பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, July 30, 2010

திருக்குர்ஆன் கேள்வி - பதில் -- II

திருக்குர்ஆன் கேள்வி - பதில் -- II


கேள்வி : மரம், செடி, கொடிகள் போன்றவை எப்படி இறைவனுக்கு பணிகின்றன?

பதில் : வலப்புறம், இடப்புறம் சாய்ந்து பணிகின்றன. (அல்குர்ஆன் 16:48)

கேள்வி : உடரிலுள்ள மூட்டுகளுக்காக ஒவ்வொரு நாளும் என்ன செய்ய வேண்டும்?

பதில் : தர்மம் செய்ய வேண்டும் (ஆதாரம் : புகாரி 2989)

கேள்வி : மனிதரல்லாதவர்களில் பெருமையடிக்காதவர்கள் யார்?

பதில் : வானவர்கள் (அல்குர்ஆன் 16:49)

கேள்வி : நாட்டுக்கழுதை உண்பதற்கு எப்போது தடைசெய்யப்பட்டது?

பதில் : கைபர் போரின்போது (ஆதாரம் : புகாரி 2991)

கேள்வி : மார்க்கத்தின் சட்டங்களின் அதிகாரம் எல்லா காலங்களிலும் யாருக்குரியது?

பதில் : அல்லாஹ்வுக்கு (அல்குர்ஆன் 16:52)

கேள்வி : நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை என்று எப்போது நபிகளார் கூறினார்கள்?

பதில் : நபித்தோழர்கள் அல்லாஹ்வை சப்தமிட்டு அழைத்தபோது (ஆதாரம் : புகாரி 2992)

கேள்வி : பெண் குழந்தை பிறந்தால் அன்றைய கால மக்கள் எப்படி ஆகி விடுகின்றனர்?

பதில் : முகம் கருத்து, கவலைப்பட்டவர்களாக ஆகி விடுகின்றனர். (அல்குர்ஆன் 16:58)

கேள்வி : எனது (பிரத்தியேக) உதவியாளர் என்று நபிகளார் யாரைக் குறிப்பிட்டார்கள்?

பதில் : ஸுபைர் பின் அவ்வாம் (ரரி) (ஆதாரம் : புகாரி 2997)

கேள்வி : பிறந்த பெண் குழந்தையை என்ன செய்ய துணிந்தனர்?

பதில் : மண்ணில் உயிருடன் புதைக்கத் துணிந்தனர் (அல்குர்ஆன் 16:59)

கேள்வி : இப்னு உமர் (ரரி) அவர்களின் மனைவி பெயர் என்ன?

பதில் : ஸஃபிய்யா பின் அபீ உபைத் (ரரி) (ஆதாரம் : புகாரி 3000)

கேள்வி : தீய பண்பு உள்ளவர்கள் யார்?

பதில் : மறுமையை நம்பாதோர் (அல்குர்ஆன் 16:60)

கேள்வி : பயணம் என்பதை நபிகளார் எப்படி குறிப்பிட்டார்கள்?

பதில் : வேதனையின் ஒரு பங்கு (ஆதாரம் : புகாரி 3001)

கேள்வி : மனிதன் செய்யும் தீயசெயல்களுக்கு உடனுக்குடன் தண்டிக்கப்பட்டால் நிலை என்ன?

பதில் : பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான் (அல்குர்ஆன் 16:61)

கேள்வி : பயணத்தின் வேலை முடிந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

பதில் : உடன் தம் வீட்டாரிடம் திரும்ப வேண்டும் (ஆதாரம் : புகாரி 3001)

கேள்வி : பால் எங்கு உற்பத்தியாகிறது?

பதில் : கால்நடைகளின் வயிறுகளில் உள்ள செறிக்கப்பட்ட உணவுக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் உற்பத்தியாகிறது. (அல்குர்ஆன் 16:66)

கேள்வி : தர்மம் செய்த பொருளை திரும்ப விலைக்கு வாங்கலாமா?

பதில் : கூடாது (ஆதாரம் : புகாரி 3002)

கேள்வி : தேன் எங்கு உற்பத்தியாகிறது?

பதில் : தேனியின் வயிற்றிரிருந்து (அல்குர்ஆன் 16:69)

கேள்வி : நபிகளாரின் விவரங்களை மக்காவிற்கு எடுத்து சென்ற பெண்ணை பிடித்து வருமாறு யாரை நபிகளார் அனுப்பினார்கள்?

பதில் : அலீ (ரரி), மிக்தாத் (ரரி) (ஆதாரம் : புகாரி 3007)

கேள்வி : அல்லாஹ்வுக்கு உதாரணங்கள் கூறலாமா?

பதில் : கூடாது (அல்குர்ஆன் 16:74)

கேள்வி : மக்காவில் கடிதம் கொண்டு சென்றபெண்மணி எந்த இடத்தில் இருப்பதாக நபிகளார் கூறினார்கள்?

பதில் : ரவ்ளத்துக்காக் (ஆதாரம் : புகாரி 3007)

கேள்வி : மறுமை நாள் எவ்வளவு நேரத்தில் வரும்?

பதில் : கண்மூடித் திறப்பதுபோல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். (அல்குர்ஆன் 16:77)

கேள்வி : மக்கா வாசிகளுக்கு கடிதம் கொடுத்த நபித்தோழர் யார்?

பதில் : ஹாத்திப் பின் அபீ பல்தஆ (ரரி). (ஆதாரம் : புகாரி 3007)

கேள்வி : இறைவன் வீடுகளை ஏற்படுத்தியது எதற்கு?

பதில் : நிம்மதியடைவதற்கு. (அல்குர்ஆன் 16:80)

கேள்வி : உளவு சொன்ன ஹாத்திப் பின் அபீ பல்தஆ (ரரி) அவர்களை என்ன செய்வதாக உமர் (ரரி) கூறினார்கள்?

பதில் : அவரின் கழுத்தை வெட்டிவிடுவதாக கூறினார்கள் (ஆதாரம் : புகாரி 3007)

கேள்வி : இறைச் சட்டங்களில் நபியின் கடமை என்ன?

பதில் : தெளிவாக எடுத்துச் சொல்வதே! (அல்குர்ஆன் 16:82)

கேள்வி : ஹாத்திப் பின் அபீபல்தஆ (ரரி) அவர்களுக்கு தண்டனை ஏன் நபிகளார் வழங்கவில்லை?

பதில் : பத்ர் போரில் அவர்கள் கலந்து கொண்டதால் கிடைத்த நன்மையின் காரணமாக (ஆதாரம் : புகாரி 3008)

கேள்வி : வேதனை காணும்போது தண்டனை இலேசக்கப்படுமா?

பதில் : வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள் (அல்குர்ஆன் 16:85)


-->  Dheengula Penmani Jan 2010

2 comments: