பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 28, 2010

ஜகாத் பணம் கொடுத்தால் அதை முஸ்லிம்களுக்கு மட்டுமே??

? என் பெயர் ஆறுமுகம். நான் ஒரு முஸ்லிம் கடையில் வேலை பார்த்து வருகிறேன். என்னுடைய முதலாளி, எல்லோரும் ஒன்று என்று தான் கூறுவார். ஆனால் ரமளான் மாதத்தில் ஜகாத் பணம் கொடுத்தால் அதை முஸ்லிம்களுக்கு மட்டுமே கொடுக்கிறார். முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்கிறார். அப்படிப் பார்த்தால் நபிகள் நாயகத்தின் ஆட்சிக் காலத்தில் ஜகாத் பணம் வசூலித்து, கஷ்டப்பட்ட மக்களுக்குத் தான் வழங்கினார்கள். அவர்களின் ஆட்சியின் கீழ் முஸ்லிம் அல்லாதவர்களும் வாழ்ந்தார்கள். அவர்களுக்குக் கொடுக்கவில்லை என்றால் எப்படி வாழ்ந்திருக்க முடியும்?




பொதுவாக தர்மங்களை எந்த ஏழைக்கும் வழங்கலாம். முஸ்லிம், முஸ்லிமல்லாதவர்கள் என்று பிரிக்கத் தேவையில்லை.

யாசிப்போருக்கும், ஏழை களுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டிய வர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன் பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 9:60

மேற்கண்ட வசனத்தில் கூறப்படும் எட்டு பிரிவினருக்கு மட்டுமே ஜகாத் எனும் கடமையான தர்மத்தை வழங்க வேண்டும். மற்றவர்களுக்கு வழங்கக் கூடாது. இந்த எட்டு பிரிவினரில் முஸ்-மல்லாதவர்களும் ஒரு பிரிவினராவர். முஸ்-மல்லாதவர்களில் யார் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் உளமாற அன்பு செலுத்துகிறார் களோ அத்தகையோருக்கும் ஸகாத் நிதியைச் செலவிடலாம். உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காக என்பது இத்தகையோரையே குறிக்கிறது.

இவ்வாறு ஜகாத் நிதியைக் கொடுப்பதன் மூலம் இஸ்லாம் ஒரு சிறந்த மார்க்கம் என்பதை அந்த மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இறைவன் இதை வலியுறுத்தியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் இந்த அடிப்படையில் ஜகாத் நிதியை வழங்கியுள்ளார்கள்.

எனவே முஸ்லிமல்லாதவர்களுக்கு ஜகாத் நிதியைத் தர முடியாது என்று ஒரேயடியாக மறுக்கும் உங்களது முதலாளியின் கருத்து தவறானதாகும். இஸ்லாம் குறித்து நல்லெண்ணம் கொண்ட தங்களைப் போன்றவர்களுக்கு ஜகாத்தை வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை.

--> Q/A Ehathuvam Magazine Mar 2008

No comments:

Post a Comment