பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, August 12, 2014

தாயத்து போடுபவரைப் பின்பற்றி தொழலாமா ?

தாயத்து போடுபவரைப் பின்பற்றி தொழலாம�


இணை வைக்கும் இமாம்களுக்குப் பின்னால் மட்டும் தான் நின்று தொழக்கூடாதா..?அல்லது அந்த இமாம் பனி புரியும் பள்ளி வாசலிலேயே தொழக் கூடதா..தாயத்துபோடக் கூடியவரும் அல்லாவிற்கு இணை வைக்கக் கூடியவர் தானே ..யோகாசனம்கற்றுக் கொள்வது இணை வைப்பதாகுமா
பதில் :
இணைவைப்பு என்ற பெரும்பாவத்தைச் செய்பவர்களை மட்டுமே பின்பற்றித் தொழக் கூடாதுஇது அல்லாத ஏனைய பாவங்களை ஒருவர் செய்தால் அவரைப் பின்பற்றித்தொழுவதை மார்க்கம் தடை செய்யவில்லைஇது பற்றி விரிவாக நமதுஇணையதளத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
இணைவைக்கும் இமாம் ஒரு பள்ளியில் பணிபுரிவதால் அந்தப் பள்ளிக்குச்செல்லக்கூடாது என்று இஸ்லாம் கூறவில்லைமாறாக பள்ளியில் இணைவைப்புக்காரியங்கள் அரங்கேறினால் அந்தப் பள்ளிக்குச் செல்லக்கூடாதுஅல்லது குறிப்பிட்டநான்கு தன்மைகள் ஒரு பள்ளியில் இருந்தால்அந்தப் பள்ளிக்கும் செல்லக்கூடாதுஇதுபற்றி ஏற்கனவே நமது இணைய தளத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
தாயத்து அணிபவரும் அதை மற்றவருக்கு அணிவித்து விடுபவரும் இணைவைப்பவர்என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
கயிறுக்கோ, இரும்பு வளையத்திற்கோ நோயை அகற்றும் சக்தி இருக்கிறது என்றுஒருவன் நம்பினால் அவன் அல்லாஹ்விற்கு இணை கற்பித்தவனாகி விடுகிறான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களிடத்தில் (பத்து பேரைக் கொண்டசிறிய குழு ஒன்றுவந்ததுஒன்பது பேர்களிடத்தில் உறுதிப்பிரமானம் வாங்கினார்கள்ஒருவரிடத்தில்மாத்திரம் (பைஅத்செய்யவில்லைஅப்போது மக்கள் அல்லாஹ்வின் தூதரே ஒன்பதுநபர்களிடத்தில் (பைஅத்உறுதிப்பிரமானம் வாங்கினீர்கள்இவரை விட்டுவிட்டீர்களேஎன்று கேட்டார்கள்அதற்கு நபி (ஸல்அவர்கள் அவர் மீது தாயத்து உள்ளது என்றுகூறினார்கள்உடனே (தாயத்து அணிந்திருந்தவர்தன் கையை (ஆடைக்குள்விட்டுதாயத்தை அகற்றினார்பிறகு நபி (ஸல்அவர்கள் அவரிடத்தில் பைஅத் செய்துவிட்டுஎவன் தாயத்தை தொங்கவிடுகிறானோ அவன் இணை வைத்து விட்டான் என்றுகூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி) நூல் : அஹ்மத் (16781)
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களுடன் பிரயாணம் ஒன்றில்  இருந்தேன்அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள்  தூதுவர் ஒருவரை அனுப்பி,"எந்த  ஒட்டகத்தின்கழுத்திலும்   (ஒட்டக வாரினால் ஆனகண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப் படுகின்ற)கயிற்று மாலையோ அல்லது (காற்றுகருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகின்ற)வேறெந்த மாலையோ இருக்கக் கூடாதுஅப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்துவிட  வேண்டும்'' என்று (பொது மக்களிடையேஅறிவிக்கச் செய்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ பஷீர் (ரலி)நூல் : புகாரி (3005)

யோகாசனத்தைப் பொறுத்த வரை அதில் செய்யப்படும் பயிற்சிகள் சரியானவையாகஇருந்தாலும் அதில் குறிப்பிட்ட மதத்தின் வணக்க வழிபாட்டு முறைகள் நுழைக்கப்படுகின்றனஅதிலுள்ள செயல்கள் இந்து மதத்துடன் தொடர்பு படுத்தப்படுகின்றன.எனவே இது போன்ற மத அனுஷ்டானங்களைத் தவிர்த்துஉடற்பயிற்சிக்கானசெயல்களை மட்டும் செய்வது தவறில்லை.
கீழ்க்காணும் செய்திகளைப் பார்க்கவும்

No comments:

Post a Comment