பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, June 14, 2014

ஷபே பராத்

ஷபே பராத் அன்று தஸ்பீஹ் தொழுகை தொழுவதும் பள்ளிவாசலிருந்து கூட்டமாக மண்ணறைக்கு சென்று 
துஆச் செய்வதும் மார்க்கத்தில் உள்ளதா?

*********************************************************************************************************************************


நபிகளார் சில தினங்களில் சில சிறப்பு வணக்க முறைகளைச் செய்யுமாறு கூறியுள்ளார்கள். குறிப்பாக லைலத்துல் கத்ர் அன்றும் கிரகணம் ஏற்படும் போதும் மழையில்லாத போதும் நபிகளார் சில சிறப்பு வணக்க முறைகளைக் கூறியுள்ளார்கள். ஆனால் ஷஅபான் 15 அன்று சிறப்பு வணக்கங்கள் எதையும் நபிகளார் நமக்கு கற்றுத் தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை.

மண்ணறைக்குச் சென்று துஆச் செய்வதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாக சிலர் காட்டுகின்றனர். ஆனால் அந்தச் செய்தி ஆதாரமற்றது என்பதை அந்தச் செய்தியைப் பதிவு செய்த ஆசிரியரே அதன் இறுதியில் கூறியுள்ளார்.

அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு நாள் இரவு இறைத்தூதர் (ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்களைப் படுக்கையில் காணவில்லை. அவர்களைத் தேடி) வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் ஜன்னத்துல் பகீஃ அடக்கஸ்தலத்திலிருந்தார்கள். (என்னைக் கண்டவுடன்) சொன்னார்கள். (ஆயிஷாவே!) இறைவனும் இறைத்தூதரும் உனக்கு அநீதமிழைத்து விடுவார்கள் என பயந்து போனாயா? நான் கூறினேன் : (அவ்வாறெல்லாமில்லை) உங்கள் துணைவியர் ஒருவரிடம் வந்திருப்பீர்கள் என்று தான் கருதினேன். அச்சமயம் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு‚ அலைஹி வஸல்லம்) அவர்கள் மொழிந்தார்கள்: நிச்சயமாக இறைவன் ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவின் போது முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான். மேலும் கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளின் எண்ணிக்கையை விட அதிக அளவில் அடியார்களை மன்னிக்கிறான்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா)

நூற்கள் : அஹ்மத் எண் : 26060, திர்மிதீ எண் : 739, இப்னுமாஜா எண்: 1389 இப்னு அபீஷய்பா எண் : 29858

இந்தச் செய்தி இமாம் புகாரி அவர்களால் பலவீனமானது என்று ஆதாரத்துடன் இடித்துரைக்கப்பட்ட செய்தியாகும். புகாரி இமாமின் மாணவரான இமாம் திர்மிதீ அவர்கள் இந்தச் செய்தியைப் பற்றி புகாரி இமாமிடம் கேட்டபோது இது ஆதாரமற்றது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

670 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فَخَرَجْتُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ فَقَالَ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ فَقَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ وَفِي الْبَاب عَنْ أَبِي بَكرٍ الصِّدِّيقِ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الْحَجَّاجِ و سَمِعْت مُحَمَّدًا يُضَعِّفُ هَذَا الْحَدِيثَ و قَالَ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ لَمْ يَسْمَعْ مِنْ عُرْوَةَ وَالْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ لَمْ يَسْمَعْ مِنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ رواه الترمذي

இந்தச் செய்தி பலவீனமானது என்று இமாம் புகாரி அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன். மேலும் (இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள மூன்றாவது அறிவிப்பாளர்) யஹ்யா பின் அபீகஸீர் அவர்கள், (அடுத்த அறிவிப்பாளர்) உர்வா பின் ஸுபைர் என்பவரிடமிருந்து (நேரடியாக எதையும்) கேட்டதில்லை. இன்னும் (நான்காவது அறிவிப்பாளர்) ஹஜ்ஜாஜ் பின் அர்த்தாத் அவர்களும் யஹ்யா பின் அபீகஸீர் அவர்களிடமிருந்து (நேரடியாக எதையும்) கேட்கவில்லை என்றும் கூறினார்கள்.

நூல் : திர்மிதீ தமிழ்ஹதீஸ் எண் : 670

இமாம் திர்மிதீ அவர்கள் அந்த ஹதீஸின் கீழே தெளிவாக எடுத்துரைத்த இந்தக் கருத்தை இருட்டடிப்பு செய்து மக்களிடம் மறைத்துவிட்டே இந்தச் செய்தியை ஆதாரமாக்க் காட்டுகிறார்கள்.

ஆதாரமற்றது என்று தெளிவான ஆதாரத்துடன் கூறிய ஒன்று ஆதாரமாக நிற்குமா?

மேலும் அஹ்மத், இப்னுமாஜா, இப்னு அபீஷைபா ஆகிய நூல்களிலும் திர்மிதியின் அறிவிப்பாளர் வரிசையே இடம்பெற்றுள்ளது.

ஷபே பராஅத் தொடர்பாக விரிவான விளக்கம் பெற தீன்குலப்பெண்மணி ஆகஸ்டர் 2011 இதழை பார்வையிடுக.

http://www.onlinepj.com/deen_kula_penmani/dkp_2011/

பராத் இரவு பற்றி விளக்கமான காணொளி....
http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/barath_sirapu_enna/

http://www.onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/barath_iravu_undaa/#.U5tL2JSSySo

மார்க்க & சமுதாய செய்திகளை உடனுக்கு உடன்
அறிந்துகொள்ள லைக் செய்யுங்கள்.

https://www.facebook.com/onlinepj.qa

No comments:

Post a Comment