பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, September 23, 2020

திருமணம் செய்ய தடைசெய்யப்பட்டவர்களுடன் இருக்கும் போது…(ஹிஜாப்)

பெண்களுக்கான நபிவழி சட்டங்கள்

திருமணம் செய்ய தடைசெய்யப்பட்டவர்களுடன் இருக்கும் போது…(ஹிஜாப்)

திருமணம் செய்யதடைசெய்யப்பட்டவர்களுடன்இருக்கும் போது…

    பெண்கள் அண்ணிய ஆண்களிடம் முழுமையாக உடலை மறைக்க  வேண்டியதைப் போன்று திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட நெருங்கிய உறவினர்களிடம் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை பின் வரும் நபி மொழிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளுமாறும் தமதுகற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கைகொண்ட பெண்களுக்குக்கூறுவீராக! அவர்கள் தமதுஅலங்காரத்தில் வெளியேதெரிபவை தவிர மற்றவற்றைவெளிப்படுத்த வேண்டாம். தமதுமுக்காடுகளை மார்பின் மேல்போட்டுக் கொள்ளட்டும்.

தமது கணவர்கள், தமதுதந்தையர், தமதுகணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமதுகணவர்களின் புதல்வர்கள், தமதுசகோதரர்கள், தமதுசகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச்சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின்காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களைஅறிந்து கொள்ளாத குழந்தைகள்தவிர மற்றவர்களிடம் தமதுஅலங்காரத்தை அவர்கள்வெளிப்படுத்த வேண்டாம்.

அல்குர்ஆன் (24 : 31)

    நபி (ஸல்) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களுக்கு ஒரு அடிமையை அன்பளிப்பாக கொடுத்தார்கள். பாத்திமா (ரலி) அவர்கள் மீது (சிறிய) ஆடை ஒன்று இருந்தது. அந்த ஆடை மூலம் அவர்கள் தலையை மூடினால் கால் வெளியே தெரிந்தது. காலைமூடினால் தலை தெரிந்தது. இதைநபி (ஸல்) அவர்கள் கவனித்தபோது  உன்னிடத்தில் உனதுதந்தையும் அடிமையும் தான்இருக்கிறார்கள். அதனால் உன்மீது குற்றம் இல்லை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் (3582) 

மற்ற பெண்களோடு நடந்துகொள்ளும் முறை

மஹ்ரமான ( அதாவது திருமணம்செய்வதற்கு தடை செய்யப்பட்ட) ஆண்கள் முன்னால் பெண்கள்முழுமையான பர்தாவைப் பேணவேண்டிய அவசியம் இல்லை. இவர்களுக்கு முன்னால் காட்சித்தருவதைப் போன்றே மற்றபெண்களுக்கு முன்னாலும்சாதாரணமான ஆடையில்பெண்கள் வருவது தவறுகிடையாது. 

தமது பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளுமாறும் தமதுகற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கைகொண்ட பெண்களுக்குக்கூறுவீராக! அவர்கள் தமதுஅலங்காரத்தில் வெளியேதெரிபவை தவிர மற்றவற்றைவெளிப்படுத்த வேண்டாம். தமதுமுக்காடுகளை மார்பின் மேல்போட்டுக் கொள்ளட்டும்.

தமது கணவர்கள், தமதுதந்தையர், தமதுகணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமதுகணவர்களின் புதல்வர்கள், தமதுசகோதரர்கள், தமதுசகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச்சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின்காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களைஅறிந்து கொள்ளாத குழந்தைகள்தவிர மற்றவர்களிடம் தமதுஅலங்காரத்தை அவர்கள்வெளிப்படுத்த வேண்டாம்.

அல்குர்ஆன் (24 : 31)

என்றாலும் அந்தரங்க உறுப்புக்களை பெண்கள் மற்ற பெண்களிடம் காட்டுவது கூடாது. இவளது மர்ம உறுப்பை பார்க்கும் உரிமை அவளது கணவனுக்குத் தவிர வேறு யாருக்கும் இல்லை. இதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ளலம். 

எங்கள் மறை உறுப்புகளில் எதை மறைக்க வேண்டும் எவற்றை மறைக்காமல் இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன் அதற்கு நபி (ஸல்) அவர்கள் உன் மனைவிஉன் அடிமை பெண்களிடம் தவிரமற்றவர்களிடம் உன் மறைஉறுப்புக்களை பாதுகாத்து கொள்என்று விடையளித்தார்கள் ஒருஆண் இன்னொரு ஆணுடன்இருக்கும் போது மறை உறுப்பைகாத்து கொள்ள வேண்டுமா? என்று கேட்டேன் அதற்கு நபி (ஸல்) அவர்கள் எவரும் பார்க்க முடியாதவாறு உம்மால் மறைத்துக்கொள்ள முடியுமானால் மறைத்துக்கொள் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் ; முஆவியா பின் ஹைதா (ரலி)

நூல் : திர்மிதி (2693)

ஒரு ஆண் மற்ற ஆண்களிடத்தில்மறை உறுப்பைவெளிப்படுத்துவதைதடுக்கப்பட்டுள்ளது. இதேச் சட்டம்பெண்களுக்கும் உரியதாகும். 

ஒரு ஆண் மற்றொரு ஆணுடையமறை உறுப்பை பார்க்க வேண்டாம்ஒரு பெண் மற்றொருபெண்ணுடைய மறும உறுப்பைபார்க்க வேண்டாம் ஒரு ஆன்மற்றொரு ஆணுடன் ஒருஆடைக்குள் படுக்க வேண்டாம்ஒரு பெண் மற்றொருபெண்ணோடு ஒரு ஆடைக்குள்படுக்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 512

ஒரே ஆடைக்குள் இரு பெண்கள் படுப்பது தவறு என்றும் மேலுள்ள ஹதீஸ் உணர்த்துகிறது.

ஏகத்துவம்.

No comments:

Post a Comment