பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, June 14, 2014

பாத்திமா (ரலி) அவர்களுக்கு நபிகளார் சீதனம்

பாத்திமா (ரலி) அவர்களுக்கு நபிகளார் சீதனம் கொடுத்தார்களா

பாத்திமா (ரலி) அவர்களுக்கு நபிகளார் சீதனம் கொடுத்தார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளதாக கூறுகிறார்களே உண்மையா?
 
நபி (ஸல்) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களுக்காக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட போர்வை ஒன்றையும் தண்ணீர் தோல்பை ஒன்றையும் இத்கிர் புல்லால் அடைக்கப்பட்ட தலையணை ஒன்றையும் தயார் செய்தார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி), நூல் : நஸாயீ (3331),இப்னுமாஜா (4142), அஹ்மத் (677)
இந்த செய்தியை அடிப்படையாக வைத்துதான் சிலர் பெண்வீட்டார் சீதனமாக பொருட்களை வழங்கலாம் என்று கூறுகிறார்கள். 

பொதுவாக ஒருவர் தான் விரும்பிய நபருக்கு மனம் விரும்பி அன்பளிப்பு வழங்குவது மார்க்கத்தில் அனுமதிக்கப்ட்டதுதான். இதன் அடிப்படையில் தன் மகளுக்கு தந்தை அன்பளிப்பு வழங்கினால் அதை தடைசெய்யமுடியாது. அதே நேரத்தில் வெளிப்படையில் அன்பளிப்பைப்போன்றும் உண்மையில் நிர்பந்தமாகவும் இருந்தால் அந்த அன்பளிப்பை வழங்குவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

தற்போது உள்ள நடைமுறையில் திருமணம் நடந்தால் கண்டிப்பாக பெண்ணுக்காக குறிப்பிட்ட பொருளை கொடுக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் திருமணத்திற்கு பிறகு மாமியாரால் குத்திக்காட்டுவதும். ஏன் திருமணத்தையே தடைசெய்வதும்தான் நாட்டின் நடப்பு.

திருமணம் என்றால் பெண்வீட்டில் சீதனம் தரவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக நடைமுறையில் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. அன்பளிப்பு என்ற பெயரில் கொடுக்கப்பட்டவைதான் இன்று நிர்பந்தமாக வலுக்கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொண்டு கட்டாயமக்கப்பட்ட இந்த சீதன நடைமுறையை நீக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தன் மகளுக்கு கொடுத்தை வைத்துக் கொண்டு சீதனத்திற்கு ஆதாரமாக காட்டமுடியாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் பொறுப்பில்தான் அலீ (ரலி) அவர்களும் இருந்தார்கள்.
அபூதாலிப் அவர்கள் ஏழ்மை நிலையில் இருந்ததால் அவர்களின் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பை அவர்களின் உறவினர்கள் பகிர்ந்து எடுத்துக் கொண்டார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் ஜஅஃபர் (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களையும் எடுத்துக் கொண்டார்கள். (நூல் : அல்இஸ்தீஆப்,பாகம் 1,: பக்கம் : 13) 

நபிமொழிகளை நாம் கவனித்துப் பார்த்தால் அலீ (ரலி) அவர்கள் நபிகளாரோடே இருந்துள்ளார்கள் என்ற உண்மையை விளங்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் பாத்திமா (ரலி)அவர்களுக்கு எப்படி பொறுப்பாளராக இருந்தார்களோ அதைப் போன்றே அலீ (ரலி) அவர்களுக்கும் பொறுப்பாளராக இருந்துள்ளார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் பெண்வீட்டு சார்பாக கொடுத்தார்கள் என்று கூறமுடியாது. இருவருக்கும் சேர்த்தே அவர்கள் பொறுப்பாளார் ஆவார்கள். எனவே இதை பெண்வீட்டு சீதனத்திற்கு ஆதாரமாக காட்ட முடியாது. மேலும் நபிகளார் கொடுத்த மூன்று பொருள்களும் அவர்களின் தேவைக்காக கொடுத்தார்கள். இன்று வழங்கும் சீதனப்பொருட்களுடன் நபிகளாரின் பொருட்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நபிகளார் வழங்கியது ஒரு பொருளாகவே எடுத்துக் கொள்ள முடியாது

No comments:

Post a Comment