பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, July 30, 2010

அறிவிப்பாளர்களை விமர்சனம் செய்யும்போது ??

? அறிவிப்பாளர்களை விமர்சனம் செய்யும்போது குறைகளை தெளி வுபடுத்தினால்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளீர் கள். ஆனால் நீங்கள் சில அறிவிப்பாளர்களை பற்றி கூறும்போதும் காரணம் கூறாமல் பலவீனமானது என்று கூறியுள்ளீர்களே?


ஒரு அறிவிப்பாளர் நம்பகமானவராக இருக்க வேண்டுமானால் அவரை நம்பகமானவர் என்று அதற்கு தகுதியானவர் கூற வேண்டும். ஒரு அறிவிப் பாளரைப்பற்றி எந்த விமர்சனமும் இல்லையானால் அவர் அறிவிக்கும் எந்த செய்தியும் ஆதாரமாக கொள்ளக்கூடாது. இதைப் போன்று ஒரு அறி விப்பாளரைப் பற்றி குறையும் நிறையும் இருக்குமானால் அவரைப் பற்றி குறை கூறுபவர்கள் காரணத்தை தெளிவுபடுத்தினால் அந்த காரணம் ஏற் றுக் கொள்ளும் வகையில் இருந்தால் குறைக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரின் செய்திகள் நிராகரிக்கப்படும். நிறை இருக்கும்போது குறை கூறியவர்கள் காரணத்தை தெளிவுபடுத்தவில்லையானால் நிறையை எடுத் துக் கொண்டு அவரின் செய்திகள் ஆதாரமாகக் கொள்ளப்படும்.

இதைப் போன்று ஒரு அறிவிப்பாளரை அனைத்து அறிஞர்களும் குறைமட்டும் கூறியிருந்தால் அந்த குறைக்கு காரணம் கூறவில்லையானா லும் குறையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவரை யாரும் நம்பகமானவர் என்று கூறவில்லை.

நாம் சில அறிவிப்பாளர்களைப் பற்றி எழுதும்போது விரிவஞ்சி சுருக்க மாக சொல்வோம். அப்போது குறைகளை தெளிவுபடுத்தாமல் சுருக்கமாக சொல்லியிருப்போம். சில நேரங்களில் அவரைப்பற்றி அனைவரும் குறை களை கூறியிருக்கும் போதும் காரணம் கூறாமல் சொல்வோம். குறையும் நிறையும் வரும்போது குறைக்குரிய காரணம் சொல்ல வேண்டும் என்று அடிப்படையிலிருந்து நாம் மாறவில்லை. ஒருவரைப் பற்றி குறைமட்டும் இருந்தால் அதற்கு காரணம் கூறத் தேவையில்லை என்பதை கவனத்தில் கொள்க!

--> Q/A Dheengula Penmani Feb 2010

No comments:

Post a Comment