பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, July 13, 2010

நெஞ்சின் மீது கைகளை வைத்தல்

நெஞ்சின் மீது கைகளை வைத்தல்





தொழுகையில் வலது கையை இடது கையின் மீது வைத்ததைப் பார்த்தேன். மேலும் (தொழுகையை முடித்த பிறகு) வலது புறமும் இடது புறமும் திரும்பியதையும் பார்த்தேன்” என்று இடம் பெற்றுள்ளது.

திர்மிதியின் அறிவிப்பில் வலது கையை இடது கையின் மீது வைத்தது தொடர்பான செய்தி இடம் பெறவில்லை. இது ‘முகத்தஃ’ ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. அஹ்மதில், தொழுகையை முடித்து விட்டு எந்தப் பக்கம் நபி (ஸல்) அவர்கள் திரும்பினார்கள் என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

இது போன்ற செய்திகளை ஹதீஸ் நூல்களில் ஏராளம் காணலாம். இது போன்று தான் தொழுகையில் உள்ள முறையைப் பற்றிச் சுருக்கமாக அஹ்மத் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது. அதில் தொழுகை என்ற வாசகம் இல்லாவிட்டாலும் அது தொழுகையைப் பற்றித் தான் பேசுகிறது என்பதை அதன் வாசக அமைப்பே சுட்டிக் காட்டுகிறது. மேலும் அஹ்மதில் அடுத்தடுத்து அதே அறிவிப்பாளர் வரிசையுடன் வரும் செய்திகளும் இது தொழுகை தொடர்பானது தான் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் தமது வலது பக்கமும், இடது பக்கமும் ஸலாம் கூறும் போது அவர்களது கன்னத்தின் வெண்மையை நான் பார்க்கும் அளவுக்குத் திரும்பியதைக் கண்டேன்.

அறிவிப்பவர்: ஸஅது (ர¬), நூல்: முஸ்லீம் 1021

இந்தச் செய்தியிலும் தொழுகை என்று வாசகம் இடம் பெறவில்லை. எனவே, ”இது தொழுகை தொடர்பானது அல்ல, பொதுவாக ஒருவருக்கொருவர் ஸலாம் கூறும் போது பின்னால் இருப்பவர் நம் கன்னத்தைப் பார்க்கும் வண்ணம் வலது புறமும், இடது புறமும் திரும்பி ஸலாம் கூற வேண்டும்” என்று சொன்னால் இவர்களை என்ன நினைப்போம்? அதைப் போன்று தான் அஹ்மதின் அறிவிப்பில் இடம் பெறும் செய்தி தொழுகை தொடர்பானது அல்ல என்று கூறுவதும் அமைந்துள்ளது.

மேலும் இவர் சார்ந்திருக்கும் ஹனஃபி மத்ஹப் நூல் கூட இந்தச் செய்தி தொழுகை தொடர்பானது தான் என்று தெளிவாகக் கூறுகிறது.

நெஞ்சில் கை வைக்கும் ஹதீஸை நான்கு இமாம்களில் எந்த இமாமும் எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களிடம் இது ஆதாரப்பூர்வமானதாக இருந்திருந்தால் ஏன் அதை அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை? குறிப்பாக தனது முஸ்னத் என்ற நூ-ல் ஹுல்ப் (ர¬) அவர்களின் அறிவிப்பைப் பதிவு செய்த இமாம் அஹ்மத் அவர்கள் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை? (நூல்: அத்தன்கீஹுல் லரூரீ லி முக்தஸர் குதூதிரியின் ஓர உரை)

இமாம் அஹ்மத் அவர்கள் தனது முஸ்னதில் பதிவு செய்த செய்தி தொழுகை தொடர்பானது தான் என்பதை மிகத் தெளிவாக ஹனபி மத்ஹப் நூல் விவரிக்கிறது.

(நான்கு இமாம்களின் எந்த இமாமும் இதை நடைமுறைப்படுத்தவில்லை என்று இந்த நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால் ஹனஃபி மத்ஹபின் பிரபலமான ஹிதாயா என்ற நூ¬ல் இமாம் ஷாஃபீ அவர்கள் நெஞ்சின் மீது கை கட்டவேண்டும் என்று கூறுகிறார் என்று எழுதப்பட்டுள்ளது. இது அவர்களது நூல்களில் உள்ள முரண்பாடுகளில் ஒன்று. மேலும் ”இமாம் அஹ்மத் அவர்கள், நெஞ்சின் மீது கையைக் கட்ட வேண்டும் என்று கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது” என்று ஹன்ப¬ மத்ஹப் நூலான அல்முக்னீ பாகம்: 1, பக்கம்: 228ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.)

ஹதீஸ் கலை மேதையான ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களும் நெஞ்சின் மீது கை கட்ட வேண்டும் என்ற செய்தி ஹுல்பு (ர¬) வழியாக அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ, பாகம்: 2, பக்கம்:224)

எனவே அஹ்மதில் இடம் பெறும் செய்தி தொழுகை தொடர்புடையது அல்ல என்று கூறுவது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக உண்மையை மறைக்கும் செயலாகும்.

அவர்களின் வாதம்

அஹ்மதில் இடம் பெறும் கபீஸா என்பவர் யாரென அறியப்படாதவர் என்று இமாம் நஸயீ, இப்னுல் மதீனீ ஆகியோர் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்தச் செய்தி பலவீனமானதாகும்.

நமது பதில்

இமாம் நஸயீ, இப்னுல் மதீனீ ஆகியோர் கபீஸா அவர்களை யாரென அறியப்படாதவர் என்று கூறியிருப்பது உண்மை தான். என்றாலும் இவர்களைத் தவிர வேறு எவரும் கபீஸாவைப் பற்றி குறிப்பிடவில்லையானால் இந்தச் செய்தி பலவீனமானது என்று கூறலாம். ஆனால் கபீஸா என்பவர் நம்பகமானவர் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் இவரை நம்பகமானவர் பட்டிய¬ல் இணைத்துள்ளார். (ஸிகாத், பாகம்: 5, பக்கம்: 319) இப்னு ஹிப்பான் அவர்கள் யாரென அறியப்படாதவரையும் நம்பகமானவர் பட்டிய¬ல் இணைப்பது வழக்கம் என்பதால் இவர் மட்டும் சொன்னதை வைத்து ஒரு அறிவிப்பாளரை நம்பகமானவர் என்று சொல்ல முடியாது. இவரைப் போன்று மற்றொருவர் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தினால் அதை ஏற்றுக் கொள்ளலாம்.

இப்னு ஹிப்பான் அவர்களைப் போன்று இமாம் இஜ்லீ அவர்களும் இவரை நம்பகமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். (மஃரிபத்துஸ்ஸிகாத், பாகம்: 2, பக்கம்: 214)

இவரைப் பற்றி இமாம் தஹபீ அவர்கள் குறிப்பிடுவதாவது: ”இப்னுல் மதீனீ இவரை யாரென அறியப்படாதவர் என்று குறிப்பிட்டுள்ளார். என்றாலும் இஜ்லீ அவர்கள் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார்கள். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள், இவருடைய ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்று கூறியதுடன் தம்முடைய ‘ஸிகாத்’ நம்பகமானவர் என்ற நூ¬ல் இடம்பெறச் செய்துள்ளார்” (நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 5, பக்கம்: 446)

ஒருவரை யாரென அறியப்படாதவர் என்று விமர்சனம் செய்யும் போது, ”இவரை எனக்குத் தெரியும்; இவர் நம்பகமானவர்” என்று மற்றொருவர் கூறினால், யாரெனத் தெரியாது என்பவரின் விமர்சனம் மதிப்பற்றதாக ஆகிவிடும். இது ஹதீஸ் கலையில் உள்ள சரியான விதியாகும். எனவே இந்த விமர்சனத்தை அடிப்படையாக வைத்து நெஞ்சில் கை கட்டுவது தொடர்பான ஹதீஸ் பலவீனமானது என்று வாதிட முடியாது.

அவர்களின் வாதம்

வகீஃ, அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, அபுல் அஹ்வஸ், ஷரீக் ஆகியோரின் அறிவிப்பில் ‘நெஞ்சின் மீது’ என்ற வாசகம் இடம் பெறவில்லை. எனவே ஒரு செய்தியில் மட்டும் இடம் பெறும் ‘நெஞ்சின் மீது’ என்ற வாசகத்தை வைத்து சட்டம் இயற்றுவது சரியல்ல.

நமது பதில்

நெஞ்சின் மீது கை வைக்க வேண்டும் என்று அறிவிக்கும் அஹ்மத் அறிவிப்பில் ஸிமாக் என்பவரிடமிருந்து ஸுஃப்யான், அபுல் அஹ்வஸ், ஷரீக் ஆகியோர் அறிவிக்கின்றனர். இதில் அபுல் அஹ்வஸ், ஷரீக், ஆகியோரின் அறிவிப்புக்களில் ‘இடது கையை வலது கையின் மீது வைத்தார்கள்’ என்று மட்டும் தான் இடம் பெற்றுள்ளது. ஸுஃப்யான் அவர்களின் அறிவிப்பில் மட்டும் நெஞ்சின் மீது என்ற வாசகம் கூடுதலாக இடம் பெற்றுள்ளது. இதைப் போன்று ஸுஃப்யானிடமிருந்து யஹ்யா பின் ஸயீத், வகீஃ ஆகிய இருவர் அறிவிக்கின்றனர். இதில் வகீஃ என்பவரின் அறிவிப்பில் ‘நெஞ்சின் மீது’ என்ற வாசகம் இல்லை. (அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ என்பவரின் அறிவிப்பிலும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் நாம் தேடிய வரை அவருடைய அறிவிப்பில் நமது செய்தி தொடர்பாக எதுவும் இடம் பெறவில்லை)

ஒரு செய்தியை ஒரு ஆசிரியரிடமிருந்து பல மாணவர்கள் அறிவித்து, எல்லா மாணவர்களும் நம்பகத்தன்மையில் சமமாக இருந்து, ஒருவர் மற்ற ஏனைய மாணவர்களின் அறிவிப்புகளுக்கு முரணாக ஒரு செய்தியை அறிவித்தால் அந்தச் செய்தியை ‘ஷாத்’ வகையைச் சார்ந்த பலவீனமான செய்தி என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுவர். இதைப் போன்று நம்பகமான ஒரு அறிவிப்பாளருக்கு முரணாக, அவரை விடக் குறைந்த நம்பகத் தன்மை உள்ள ஒருவர் அறிவித்தால், நம்பகத்தன்மை குறைவாக உள்ளவரின் அறிவிப்பை ஷாத் என்ற பலவீனமான வகையைச் சார்ந்தது என்று செல்வர்.

அது போன்று இந்தச் செய்தியும் ‘ஷாத்’ என்ற பலவீனமான வகையைச் சார்ந்தது என்று வாதிட முனைகின்றனர். இது கவனமின்மையின் வெளிப்பாடாகும்.

ஒருவரின் அறிவிப்பில் ”வலது கையை இடது கையின் மீது வைத்தார்கள்” என்றும், இன்னொரு அறிவிப்பாளரின் செய்தியில் ”வலது கையை இடது கையின் மீது வைத்து நெஞ்சில் வைத்தார்கள்” என்றும் இடம் பெறுவது முந்தைய செய்திக்கு முரணானது அல்ல. தேவையான கூடுதல் விளக்கம் தான் இதில் இடம் பெற்றுள்ளது.

ஒருவரின் அறிவிப்பில் ”வலது கையை இடது கையின் மீது வைத்தார்கள்” என்றும், இன்னொரு அறிவிப்பில் ”இடது கையை வலது கையின் மீது வைத்தார்கள்” என்றும் அறிவித்திருந்தால் இது முரண்பாடு என்று சொல்லலாம்.

ஆனால் வலது கையை இடது கையின் மீது வைத்து நெஞ்சின் மீது வைத்தார்கள் என்பது கூடுதலான செய்தியே தவிர முரணான செய்தி அல்ல. மேலும் இந்தச் செய்தியில் தான் சரியான விளக்கமும் உள்ளது. வலது கையை இடது கையின் மீது வைத்த நபி (ஸல்) அவர்கள் அதை உட¬ல் எந்த இடத்தில் வைத்தார்கள் என்ற கேள்வி முந்தைய அறிவிப்பின் படி இருந்து கொண்டே இருக்கும். நெஞ்சின் மீது வைத்தார்கள் என்று சொன்னால் தான் அது முழுமை பெற்ற ஹதீஸாக அமையும். எனவே நெஞ்சின் மீது வைத்தார்கள் என்பது ‘ஷாத்’ என்ற பலவீனமான வகையைச் சார்ந்தது அல்ல.

அவர்களின் வாதம்

நெஞ்சின் மீது கை வைக்க வேண்டும் என்று வரும் செய்தியில் ‘ஸிமாக் பின் ஹர்ப்’ என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே இந்தச் செய்தி ஆதாரமற்றதாகும்.

நமது பதில்

‘ஸிமாக் பின் ஹர்ப்’ என்ற அறிவிப்பாளர் தொடர்பாக இரண்டு விதமான விமர்சனங்கள் உள்ளன. அவற்றில் எது சரி? என்பதை விரிவாகப் பார்ப்போம்.

முத¬ல் ஸிமாக் பின் ஹர்ப் என்பவரை எவ்வாறு குறை கூறியுள்ளார்கள். அவர்கள் யார் யார்? என்பதைக் காண்போம்.

இவர் ஹதீஸில் குளறுபடியாக அறிவிப்பவர் என்று இமாம் அஹ்மத் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம்: 5, பக்கம்: 247)

ஷுஅபா அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். (நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம்: 5, பக்கம்: 247)

சில சமயங்களில் குழப்பமாக அறிவித்துள்ளார்; இவருடைய ஹதீஸ் தொடர்பாக அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர் என்று முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் அம்மார் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம்: 5, பக்கம்: 247)

இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று இப்னுல் முபாரக் கூறியுள்ளார். (நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம்: 5, பக்கம்:247)

ஸா¬ஹ் பின் முஹம்மத் அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். இமாம் நஸயீ அவர்கள், இவர் பரவாயில்லாதவர்; எனினும் இவருடைய செய்திகளில் பிரச்சனை உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவருடைய செய்தியில் பலவீனம் உள்ளது என்று அப்துர் ரஹ்மான் பின் கிராஸ் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம்: 5, பக்கம்: 247)

நான் ஸிமாக் பின் ஹர்பிடம் சென்றேன். அப்போது அவர் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார். எனவே நான் திரும்பி விட்டேன். அவரிடம் (எதையும்) கேட்கவில்லை என்று ஜரீர் பின் அப்துல் ஹுமைத் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம்: 5, பக்கம்:248)

ஸிமாக் எதாவது ஒரு அடிப்படை விஷயத்தில் தனித்து அறிவித்தால் அது ஆதாரமாகாது. ஏனெனில் அவர் எடுத்துக் கூறினால் அதையே கூறி விடுவார். (நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம்: 5, பக்கம்:248)

ஸிமாக் பின் ஹர்ப் அதிகமாகத் தவறிழைப்பவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: அஸ்ஸிகாத்லிஇப்னு ஹிப்பான், பாகம்: 4,339)

ஸாஹிஹ் ஜஸரா அவர்கள் ஸிமாக் பின் ஹர்பை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். (நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 3, பக்கம்:327)

ஸிமாக் குறை சொல்லப்பட்டது விஷயமாக இப்னு மயீன் அவர்களிடம் கேட்கப்பட்ட போது ”மற்றவர்கள் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவிக்காததை இவர் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்து விடுவார்” என்று கூறினார்கள். (நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம்: 5, பக்கம்:247)

இறப்பதற்கு முன்னர் இவருக்கு மூளை குழம்பி விட்டது என்று பஸ்ஸார் அவர்கள் தமது முஸ்னத் என்ற நூ¬ல் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 4, பக்கம்: 204)

இவையனைத்தும் ஸிமாக் பின் ஹர்ப் பற்றிக் குறை கூறப்பட்ட விமர்சனங்கள் ஆகும். அடுத்து இவரைப் பற்றிப் புகழ்ந்துரைத்தவர்களைக் காண்போம்.

இவர் நம்பகமானவர் என்று இப்னு மயீன் அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம்: 5, பக்கம்: 247)

இவர் நம்பகமானவர் என்று அபூ கம்ஸா குறிப்பிடுகிறார். (ஆதாரம்: ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம்: 5, பக்கம்: 247)

நாங்கள் கவிதைகளைக் கேட்க ஸிமாக்கிடம் சென்றோம். அப்போது ஹதீஸ் கலை அறிஞர்கள் அங்கு வந்து எங்களை முன்னோக்கி, ”கேளுங்கள்! இவர் நம்பகமானவர்” என்று கூறினார்கள் என்று ஜன்னாத் குறிப்பிடுகிறார். (ஆதாரம்: ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம்: 5, பக்கம்: 248)

இவர் நம்பகமானவர், நல்லவர் என்று இமாம் அபூஹாத்திம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (ஆதாரம்: மீஸானுல் இஃதிதால், பாகம்:3, பக்கம்:327)

இவருடைய ஹதீஸை அறிவிக்கலாம் என்று இஜ்லீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: மீஸானுல் இஃதிதால், பாகம்:3, பக்கம்:327)

ஸிமாக்குக்கு உறுதியான ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. இன்ஷா அல்லாஹ் அனைத்து ஹதீஸ்களும் உறுதியானவை தான். இவரிடமிருந்து இமாம்கள் அறிவித்துள்ளனர். இவர் கூஃபா நகரைச் சார்ந்த மூத்த தாபியீ ஆவார். இவருடைய ஹதீஸ்கள் ஹஸன் தரத்தில் உள்ளவையாகும். இவர் நல்லவர், பரவாயில்லாதவர் இப்னு அதீ குறிப்பிட்டுள்ளார்கள். (அல்காமில் ஃபீ லுஃபாயிர் ரிஜால், பாகம்: 3, பக்கம்: 461)

இவருக்கு சுமார் இருநூறு ஹதீஸ்கள் உள்ளன. இவர் எண்பது நபித்தோழரைக் கண்டுள்ளார். இவர் நம்பகமானவர். இவரின் நினைவாற்றல் கெட்டு விட்டது என்று தஹ்பீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (அல்காஷிஃப், பாகம்: 1, பக்கம்: 465)

இவரை ஒரு கூட்டத்தினர் நம்பகமானவர் என்று கூறியுள்ளனர் என்றும் இமாம் தஹ்பீ குறிப்பிடுகிறார்கள். (அல்காஷிஃப், பாகம்: 1, பக்கம்: 465)

இவர் பிரபலமான மனிதர். இவரை எவரும் விட்டு விட்டதாக நான் அறியவில்லை. இறப்பதற்கு முன்னர் இவரது மூளை குழம்பி விட்டது என்று பஸ்ஸார் அவர்கள் தனது முஸ்னத் என்ற நூ¬ல் குறிப்பிட்டுள்ளார்கள். (தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 4, பக்கம்: 204)

ஸிமாக் பின் ஹர்ப் அவர்கள் நல்லவர், உண்மையாளர், கல்வியின் பாத்திரம், பிரபலமானவர் என்று தஹ்பீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (மீஸானுல் இஃதிதால், பாகம்: 3, பக்கம்:327)

ஸிமாக்குடைய ஒரு ஹதீஸ் கூட விடுபடவில்லை என்று சுஃப்யான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (ஆதாரம்: ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம்: 5, பக்கம்: 246)

(புகாரியின் அறிவிப்பாளரான) அப்துல் ம¬க் பின் உமைரை விட இவர் மிகவும் சரியானவர் என்று அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (ஆதாரம்: ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம்: 5, பக்கம்: 246)

ஸிமாக் பின் ஹர்ப் என்பவரைப் பற்றிக் குறை சொன்னதைப் போன்று நிறை சொன்னவர்களும் ஏராளமானோர் உள்ளனர். ஒரு அறிவிப்பாளர் விஷயத்தில் முரண்பட்ட இரண்டு விமர்சனங்கள் வரும் போது எவ்வாறு முடிவு செய்வது என்பதை அவர்களின் விமர்சனங்களின் காரணங்களைக் கண்டறிந்தால் ஒரு தெளிவான முடிவுக்கு வரலாம். ஒரு அறிவிப்பாளர் தொடர்பாக இது போன்ற விமர்சனங்கள் ஹதீஸ் துறையில் ஏராளம் உள்ளன.

ஸிமாக் பின் ஹர்பைப் பற்றிக் குறை சொன்னவர்களில் சிலர் பொதுவாகப் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர். சிலர் காரணத்துடன் தெளிவுபடுத்தியுள்ளனர். இமாம் நஸயீ அவர்கள், இவரைக் குறை சொல்லும் போது ”அவர் எடுத்துக் கூறினால் அதையே கூறி விடுவார்” என்று கூறுகிறார்கள். இது அறிவிப்பாளரிடம் இருக்கக் கூடாத குறை தான்.

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறை கூறும் போது ”இவர் ஹதீஸில் குளறுபடியாக அறிவிப்பவர்” என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது ஹதீஸ்களை தவறு தவறாக அறிவிப்பவர்.

”சில சமயங்களில் குழப்பமாக அறிவித்துள்ளார்” என்று முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் அம்மார் அவர்கள் குறை கூறியுள்ளார்கள்.

”மற்றவர்கள் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவிக்காததை இவர் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்து விடுவார்” என்று இப்னு மயீன் அவர்கள் குறை கூறியுள்ளார்கள்.

இறப்பதற்கு முன்னர் இவரது மூளை குழம்பி விட்டது என்று பஸ்ஸார் அவர்கள் கூறியுள்ளார்கள்.

மேற்சொல்லப்பட்ட காரணங்களுடன் கூறப்படும் விமர்சனங்களை நீங்கள் கவனித்தால் ஸிமாக்கின் கடைசிக் காலத்தில் மூளை குழம்பியதால் அவர் அறிவிக்கும் செய்திகளில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன; இதனால் தான் அவர் பல ஹதீஸ்களைத் தவறாக அறிவித்துள்ளார் என்பதும் தெளிவாகிறது. மேலும் இவர் மொத்தத்தில் பலவீனமானவர் அல்ல. இடையில் ஏற்பட்ட கோளாறின் காரணத்தால் இவரைப் பலவீனப்படுத்தியுள்ளனர் என்பதையும் அறியலாம். இதனால் தான் ஏராளமான அறிஞர்கள் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர். ஏனெனில் இவர் மூளை குழம்புவதற்கு முன்னர் நம்பகமானவராக இருந்துள்ளார். இக்கருத்தை வலுப்படுத்தும் வண்ணம் பல செய்திகள் அறிவிப்பாளர் விமர்சன நூல்களில் இடம் பெற்றுள்ளது. அவற்றையும் காண்போம்.

இவருக்கு சுமார் இருநூறு ஹதீஸ்கள் உள்ளன. இவர் எண்பது நபித்தோழர்களைச் சந்தித்துள்ளார். இவர் நம்பகமானவர் எனினும் அவருடைய நினைவாற்றல் கெட்டுவிட்டது என்று தஹபீ அவர்கள் கூறுகிறார்கள். (அல்காஷிஃப், பாகம்: 1, பக்கம்: 465)

இவர் பிரபலமான மனிதர். இவரை எவரும் விட்டு விட்டதாக நான் அறியவில்லை. இறப்பதற்கு முன்னர் இவரது மூளை குழம்பி விட்டது என்று பஸ்ஸார் அவர்கள் தமது முஸ்னத் என்ற நூ¬ல் குறிப்பிட்டுள்ளார்கள். (தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 4, பக்கம்: 204)

அவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் குறை கூறியதற்குக் காரணம் அவரது நினைவாற்றல் கெட்டு விட்டதால் தான் என்பதையும், அது அவரின் கடைசிக் காலத்தில் தான் நிகழ்ந்தது என்பதையும் அறிய முடிகிறது. இதனால் தான் ஸுப்ஃயான் அவர்கள் ஸிமாக்கின் அனைத்துச் செய்திகளையும் பலவீனமானது என்று கூறாமல் சில செய்திகளை மட்டும் பலவீனமாக்கியுள்ளார்கள்.

ஸிமாக்கின் சில செய்திகளை ஸுஃப்யான் பலவீனமானது என்று கூறியுள்ளார்கள். (மஃரிஃபத்துஸ் ஸிகாத், பாகம்: 1, பக்கம்: 436)

ஒரு அறிவிப்பாளர் நம்பகமானவராக இருந்து கடைசிக் காலத்தில் அவரின் நினைவாற்றல் கெட்டு விட்டது என்று தெரிந்தால், அந்த அறிவிப்பாளர் நல்ல நிலையில் அறிவித்தவை எவை? நினைவாற்றல் கெட்ட பின்னர் அறிவித்தவை எவை? என்பதைக் கண்டறிந்தால் நினைவாற்றல் கெட்ட பின் அறிவித்த செய்திகளைத் தள்ளுபடி செய்துவிட்டு அதற்கு முன்னர் அறிவித்த செய்திகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவும் ஹதீஸ் கலையில் உள்ள ஒரு விதி தான். ஸிமாக் என்ற அறிவிப்பாளர் நினைவாற்றல் கெட்ட பின் அறிவித்தவை எவை என்ற குறிப்புகள் உள்ளன.

இக்ரிமா வழியாக வரும் செய்திகள் குளறுபடி உள்ளவை என்று இப்னுல் மதீனீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம்: 5, பக்கம்: 249)

”இக்ரிமா வழியாக வரும் செய்திகள் மட்டும் தான் குளறுபடிகள் உள்ளவை. இக்ரிமா நல்லவர் என்றாலும் (மிக) உறுதியானவர் இல்லை. மேலும் ஸிமாக்கிடம் ஆரம்ப காலத்தில் செவியுற்றவர்களான ஷுஅபா, ஸுஃப்யான் போன்றவர்களின் ஹதீஸ்கள், உறுதியான ஆதாரப்பூர்வமானவையாகும்” என்று யஃகூப் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம்: 5, பக்கம்: 249)

இப்னுல் முபாரக் அவர்கள் ஸிமாக்கை பலவீனமானவர் என்று கூறியிருப்பது அவரின் கடைசிக் காலத்தில் கேட்ட செய்தியைத் தான் அவர் நாடியிருக்க வேண்டும். (தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்:4, பக்கம்:204)

ஸிமாக் என்பவர் இக்ரிமாவிடமிருந்து அறிவிக்கும் செய்திகளை ஹதீஸ் கலை அறிஞர்கள் பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஃபத்ஹுல் பாரி முன்னுரை, பாகம்: 1, பக்கம்: 457)

ஷுஅபா அவர்கள் ஸிமாக்கை பலவீனமானவர் என்று கூறியிருக்கிறார்கள். மேலும் திருக்குர்ஆன் விளக்கவுரையில் இக்ரிமா கூறுவதை அவர் நாடினால் இப்னு அப்பாஸ் கூறுவதாகச் சொல்¬ விடுவார். ஷுஅபா அவர்கள் அவரிடமிருந்து விளக்கவுரையை அறிவிக்கும் போது இக்ரிமாவிடமிருந்து தான் அறிவிப்பார். இப்னுஅப்பாஸ் (ர¬)அவர்களின் பெயரைக் குறிப்பிட மாட்டார் என்று யஹ்யா அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம்: 5, பக்கம்: 249)

இவர் ஹதீஸை அறிவிப்பதற்குத் தகுதி படைத்தவர். என்றாலும் இக்ரிமா வழியாக வரும் செய்தியைத் தவிர. ஏனெனில் இப்னு அப்பாஸ் (ர¬) அவர்கள் வழியாக வரும் செய்தியை நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறி விடுகிறார். ஆனால் இக்ரிமா அவர்கள் இப்னு அப்பாஸ் (ர¬) அவர்களிடமிருந்து தான் அறிவித்துள்ளார்கள் என்று அஹ்மத் பின் அப்துல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம்: 5, பக்கம்: 249)

ஸிமாக் பின் ஹர்ப் என்பவர் இக்ரிமா, இப்னு அப்பாஸ் (ர¬) வழியாக அறிவித்தவை தான் நினைவாற்றல் கெட்ட பின் அறிவித்தவை என்பதை மேற்கூறிய ஹதீஸ் கலை அறிஞர்களின் விளக்கத்தி¬ருந்து மிகத் தெளிவாக விளங்க முடிகின்றது. எனவே ஸிமாக், இக்ரிமா வழியாக அறிவித்தால் அவற்றை ஏற்காமல், மற்றவர்களிடமிருந்து அறிவித்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஆரம்ப காலத்தில் ஸிமாக்கிடம் கேட்ட ஷுஅபா, ஸுஃப்யான் போன்றவர்களிடமிருந்து அறிவித்தால் அதை ஆதாரப்பூர்வமான செய்தியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நெஞ்சில் கை கட்டுதல் தொடர்பாக வந்துள்ள செய்தியிலும் ஸிமாக்கிடம் கேட்டவர் ஸுஃப்யான் அவர்கள் தாம். இவர் ஸிமாக்கின் நினைவாற்றல் கெடுவதற்கு முன்னர் கேட்டவர்களில் ஒருவர். எனவே நெஞ்சில் கை கட்டுதல் தொடர்பான செய்தி ஆதாரப்பூர்வமானது தான்.

”நான் ஸிமாக் பின் ஹர்பிடம் சென்றேன். அப்போது அவர் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார். எனவே நான் திரும்பி விட்டேன். அவரிடம் (எதையும்) கேட்கவில்லை” என்று ஜரீர் பின் அப்துல் ஹுமைத் என்பவர் ஸிமாக்கைப் பற்றி விமர்சித்துள்ளார். இந்த விமர்சனம் மதிப்பற்றதாகும். ஏனெனில் முடியாத நேரத்தில் ஒருவர் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது அல்ல. மேலும் நபி (ஸல்) அவர்களே நின்று கொண்டு சிறுநீர் கழித்துள்ளார்கள். (புகாரி 224)

நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல்

தொழுகையில் நிற்கும் போது இடது கையின் மீது வலது கையை வைத்து, இரு கைகளையும் நெஞ்சின் மீது வைக்க வேண்டும் என்று ஆரம்பம் முதல் நாம் கூறி வருகிறோம்.

இந்தியாவில் பெரும்பாலான முஸ்லீம்கள் தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்டி தொழுது வருகின்றனர். இது தவறானது என்றும் இந்தக் கருத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஹதீஸ்களும் பலவீனமாக உள்ளன என்றும் நாம் கூறி வருகிறோம்.

அல்லாஹ்வின் பேரருளால் தவ்ஹீத் எழுச்சியின் விளைவாக அனேக முஸ்லீம்கள் நெஞ்சின் மீது கைகளைக் கட்டி தொழ ஆரம்பித்துள்ளனர், அல்ஹம்து¬ல்லாஹ்!

தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்ட வேண்டும் என்ற கொள்கையுடைய மார்க்க அறிஞர்கள், இந்த எழுச்சியைச் சகித்துக் கொள்ள முடியாமல், ”தொப்புளுக்குக் கீழே கை கட்டுவது பற்றிய ஹதீஸ் பலவீனமானது என்றால், நெஞ்சில் கை கட்டும் ஹதீஸும் பலவீனமானது தான்” என்று எதிர்ப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

நெஞ்சில் கை கட்டுவது குறித்த ஹதீஸ் பலவீனமானது என்பதற்குச் சில காரணங்களையும் முன் வைக்கின்றனர்.

தொப்புளுக்குக் கீழே கை கட்டுவது பற்றிய ஹதீஸ்கள் பலவீனமானவை என்றாலும், இது பற்றி ஒரு ஹதீஸ் மட்டும் ஆதாரப்பூர்வமானது என்று இன்னும் சிலர் வாதிட்டு வருகின்றனர்.

எனவே நெஞ்சில் கை கட்டுவது குறித்த ஹதீஸ் உண்மையாகவே பலவீனமானது தானா? என்பதையும், தொப்புளுக்குக் கீழே கை கட்டுவது குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதும் உண்டா? என்பது பற்றியும் மறு ஆய்வு செய்ய நாம் முன் வந்தோம்.

மறு ஆய்வுக்குப் பின்னரும் நமது முந்தைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்ற முடிவுக்கே மீண்டும் வருகிறோம்.

தொப்புளுக்குக் கீழே கை கட்டுவது குறித்த ஹதீஸ்கள் அனைத்துமே பலவீனமானவை என்பதையும், நெஞ்சில் கை கட்டுவது பற்றிய ஹதீஸ்களில் ஒரு ஹதீஸ் மட்டும் ஆதாரப்பூர்வமாக அமைந்துள்ளது என்பதையும் மீண்டும் நாம் உறுதி செய்கிறோம். இது பற்றி விபரமாக நாம் காண்போம்.

தொப்புளுக்குக் கீழே கை கட்டுதல்

முதலாவது ஹதீஸ்

தொழுகையில் (இடது) முன் கை மீது (வலது) முன் கையை வைத்து இரண்டையும் தொப்புளுக்குக் கீழே வைப்பது நபிவழியாகும்.

அறிவிப்பவர்: அலீ (ர¬), நூல்: அபூதாவூத் 645

அலீ (ர¬) கூறியதாக இதை அறிவிப்பவர் அபூஜுஹைஃபா ஆவார். இவரது நம்பகத் தன்மையில் நமக்கு மறுப்பு இல்லை.

அபூஜுஹைஃபா கூறியதாக இதை அறிவிப்பவர் ஸியாத் பின் ஸைத் ஆவார். இவரது நம்பகத் தன்மையிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஸியாத் பின் ஸைத் கூறியதாக இதை அறிவிப்பவர் கூஃபா நகரைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் ஆவார். இவரது நம்பகத் தன்மையில் நமக்கு மறுப்பு உள்ளது.

இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள இமாம் அபூதாவூத் அவர்கள், இதற்கு இரண்டு ஹதீஸ்களுக்குப் பின்னர் (அபூதாவூத் 649ல்) இவரைப் பற்றி விமர்சிக்கும் போது, ”கூஃபாவைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவர் பலவீனமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளனர்.

இந்த ஹதீஸ் அபூதாவூதில் மட்டுமின்றி அஹ்மத் 998, பைஹகீ 2170, 2171, தாரகுத்னீ 9 (பாகம்: 1, பக்கம்: 286), தாரகுத்னீ 10 (பாகம்: 1, பக்கம்: 286) ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நூல்கள் அனைத்திலுமே அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவர் வழியாக மட்டுமே இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஷைபாவின் தந்தை (அபூ ஷைபா) என்றும் குறிப்பிடப்படும் அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பார், நம்பகமானவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களுக்கு முரணாக அறிவிக்கும் பொய்யர் (முன்கர்) என்று அபூஹாத்தம், அஹ்மத் பின் ஹம்பல் ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர். இவரைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று இப்னு மயீன் கூறுகிறார். இவர் விஷயத்தில் ஆட்சேபணை உள்ளது என்று புகாரி கூறுகிறார். இவரது ஹதீஸ்களை ஏற்காது விட்டு விட வேண்டும் என்று பைஹகீ கூறுகிறார். ஹதீஸ் கலை அறிஞர்களின் ஒருமித்த முடிவுப்படி அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பார் பலவீனமானவர் என்று இமாம் நவவீ கூறுகிறார்.

இவரை நம்பகமானவர், நாணயமானவர் என்று யாருமே விமர்சனம் செய்யவில்லை. பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்ட இவர் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்கண்ட அறிவிப்புக்கள் அனைத்தும் பலவீனமானவையே என்பதில் ஹதீஸ் கலை அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இல்லை.

தொப்புளுக்குக் கீழே கட்டுவதற்குரிய மற்றொரு ஆதாரம்

தொழுகையில் ஒரு முன் கையை மற்றொரு முன் கையால் பிடித்துக் கொண்டு, தொப்புளுக்குக் கீழே வைக்க வேண்டும் என்று அபூஹுரைரா (ர¬) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ வாயில், நூல்: அபூதாவூத் 647

இந்தச் செய்தியும் பலவீனமானதாகும். இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரிலும் மேலே நாம் கூறிய அப்துர் ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பார் இடம் பெற்றுள்ளார். இதன் காரணமாக இச்செய்தியும் ஆதாரமாகக் கொள்ளத்தக்கதல்ல.

மேலும் இச்செய்தி அபூஹுரைரா (ர¬) அவர்களின் சொந்தக் கூற்றாகத் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாகவோ, கூறியதாகவோ மேற்கண்ட செய்தியில் கூறப்படவில்லை.

மூன்றாவது ஆதாரம்

மூன்று காரியங்கள் நுபுவ்வத்தின் அம்சங்களில் உள்ளவை. 1. நோன்பு துறப்பதை விரைவுபடுத்துதல், 2. ஸஹர் செய்வதைத் தாமதப்படுத்துதல், 3. தொழும் போது தொப்புளுக்குக் கீழே இடது கை மீது வலது கையை வைத்தல்.

இந்தச் செய்தியை இப்னு ஹஸ்மு அவர்கள் எவ்வித அறிவிப்பாளர் தொடருமின்றி குறிப்பிடுகிறார். இதன் அறிவிப்பாளர்கள் யார் என்பது பற்றி எந்த விபரத்தையும் அவர் கூறவில்லை.

இதை அறிவித்த நபித்தோழர் யார்? அவரிடம் கேட்டவர் யார்? நூலாசிரியர் வரை உள்ள அறிவிப்பாளர் பட்டியல் என்ன? என்பதை ஹனபிகள் எடுத்துக் காட்டுவதில்லை. அறிவிப்பாளர் இல்லாமல் கூறப்படும் எந்தச் செய்தியும் ஆதாரமாகக் கொள்ளத் தக்கதல்ல என்பதில் ஹதீஸ் கலை அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர்.

நான்காவது ஆதாரம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வலது கையை இடது கையின் மேல் வைத்து அதைத் தொப்புளுக்குக் கீழே வைத்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ர¬)

நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 1/343

இதன் அறிவிப்பாளரான வாயில் பின் ஹுஜ்ர் (ர¬) நம்பகமானவர்.

அவர்கள் கூறியதாக அறிவிக்கும் அவர்களது மகன் அல்கமாவும் நம்பகமானவர்.

அல்கமா கூறியதாக அறிவிக்கும் மூஸா பின் உமைர் என்பாரும் நம்பகமானவர்.

அவர் கூறியதாக அறிவிக்கும் வகீவு என்பாரும் நம்பகமானவர்.

அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களாக உள்ளதால் இதை ஆதாரமாகக் கொண்டு தொப்புளுக்குக் கீழே தான் கைகளைக் கட்ட வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர்.

மேற்கண்ட அறிவிப்பாளர் வரிசையுடன் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த வாதம் ஏற்கத்தக்க வாதம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

முஸன்னப் இப்னு அபீஷைபா என்று நூ¬ன் பழைய பிரதிகளில் மேற்கண்டவாறு எந்த ஹதீஸும் இல்லை. ஒரே ஒரு அச்சுப் பிரதியில் மட்டுமே மேற்கண்டவாறு அச்சிடப்பட்டுள்ளது.

முஸன்னப் இப்னு அபீஷைபாவின் பல்வேறு பிரதிகளில் இல்லாத இந்த ஹதீஸ் பிற்காலத்தில் அச்சிடப்பட்ட பிரதியில் மட்டும் எப்படி வந்தது என்பதை ஆராய்ந்த அறிஞர்கள் லி குறிப்பாக ஹனபி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் லி இது இடைச் செருகல் என்பதைத் தக்க காரணத்துடன் விளக்கியுள்ளனர்.

முஹம்மத் ஹயாத் ஸின்தீ என்ற ஹனபி மத்ஹப் அறிஞர் இதற்காகவே ஒரு சிறு நூலை எழுதியுள்ளார். அந்த நூலை மேற்கோள் காட்டி துஹ்பதுல் அஹ்வதி என்ற நூ¬ல் அதன் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

முஸன்னப் இப்னு அபீஷைபா நூ¬ன் சரியான மூலப் பிரதியை நான் பார்வையிட்டேன். அதில் கீழ்க்கண்டவாறு இரண்டு செய்திகள் அடுத்தடுத்து உள்ளன.

இவ்விரு செய்திகளின் தமிழாக்கம்:

1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வலது கையை இடது கையின் மீது வைத்ததை நான் பார்த்தேன் என்று வாயில் பின் ஹுஜ்ர் (ர¬) கூறுகிறார்.

2. இப்ராஹீம் (நகயீ) அவர்கள் தமது வலது கையை இடது கையின் மீது வைத்து தொப்புளுக்குக் கீழே வைத்தார்.

மேற்கண்ட இரண்டு செய்திகளையும் கவனியுங்கள். முதல் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்புடையது. அச்செய்தியில் தொப்புளுக்குக் கீழே என்ற வார்த்தை இல்லை. இரண்டாவது செய்தியில் தொப்புளுக்குக் கீழே என்ற வார்த்தை உள்ளது. ஆயினும் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொடர்புடையது அல்ல. இப்ராஹீம் நகயீ என்பார் தொப்புளுக்குக் கீழே கை வைத்தார் என்று தான் கூறப்பட்டுள்ளது. இவர் நபித்தோழர் கூட அல்லர். முஸன்னப் இப்னு அபீஷைபாவில் மேற்கண்டவாறு தான் உள்ளது. ஆயினும் பிரதி எடுத்த யாரோ ஒருவர், ஒரு வரியை விட்டு விட்டு, இரண்டாவது அறிவிப்பில் உள்ள ‘தொப்புளுக்குக் கீழ்’ என்பதை முதல் செய்தியுடன் சேர்த்து எழுதி விட்டார். இப்ராஹீம் நகயீயின் செயல் நபிகள் நாயகத்தின் செயலாகக் காட்டப்பட்டு விட்டது. இது, எடுத்து எழுதியவரின் தவறுதலால் ஏற்பட்டது என்று ஹயாத் ஸின்தீ விளக்கியுள்ளார்.

அத்துர்ரா என்று நூலாசிரியர் தனது நூ¬ல் கீழ்க்கண்டவாறு கூறுவதாகவும் துஹ்பதுல் அஹ்வதி நூலாசிரியர் விளக்குகிறார்.

முஸன்னப் இப்னு அபீ ஷைபா நூ¬ன் எந்தப் பிரதியில், ‘தொப்புளுக்குக் கீழே’ என்ற வார்த்தை நபிகள் நாயகத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதோ அந்தப் பிரதியில் இப்ராஹீம் நகயீ தொடர்பான செய்தி இல்லை.

எந்தப் பிரதியில் இப்ராஹீம் நகயீ தொடர்பான செய்தி உள்ளதோ அதில், ‘தொப்புளுக்குக் கீழே’ என்ற வார்த்தை நபிகள் நாயகத்துடன் தொடர்புபடுத்தப்படவில்லை. இப்ராஹீம் நகயீயின் செயலாகத் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே இரண்டு செய்திகளை வெட்டி ஒட்டியதால் தான் இந்த நிலை ஏற்பட்டது என்று அத்துர்ரா நூலாசிரியர் விளக்குகிறார்.

இது தவிர முஸன்னப் இப்னு அபீஷைபாவில் உள்ள செய்தி அதே அறிவிப்பாளர் தொடருடன் முஸ்னத் அஹ்மதிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இடது கை மீது வலது கையை வைத்தார்கள் என்று மட்டும் தான் உள்ளது. தொப்புளுக்குக் கீழே என்ற வாசகம் முஸ்னத் அஹ்மதில் இல்லை.

மேற்கண்ட இதே செய்தி, இதே அறிவிப்பாளர் வரிசையுடன் தாரகுத்னீயிலும் பதிவாகியுள்ளது.

தாரகுத்னீயிலும் ‘தொப்புளுக்குக் கீழே’ என்ற வாசகம் இல்லை.

மேலும் ஹனபி மத்ஹபின் நிலைபாடுகளை ஆதரித்து எழுதுவதில் வல்லவரான இப்னுத் துர்குமானி என்பார், தமது ‘அல்ஜவ்ஹருன்னகீ’ என்ற நூ¬ல் தொப்புளுக்குக் கீழே கையைக் கட்ட வேண்டும் என்பதையும் ஆதரித்து எழுதியுள்ளார்.

அதில் நாம் மேலே சுட்டிக்காட்டிய அபூஹுரைரா (ர¬) அவர்கள் தொடர்பான செய்தியையும், மூன்றாவது ஆதாரமாக நாம் குறிப்பிட்டுள்ள செய்தியையும் அடிப்படையாக வைத்து, தொப்புளுக்குக் கீழே கை கட்டுவதை நியாயப்படுத்தியுள்ளார். மேலும் தொப்புளுக்குக் கீழே கை கட்ட வேண்டும் என்று அபூமிஜ்லஸ் என்பார் (தாபியீ) கூறியதாக முஸன்னப் இப்னு அபீஷைபாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் தொடர்பில்லாத அந்தச் செய்தியையும் இப்னுத் துர்குமானி ஆதாரமாகக் காட்டியுள்ளார்.

முஸன்னப் இப்னு அபீஷைபாவின் பழைய பிரதிகளில், தொப்புளுக்குக் கீழே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைகளைக் கட்டியதாக ஹதீஸ் இருந்தால் அதை விட்டு விட்டு, பலவீனமான இரண்டு செய்திகளை இப்னுத் துர்குமானி ஆதாரமாகக் காட்டி தமது மத்ஹபை நிலைநாட்டி இருக்க மாட்டார். மேலும் முஸன்னப் இப்னு அபீஷைபா நூ¬ல் தனக்கு ஆதாரமாக ஏதாவது கிடைக்கிறதா? என்று தேடிப் பார்த்தவருக்கு, அபூமிஜ்லஸ் என்பாரின் சொந்தக் கூற்று தான் கிடைத்தது. எனவே அதை எடுத்துக் காட்டியுள்ளார்.

எனவே, தொப்புளுக்குக் கீழே என்ற வார்த்தை முஸன்னப் இப்னு அபீஷைபாவின் மூலப் பிரதிகளிலும், பழைய பிரதிகளிலும் இல்லை. அது பிற்காலத்தில் வெட்டி ஒட்டி தயாரிக்கப்பட்டுள்ளது என்பது மேலும் உறுதியாகின்றது.

மேற்கண்ட அந்த நான்கு ஆதாரங்களைத் தான் தொப்புளுக்குக் கீழே கை கட்ட வேண்டும் என்போர் கூறுகின்றனர்.

1. முதல் ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டிய ஹதீஸ் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் மூலம் அறிவிக்கப்படுவதால் அது ஆதாரமாகாது.

2. இரண்டாவது ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டிய ஹதீஸ் அதே நபர் மூலம் அறிவிக்கப்படுவதாலும், அபூஹுரைராவின் சொந்தக் கூற்று என்பதாலும் அதுவும் ஆதாரமாகாது.

4. மூன்றாவது ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டிய ஹதீஸ் எந்த அறிவிப்பாளர் தொடரும் இல்லாததால் அதுவும் ஆதாரமாக ஆகாது.

3. நான்காவது ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டிய ஹதீஸ் வெட்டி ஒட்டி உருவாக்கப்பட்ட கற்பனைச் செய்தியாக உள்ளதால் இதுவும் ஆதாரமாக ஆகாது.

நெஞ்சில் கைகளைக் கட்டுதல்

தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்டுதல் பற்றிய ஹதீஸ்கள் எதுவுமே ஆதாரமாக இல்லாததால் அதை நாம் நடைமுறைப்படுத்தக் கூடாது. அப்படியானால் நெஞ்சில் கைகளைக் கட்டுவது தொடர்பான ஹதீஸ்கள் மட்டும் ஆதாரமாகவுள்ளதா? என்று மாற்றுக் கருத்துடையவர்கள் கேட்கின்றனர்.

நெஞ்சில் கை கட்டுவது பற்றிய ஹதீஸிலும் பலவீனங்கள் உள்ளதாக அவர்கள் பட்டியல் போட்டுள்ளனர். அந்த ஹதீஸையும் அது குறித்து மாற்றுக் கருத்துடையோர் எழுப்பும் விமர்சனங்களையும் நாம் விரிவாக ஆய்வு செய்வோம்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அவர்கள் தமது வலது கையை இடது கையின் மேல் வைத்து நெஞ்சின் மேல் வைத்தார்கள்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ர¬)

நூல்: ஸஹீஹ் இப்னு குஸைமா 1/243

வாயில் பின் ஹுஜ்ர் (ர¬) கூறியதாக இதை அறிவிப்பவர் குலைப் என்பார்.

குலைப் கூறியதாக அறிவிப்பவர் அவரது மகன் ஆஸிம் என்பார்.

ஆஸிம் கூறியதாக அறிவிப்பவர் சுஃப்யான் என்பார்.

சுஃப்யான் என்பார் கூறியதாக அறிவிப்பவர் முஅம்மல் பின் இஸ்மாயீல் என்பார்.

முஅம்மல் பின் இஸ்மாயீல் கூறியதாக அறிவிப்பவர் அபூமூஸா என்பார்.

அபூமூஸா என்பார் கூறியதாக அறிவிப்பவர் அபூபக்ர் என்பார்.

அபூபக்ர் என்பவர் கூறியதாக அறிவிப்பவர் அபூதாஹிர்.

அபூதாஹிரிடம் நேரடியாகக் கேட்டு இப்னு குஸைமா தமது நூ¬ல் பதிவு செய்துள்ளார்.

மேற்கண்ட அறிவிப்பாளர்களில் முஅம்மல் பின் இஸ்மாயீலைத் தவிர மற்ற அனைவருமே நம்பகமானவர்கள்.

முஅம்மல் பின் இஸ்மாயீல் உண்மையாளர் என்றாலும் நினைவாற்றல் குறைந்தவர் என்பதால் பலவீனமானவர்.

தொப்புளுக்குக் கீழே கை கட்டுவதை அறிவிக்கும் அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவரைப் போல் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் அல்ல. நினைவாற்றல் குறைந்தவர் என்பதால் பலவீனமானவர். ஆயினும் நினைவாற்றல் குறைவு என்பதும் பலவீனம் தான். முஅம்மல் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது பலவீனமான ஹதீஸ் என்பதை நாமும் கடந்த காலங்களில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

ஏகத்துவப் பிரச்சாரத்தின் துவக்க காலத்தில் இதை நாம் ஆதாரமாகக் குறிப்பிட்டிருந்தாலும், இவர் பலவீனமானவர் என்பது தெரிந்த பின், பல வருடங்களாக இதை ஆதாரமாக நாம் எடுத்துக் காட்டுவதில்லை.

இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதை நாமே தெளிவுபடுத்தி விட்டோம். அப்படியிருந்தும் இதை நாம் ஆதாரமாக எடுத்துக் காட்டுவதாக எண்ணிக் கொண்டு, நெஞ்சில் கை கட்டுவது தொடர்பான ஹதீஸும் பலவீனமானது என்று கூறி வருகின்றனர்.

மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்றாலும் பலவீனமில்லாத ஆதாரப்பூர்வமான ஒரு ஹதீஸும் உள்ளது. நெஞ்சில் கை கட்டுவதற்கு அதையே நாம் ஆதாரமாக எடுத்துக் காட்டி வருகிறோம்.

முஸ்னத் அஹ்மதில் இடம் பெற்றுள்ள பின்வரும் ஹதீஸ் தான் அது.

”நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலது புறமும் இடது புறமும் திரும்பியதை நான் பார்த்துள்ளேன். மேலும் அவர்கள் இதைத் தமது நெஞ்சின் மீது வைத்ததையும் நான் பார்த்துள்ளேன்” என்று ஹுல்ப் அத்தாயீ (ர¬) அறிவிக்கிறார்.

யஹ்யா என்ற அறிவிப்பாளர் ”இதைத் தமது நெஞ்சின் மீது” என்று கூறும் போது, வலது கையை இடது கை மணிக்கட்டின் மேல் வைத்து விளக்கிக் காட்டினார்.

நூல்: முஸ்னத் அஹ்மத் 22610

”ஒரு கையை மற்றொரு கையின் மணிக்கட்டில் வைத்து இரண்டையும் சேர்த்து நெஞ்சின் மீது வைத்தார்கள்” என்று கூறுவதை விட அவ்வாறு செய்து காட்டி, ”இதை நெஞ்சில் வைத்தார்கள்” என்று கூறுவது எளிதாகவும், நேரில் பார்ப்பவர் புரிந்து கொள்ள ஏற்றதாகவும் அமையும்.

எனவே தான், ”இதை” என்று சொல்லும் போது, ஒரு கை மீது மற்றொரு கையை வைத்து யஹ்யா விளக்கிக் காட்டியிருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் யஹ்யா என்ற அறிவிப்பாளர் வார்த்தையால் விளக்குவதை விட செய்முறையால் விளக்குவதை வழக்கமாகக் கொண்டவர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜில் கல் எறிதல் பற்றிச் செய்து காட்டியதை விளக்கும் போது, சிறு கல்லை எடுத்துச் சுண்டி விட்டு, ”இப்படிச் செய்தார்கள்” என்று யஹ்யா விளக்கினார். (நூல்: நஸயீ 3009)

தலைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸஹ் செய்ததை வாயால் கூறாமல் அதைச் செய்து காட்டி, ”இப்படி நபிகள் நாயகம் மஸஹ் செய்தார்கள்” என்று விளக்கியுள்ளார். (நூல்: அஹ்மத் 1107)

துவக்க காலத்தில் ருகூவின் போது மூட்டுக் கால்கள் மீது கைகளை வைக்காமல் இரண்டு தொடைகளுக்கு மத்தியில் இரு கைகளையும் சேர்த்து வைக்கும் வழக்கம் இருந்தது. இதைப் பற்றி யஹ்யா அறிவிக்கும் போது, வார்த்தையால் கூறாமல் இரண்டு கைகளையும் தொடைகளுக்கு மத்தியில் வைத்துக் காட்டி, ”இப்படிச் செய்தார்கள்” என்று கூறியுள்ளார். (நூல்: அஹ்மத் 1652)

கியாமத் நாளும், நானும் இப்படி நெருக்கமாகவுள்ளோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் போது ஆட்காட்டி விரலையும் சேர்த்துக் காட்டினார்கள். இதை யஹ்யா அறிவிக்கும் போது, இரண்டு விரல்களையும் சேர்த்துக் காட்டி இப்படிச் செய்தார்கள் என்று விளக்கினார். (நூல்: அஹ்மத் 14047)

‘மேற்கண்ட ஹதீஸில், ”இதை நெஞ்சில் வைத்தார்கள்” என்று தான் உள்ளது. கையை வைத்தார்கள் என்று இல்லையே!’ என்று சிலர் விதண்டாவாதம் செய்வதால் தான் மேற்கண்ட விபரங்களைக் கூறுகிறோம்.

இதை என்று கூறும் போது அறிவிப்பாளர் என்ன செய்து காட்டினாரோ அந்த நிலை தான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இனி இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் பற்றி ஆய்வு செய்வோம்.

மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் இது தான்.

ஹுல்ப் என்ற நபித்தோழர் கூறியதாக அறிவிப்பவர் அவரது மகன் கபீஸா ஆவார்.

கபீஸா கூறியதாக அறிவிப்பவர் ஸிமாக் பின் ஹர்பு ஆவார்.

ஸிமாக் பின் ஹர்ப் கூறியதாக அறிவிப்பவர் சுஃப்யான் ஆவார்.

சுஃப்யான் கூறியதாக அறிவிப்பவர் யஹ்யா பின் ஸயீத் ஆவார்.

யஹ்யா பின் ஸயீத் கூறியதை நேரடியாகக் கேட்டு இமாம் அஹ்மத் பின் ஹம்பல் தமது நூ¬ல் பதிவு செய்துள்ளார்கள்.

முதல் அறிவிப்பாளரான ஹுல்ப் அவர்கள் நபித்தோழர் என்பதால் அவரைப் பற்றி எந்த விமர்சனமும் இல்லை. நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பது ஹதீஸ் கலையில் கருத்து வேறுபாடு இன்றி ஒப்புக் கொள்ளப்பட்ட விதியாகும்.

ஹுல்ப் அவர்கள் கூறியதாக அவரது மகன் கபீஸா அறிவிக்கிறார்.

மேற்கண்ட ஹதீஸைப் பலவீனமாக்க முயற்சிப்பவர்கள் இவரைக் காரணம் காட்டி, இந்த ஹதீஸ் ஆதாரமற்றது என்று கூறுகின்றனர்.

கபீஸா என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்று பலரும் கூறியுள்ளனர். எனவே யாரென்று தெரியாத கபீஸா என்பவர் வழியாக மட்டுமே இது அறிவிக்கப்படுவதால் இது பலவீனமான செய்தியாகும் என்பது இவர்களின் வாதம்.

இமாம் நஸயீ, இப்னுல் மதீனி ஆகியோர், ‘இவர் யாரென்று தெரியாதவர்’ என்று கூறியுள்ளதைத் தங்களின் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

அறியப்படாதவருக்கான இலக்கணம்

ஒரு அறிவிப்பாளர் பற்றி எந்த விபரமும் கிடைக்கவில்லை. அவர் வழியாக ஒரேயொரு அறிவிப்பாளர் தான் அறிவித்துள்ளார் என்றால் அத்தகைய அறிவிப்பாளர், ‘அறியப்படாதவர்’ என்ற நிலையில் வைக்கப்படுவார்.

இந்த அளவுகோ¬ன் அடிப்படையில் கபீஸா என்பவர் வழியாக பல ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த ஹதீஸ்கள் அனைத்தையுமே ஸிமாக் பின் ஹர்ப் என்பவர் தான் அறிவிக்கிறார்.

ஸிமாக் பின் ஹர்ப் என்பாரைத் தவிர வேறு எந்த ஒருவரும் கபீஸா கூறியதாக எந்த ஒரு செய்தியையும் அறிவித்ததில்லை என்பதால் கபீஸா யாரென்று அறியப்படாதவர் என்பதில் சந்தேகமில்லை என்பது இவர்களின் வாதம்.

யாரென்று அறியப்படாதவர் என்பதற்குரிய பாதி இலக்கணத்தை மட்டும் தான் இவர்கள் பார்த்துள்ளனர். முழுமையாகப் பார்க்கவில்லை என்பதால் தான் கபீஸா பற்றி இவ்வாறு கூறுகின்றனர்.

ஹதீஸ் கலையையும், அறிவிப்பாளர்களையும், அவர்களின் தகுதிகளையும் அலசி ஆராயும் அறிஞர்கள் யாரும் ஒரு அறிவிப்பாளரைப் பற்றி எந்த நற்சான்றும் அளிக்காமல் இருந்தால், அப்போது தான் குறைந்த பட்சம் அவர் வழியாக இரண்டு பேராவது அறிவித்துள்ளார்களா? என்பதைக் கவனிக்க வேண்டும்.

அறிவிப்பாளரை எடை போடும் அறிஞர்கள் யாராவது ஒருவரோ, பலரோ ‘நம்பகமானவர்’ என்று ஒருவரைப் பற்றி முடிவு செய்திருந்தால் அப்போது அவர் வழியாகக் குறைந்தது இரண்டு பேர் அறிவித்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

அறிவிப்பாளரின் அனைத்துக் குறைகளையும், நிறைகளையும் திரட்டி வைத்துக் கொண்டு முடிவு செய்யும் அறிஞர்கள், ஒருவரை நம்பகமானவர் என்று கூறுகிறார்கள் என்றால் அந்த அறிவிப்பாளர் பற்றி அவர்கள் முழு அளவுக்கு அறிந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகி விடுகிறது.

எந்த அறிவிப்பாளரைப் பற்றி, ‘நம்பகமானவர்’ என்று யாராலும் முடிவு செய்யப்படவில்லையோ அந்த அறிவிப்பாளர் பற்றித் தான் இரண்டு பேராவது அறிவித்துள்ளார்களா? என்ற விதியைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.

அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சில அறிவிப்பாளர்களின் நிலையை நாம் இதற்கு உதாரணமாக எடுத்துக் காட்டலாம்.

1. வலீத் பின் அப்துர்ரஹ்மான் அல் ஜாரூதி

இவர் வழியாக இவரது மகன் முன்திர் என்பார் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை.

அப்படியிருந்தும் இவர் அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் (4621) பதிவாகியுள்ளது.

ஒருவர் மட்டுமே இவர் வழியாக அறிவித்திருப்பதால் அறியப்படாதவர் ஆவார் என்றால் புகாரி எப்படி இவரது ஹதீஸைப் பதிவு செய்திருப்பார்கள்? இவர் வழியாக ஒருவர் மட்டுமே அறிவித்திருந்தாலும் இவரது நம்பகத்தன்மைய வேறு வழியில் புகாரி அறிந்து கொண்டிருப்பதால் தான் பதிவு செய்துள்ளார்.

2. ஹுசைன் பின் முஹம்மத் அல் அன்ஸாரி என்பார் வழியாக ஸுஹ்ரி என்பவரைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. ஆயினும் இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரி 425, 4010, 5401 முஸ்லீம் 1052 ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

3. ஜுவைரியா பின் குதாமா என்பார் வழியாக அபூஜம்ரா எனும் நஸ்ர் பின் இம்ரான் என்பவர் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. அப்படியிருந்தும் இவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸை இமாம் புகாரி (3162) பதிவு செய்துள்ளார்.

4. அப்துல்லாஹ் பின் வதீஆ அல்அன்ஸாரி என்பார் வழியாக அபூஸயீத் அல்மக்புரி என்பார் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. ஆயினும் இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் (883, 910) பதிவு செய்யப்பட்டுள்ளன.

5. உமர் பின் முஹம்மத் பின் ஜுபைர் பின் ஜுபைர் பின் முத்இம் என்பார் வழியாக ஸுஹ்ரியைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. ஆயினும் இவர் வழியாக அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் (2821, 3148) பதிவு செய்யப்பட்டுள்ளன.

6. முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் என்பார் வழியாக ஸுஹ்ரியைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. அப்படியிருந்தும் இவர் அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் 2581 பதிவாகியுள்ளது.

7. ஸைத் பின் ரபாஹ் அல்மதனி என்ற அறிவிப்பாளர் நபித்தோழராக இல்லாமல் இருந்தும், இவர் வழியாக மா¬க் என்பவர் மட்டுமே அறிவித்திருந்தும் இவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸை இமாம் புகாரி (1190) பதிவு செய்துள்ளார்கள்.

ஒரு அறிவிப்பாளர் வழியாக ஒரேயொருவர் மட்டுமே அறிவித்ததால் அவர் அறியப்படாதவர் என்பது பொதுவான விதியல்ல. யாரைப் பற்றி அறிஞர்கள் எந்த முடிவும் கூறவில்லையோ அத்தகைய அறிவிப்பாளர்களுக்கு மட்டுமே அந்த விதி உரியதாகும் என்பதை இதி¬ருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இது பற்றி ஹதீஸ் கலை நூற்களில் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது.

அப்துல்லாஹ் பின் அஸமா என்பவர் வழியாக ஒருவர் மட்டுமே அறிவித்துள்ளார். அவர்கள் பார்வையில் இவர் யாரென அறியப்படாதவர் ஆவார். ஆயினும் ஒருவர் நாணயம், நேர்மையால் அறியப்பட்டவராக இருந்தால் அவர் வழியாக ஒருவர் மட்டும் அறிவிப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

நூல்: அன்னுகத் லி 3/386

எனவே ஒரு அறிவிப்பாளரைப் பற்றி ‘யாரென அறியப்படாதவர்’ என்று முடிவு செய்வதற்கு, அவரிடமிருந்து எத்தனை பேர் அறிவித்துள்ளனர் என்பது இரண்டாம் பட்சமாகக் கவனிக்க வேண்டியதாகும். அவர் நம்பகமானவர் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறியிருந்தால், அதன் பின்னர் அவர் வழியாக அறிவிப்பவர் எத்தனை பேர் என்பது கவனிக்கத் தேவையற்றதாகும்.

நெஞ்சில் கை கட்டுவது தொடர்பான ஹதீஸை கபீஸா என்பவர் வழியாக ஸிமாக் பின் ஹர்ப் மட்டுமே அறிவித்துள்ளார் என்பது உண்மை என்றாலும், இவரை இப்னு ஹிப்பான், இஜ்லீ ஆகிய அறிஞர்கள் நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.

இப்னு ஹிப்பான் அவர்கள் யாரையாவது நம்பகமானவர் என்று கூறினால் அதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

யாரைப் பற்றி எந்த அறிஞரும் குறை கூறவில்லையோ அவர்கள் நம்பகமானவர்கள் என்பது இப்னு ஹிப்பானின் அடிப்படை விதி.

யார் நம்பகமானவராக இருக்கிறாரோ அவரை எந்த அறிஞரும் குறை கூறியிருக்க மாட்டார்கள்.

அது போல் யாரென்றே தெரியாதவரைப் பற்றியும் யாருமே குறை கூறியிருக்க மாட்டார்கள்.

இப்னு ஹிப்பானின் அடிப்படை விதியின் படி நம்பகமானவர்களும் நம்பகமானவர் பட்டிய¬ல் இருப்பார்கள். யாரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லையோ அவர்களும் நம்பகமானவர் பட்டிய¬ல் இடம் பெறுவார்கள்.

இப்னு ஹிப்பானின் விதியே தவறாக உள்ளதால் ஒரு அறிவிப்பாளரை ‘நம்பகமானவர்’ என்று அவர் கூறியிருந்தால் அதை யாருமே கண்டு கொள்வதில்லை; கண்டு கொள்ளவும் கூடாது.

ஆனால் அவருடன் சேர்ந்து இஜ்லீ அவர்களும் கபீஸாவை நம்பகமானவர் என்று கூறியுள்ளார்.

இவரும் இப்னு ஹிப்பானைப் போன்றவர் தான் என்று பிற்கால அறிஞர்கள் சிலர் கூறுவது மடமையின் உச்சக்கட்டமாகும்.

யாரெனத் தெரியாதவரையும் நம்பகமானவர் என்று கூறும் எந்த விதியையும் இஜ்லீ அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

யாரைப் பற்றி நம்பகமானவர் என்பதற்கான ஆதாரம் கிடைக்கிறதோ அவரைத் தான் நம்பகமானவர் என்று கூறுவார். அந்த வகையில் இவருக்கும் இப்னு ஹிப்பானுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது.

அறிவிப்பாளர்களை எடை போடுவதில் இஜ்லீயை விட வல்லவர்கள் ”இன்ன அறிவிப்பாளர் நம்பகமானவர் அல்ல” என்று கூறியிருக்கும் போது, அவர்களுக்கு மாற்றமாக இஜ்லீ கூறினால் மட்டும் தான் அதை அறிஞர்கள் மறுத்துள்ளனர்.

யாரென அறியப்படாதவர் என்று விமர்சிக்கப்பட்ட ஒருவரைப் பற்றி இஜ்லீ நம்பகமானவர் என்று கூறினால் அப்போது இஜ்லீயின் கூற்றை முந்தைய அறிஞர்கள் நிராகரிப்பதில்லை.

கபீஸாவைப் பொறுத்த வரை, இவர் பலவீனமானவர் என்றோ, வேறு வகையிலோ குறை கூறப்படவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் ‘இவர்களுக்கு மாற்றமாக இஜ்லீ கூறுவதை எப்படி ஏற்கலாம்?’ என்று கேள்வி எழுப்ப முடியும். ஆனால் கபீஸாவைப் பற்றி யாரும் எந்தக் குறையும் கூறவில்லை.

இமாம் நஸயீ, இப்னுல் மதீனி ஆகியோர், ‘இவர் யாரென்று தெரியாதவர்’ என்று தான் கூறுகின்றனர்.

எனவே அவரைப் பற்றித் தெரிந்து கொண்ட இஜ்லீ, ‘நம்பகமானவர்’ என்று நற்சான்று அளிப்பதே போதுமானதாகும். பிற்காலத்தவர்கள் பழி சுமத்துவது போல் இஜ்லீ அவர்கள் சாதாரணமானவர் அல்ல.

”இஜ்லீ அவர்கள் ஹதீஸ் கலை பற்றிய ஆய்வு துவங்கிய, துவக்க காலத்தைச் சேர்ந்தவர். ஹிஜ்ரி 186ல் பிறந்து 261ல் மரணித்தவர். அதிகமாக மனனம் செய்தவர். கூஃபா, பஸரா, பாக்தாத், சிரியா, ஹிஜாஸ், எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து தமது காலத்தில் வாழ்ந்த பெரும்பாலான அறிஞர்களிடம் கல்வி பயின்றவர்” என்று அல்இலல் என்ற நூ¬ல் (1/65) அதன் ஆசிரியர் புகழ்ந்துரைக்கிறார்.

”அறிவிப்பாளர் பற்றி விமர்சிக்கும் வகையில் இவர் எழுதிய நூல் மிகப் பயனுள்ளது. இவரது விரிவான நினைவாற்றலுக்குச் சான்றாகத் திகழ்கிறது” என்று தஹபீ, தமது தத்கிரதுல் ஹுப்பாள் என்ற நூ¬ல் நற்சான்று அளிக்கிறார்.

”அறிவிப்பாளர் பற்றி விமர்சிக்கும் இவரது நூலை நான் பார்வையிட்டேன். அதற்கு அடிக்குறிப்பும் எழுதியுள்ளேன். இவரது ஆழமான ஞானமும், விரிந்த நினைவாற்றலும் அந்த நூ¬¬ருந்து வெளிப்படுகிறது” என்று தஹபீ அவர்கள் ‘ஸியரு அஃலாமுன் நுபலா’ என்ற நூ¬ல் பாராட்டுகிறார்.

இப்னுல் இமாத் அவர்களும் தமது ஷத்ராதுத் தஹப் என்ற நூ¬ல் இவ்வாறே இவரைப் புகழ்ந்துரைத்துள்ளார்.

இத்துறையில் நூல் எழுதியவர்களில் காலத்தால் முந்தியவர்கள், அபூஹாத்தம், இஜ்லீ, இப்னு ஷாஹீர் ஆகியோர் என்று சகானி தமது மவ்லூஆத் நூ¬ல் கூறுகிறார்.

எனவே கபீஸா என்பவர் வழியாக ஸிமாக் பின் ஹர்ப் மட்டுமே அறிவித்திருந்தாலும், இவரது நம்பகத்தன்மையை இஜ்லீ அவர்கள் உறுதி செய்திருப்பதால், ‘யாரென அறியப்படாதவர்’ என்ற விமர்சன வட்டத்திற்குள் இவர் வர மாட்டார்.

இஜ்லீ அவர்கள் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அதை ஏற்கலாம் என்பதற்கு அறிஞர்களின் பல்வேறு கூற்றுக்கள் சான்றாக உள்ளன.

”…அம்ரு பின் பஜ்தான் என்பவர் வழியாக மட்டுமே இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை இஜ்லீ நம்பகமானவர் என்று கூறியுள்ளார். இப்னுல் கத்தான் ”இவர் யாரென்று அறியப்படாதவர்” என்று கவனக் குறைவாகக் கூறி விட்டார்” என்று இப்னு ஹஜர் கூறுகிறார்கள்.

நூல்: தல்கீஸ் 1/287

அம்ரு பின் பஜ்தான் பற்றி இஜ்லீ நம்கமானவர் என்று கூறியிருக்கும் போது அதைக் கவனிக்காமல் ‘இவர் அறியப்படாதவர்’ என்று இப்னுல் கத்தான் கூறியிருப்பது கவனக் குறைவு என்ற இப்னு ஹஜர் அவர்களின் கூற்றி¬ருந்து இஜ்லீ அவர்களின் நற்சான்றை அலட்சியப்படுத்த முடியாது என்பதை அறியலாம்.

ஸியாத் பின் நுஐம், அம்ரு வழியாக அறிவிக்கும் ஹதீஸை இமாம் அஹ்மத் பின் ஹம்பல் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார். இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரப்பூர்வமானதாகும். ஸியாத் பின் நுஐமை, இஜ்லீயும், இப்னு ஹிப்பானும் நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.

நூல்: தன்கீஹுத் தஹ்கீக் 2/103

ஸியாத் பின் நுஐம் வழியாக இமாம் அஹ்மத் பின் ஹம்பல் மட்டுமே அறிவித்திருந்தும் அவர் அறிவிக்கும் ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்று தன்கீஹுத் தஹ்கீக் நூலாசிரியர் அறிஞர் இப்னு அப்துல் ஹாதீ (ஹிஜ்ரீ 704) கூறுகிறார். மேலும் இப்னு ஹிப்பான், இஜ்லீ ஆகிய இருவர் மட்டுமே நம்பகமானவர் எனக் கூறியுள்ள போதும் ஸியாத் பின் நுஐம் அறிவிக்கும் ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்கிறார்.

இஜ்லீ அவர்களின் நற்சான்றை அலட்சியப்படுத்த முடியாது என்பதை இதி¬ருந்தும் அறியலாம்.

கபீஸாவை இஜ்லீ மட்டும் நம்பகமானவர் என்று கூறவில்லை. மாறாக வேறு பல அறிஞர்களும் அவரது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளனர் என்பதையும் நாம் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

முஸ்னத் அஹ்மத் 20965, 20974, 20977 ஆகிய எண்ணுள்ள ஹதீஸ்கள், கபீஸா வழியாக ஸிமாக் அறிவிப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட அனைத்து அறிவிப்பும் கபீஸா வழியாக ஸிமாக் அறிவிப்பதாக உள்ளது. இதைப் பற்றி தஹபீ அவர்கள் கூறும் போது,

”இதை அஹ்மத் இமாம் பதிவு செய்துள்ளார்கள்; இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள்” என்று கூறுகிறார்.

இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று தஹபீ கூறுவதன் மூலம் அறிவிப்பாளர்களில் ஒருவரான கபீஸாவும் நம்பகமானவர்கள் என்ற பட்டிய¬ல் அடங்கியுள்ளார். இஜ்லீயைப் போன்று தஹபீயும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

அஹ்மதில் இடம் பெற்ற மேற்கண்ட ஹதீஸ் பற்றி பூசிரி அவர்கள்,

”இதை அபூதாவூத் தயா¬ஸி வழியாக அஹ்மத் பின் ஹன்பல் பதிவு செய்துள்ளார்கள். இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள்” என்று கூறுகிறார்.

நூல்: இத்ஹாப், பாகம்: 1, பக்கம்: 4

இஜ்லீ அவர்கள் கபீஸாவுக்கு அளித்த நற்சான்றின் அடிப்படையிலேயே தஹபீ, பூசிரி போன்றோர் கபீஸாவை நம்பகமானவர் எனக் கூறியுள்ளனர்.

அல்பானி போன்றவர்கள் இஜ்லீயை இப்னு ஹிப்பானுடன் சேர்த்திருந்தாலும், தங்கள் நிலைபாட்டுக்கு ஆதரவு என்று வரும் போது மட்டும் இஜ்லீயை ஏற்றுக் கொள்வது வழக்கம்.

”நாஜியா பின் கஅப் என்பவரைத் தவிர அனைவரும் புகாரி, முஸ்லீம் அறிவிப்பாளர்களும், நம்பகமானவர்களும் ஆவர். இஜ்லீ அவர்கள் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் அவர்களும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர். இதன் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானது என்று அபூதாவூத் கூறுவது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்” என்று அல்பானி கூறுகிறார்.

நூல்: அஹ்காமுல் ஜனாயிஸ்

இஜ்லீயைத் தவிர யாரும் நம்பகமானவர் என்று கூறாத ஒருவரை அல்பானி ஏற்றுக் கொள்கிறார். (இப்னு ஹஜர் நம்பகமானவர் என்று கூறியிருப்பது, இஜ்லீயின் கூற்றின் அடிப்படையில் தான். ஏனெனில் இப்னு ஹஜர் அவர்கள் பிற்காலத்தவர். அவர் இதை சுயமாகக் கூற முடியாது)

இதே போல் ஹாரிஸா அல்கிந்தீ என்பவரைப் பற்றி அல்பானி கூறும் போது,

”இஜ்லீயும் இப்னு ஹிப்பானும் கூறுவது போல் இவர் நம்பகமானவர்” என்று அல்பானி கூறுகிறார்.

நூல்: ளிலாலுல் ஜன்னத், 2/80

இது போல் அபுல் முஸன்னா என்பவரைப் பற்றி அல்பானி கூறும் போது,

”இப்னு ஹிப்பானும், இஜ்லீயும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர். எனவே இது ஹஸன் தரத்தில் உள்ளது” என்றும் அல்பானி கூறுகிறார்.

நூல்: ஸமருல் முஸ்ததாப்

எனவே இஜ்லீயின் விமர்சனத்தைச் சில வேளை ஏற்றும், சில வேளை நிராகரித்தும் பிற்கால அறிஞர்கள் இரட்டை நிலை மேற்கொண்டது இதன் மூலம் அம்பலமாகிறது.

இஜ்லீயைத் தரம் தாழ்த்துவதில் வழிகாட்டியாக இருந்த அல்பானியே தன்னையும் அறியாமல் அவரது கூற்றை மட்டும் நம்பி, அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறார்.

எனவே கபீஸா என்ற அறிவிப்பாளர் மிகவும் நம்பிக்கைக்குரியவர் என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்ததாக மேற்கண்ட ஹதீஸின் அடுத்த அறிவிப்பாளரான ஸிமாக் பின் ஹர்ப் பற்றியும் சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.

கபீஸாவிடமிருந்து அறிவிக்கும் ஸிமாக் அவர்கள் பற்றிப் பாராட்டியும், குறை கூறியும் இரண்டு விதமான விமர்சனங்கள் உள்ளன.

காரணம் இவர் தனது முதுமைக் காலத்தில் மூளை குழம்பி விட்டார். அதனால் தப்பும் தவறுமாக அறிவிக்கலானார். அந்த நேரத்தில் இவரைக் கண்டவர்கள் இவரைக் குறை கூறியுள்ளனர்.

முதுமைக்கு முந்தைய காலத்தில் மிகச் சரியாக அறிவிப்பவராக இருந்தார். அந்த நிலையில் இவரைக் கண்டவர்கள் அவரைப் பாராட்டுகின்றனர்.

இது போன்ற அறிவிப்பாளர்கள் எந்த ஹதீஸை மூளை குழம்புவதற்கு முன் அறிவித்தார்களோ அவை சரியான ஹதீஸ்களாகும்.

மூளை குழம்பிய பின் அறிவித்தவை பலவீனமானவை.

மூளை குழம்புவதற்கு முன்பா, பின்பா என்பது தெரியாவிட்டால் அவை முடிவு ஏதும் இன்றி நிறுத்தி வைக்கப்படும்.

ஷுஃபா, சுஃப்யான் போன்றவர்கள் ஸிமாக் மூளை குழம்புவதற்கு முன்னர் அவரிடம் கேட்டவர்கள். மூளை குழம்பிய பின்னர் அவரிடம் எதையும் கேட்டதில்லை. எனவே இவர்கள் ஸிமாக் வழியாக அறிவித்தால் அவை ஆதாரப்பூர்வமானது.

இவர் மூளை குழம்பிய பின் இவரிடம் கேட்டவர் இக்ரிமா மட்டும் தான். ஸிமாக் வழியாக இக்ரிமா அறிவித்தால் அது பலவீனமானது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் தீர்வு கண்டுள்ளனர்.

இந்த ஹதீஸை ஸிமாக்கிடமிருந்து சுஃப்யான் தான் அறிவிக்கிறார். எனவே இது சரியான ஹதீஸ் என்பதில் ஐயம் இல்லை.

அடுத்ததாக மேற்கண்ட ஹதீஸின் அடுத்த அறிவிப்பாளரான சுஃப்யான் அவர்கள் மாமேதையும், இத்துறையின் இமாமும் ஆவார். அது போல் யஹ்யா பின் ஸயீத் அல் கத்தானும் மாமேதையும் இமாமுமாவார்.

எனவே நெஞ்சில் கை கட்டுவது பற்றிய ஹதீஸின் அனைத்து அறிவிப்பாளர்ர்களும் நம்பகமானவர்களாக உள்ளதால் இது முற்றிலும் ஆதாரப்பூர்வமானது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இதில் மற்றொரு கேள்வியையும் சிலர் எழுப்புகின்றனர்.

வகீஃ, அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, அபுல் அஹ்வஸ், ஷரீக் ஆகியோரின் அறிவிப்பில் ‘நெஞ்சின் மீது’ என்ற வாசகம் இடம் பெறவில்லை. எனவே ஒரு செய்தியில் மட்டும் இடம் பெறும், ‘நெஞ்சின் மீது’ என்ற வாசகத்தை வைத்து சட்டம் இயற்றுவது சரியல்ல என்ற வாதத்தையும் முன் வைக்கின்றனர்.

நெஞ்சின் மீது கை வைக்க வேண்டும் என்று அறிவிக்கும் அஹ்மத் அறிவிப்பில் ஸிமாக் என்பவரிடமிருந்து சுஃப்யான், அபுல் அஹ்வஸ், ஷரீக் ஆகியோர் அறிவிக்கின்றனர். இதில் அபுல் அஹ்வஸ், ஷரீக் ஆகியோரின் அறிவிப்புக்களில், ”இடது கையை வலது கையின் மீது வைத்தார்கள்” என்று மட்டும் தான் இடம் பெற்றுள்ளது.

சுஃப்யான் அவர்களின் அறிவிப்பில் மட்டும் ”நெஞ்சின் மீது” என்ற வாசகம் கூடுதலாக இடம் பெற்றுள்ளது. இதைப் போன்று சுஃப்யானிடமிருந்து யஹ்யா பின் ஸயீத், வகீஃ ஆகிய இருவர் அறிவிக்கின்றனர். இதில் வகீஃ என்பவரின் அறிவிப்பில், ”நெஞ்சின் மீது” என்ற வாசகம் இல்லை.

ஒரு செய்தியை ஒரு ஆசிரியரிடமிருந்து பல மாணவர்கள் அறிவித்து, எல்லா மாணவர்களும் நம்பகத்தன்மையில் சமமாக இருந்து, ஒருவர் மற்ற ஏனைய மாணவர்களின் அறிவிப்புகளுக்கு முரணாக ஒரு செய்தியை அறிவித்தால் அந்தச் செய்தியை ஷாத் என்ற வகையைச் சார்ந்த பலவீனமான செய்தி என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுவர்.

இதைப் போன்று நம்பகமான ஒரு அறிவிப்பாளர், அவரை விடக் கூடுதல் நம்பகத்தன்மை உள்ள ஒருவருக்கு முரணாக அறிவித்தால் நம்பகத்தன்மை குறைவாக உள்ளவரின் அறிவிப்பை ஷாத் என்ற பலவீனமான வகையைச் சார்ந்தது என்றும் சொல்வர்.

இந்தச் செய்தியும் ஷாத் என்ற பலவீனமான வகையைச் சார்ந்தது என்று வாதிட முனைகின்றனர். இது கவனமின்மையின் வெளிப்பாடாகும்.

ஒருவரின் அறிவிப்பில் ”வலது கையை இடது கையின் மீது வைத்தார்கள்” என்றும், மற்றொரு அறிவிப்பாளரின் செய்தியில், ”வலது கையை இடது கையின் மீது வைத்து நெஞ்சில் வைத்தார்கள்” என்றும் இடம் பெறுவது முந்தைய செய்திக்கு முரணானது அல்ல. தேவையான கூடுதல் விளக்கம் தான் இதில் இடம் பெற்றுள்ளது.

ஒருவரின் அறிவிப்பில், ”வலது கையை இடது கையின் மீது வைத்தார்கள்” என்றும், இன்னொருவரின் அறிவிப்பில், ”இடது கையை வலது கையின் மீது வைத்தார்கள்” என்று அறிவித்திருந்தால் அதை முரண்பாடு என்று சொல்லலாம்.

ஆனால் ‘வலது கையை இடது கையின் மீது வைத்து நெஞ்சின் மீது வைத்தார்கள்’ என்பது கூடுதலான செய்தியே தவிர முரணான செய்தி அல்ல. மேலும் இந்தச் செய்தியில் தான் சரியான விளக்கமும் உள்ளது.

வலது கையை இடது கையின் மீது வைத்த நபி (ஸல்) அவர்கள் அதை உட¬ல் எந்த இடத்தில் வைத்தார்கள் என்ற கேள்வி முந்தைய அறிவிப்பின் படி இருந்து கொண்டே இருக்கும். நெஞ்சின் மீது வைத்தார்கள் என்று சொன்னால் தான் அது முழுமை பெற்ற ஹதீஸாக அமையும். ஆகவே ‘நெஞ்சின் மீது வைத்தார்கள்’ என்பது ஷாத் என்ற பலவீனமான வகையைச் சார்ந்தது அல்ல!

எனவே நெஞ்சில் கை கட்டுவது பற்றிய ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்பது நமது மறு ஆய்விலும் உறுதியாகின்றது.

No comments:

Post a Comment