பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, July 26, 2010

குளிப்பு கடமையான நிலையில் மஸ்ஜிதில் கால் படக் கூடாது??

?குளிப்பு கடமையான நிலையில் மஸ்ஜிதில் கால் படக் கூடாது என்று கூறுகின்றனரே! இது பற்றி குர்ஆன், ஹதீஸில் வருவதென்ன? விளக்கவும்.



நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:43

இந்த வசனத்தின் அடிப்படையில், குளிப்பு கடமையான ஒருவர் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாது. வேறொரு இடத்திற்குப் பள்ளிவாசலின் வழியாகத் தான் செல்ல வேண்டுமென்றால் அவ்வாறு செல்வதில் தவறில்லை. வேண்டுமென்றே பள்ளிவாசலுக்குச் செல்வதை இந்த வசனம் தடை செய்கிறது.

--Q/A Ehathuvam May 07

No comments:

Post a Comment