பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, September 23, 2020

மாப்பிள்ளை தேடவே பூப்பெய்தல்விழா என்பது சரியா?

பெண்களுக்கான நபிவழி சட்டங்கள்

மாப்பிள்ளை தேடவே பூப்பெய்தல்விழா என்பது சரியா?

பெண்கள் பருவமடையும் போது அதை விளம்பரம் செய்தால் தான் பெண் கேட்டு வருவார்கள். இந்த வீட்டில் திருமணத்துக்குதகுதியான ஒரு பெண்இருக்கிறாள் என்பது அப்போதுதான் தெரியும் என்று இதற்குக் காரணம் கூறுகிறார்கள். இது சரியா?

முஸ்லிம்களைப் பொருத்த வரைதங்களின் அனைத்துகாரியங்களையும் அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியில்தான் நடத்த வேண்டும். சில காரணங்களை நாமாகக் கற்பனை செய்து கொண்டு சடங்குகளை உருவாக்கக் கூடாது.

பெண்கள் புகுந்த வீட்டில்சிரமப்படக்கூடாதுஎன்பதற்காகவே வரதட்சணைகொடுக்கிறோம் என்று கூறுவது போலவும்,

கள்ளச் சாராயம் குடித்து சாகக்கூடாது என்பதற்காகவேடாஸ்மாக் கடை திறந்துள்ளோம்என்பது போலவும் எல்லா தவறானகாரியங்களுக்கும் காரணங்கள்கூறப்படுகின்றன. இந்தக்காரணத்தில் சிறிதும் உண்மைஇல்லை.

உலகில் இந்தியா தவிர வேறுநாடுகளில் எல்லாம் பருவ வயதுஅடைவதற்கு விழாக்கள் இல்லை. அங்கெல்லாம் பெண்களுக்குவரண் கிடைக்கவில்லையா?

ஆணுக்குத் திருமணம் செய்ய எண்ணும் பெற்றோர் எந்த வீட்டில் பெண் இருக்கிறார் என்று விசாரித்துப் பார்த்து பெண் கேட்டு வருவார்கள். அது போல் பெண் வீட்டாரும் விசாரித்துப் பார்த்து மாப்பிள்ளை பேசுவார்கள். பூப்பெய்தல் விழாவுக்கும்இதற்கும் சம்மந்தம் இல்லை.

பெண்ணுக்கு மாப்பிள்ளைஅவசியம் என்பது போல்ஆணுக்கும் பெண் அவசியம்தானே?

அப்படியானால் எங்கள் வீட்டில்வயசுக்கு வந்த ஆண்இருக்கிறான் என்பதற்காக ஏன்விழா நடத்தவில்லை?

கொடுத்த அன்பளிப்பை மொய் எனும் பெயரில் திரும்பப் பெறுவதற்காகவே இது போன்ற விழாக்களை மற்ற மதத்தவர்கள் உருவாக்கினார்கள். கொடுத்த அன்பளிப்பைத் திரும்பக் கேட்கக் கூடாது என்ற கொள்கையுடைய இஸ்லாத்தில் இந்த விழா தேவையற்றது.

ஏகத்துவம்

No comments:

Post a Comment