பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, December 24, 2010

கடமையான தொழுகைக்குப் பின் ஆயதுல் குர்ஸி

கடமையான தொழுகைக்குப் பின் ஆயதுல் குர்ஸி

கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்சி ஓதுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளதா

கடமையான தொழுகைக்குப் பிறகு ஆயத்துல் குர்சி ஓதுவதைச் சிறப்பித்து பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்தியை இமாம் நஸாயீ அவர்கள் அஸ்ஸுனனுல் குப்ரா எனும் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

السنن الكبرى للنسائي  - كتاب عمل اليوم والليلة
 ثواب من قرأ آية الكرسي دبر كل صلاة - حديث : ‏9585   ‏8603 
 أخبرنا الحسين بن بشر ، بطرسوس ، كتبنا عنه قال : حدثنا محمد بن حمير قال : حدثنا محمد بن زياد ، عن أبي أمامة قال : قال رسول الله صلى الله عليه وسلم : " من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت " *
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்சியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை.
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)
நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா (9585)

இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் இது ஆதாரப்பூர்வமான செய்தி. எனவே ஆயத்துல் குர்ஸியை ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதிக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment