பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, July 30, 2010

ஜகாத் கடமையானவர்தான் பித்ரா கொடுக்க வேண்டுமா??

? ஜகாத் கடமையானவர்தான் பித்ரா கொடுக்க வேண்டுமா?



! நபி (ஸல்) அவர்கள் பித்ரா தொடர்பாக எந்த பொருளைக் கொடுக்க வேண்டும்? எவ்வளவு கொடுக்க வேண்டும்? யார் யார் கொடுக்க வேண்டும்? எப்போது கொடுக்க வேண்டும்? என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள். எவ்வளவு இருந்தால் கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை.

பொதுவாக செலவழிக்க வேண்டும் என்று கூறப்பட்டால் அதற்கு வசதியுள்ளவர்கள் செய்ய வேண்டும் என்றே நாம் விளங்கிக் கொள்வோம். அதைப் போன்றுதான் பித்ரா கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு அதற்கு அளவு சொல்லாததால் கடன் இல்லாமல் கொடுப்ப தற்கு வசதியுள்ளவர்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று கூறுகிறோம். மனிதன் செய்ய வேண்டிய முக்கிய கடமைகளில் கடனை நபிகளார் கூறியுள்ளதாலும் மிக உயர்ந்த தகுதியுடைய ஷஹீத் கூட கடன்பட்டால் அல்லாஹ் மன்னிக்கமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் கடன் போக பித்ரா கொடுக்க வசதியுள்ளவர்கள் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறோம்.

--> Q/A Dheengula Penmani Sep 2008

No comments:

Post a Comment