பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, December 16, 2017

தொப்புளுக்கு கீழாகக் கைகளை கட்டுவது.


கேள்வி :

பின்வரும் இரண்டு ஹதீஸ்களின்  தரம் குறித்து விளக்கம் தருமாறு வேண்டிக் கொள்கிறேன்.

ஹதீஸ் : 1

தொப்புளுக்கு கீழாகக் கைகளை கட்டுவது.

அறிவிப்பவர் : அபூ  ஹுரைரா (ரலி), நூல் அபூ தாவூத், ஹாமீ 4/18

ஹதீஸ் : 2

அத்தஹிய்யாத்து ஓதும் போது லா இலா ஹா என்ற வாசகம் வரும் போது வலது கையின் ஆள்காட்டி விரலை உயர்த்தி இல்லல்லாஹ் எனும் போது விரலை கீழே வைப்பது.
அறிவிப்பவர் : வாயில் பின் ஹிஜ்ர் (ரலி), நூல் : அபூ தாவூத் 726, அஃலாஹுஸ் ஸீனன் 2/883

முஹம்மது ரிஜ்வான் , கிளை செயலாளர், 8012659474

பதில் :

நீங்கள் இரண்டு செய்திகளைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அது தொடர்பான விபரங்களைக் காண்போம்.

முதலாவது செய்தி

حدثنا محمد بن محبوب حدثنا حفص بن غياث عن عبد الرحمن بن إسحق عن زياد بن زيد عن أبي جحيفة أن عليا رضي الله عنه قال من السنة وضع الكف على الكف في الصلاة تحت السرة

தொழுகையில் (இடது) முன் கை மீது (வலது) முன் கையை வைத்து இரண்டையும் தொப்புளுக்குக் கீழே வைப்பது நபிவழியாகும்.

அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: அபூதாவூத் 645

மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர்களின் ஒருவராக அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார்.

இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள இமாம் அபூதாவூத் அவர்கள், இதற்கு இரண்டு ஹதீஸ்களுக்குப் பின்னர் (அபூதாவூத் 647ல்) இவரைப் பற்றி விமர்சிக்கும் போது,

قال أبو داود سمعت أحمد بن حنبل يضعف عبد الرحمن بن إسحق الكوفي

கூஃபாவைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவர் பலவீனமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன் என்று கூறியுள்ளனர்.

இந்த ஹதீஸ் அபூதாவூதில் மட்டுமின்றி அஹ்மத் 998, பைஹகீ 2170, 2171, தாரகுத்னீ 9 (பாகம்: 1, பக்கம்: 286), தாரகுத்னீ 10 (பாகம்: 1, பக்கம்: 286) ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நூல்கள் அனைத்திலுமே அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவர் வழியாக மட்டுமே இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

تهذيب التهذيب - ابن حجر - (ج 6 / ص 124(

284 - د ت أبي داود والترمذي عبد الرحمن بن إسحاق بن سعد بن الحارث أبو شيبة الواسطي الأنصاري ويقال الكوفي بن أخت النعمان بن سعد

روى عن أبيه وخاله والقاسم بن عبد الرحمن بن عبد الله بن مسعود وسيار بن الحكم وزياد بن زيد الأعسم والشعبي وحفصة بنت أبي كثير وغيرهم

وعنه حفص بن غياث وعبد الواحد بن زياد وأبو معاوية ومحمد بن فضيل وهشيم وعلي بن مسهر ويحيى ويحيى بن أبي زائدة وغيرهم

قال أبو داود سمعت أحمد يضعفه وقال أبو طالب عن أحمد ليس بشيء منكر الحديث وقال الدوري عن بن معين ضعيف ليس بشيء وقال بن سعد ويعقوب بن سفيان وأبو داود والنسائي وابن حبان ضعيف وقال النسائي ليس بذاك وقال البخاري فيه نظر وقال أبو زرعة ليس بقوي وقال أبو حاتم ضعيف منكر الحديث يكتب حديثه ولا يحتج به وقال بن خزيمة لا يحتج بحديثه قلت وقال بن أبي خيثمة عن بن معين ليس بذاك القوي وقال عبد الله بن أحمد عن أبيه ليس بذاك وهو الذي يحدث عن النعمان بن سعد أحاديث مناكير والمدني أعجب إلى من الواسطي وقال البزار ليس حديثه حديث حافظ وذكره يعقوب بن سفيان في باب من يرغب عن الرواية عنهم وقال بن عدي وفي بعض ما يرويه لا يتابعه الثقات عليه وقال العقيلي ضعيف الحديث وقال الساجي كوفي أصله واسطي أحاديثه مناكير وقال العجلي ضعيف جائز الحديث يكتب حديثه

அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவர் பலவீனமானவர் என்றும், நம்பகமான ஹதீஸ்களுக்கு முரணாக அறிவிப்பவர் என்றும் அஹ்மத் பின் ஹம்பல், இப்னு மயீன், இப்னு சஅத், யஃகூப் பின் சுஃப்யான், அபூதாவூத், நஸயீ, இப்னு ஹிப்பான்,புகாரி, அபூ ஸுர்ஆ, அபூ ஹாத்தம், இப்னு குஸைமா, பஸ்ஸார், இப்னு அதீ, உகைலீ, சாஜீ, அஜலீ ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர்.

நூல் : ஹாஃபிழ் இப்னு ஹஜரின் தஹ்தீபுத் தஹ்தீப்

இவரை நம்பகமானவர், நாணயமானவர் என்று யாருமே விமர்சனம் செய்யவில்லை. பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்ட இவர் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்கண்ட அறிவிப்புக்கள் அனைத்தும் பலவீனமானவையே என்பதில் ஹதீஸ் கலை அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இல்லை.

மேலும் அபூதாவூதில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பையும் இதற்கு ஆதாரமாக முன்வைக்கின்றனர். அந்த அறிவிப்புபின்வருமாறு.

حدثنا مسدد حدثنا عبد الواحد بن زياد عن عبد الرحمن بن إسحق الكوفي عن سيار أبي الحكم عن أبي وائل قال قال أبو هريرة أخذ الأكف على الأكف في الصلاة تحت السرة قال أبو داود سمعت أحمد بن حنبل يضعف عبد الرحمن بن إسحق الكوفي

தொழுகையில் ஒரு முன் கையை மற்றொரு முன் கையால் பிடித்துக் கொண்டு, தொப்புளுக்குக் கீழே வைக்க வேண்டும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ வாயில் நூல்: அபூதாவூத் 647

இந்தச் செய்தியும் பலவீனமானதாகும். இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரிலும் மேலே நாம் கூறிய அப்துர் ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பார் இடம் பெற்றுள்ளார். இதன் காரணமாக இச்செய்தியும் ஆதாரமாகக் கொள்ளத்தக்கதல்ல.

மேலும் இச்செய்தி அபூஹுரைரா (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகத் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாகவோ, கூறியதாகவோ மேற்கண்ட செய்தியில் கூறப்படவில்லை.

தொப்புளுக்கு கீழே கைகளைக் கட்டினார்கள் என்பதற்கு இன்னும் ஒன்றிரண்டு அறிவிப்புகள் வேறு சில நூற்களில் இடம் பெற்றுள்ளன. அவை அனைத்துமே பலவீனமானவையாகவே உள்ளன.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் நெஞ்சின் மீது கைகளை வைத்தார்கள் என்று வரும் அறிவிப்பு மட்டுமே ஆதாரப்பூர்வமான ஸஹீஹான அறிவிப்பாகும்.

حدثنا يحيى بن سعيد عن سفيان حدثني سماك عن قبيصة بن هلب عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم ينصرف عن يمينه وعن يساره ورأيته قال يضع هذه على صدره وصف يحيى اليمنى على اليسرى فوق المفصل

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தொழுகையைில் ஸலாம் கொடுக்கும் போது) வலது புறமும் இடது புறமும் திரும்பியதை நான் பார்த்துள்ளேன். மேலும் அவர்கள் (தொழுகையில்) இதைத் தமது நெஞ்சின் மீது வைத்ததையும் நான் பார்த்துள்ளேன்என்று ஹுல்ப் அத்தாயீ (ரலி) அறிவிக்கிறார்.

யஹ்யா என்ற அறிவிப்பாளர் இதைத் தமது நெஞ்சின் மீது என்று கூறும் போது, வலது கையை இடது கை மணிக்கட்டின் மேல் வைத்து விளக்கிக் காட்டினார்.

நூல்: முஸ்னத் அஹ்மத் 22610

மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸின் அடிப்படையில் தொழுகையில் நெஞ்சின் மீது கைகளை வைக்க வேண்டும் என்பதே நபிவழியாகும்.

இரண்டாவது செய்தி

அத்தஹிய்யாத்து ஓதும் போது லா இலா ஹா என்ற வாசகம் வரும் போது வலது கையின் ஆள்காட்டி விரலை உயர்த்தி இல்லல்லாஹ் எனும் போது விரலை கீழே வைப்பது.
அறிவிப்பவர் : வாயில் பின் ஹிஜ்ர் (ரலி), நூல் : அபூ தாவூத் 726, அஃலாஹுஸ் ஸீனன் 2/883

இவ்வாறு ஒரு செய்தி அபூதாவூதிலும் மற்றொரு நூலிலும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

அத்தஹிய்யாத் ஓதும் போது ”லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகம் வரும் போது வலது கையின் ஆட்காட்டி விரலை உயர்த்தி இல்லல்லாஹ் எனும் போது கீழே வைப்பது என்ற கருத்தில் எந்த ஒரு நூலிலும் எந்த ஒரு செய்தியும் கிடையாது. சிலர் தாம் செய்வதை நியாயப்படுத்துவதற்காக இவ்வாறு இல்லாத ஒன்றை நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். இவ்வாறு இறைத்தூதர் மீது இட்டுக் கட்டிக் கூறுவது நிரந்தர நரகத்தில் கொண்டு போய் சேர்க்கின்ற பெரும்பாவமாகும்.

அபூதாவூதில் இடம் பெற்றுள்ள செய்தியையும் அதன் சரியான மொழிபெயர்ப்பையும் தருகின்றோம்.

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي قَالَ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ فَكَبَّرَ فَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ ثُمَّ أَخَذَ شِمَالَهُ بِيَمِينِهِ فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَهُمَا مِثْلَ ذَلِكَ ثُمَّ وَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ رَفَعَهُمَا مِثْلَ ذَلِكَ فَلَمَّا سَجَدَ وَضَعَ رَأْسَهُ بِذَلِكَ الْمَنْزِلِ مِنْ بَيْنِ يَدَيْهِ ثُمَّ جَلَسَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى وَحَدَّ مِرْفَقَهُ الْأَيْمَنَ عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَقَبَضَ ثِنْتَيْنِ وَحَلَّقَ حَلْقَةً وَرَأَيْتُهُ يَقُولُ هَكَذَا وَحَلَّقَ بِشْرٌ الْإِبْهَامَ وَالْوُسْطَى وَأَشَارَ بِالسَّبَّابَةِ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا زَائِدَةُ عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ قَالَ فِيهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى وَالرُّسْغِ وَالسَّاعِدِ وَقَالَ فِيهِ ثُمَّ جِئْتُ بَعْدَ ذَلِكَ فِي زَمَانٍ فِيهِ بَرْدٌ شَدِيدٌ فَرَأَيْتُ النَّاسَ عَلَيْهِمْ جُلُّ الثِّيَابِ تَحَرَّكُ أَيْدِيهِمْ تَحْتَ الثِّيَابِ (رواه أبوداود 726)

வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் எப்படித் தொழுகிறார்கள்? என்பதை உற்றுக் கவனிக்க வேண்டும் என்று நான் எண்ணினேன. (அவர்களின் தொழுகை முறையை நான் கவனித்தேன்). நபி (ஸல்) அவர்கள் கிப்லாவை முன்னோக்கி நின்று தக்பீர் கூறி தமது இரு கைகளையும் தமது இரு காது சோனைகளுக்கு நேராக உயர்த்தினார்கள். பின்னர் தமது வலது கையால் இடது கையினை பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் ருகூவு செய்ய நாடிய  போது இருகைகளையும் முன்னர் உயர்த்தியது போன்றே (காது சோனைகளுக்கு நேராக) உயர்த்தி பிறகு இரு கைகளையும் தமது இரு மூட்டுக்கால்களில் வைத்தார்கள். அவர்கள் ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தியபோதும் முன்னர் உயர்த்தியது போன்றே (காது சோனைகள் வரை) தமது இரு கைகளையும் உயர்த்தினார்கள். அவர்கள் ஸுஜுது செய்த போது தமது தலையை தமக்கு முன்னால் இந்த இடத்தில் வைத்தார்கள். பிறகு (தஷஹ்ஹுத் இருப்பில்) அமரும் போது தமது இடது காலை விரிப்பாக வைத்தார்கள். தமது இடது (முன்) கையை இடது தொடையின் மீதும் , தமது வலது முழங்கையை வலது தொடையின் மீதும் வைத்தார்கள். (சுண்டு விரல், மோதிர விரல்) இரண்டையும் மடக்கினார்கள். (கட்டை விரல் மற்றும் நடுவிரலை இணைத்து) ஒரு வளையமிட்டார்கள். தமது ஆட்காட்டி விரலால் இவ்வாறு ”இஷாரா” (சமிக்ஞை) செய்ததை நான் பார்த்தேன். (இவ்வாறு கூறும் போது) அறிவிப்பாளர் பிஸ்ர் என்பார் தமது நடுவிரல் மற்றும் கட்டை விரலை வளையமிட்டுக் காட்டினார்கள்.

மற்றொரு அறிவிப்பில ”(தக்பீர் கூறி) தமது வலது கையை இடது முன்கை, மணிக்கட்டு, குடங்கை ஆகியவற்றின் மீது வைத்தார்கள், என்று வந்துள்ளது.

இதன் பிறகு கடும் குளிர் காலத்தில் நான் (மறுபடியும்) வந்தேன். அப்போது மக்கள் ஆடைகளைப் போர்த்தி இருந்தனர். ஆடைகளின் கீழே அவர்களின் கைகள் அசைக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன் என்றும் இடம் பெற்றுள்ளது.

அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி),
அபூதாவூத் (726)
இதுதான் நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸ் ஆகும். இதில் எந்த இடத்திலும் ” போது லா இலா ஹா என்ற வாசகம் வரும் போது வலது கையின் ஆள்காட்டி விரலை உயர்த்தி இல்லல்லாஹ் எனும் போது விரலை கீழே வைக்க வேண்டும்” என்று இடம் பெறவில்லை.

மாறாக தஷஹ்ஹுத் இருப்பில் அமர்ந்த உடன் தமது ஆட்காட்டி விரலை உயர்த்தி ”இஷாரா” செய்தார்கள் என்றுதான் வந்துள்ளது. இந்த ”இஷாரா” என்பது விரலை அசைப்பதைத்தான் குறிக்கும் என்பதை அந்த ஹதீஸின் கீழ்பகுதியில் இடம்பெற்றுள்ள வாசகமே தெளிவுபடுத்துகிறது.

”இதன் பிறகு கடும் குளிர் காலத்தில் நான் (மறுபடியும்) வந்தேன். அப்போது மக்கள் ஆடைகளைப் போர்த்தி இருந்தனர். ஆடைகளின் கீழே அவர்களின் கைகள் அசைக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன்”

என்ற வாசகமே அது. எனவே இந்த ஹதீஸில் கூறப்படும் ”இஷாரா” என்பதை விரலை அசைப்பதைத்தான் குறிக்கும் என்பதை மிகத் தெளிவாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

இதனை பின்வரும் அறிவிப்பும் மிகத் தெளிவாக விளக்குகிறது.

18115حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ حَدَّثَنَا زَائِدَةُ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ أَخْبَرَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ الْحَضْرَمِيَّ أخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي قَالَ فَنَظَرْتُ إِلَيْهِ قَامَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى وَالرُّسْغِ وَالسَّاعِدِ ثُمَّ قَالَ لَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَرَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى فَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ بَيْنَ أَصَابِعِهِ فَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا ثُمَّ جِئْتُ بَعْدَ ذَلِكَ فِي زَمَانٍ فِيهِ بَرْدٌ فَرَأَيْتُ النَّاسَ عَلَيْهِمْ الثِّيَابُ تُحَرَّكُ أَيْدِيهِمْ مِنْ تَحْتِ الثِّيَابِ مِنْ الْبَرْدِ رواه أحمد

நபி (ஸல்) அவர்கள் தமது விரலை உயர்த்தினார்கள். பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் அதை அவர்கள் அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். இதன் பிறகு குளிர் காலத்தில் நான் (மறுபடியும்) வந்தேன். அப்போது மக்கள் ஆடைகளைப் போர்த்தி இருந்தனர். குளிரின் காரணத்தால் அவர்கள் போர்த்தியிருந்த ஆடைகளுக்குள் அவர்களின் கைகள் அசைந்து கொண்டிருந்ததை கண்டேன்.
அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி),

நூல் : அஹ்மது (18115)

இந்த ஹதீஸில் நபித்தோழர்களின் கைகள் அசைந்து கொண்டிருந்தது என்ற தகவல் மட்டும் இடம்பெறவில்லை. இதற்கு முன்பு நபி (ஸல்) அவர்கள் ஆட்காட்டி விரலை அசைத்தார்கள் என்ற தகவலும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. பின்னர் ஒரு காலத்தில் நான் மதீனா வந்த போதும் இது போல் நபித்தோழர்கள் நடந்தனர் என்று வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

இங்கே நபித்தோழர்களின் விரல்கள் அசைந்து கொண்டிருந்தது என்ற அர்த்தத்தில் தான் கைகள் அசைந்தது எனக் கூறப்பட்டுள்ளது. இதை ஹதீஸின் முன்பகுதி வாசகங்கள் தெளிவுபடுத்துகின்றது.

இவ்வாறு பேசக்கூடிய வழக்கம் அனைத்து மொழிகளிலும் உள்ளது. உதாரணமாக ஏதாவது ஒரு விரலில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதை நாம் பார்த்தால் விரலில் என்ன காயம்? என்று கேட்போம். இதையே சற்று வித்தியாசமாக கையில் என்ன காயம்? என்றும் கேட்போம்.

விரல் கையின் ஒரு பகுதியாக இருப்பதால் அதையே கை என்று கூறும் வழக்கம் மக்கள் பேச்சில் சர்வசாதாரணமாக இருக்கக்கூடியது தான். இந்த அடிப்படையில் தான் நபித்தோழர்களின் கைககள் அசைந்து கொண்டிருந்தது என இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தாரமியில் இடம் பெற்றுள்ள அறிவிப்பிலும் நபித்தோழர்கள் தங்கள் கைகளை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

1323 حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ أَخْبَرَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ أَخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي فَنَظرْتُ إِلَيْهِ فَقَامَ فَكَبَّرَ فَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى قَالَ ثُمَّ لَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَرَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ مِرْفَقَهُ الْأَيْمَنَ عَلَى فَخْذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ ثِنْتَيْنِ فَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ أُصْبُعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا قَالَ ثُمَّ جِئْتُ بَعْدَ ذَلِكَ فِي زَمَانٍ فِيهِ بَرْدٌ فَرَأَيْتُ عَلَى النَّاسِ جُلَّ الثِّيَابِ يُحَرِّكُونَ أَيْدِيَهُمْ مِنْ تَحْتِ الثِّيَابِ رواه الدارمي

இதற்குப் பிறகு குளிர் காலத்தில் நான் மறுபடியும் வந்தேன். அப்போது மக்கள் ஆடைகளைப் போர்த்தி இருந்த நிலையில் அந்த ஆடைகளுக்குள் தங்கள் கைகளை அசைத்துக் கொண்டிருந்தைப் பார்த்தேன்.
அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) நூல் : தாரமீ (1323)

மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து தஷஹ்ஹுத் இருப்பில் அமர்ந்து முதல் தொழுகை முடியும் வரை விரலை அசைத்துக் கொண்டிருப்பதுதான் நபி (ஸல்) அவர்கள் மற்றும் நபித்தோழர்களின் வழிமுறை என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

--
abdul kareem misc

No comments:

Post a Comment