆனால் நீங்கள் ஏன் இரண்டு ரக்அத்களில் ஸலாம் கொடுக்கிறீர்கள் என்ற அடுத்த வாதத்தை வைக்கிறார்கள்.

அந்த நபிமொழியில் நான்கு ரக்அத்களில் ஸலாம் கொடுத்தார்கள் என்று தெளிவாக கூறப்படவில்லை. முதலில் நான்கு ரக்அத் தொழுவார்கள். என்று கூறப்பட்டுள்ளது. அது எத்தனை ஸலாத்தைக் கொண்டு தொழுவார்கள் என்று தெளிவுபடுத்தப்படவில்லை. மேலும் இரவுத் தொழுகையை இரண்டு இரண்டு ரக்அத்களாக தொழவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட் டுள்ளார்கள்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! இரவுத் தொழுகை எவ்வாறு (தொழ வேண்டும்)?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஆனால், சுபஹு (நேரம் வந்துவிட்டது) பற்றி நீர் அஞ்சினால் ஒரு ரக்அத் (வித்ர்) தொழுவீராக'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி (1137)

மற்றவர்களுக்கு இரண்டு ரக்அத்தாக தொழவேண்டும் என்று கட்டளை யிட்ட நபிகளார் இரவில் இரண்டிண்டாகத்தான் தொழுதார்கள் என்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.

நான் இப்னு உமர் (ர) அவர்கடம், வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்கு முன்னுள்ள இரண்டு ரக்அத் (சுன்னத் தொழுகை)கல் நீண்ட அத்தியாயங்களை ஓதலாமா?'' என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர்(ர) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் இரவில் இரண்டிரண்டு ரக் அத்களா கத் தொழுவார்கள். ஒரு ரக்அத் தொழுது (முன்னர் தொழுத வற்றை) ஒற் றையாக ஆக்குவார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் சீரீன், நூல் : புகாரி (995)

முதலில் நான்க ரக்அத்கள் தொழுவார்கள் என்று அறிவிக்கும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மற்றொரு அறிவிப்பில் இப்னுமாஜா (1348) நபிக ளார் ஒவ்வொரு இரண்டு ரக்அத்களில் ஸலாம் சொல்வார்கள் என்று அன்னை ஆயிஷா அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

இந்த செய்திகளை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் அந்த நபிமொழி யில் நான்கு என்று கூறப்பட்டது. ஒரே ஸலாத்தில் என்று முடிவு எடுக்கக் கூடாது. மற்ற நபிமொழிகளையும் கவனத்தில் கொண்டு இரண்டு ரக்அத்களின் ஸலாம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறோம். நபிமொழி தொகுப்புகளில் இந்த செய்தி தராவீஹ் என்ற தலைப்பில் நபிமொழி தொகுப்பாளர்கள் கொண்டு வரவில்லை எனவே எட்டு ரக்அத் தொடர்பான நபிமொழி தராவீஹ் குறிக்காது என்று வாதிடுகின்றனர்.

நபிமொழி நூல் ஆசிரியர் கொடுக்கும் தலைப்பை வைத்து மட்டும் ஒரு காரியத்தை நிரூபிப்பது நகைப்பிக்குரியதாகும். அந்த ஆசிரியர், நபிமொழியில் என்ன கருத்து இருக்கிறது என்று அவர் எண்ணுகிறாரோ அந்த கருத்தைத் தான் அவர் அதற்கு தலைப்பிடுவார். அதுவே சரியானது என்று கூறமுடியாது. சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். ஏனென்றால் இந்த நபிமொழியை இமாம் புகாரி அவர்கள் 1147 ஆவது செய்திக்கு ரமளானிலும் ரமளான் அல்லாத மாதத்திலும் நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை. என்று தலைப்பிட்டுவிட்டு தராவீஹ் தொழுகை என்ற அத்தியாயத்தின் கீழ் 2013 வது ஹதீஸாக இதே செய்தியை கொண்டு வந்துள் ளார்கள் என்பதையும் பார்வையிடவும்.

--> Q/A Dheengula Penmani Sep 2008