பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, July 26, 2010

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இன்ன பிற அறிஞர்களை இணை வைத்து??

?அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், காரல் மார்க்ஸ் போன்ற இன்ன பிற அறிஞர்களை இணை வைத்து ஒப்பு நோக்கலாமா?



நபி (ஸல்) அவர்கள் கூறிய கருத்துக்கள் இறைவனின் புறத்திலிருந்து வந்தவை. சாக்ரடீஸின் கருத்துக்கள் மனித சிந்தனையில் உதித்தவை. இந்த இரண்டு கருத்துக்களும் ஒரு போதும் சமமாக முடியாது.



'நபிகள் நாயகத்தைப் போல் சாக்ரடீஸ் என்பவரும் பல தத்துவங்களைக் கூறியுள்ளார்' என்று கூறக்கூடாது.


நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த தூதுச் செய்திக்குப் பங்கம் வரும் வகையில் ஒப்பு நோக்கக் கூடாது.

No comments:

Post a Comment