பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, September 23, 2020

ஆண்களுடன் தனித்திருக்கக்கூடாது

.
பெண்களுக்கான

நபிவழி சட்டங்கள்

ஆண்களுடன் தனித்திருக்கக்கூடாது

மேற்கண்ட (24 : 31) வசனத்தில் சொல்லப்பட்டவர்களைத் தவிர்த்து மற்றவர்களிடத்தில் பெண்கள் பர்தாவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பெரும்பாலான பெண்கள் கணவனுடைய அண்ணன் தம்பிமார்களின் முன்பு சர்வசாதாரணமாக பர்தா இல்லாமல் வந்து செல்கிறார்கள். அவர்களுடன் தனித்திருப்பதை பெரிய குற்றமாக இவர்கள் கருதுவதில்லை. இது தவறாகும். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள்இருக்குமிடத்திற்குச் செல்லவேண்டாம் என உங்களை நான்எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர்,

“அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன்போன்ற) உறவினர்கள் (அவள்இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்னகூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கணவருடைய(சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்குநிகரானவர்கள்” என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : உக்பது பின் ஆமிர் (ரலி)

நூல் : புகாரி (5232)

“ஒரு பெண்ணுடன் எந்த(அன்னிய) ஆடவனும்தனிமையில் இருக்கலாகாது; (மணமுடிக்கத் தகாத) நெருங்கியஉறவினருடன் (அவள்) இருக்கும்போது தவிர!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (5233)

ஏகத்துவம்.

No comments:

Post a Comment