பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, July 26, 2010

நெருங்கிய சொந்தத்தில் மணம் புரிவது???

?'தூரத்தில் மணம் புரியுங்கள்; (நெருங்கிய சொந்தத்தில் மணம் புரிவதன் மூலம்) பலவீனமடைந்து விடாதீர்கள்; மெலிந்து விடாதீர்கள்' என்றும், 'மிக நெருங்கிய உறவினர்களை மணக்காதீர்கள்; ஏனெனில் குழந்தை குறையுள்ளதாகப் பிறக்கும்' என்றும் ஹதீஸ் உள்ளதா? அவ்வாறு திருமணம் செய்தால் குழந்தை குறையுள்ளதாகப் பிறக்கும் என்பது உண்மையா?

நாம் தேடிப் பார்த்த வரையில் இந்தக் கருத்தில் ஹதீஸ் எதுவும் இல்லை. அவ்வாறு இருப்பதாக யாரும் கூறினால் எந்த நூலில் உள்ளது என்ற விபரத்தைக் கேட்டு எழுதினால் பரிசீலிக்கலாம்.

இந்தக் கருத்தில் ஹதீஸ் இல்லாதபட்சத்தில், கீழ்க்கண்ட வசனத்தில் அல்லாஹ் தடை செய்துள்ள உறவுகளைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம்.

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:23

நெருங்கிய சொந்தத்தில் மணம் புரிந்தால் குழந்தை குறைவுள்ளதாகப் பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறினாலும் நடைமுறையில் அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.


இந்தியாவை எடுத்துக் கொண்டால் முஸ்லிம்களும் சரி! முஸ்லிமல்லாத மற்றவர்களும் சரி! பெரும்பாலும் நெருங்கிய உறவுகளில் தான் திருமணம் செய்து கொள்கிறார்கள்.


இந்தக் காரணத்தால் குறையுள்ள குழந்தை பிறக்கும் என்றால் இங்கு அதிகமான குழந்தைகள் ஊனத்துடன் தான் பிறக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை என்பதை நமக்குத் தெரிந்த மக்களிடம் கணக்கெடுத்துப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.

--Q/A Ehathuvam June 07

No comments:

Post a Comment