பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, July 30, 2010

ஆயத்துல் குர்ஸி ஓதினால் வறுமை விலகும் என்பதும்??

ஆயத்துல் குர்ஸி ஓதினால் வறுமை விலகும் என்பதும், 70000 மலக்குகளின் பாதுகாப்பு கிடைக்கும் என்பதும், 40 ஹஜ் செய்த நன்மை கிடைக்கும் என்பதும், 40 படித்தரங்கள் உயர்த்தப்படும் என்பதும் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின் யாரெல்லாம் ஆயதுல்குர்ஸி (குர்ஆன் 2:255) ஓதுகிறாரோ, மரணத்தைத் தவிர அவர் சொர்க்கத்தை அடைவதிலிருந்து தடுப்பது ஏதுமில்லை என்ற நபிமொழியும் ஆதாரப்பூர்மானதா?

யார் முஃமினா இருக்கும் நிலையில் ஆயத்துல் குர்ஸியை ஓதுவாரோ அது அனைத்து தீங்கிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அல்லு அஃபாவுல் உகைலீ, பாகம் : 2, பக்கம் : 324

இச்செய்தில் இடம்பெறும் அப்துர்ரஹ்மான் பின் அபீபக்ர் பின் அபீ மலீக்கா என்பவர் பலவீனமானவராவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஹாமீன் அல் முஃமீன் என்ற அத்தியாயத்தை இலைஹில் மஸீர் வரை காலையில் ஓதுவாரோ மேலும் ஆயத்துல் குர்ஸியையும் காலை நேரத்தில் ஓதுவாரோ அவருக்கு மாலைநேரம் இவ்விரு ஆயத்துகளின் காரணத்தால் பாதுகாப்படுவார். யார் மாலை நேரத்தில் இவ்விரண்டையும் ஓதுவாரோ அவர் காலைவரை இவ்விரு ஆயத்துகளின் காரணத்தால் பாதுகாக்கப்படுவார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி (2804)

இந்த ஹதீஸ் தாரமி (3252) ஷுஅபுல் ஈமான் (பாகம் 2, பக்கம் :483) ஷரஹ் சுன்னா (பாகம்: 2, பக்கம்: 349) ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள் ளது.

இந்த செய்தி பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்கள் (இச் செய்தியில் இடம் பெறும்) அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் அல்முலைக்கி என்பவரை அவரின் நினைவாற்றல் குறைவின் காரணத்தால் ஹதீஸ்கலை அறிஞர்க ளில் சிலர் விமர்சித்துள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இரண்டாவது இதே ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அப்துர் ரஹ் மான் பின் அபீ பக்ர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை இமாம் புகாரி இவர் தகுதியற்றவர் என்றும். இமாம் இப்னு மயீன் அவர்கள், இவர் பலவீ னமானவர் என்றும். இமாம் அஹ்மத் அவர்கள் ஹதீஸ் துறையில் நிராகரிக் கப்பட்டவர் என்றும். இமாம் நஸயீ அவர்கள் கைவிடப்பட்டவர் என்று விமர்சித்துள்ளனர்.
நூல்: மீஸானுல் இஃதிதால்,பாகம்: 4, பக்கம்: 263

யார் குர்பானி அறுக்கும் நாள் (ஹஜ்ஜுப் பெருநாள்) அன்று இரண்டு ரக்அத் தொழுது, ஒவ்வொரு ரக்அத்திலும் ஸுரத்துல் பாத்திஹா பதி னைந்து தடவையும் குல்ஹுவல்லாஹு அஹத் பதினைந்து தடவையும் குல் அவூது பிரப்பில் பலக் பதினைந்து தடவையும் குல் அவூது பிரப்பிந் நாஸ் பதினைந்து தடவையும் ஓதி ஸலாம் கொடுத்த பின்னர் ஆயத்துல் குர்ஸியை மூன்று தடவை ஓதினால் அல்லாஹ் பதினைந்து தடவை மன் னிப்பு வழங்குவான். அவருடை பெயரை சொர்க்கவாதிகளில் ஆக்குவான். வெளிப்படையான அந்தரங்கமான பாவங்களை மன்னிப்பான். அவர் ஓதி ஒவ்வொரு ஆயத்துக்கு ஹஜ், உம்ரா செய்த நன்மையை பதிவு செய்வான், இஸ்மாயீல் (அலை) அவர்களின் குழந்தைகளில் அறுபது நபர்களை விடு தலை செய்தவர்களைப் போன்று ஆக்குவான். மேலும் அவர் இதை செய் ததிலிருந்து அடுத்த ஜுமுஆக்கிடையில் இறந்தால் அவர் ஷஹீதாக மர ணித்தவராக கணிக்கப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி), நூல் : அல்மவ்லூஆத் - இப்னுல் ஜவ்ஸி, பாகம் : 2, பக்கம் : 134

இச்செய்தியில் அஹ்மத் பின் முஹம்மத் பின் காலிப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நபிமொழிகளை இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர். எனவே இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது.

கடமையான தொழுகைக்கு பிறகு ஆயத்துல் குர்ஸி ஓதினால் அவர் சொர்க்கம் செல்வார் என்ற கருத்தில் அலீ (ரலி), ஜாபிர் (ரலி), முஃகீரா பின் ஷுஃபா (ரலி), அபூ உமாமா (ரலி) ஆகியோர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ்களின் தரங்களைப் பற்றி ஆய்வு செய்வோம்.

அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி :

ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தை தவிர வேறு எதுவும் தடுக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி), நூல் : ஷுஅபுல் ஈமான்-பைஹகீ, பாகம் : பக்கம் : 2, பக்கம் : 458

இச்செய்தியில் நஹ்ஷல் பின் ஸயீத் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பொய்யர் என்று குற்றம் சாட்டப்பட்டவர்.

இமாம் அபூதாவூத், இஸ்ஹாக் பின் ராஹவைஹி ஆகியோர் இவர் பொய்யர் என்றும் இப்னு மயீன் இவர் நம்பகமானவர் இல்லை என்றும். இமாம் அபூஸர்ஆ, தாரகுத்னீ ஆகியோர் இவர் பலவீனமானவர் என்றும். இமாம் அபூஹாத்திம் அவர்கள் இவர் பலம்வாய்ந்தவர் இல்லை என்றும் ஹதீஸ்துறையில் கைவிடப்பட்டவர் என்றும் கூறியுள்ளார்கள். இமாம் நஸயீ அவர்கள் இவர் ஹதீஸ்துறையில் கைவிடப்பட்டவர் என்றும். இப்னு ஹிப்பான் அவர்கள் இவர் நம்பகமானவர்கள் அறிவிக்காத ஹதீஸ்களை அவர்கள் அறிவித்ததாக கூறுபவர், இவருடைய செய்திகளை ஆச்சரிய மான செய்திகள் என்பதற்காகவே தவிர ஹதீஸ் நூல்களில் எழுதுக் கூடாது என்றும். இவர் லஹ்ஹாக் மூலம் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறி விப்பவர் என்று நுக்காஸ் அவர்களும் கூறியுள்ளனர். நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 10, பக்கம்: 427

மேலும் இச்செய்தியை பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களும் அந்த செய்தியின் இறுதியில் இதன் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இதைப் போன்று ஸஹீஹ் இப்னு ஹிப்பானில் (பாகம் :2, பக்கம் : 76) இடம் பெற்றுள்ளது. இதில் இடம்பெறும் ஹஃப்ஸ் பின் உமர் அர்ரிகாஷி என்பவர் யாரென அறியப்படாதவர்.

பாத்திஹா அத்தியாயமும் ஆயத்துல் குர்ஸியும் ஆலு இம்ரானில் ஷஹி தல்லாஹு அன்னஹு லாயிலாஹா இல்லா ஹுவ என்ற ஆயத்தும் குலில்லாஹும்ம மாலிகுல் முல்கி என்ற ஆயத்தும் (அர்ஷின் கீழ்) தொங்க விடப்பட்டவைகளாகும். அல்லாஹ்வுக்கும் அதற்கும் மத்தியில் எந்த தடை யும் இல்லை. அல்லாஹ் இவைகளை பூமியில் இறக்குவதற்கு நாடிய போது அவை களை அர்ஷோடு தொங்கி கொண்டு, இறைவா! நீ எங்களை பூமியின் பக்கமும் உனக்கு மாறு செய்பவர்களின் பக்கமும் அனுப்புகிறாயே என்று கேட்டது. என்மீது சத்தியமிட்டு கூறுகிறேன்: என்னுடைய அடியார்களில் யார், ஒவ்வொரு தொழுகைக்குப்பின்னும் அதை ஓதுவாரோ அவருக்கு சொர்க்கத்தை அவர் தங்குமிடமாக நான் ஆக்குவேன். அல்லது பரிசுத்த மான இடத்தில் தங்க வைப்பேன். அல்லது மறைத்துவைக்கப்பட்ட தன் கண்களால் ஒவ்வொரு நாளும் எழுபது தடவை அவரைப் பார்ப்பேன். அல்லது ஒவ்வொரு நாளும் எழுபது தேவைகளை பூர்த்தி செய்வேன். அல்லது ஒவ்வொரு விரோதிகளிடமிருந்தும் நான் பாதுகாப்பு அளிப்பேன். அவர்களிடமிருந்து உதவிபுரிவேன். அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தைத் தவிர வேறு எதுவும் தடுக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி), நூல்: அமலுல் யவ்மி வல் லைலா, பாகம்: 1, பக்கம்: 238

இந்த செய்தியில் இடம் பெறும் அபூ ஜஅஃபர் பின் பக்ர் என்பவர் பற்றி குறிப்புகள் நாம் பார்த்தவரை கிடைக்கவில்லை. இதில் இடம் பெறும் முஹம்மத் பின் ஸன்பூர் என்பவரைப் பற்றி குறையும் நிறையும் கூறப்பட் டுள்ளது. குறிப்பாக இவர் அல்ஹாரிஸ் பின் உமைர் வழியாக அடிப்படை யில்லாத மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவித்துள்ளார் என்று மஸ்லமா அவர்கள் கூறிப்பிட்டுள்ளார்கள். இந்த செய்தி அல்ஹாரிஸ் பின் உமைர் வழியாகவே முஹம்மத் பின் ஸன்பூர் என்பவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இடம் பெறும் அல்ஹாரிஸ் பின் உமைர் என்பவரை பலர் நம்பக மானவர் என்று கூறிப்பிட்டிருந்தாலும் இவரின் இந்த செய்தியை குறிப் பிட்டு எழுதும் இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் இவர் நம்பகமானவர் கள் பெயரை பயன்படுத்தி இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பவர் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கள். மேலும் இந்த செய்தி குறிப்பிட்டு இது அடிப்படையில்லாத இட்டுக்கப்பட்ட செய்தி என்று விமர்சனம் செய்துள்ளார்கள். (நூல் : அல்மஜ்ரூஹீன், பாகம்: 1, பக்கம் : 223)

இதே கருத்தில் சில வாசகங்கள் மாற்றத்துடன் லஆலில் மஸ்னூஆ என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இதுவும் தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்.

இது தொடர்பு அறுந்த செய்தியாகும் என்று இப்னு அதீ அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : அல்காமில் லி இப்னி அதீ, பாகம் : 7, பக்கம் : 90)

முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் மூலம் அறிவிப்பட்ட செய்தி :
ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தை தவிர வேறு எதுவும் தடுக்காது. அவர் மரணித்துவிட்டால் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முகீரா (ரலி), நூல் : ஹில்யாத்துல் அவ்லியா, பாகம் :3, பக்கம் :221

இச் செய்தியில் உமர் பின் இப்ராஹீம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப்பற்றி அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

உமர் பின் இப்ராஹீம் என்பவர் பலவீனமானவர் (நூல் : அல்முக்னீ ஃபீ லுஅஃபா, பாகம் :2, பக்கம் :279)

இவருடைய ஹதீஸ்களுக்கு ஒத்ததாக யாருடைய அறிவிப்பும் இருக்காது. (நூல் : லிஸானுல் மீஸான், பாகம் : 4, பக்கம் :279)

ஜாபிர் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தி:
யார் ஐவேளைத் தொழுகைக்கு பிறகு ஆயத்துல் குர்ஸியை தொடர்ந்து ஓதிவந்தால் மரணத்திற்குரிய வானவர் வந்து அவருடைய உயிரை கைப்பற்றுவதைத் தவிர வேறு எதுவும் அவரை சொர்க்கம் செல்வதை தடுக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : அல்காமில் லி இப்னு அதீ, பாகம் : 3, பக்கம் : 40

இச்செய்தியில் இடம் பெறும் அபூஜுனைத் காலித் பின் ஹுஸைன் என்பவரை இச்செய்தியை பதிவு செய்த இப்னு அதீ அவர்கள் பின்வரு மாறு கூறியுள்ளார்கள்:

இவரை யாஹ்யா பின் மயீன் அவர்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். மேலும் இவருடைய பெரும்பான்மையான செய்திகள் பலவீனமானவர்கள் மூலமாகவும் யாரென அறியப்படாதவர்கள் மூலமாக இடம்பெற்றுள்ளது. நூல்: அல்காமில் பீ லுபாயிர் ரிஜால், பாகம்: 3, பக்கம்: 40

இதே செய்தி காமில் ஃபீ லுபாயிர் ரிஜால் (பாகம் 3 பக்கம் 40) இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் அபூஜுனைத் காலித் பின் ஹுஸைன் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரையும் ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

அறிஞர் யஹ்யா பின் மயீன் அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும். இப்னு அதீ அவர்கள் இவருடைய பெருபான்மையான ஹதீஸ்கள் பலவீன மானவர்கள் மூலமாகவும் யாரென்று அறியப்படாதவர்கள் மூலமாகவும் இடம்பெற்றுள்ளது.
நூல்: அல்காமில் பீ லுபாயிர் ரிஜால், பாகம்: 3, பக்கம்: 40

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தி :
யார் ஆயத்துல் குர்ஸியை ஐவேளைத் தொழுகைக்கு பிறகு ஓதுவாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), நூல் : ஜம்ஹரத்துல் அஜ்ஸாயில் ஹதீஸிய்யா, பாகம் :1, பக்கம் : 20)

இச் செய்தியில் பக்கிய்யா பின் வலீத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை ஹதீஸ்கலை அறிஞர்கள் குறைகூறியுள்ளார்கள்.

அபூமுஸ்ஹிர் அவர்கள் இவரைப் பற்றி இரத்தினச் சுருக்கமாக இவ்வாறு கூறியுள்ளார்கள் : பக்கிய்யா உடைய ஹதீஸ்கள் தூய்மையானவை அல்ல! அவருடை ஹதீஸ்களிலிருந்து நீ தவிர்ந்து கொள் என்று கவிதை நடையில் கூறியுள்ளார்கள். (நூல் : மீஸானுல் இஃதிதால் , பாகம் : 2, பக்கம் :46)

மேலும் இச்செய்தில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளர் ஜஸர் பின் அல்ஹஸன் என்பவரை இமாம் நஸயீ, அல்ஜவ்ஸஜானீ ஆகியோர் பலவீனமானர் என்று கூறியுள்ளார்கள். இவர் எந்த மதிப்பும் இல்லாதவர் என்று இமாம் இப்னு மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : மீஸானுல் இஃதிதால் பாகம் : 2, பக்கம் : 123)

அபூ உமாமா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தி :
அபூ உமாமா (ரலி) அவர்கள் வழியாக தப்ரானி அவர்களின் அல்முஃஜ முல் அவ்ஸத் (பாகம் : 8, பக்கம் : 92) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் போன்று தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் (பாகம்:8, பக்கம் : 114) இடம் பெற்றுள்ளது. இந்நூல்களில் ஹாரூன் பின் தாவூத் அந்நகார் என்பவர் இடம் பெற்றுள்ளளார். அவரின் நம்பகத்தன்மை பற்றி விவரங்கள் கிடைக்க வில்லை.

இதே போன்று முஸ்னதுஸ் ஷாமீன் என்று நூலில் (பாகம் : 2, பக்கம்:9) இடம் பெற்றுள்ளது. இதிலும் ஹாரூன் பின் தாவூத் அந்நக்கார் என்பவரே இடம்பெற்றுள்ளார்.

இதே செய்தி அமலுல் யவ்மி வ லைலா, பாகம் : 1, பக்கம் :237) இடம் பெற்றுள்ளது. இதில் அல்யமான் பின் ஸயீத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர். (மஜ்மவுஸ் ஸாவயித், பாகம் : 3, பக்கம் : 167)

இதே செய்தி அஹ்பார் உஸ்பஹான் என்ற நூலில் (பாகம் :5, பக்கம் : 189) இடம்பெற்றுள்ளது. இதில் இடம் பெறும் ரிழ்வான் பின் ஸயீத் என்ப வரின் நம்பத்தன்மை அறியப்படவில்லை.

தொழுகைக்குப் பின் ஆயதுல் குர்ஸி ஓதுவது சிறப்புக்குரியது என்று வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமாக இருந்தாலும் இமாம் நஸயீ அவர்களுக்குரிய சுனனுல் குப்ராவில் இடம் பெறும் செய்தி ஆதாரப்பூர் வமானதாக உள்ளது.

ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தை தவிர வேறு எதுவும் தடுக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி), நூல் : நூல்: சுனனுல் குப்ரா, பாகம்: 6, பக்கம் 30

சில அறிஞர்கள் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் முஹம் மத் பின் ஹிம்யர் என்பவரைப்பற்றி விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் அது சரியில்லை.

இமாம் அபூஹாதம் அவர்கள் இவருடைய ஹதீஸ்களை எழுதிக் கொள்ளலாம் ஆனால் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும். இமாம் யஃகூப் பின் சுப்யான் அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.

இமாம் அஹ்மத் அவர்கள், இவரிடத்தில் நல்லதை தவிர வேறு எதையும் அறியவில்லை என்றும்.இமாம் இப்னு மயீன் மற்றும் துஹைம் ஆகியோர் இவரை உறுதியானவர் என்றும். இமாம் நஸயீ அவர்கள் இவரிடத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும். இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் இவரை பலமானவர் என்றும். இமாம் தாரகுத்னீ அவர்கள் இவரிடத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும். இப்னுல் கானிஃ என்பவர் இவர் நல்லவர் என்றும். சான்று அளித்துள்ளார்கள்.

நூல்: தஹ்தீப் தஹ்தீப், பாகம்: 9, பக்கம்: 117

பொதுவாக ஒருரைப்பற்றி குறையும் நிறையும் வரும்போது குறை தெளிவாக இருந்தால் குறையைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். கார ணம் பலருக்கு தெரியாத குறை சிலருக்கு தெரிந்திருக்கும் என்ற அடிப்ப டையில்.

அதே நேரத்தில் குறை கூறியவர்கள், காரணத்தை தெளிவு படுத்த வேண்டும். இல்லையெனில் குறையை நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. நிறையையே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படையில் இந்த அறிவிப்பாளரின் மீது விமர்சனம் செய்த அறிஞர்கள் காரணத்தை சமர்ப்பிக்கவில்லை. ஏன் இவர் பலவீனமானவர்?. இவருடைய செய்திகளை ஏன் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ளக்கடாது.? என்ற கேள்விக்கு பதில் அவர்கள் கூறவில்லை. எனவே இந்த அறிஞர்க ளின் விமர்சனத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இவர் புகாரியின் அறிவிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் நதாயிஜுல் அஃப்கார் (பாகம் 2 பக்கம் 279) ல் யஃகூப் பின் சுஃப்யான் அவர்கள் செய்த விமர்சனம் கார ணம் கூறப்படாதது. தெளிவில்லாதது என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் இப்னுல் ஜவ்ஸி இந்த ஹதீஸை மவ்லுஆத் (இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்க ளின் தொகுப்பு) என்ற கிதாபில் சேர்த்ததற்காக ஹாபிழ் லியாவுல் மக்தஸி மற்றும் இப்னு அப்தில் ஹாதி ஆகியோர் கண்டித்துக் கூறியுள்ளார்கள்.

மேலும் இவரை விமர்சனம் செய்யும் அறிஞர்களின் விமர்சனத்தையும். இவரை நல்லவர் என்று சொல்லக்கூடிய அறிஞர்களின் கருத்தையும் எழுதி விட்டு இமாம் தஹபீ அவர்கள் இவருடைய செய்திகள் ஹஸன் தரத்தில் கவனிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்.

நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா (பாகம் 9 பக்கம் 234)

எனவே தொழுகைக்குப்பின்னால் ஆயத்துல் குர்ஸி ஓதுவது சிறப்பிற் குரியதுதான் ஓதலாம். அல்லாஹ் மிகஅறிந்தவன்.

ஆயத்துல் குர்ஸி தொடர்பான மேலும் விபரங்களுக்கு தீன்குலப் பெண்மணி ஜனவரி 2008, மார்ச் 2008, மே 2008 ஆகிய இதழ்களை பார்வையிடுக!

--> Q/A Dheengula Penmani Feb 2010

No comments:

Post a Comment