பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, July 30, 2010

பெண்கள் தலையை மறைப்பது கட்டயாமா? கடமையா?

? பெண்கள் தலையை மறைப்பது கட்டயாமா? கடமையா?


தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.

அல்குர்ஆன் 24:31

இந்த வசனத்தில் முக்காடுகள் என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் கிமார் என்ற சொல் அரபு மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் இடம் பெறும் குமுரிஹின்ன என்பது கிமார் என்பதன் பன்மையாகும். இது பெண்கள் அணியும் தலைத் துணி - அதாவது முக்காட்டைக் குறிக்கும். பெண்களின் முக்காடு மட்டுமின்றி ஆண்கள் தலையின் மீது போட்டுக் கொள்ளும் தலைத் துணியையும் இந்த வார்த்தை குறிக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலுறைகள் மீதும் தலை முக்காட்டின் மீதும் மஸஹ் செய்தனர்.

அறிவிப்பவர்: பிலால் (ரலி)
நூல்: முஸ்லிம் 413

இந்த ஹதீஸிலும் தலையை மறைக்கும் துணிக்கு கிமார் என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமது முக்காடுகளை மார்பின் மீது போட்டுக் கொள்ளட்டும் என்று அல்லாஹ் கட்டளையாகக் கூறுவதால், இந்த வசனத்தில் கூறப்படும் தரப்பினர் தவிர மற்ற அந்நிய ஆண்கள் முன்னிலையில் பெண்கள் கண்டிப்பாகத் தலையை மறைக்க வேண்டும்.

--> Q/A Ehathuvam Magazine Apr 2009

No comments:

Post a Comment