பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, August 12, 2014

பித்-அத் செய்யும் இமாம்?

பித்அத் செய்யும் இமாம்?


கூட்டு துவா ஓதும் இமாமை பின் பற்றி தொழுவது கூடுமா?
இதில் நமது தவ்ஹீத் சகோதரர்களே! சமரசம் ஆகி விடுகிறார்களே!
இது சரியா?..
பதில் :
இணைவைக்கும் இமாமை பின்பற்றித் தொழுவதையே மார்க்கம் தடுக்கின்றது. இணைவைக்கும இமாமைப் பின்பற்றலாமாஎன்ற கேள்விக்குரிய பதிலை பார்க்க, இந்த லிங்கை பார்க்கவும்.
(http://aleemqna.blogspot.in/2014/08/blog-post_52.html)
பித்அத் செய்யும் இமாம்களை பின்பற்றித் தொழுவதற்கு மார்க்கத்தில் தடை ஏதும் இல்லைஎனவே மார்க்கம் தடுக்காத ஒரு காரியத்தை நாம் தடுக்க முடியாது. பித்அத் செய்யும் இமாம்களை பின்பற்றித் தொழுவதற்கு நபிமொழிகளில் ஆதாரம் உள்ளது.
அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "தொழுகையை அதன் உரிய நேரத்தைவிட்டுத் தாமதப்படுத்துபவர்கள்அல்லது தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றாமல் சாகடிப்பவர்கள் உங்களுக்குத் தலைவர்களாய் அமைந்தால் உங்களது நிலை எப்படி இருக்கும்?'' என்று கேட்டார்கள். நான் "(அப்போது) நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகிறீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுதுகொள்ளுங்கள். பிறகு அவர்களுடன் நீங்கள் தொழுகையை அடைந்துகொண்டால் அப்போதும் (அவர்களுடன் இணைந்து) தொழுது கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும்'' என்று கூறினார்கள்.      
ஆதாரம் : 
முஸ்லிம் (1340)
தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது தான் நபி
ழியாகும். தொழுகையை பிற்படுத்தித் தொழுவது தவறு என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இந்தத் தவறில் நாம் பங்கெடுத்துவிடக்கூடாது என்பதால் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது விட வேண்டும் என்று உத்தரவிடுகிறார்கள்.
அதே நேரத்தில் தொழுகையை தாமதப்படுத்துதல் என்ற பித்அத்தை செய்யக்கூடிய ஆட்சியாளர்கள் வந்தாலும் அவர்களைப் பின்பற்றி நாம் தொழுவது குற்றம் இல்லை என்பதால் அவர்களையும் பின்பற்றித் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
பித்அத் செய்பவர்களை பின்பற்றி தொழக்கூடாது என்றால் பித்அத் செய்யும் இந்த ஆட்சியாளர்களைப் பின்பற்றி தொழக்கூடாது என்றே கூறியிருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாமல் இதை அனுமதித்திருப்பதால் பித்அத் செய்யும் இமாம்களைப் பின்பற்றி தொழுவது தவறில்லை.

No comments:

Post a Comment