பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, July 30, 2010

வியாபாரத் தலங்களில் வியாபார அபிவிருத்திக்காக ??

? வியாபாரத் தலங்களில் வியாபார அபிவிருத்திக்காக திருக்குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட பிரேம்களை கடைகளில் மாட்டி வைக்கலாம?


திருக்குர்ஆன் வசனங்களை இவ்வாறு கடைகளிலும் வீடுகளிலும் பரக்கத்திற்குத் தொங்க விடுவது பரவலாகக் காணப்படுகிறது. திருக்குர்ஆன் இவ்வாறு வியாபார விருத்திக்காகவும், பணம் சம்பாதிக்கவும் இறக்கப்படவில்லை. மாறாக முறையான வியாபாரம் செய்யவும், மோசடி, பித்தலாட்டம் போன்ற காரியங்களைத் தடுத்து நேர்வழியைக் காட்டவும் தான் இறக்கப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால் மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்டவே இறக்கப்பட்டுள்ளது.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். (அல்குர்ஆன் 2:185)

வியாபாரத் தலங்களில் பலர் வருவார்கள். அவர்களும் திருக்குர்ஆனின் கட்டளைகளைப் படித்துத் திருந்தட்டும், சிந்திக்கட்டும் என்பதற்காகக் கடைகள் மற்றும் வீடுகளில் மாட்டினால் தவறில்லை.

--> Q/A Dheengula Penmani Feb 2008

No comments:

Post a Comment