பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 3, 2019

நன்மைகளை - 43

_*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*_

_*✍🏼...நன்மைகளை வாரி*_
                          ⤵
         _*வழங்கும் தொழுகை*_

         _*✍🏼...தொடர் [ 43 ]*_

*☄ஜமாஅத்தாகத்*
          *தொழுவதன்*
                      *சிறப்புகள் { 13 }*

*🏖வரிசையை*
           *சீராக்குவதன்*
                    *சிறப்புகள் { 01 }🏖*

*☄வரிசைக்கு நபிகளார்*
     *கொடுத்த முக்கியத்துவம்*

ﺣﺪﺛﻨﺎ ﺃﺣﻤﺪ اﺑﻦ ﺃﺑﻲ ﺭﺟﺎء، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻣﻌﺎﻭﻳﺔ ﺑﻦ ﻋﻤﺮﻭ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺯاﺋﺪﺓ ﺑﻦ ﻗﺪاﻣﺔ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺣﻤﻴﺪ اﻟﻄﻮﻳﻞ، _*ﺣﺪﺛﻨﺎ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ، ﻗﺎﻝ: ﺃﻗﻴﻤﺖ اﻟﺼﻼﺓ ﻓﺄﻗﺒﻞ ﻋﻠﻴﻨﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﻮﺟﻬﻪ، ﻓﻘﺎﻝ: «ﺃﻗﻴﻤﻮا ﺻﻔﻮﻓﻜﻢ، ﻭﺗﺮاﺻﻮا، ﻓﺈﻧﻲ ﺃﺭاﻛﻢ ﻣﻦ ﻭﺭاء ﻇﻬﺮﻱ*_

_*🍃அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு நாள்) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் தம் முகத்தைத் திருப்பி, வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முதுகுக்குப் பின்புறமாகவும் உங்களை நான் காண்கின்றேன் என்று கூறினார்கள்.*_

*📚(நூல்: புகாரி 719)📚*

*🏮🍂இந்தச் செய்தியில் நபியவர்கள் முதுகுக்குப் பின்புறமாகவும் பார்க்கிறார்கள் என்று இடம் பெற்றுள்ளது. சில வழிகேடர்கள் இந்த ஹதீஸைச் சரியாக விளங்கிக் கொள்ளாமல் இறைவனுக்கு இணை கற்பிக்கும் காரியங்களை நியாயப்படுத்துவதற்காக தவறான பொருளில் பயன்படுத்தி வருகின்றனர்.*

*🏮🍂முதுகுக்குப் பின்புறமாக உள்ளவற்றை நபியவர்கள் பார்க்கிறார்கள் என்பதன் சரியான பொருள், நபியவர்கள் ருகூவு செய்யும் போது, சுஜூது செய்யும் போது பின்புறம் நிற்பவர்களின் மீது படுகின்ற பார்வையைத் தான் குறிப்பிடுகின்றார்கள்.* இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

ﺣﺪﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺑﺸﺎﺭ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻏﻨﺪﺭ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺷﻌﺒﺔ، ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﻗﺘﺎﺩﺓ، _*ﻋﻦ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: " ﺃﻗﻴﻤﻮا اﻟﺮﻛﻮﻉ ﻭاﻟﺴﺠﻮﺩ ﻓﻮ اﻟﻠﻪ ﺇﻧﻲ ﻷﺭاﻛﻢ ﻣﻦ ﺑﻌﺪﻱ - ﻭﺭﺑﻤﺎ ﻗﺎﻝ: ﻣﻦ ﺑﻌﺪ ﻇﻬﺮﻱ - ﺇﺫا ﺭﻛﻌﺘﻢ ﻭﺳﺠﺪﺗﻢ "*_

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ருகூஉவையும் சஜ்தாவையும் நிறைவாகச் செய்யுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் "எனக்குப் பின்புறமாக' அல்லது "என் முதுகுக்குப் பின்புறமாக' நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யும் போதும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போதும் உங்களைப் பார்க்கிறேன்.*_

*🎙அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),*

*📚நூல்: புகாரி 742, 6644📚*

*🏮🍂பொதுவாகத் தொழுகையில் ருகூவு அல்லது ஸஜ்தா செய்யும் போது முன்னால் இருப்பவருக்குப் பின்னால் உள்ள வரிசை தெரியத் தான் செய்யும். எனவே தான், நீங்கள் வரிசையைச் சரி செய்யாவிட்டால் ருகூவின் போது பின்புறம் நான் பார்த்து விடுவேன் என்று சாதாரண அர்த்தத்தில் நபி (ஸல்) அவர்கள் சொன்னதை இப்படி அனர்த்தம் செய்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது.*

*🏮🍂ஒரு வாதத்திற்கு, பின்னால் உள்ளதைப் பார்க்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வைத்துக் கொண்டாலும் தொழுகையின் போது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் காண்பித்துக் கொடுக்கிறான் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                            ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment