பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, September 23, 2020

பெண்கள் கடைத்தெருக்களுக்குச்செல்லலாமா?

பெண்களுக்கான
 
நபிவழி சட்டங்கள்
 

பெண்கள் கடைத்தெருக்களுக்குச்செல்லலாமா?

    எந்தத் தேவையும் இல்லாமல் பெண்கள் கடைத்தெருக்களில் சுற்றித்திரியக்கூடாது. 

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்!

முந்தைய அறியாமைக் காலத்தில்வெளிப்படுத்தித் திரிந்தது போல்திரியாதீர்கள்!

தொழுகையை நிலை நாட்டுங்கள்!

ஸகாத்தைக் கொடுங்கள்!

அல்லாஹ்வுக்கும், அவனதுதூதருக்கும் கட்டுப்படுங்கள்!

இவ்வீட்டினராகிய உங்களை விட்டுஅசுத்தத்தை நீக்கவும், உங்களைமுழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமேஅல்லாஹ் நாடுகிறான். 

அல்குர்ஆன் (33 : 33)

    அறியாமைக்காலத்தில் வெளியில்சுற்றித்திரிந்ததைப் போல்சுற்றித்திரியக்கூடாது என்று நான்உன்னிடத்தில் உறுதிப்பிரமாணம்வாங்கிக்கொள்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் உமைமா பின்த் ருகைகா (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.  

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)

நூல் : அஹ்மத் (6554)

    பெண் மறைக்கப்பட வேண்டியவள். அவள் வெளியே சென்றால்(வழிகெடுப்பதற்காக) ஷைத்தான்அவளை நோக்கிவந்துவிடுகிறான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல் : திர்மிதி (1093)

மார்க்க விளக்கப் பொதுகூட்டங்கள் திருமணங்கள் உரிமையை மீட்டெடுப்பதற்கு உதவும் போராட்டங்கள் போன்ற நல்ல காரியங்களுக்காகவும் தேவையான விஷயங்களுக்காகவும் செல்வதில் தவறில்லை. அவ்வாறு செல்லும் போது பர்தாவை முழுமையாக கடைபிடித்துச் செல்ல வேண்டும். 

    நபி (ஸல்) அவர்களின் காலத்தில்பெண்கள் போர்க்களத்திற்கு வந்துகாயம்பட்ட போர்வீரர்களுக்குமருத்துவம் செய்யும் பணியைசெய்திருக்கிறார்கள். பெருநாள்திடலுக்கு வந்து நன்மையானகாரியத்தில் கலந்துகொண்டார்கள்.

(பெண்களாகிய) நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த போர்கüல் காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்; நோயாüகளைக் கவனித்தோம்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் “எங்களில்ஒரு பெண்ணுக்கு மேலங்கிஇல்லாவிட்டால் (பெருநாள்தொழுகைக்குச்) செல்லாமல்(வீட்டிலேயே இருப்பது) குற்றமா?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(ஒருபெண்ணிடம் மேலங்கிஇல்லாவிட்டால்) அவளுடைய தோழிதனது மேலங்கிகறில் ஒன்றைஅவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! அவள் நன்மையான காரியங்களிலும்இறைநம்பிக்கையாளர்களின்பிரசாரங்கüலும் கலந்துகொள்ளட்டும்!” என்று சொன்னார்கள். 

அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி)

நூல்: புகாரி (324)  

பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி நபி (ஸல்) அவர்களின் துணைவியாரானன சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள்.

அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு “சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீஙகள் யார் என்று எங்களுக்குத்தெரியாம–ல்இல்லை நீங்கள் (யார் என்றுஅடையாளம் தெரிகின்ற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள்பாருங்கள்!” என்று சொன்னார்கள்.

சவ்தா (ரலி) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பி விட்டார்கள். சவ்தா (ரலி) அவர்கள் வீட்டினுள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் என்தேவை ஒன்றிற்காக வெளியேசென்றேன். உமர் (ரலி) அவர்கள்என்னிடம் இவ்வாறெல்லாம்சொன்னார்கள்” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு “வஹீ‘ (வேதவெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் “நீங்கள்உங்கள் தேவைக்காக வெளியேசெல்லலாம் என்று உங்களுக்குஅனுமதிக்கப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (4795)

ஏகத்துவம்.

No comments:

Post a Comment